குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, November 26, 2011

கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -08


----------------------------------------------------------------------------------------------------------------------------------
முந்தைய பதிவுகள்
  1. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -01
  2. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -02
  3. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -03
  4. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -04
  5. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -05
  6. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -06
  7. கோரக்க போதம் எனும் குரு சிஷ்ய சம்பாஷணை பகுதி -07

----------------------------------------------------------------------------------------------------------------------------------


ஓம் ஸ்ரீ கோரக்க நாத ஸ்ரீ குரு பாதம் பூஜயாமி தர்ப்பயாமி நமஹ!

முக்கிய குறிப்பு: இந்த பதிவு மொழிபெயர்ப்பு மாத்திரம்தான், இதன் பொருள் மறைபொருளாக விளக்கப்பட்டுள்ளது,  படிப்பவர்கள் குருவருள் கொண்டு விளங்க முயற்சித்தால் பொருளறியலாம். இவற்றில் உள்ள விடயங்களை குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர பூஜை விதிகளுடன் பொருந்திப்பார்த்து பயன்பெறலாம். ஆதலால் இது அனைவருக்குமான பதிவு அல்ல என்பதனையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த மார்க்கத்தில் உள்ளவர்களுக்கு மாத்திரமே உரியது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------


76. கோரக்கர்: மனம் எப்படி விருத்திகளை அடைகிறது? எப்படி பிராணன் வந்து செல்கிறது? சந்திரன் எப்படி பிரவாகிக்கிறது? எப்படி காலம் நித்திரைக்கு செல்கிறது?

76. மச்சேந்திர நாதர்: மனம் இருதயத்தில் விருத்திகளைப் பெறுகிறது. பிராணன் நாபியிலிருந்து ஆரம்பித்து சென்று வருகிறது, தன்னில் நிலைப்பதால் சந்திரபிரவாகம் ஏற்படும். அதுவாகவே ஆவதால் காலம் நித்திரைக்கு செல்கிறது.

77. கோரக்கர்: எந்த சூன்யத்தில் ஒளி திருப்பமடையும்? எந்த சூன்யத்தில் வாக்கு எழும்? எந்த சூன்யம் மூவுலகிற்கும் சாரமாகும்? எந்த சூன்யத்தினால் ஒருவன் அனைத்தையும் கடப்பான்?

78. மச்சேந்திர நாதர்: ஆசை எனும் சூன்யம், பயமற்ற சூன்யம், சுய சித்தி எனும் சூன்யம், பற்று அற்ற சூன்யம்.

79. கோரக்கர்:எங்கே பசி எழுகிறது? எங்கே உணவு?எங்கே நித்திரை உதிக்கிறது? எங்கே மரணம்?

80. மச்சேந்திர நாதர்: ஆசைகளில் இருந்து பசி எழுகிறது, பசியிலிருந்து உணவு வருகிறது, உணவிலிருந்து நித்திரை, நித்திரையிலிருந்து ,மரணம்!

81. கோரக்கர்: எந்த தாமரை உட் சுவாசிக்கும் போதும் வெளி சுவாசிக்கும் போதும் ஹம்ஸத்தினை உண்டாக்குகிறது? எந்த தாமரையில் ஹம்ஸம் ஓய்வெடுக்கிறது? எந்த தாமரையில் பூஜிக்க வேண்டும்? எந்த தாமரையில் காணமுடியாததை காணவேண்டும்?

82. மச்சேந்திர நாதர்: நாபிக்கமலத்தில், ஹிருதய கமலத்தில், நடுக்கமலத்தில், தாமரகளுக்கு அப்பால்!

83. கோரக்கர்: எது சத்தியம்? குரு நாதா தயை கூர்ந்து கூறுவீர்களா? அதனை அடைவதற்கு மனதையும் சுவாசத்தையும் என்ன நிலையில் வைத்திருக்க வேண்டும்? ஒருவன் சம்ஸார ஸாகரத்தினை எப்படிக் கடப்பது?

84. மச்சேந்திர நாதர்: சாதாரண பார்வையில் இருந்து ஆன்ம பார்வையாகிய திவ்ய திருஷ்டியினை அடைவது சத்தியம், ஆன்ம விடுதலைக்கான ஞானத்தினை அடைவதை நோக்கி மனதை வைத்திருத்தல் வேண்டும், குருவும் சீடனும் ஒரே (சூஷ்ம) உடலை உடையவர்கள், ஆன்ம விடிதலை அடைந்தால் பின்பு வருகையிம் போதலும் நடைபெறாது.

85. கோரக்கர்: எங்கிருந்து உட்சுவாசம் வெளிசுவாசம் ஆரம்பிக்கிறது? எங்கே பரம ஹம்ஸம் வசிக்கிறது? எந்த இடத்தில் மனம் நிரந்தரமாக நிற்கும்?

86. மச்சேந்திர நாதர்: கீழிருந்து ஆரம்பிக்கிறது, உச்சியில் பரம ஹம்ஸம் வசிக்கிறது, சஹஜ சூன்யத்தில் மனம் சமமாயிருக்கும், நிலைத்திருக்கிறது, சப்தத்தினை உணரும்போது மனம் நிலையடையும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------

குறிப்பு:
நேற்றைய பதிவின் தொடர்ச்சியான சீன பிராண சாத்திரத்தின் அடிப்படை, நாடிகளைப்பற்றியும் அதனூடான பிராணனின் ஓட்டத்தினையும் பற்றிய பதிவு 28/11/11 திங்கட்கிழமை பதியப்படும். 

1 comment:

  1. ஞானத்தினை நாடுதலே ஆன்மீகத்தின் முதல்படி என்பதை 84ல் அற்புதமாக விளக்கி இருக்கிறார்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...