குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, November 13, 2019

கிருஷ்ணனும் காயாக் கோட்பாடும்

காயாக் கோட்பாடு கூறுவது பூமியின் சமனிலை மாறுபடும் போது அது தன்னை எப்போதும் ஒரு சீர்திட நிலையில் வைத்துக் கொள்கிறது என்பது. 
சம நிலையை குலைக்கும் செயல்களை எதிர்மறை பின்னூட்டம் (Negative feedback) என்றும் சரிப்படுத்தும் செயலை நேர்மறை பின்னூட்டம் (Positive feedback) என்றும் குறிப்பிடுகிறார். 
இதனை இந்த கோட்பாட்டினைக் கூறிய விஞ்ஞானி கடந்த 4.5 பில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்பமாற்ற அளவின் மூலம் உய்த்தறிந்துள்ளார். 
இப்படி பூமி தனது எதிர்மறை பின்னூட்டங்களை சமப்படுத்தி பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செயலையே Gaia என்று குறிப்படுகிறார். 
Gaia defined as a complex entity involving the earth's biosphere, atmosphere, oceans, and soil; the totality constituting a feedback or cybernetic system which seeks an optimal physical and chemical condition of life on this planet.
இனி சுவாரசியம் என்னவென்றால் கிருஷ்ணன் பகவத் கீதையிலும் இப்படி ஒன்றினைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 
தர்மம் என்பது ஒழுங்கு, சம்ஸ்க்ருதத்தின் அதன் சரியான பொருள் அச்சில் சுழலுவதற்கு பிணைக்கும் அச்சாணி அல்லது செயல் என்று பொருள். அதாவது positive feedback என்று பொருள். அதர்மம் என்றால் ஒழுங்கைக் குலைக்கும் செயல் என்று பொருள். அதாவது negative feedback என்று பொருள். 
இனி கீதையில் கிருஷ்ணன் கூறுவதைப் பார்ப்போம். 
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைவு ஏற்பட்டு அதர்மத்தின் ஆதிக்கம் ஏற்படுகிறதோ, அச்சமயத்தில் நான் சுயமாகத் தோன்றுகிறேன். Gaia will establish the homeostasis. 
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
நல்லவற்றைக் காப்பாற்றவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் நான் யுகம் தோறும் தோன்றுகிறேன். 
ஆக ஒழுங்கு கெடும் போது இயற்கை தன்னைத் தானே ஒழுங்குபடுத்தி சம நிலைப்படுத்த எப்போதும் ஏதாவது ஒரு வழிமுறையினை வைத்திருக்கிறது என்பதே இதன் அடிப்படை! 
ஆக இயற்கை தன் கடமையைச் செய்யும்!

தலைப்பு இல்லை

நாம் இரண்டு வகைப் பாகல் இயற்கை வேளாண்மை முறையில் பயிரிடுகிறோம். 

ஒன்று மாத்தளை பச்சை - கடும்பச்சையாக இருக்கும். 

மற்றது தின்னவேலி (திருநெல்வேலி மருவி தின்னவேலி ஆயிற்று) வெள்ளை - வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். 

இரண்டுமே நம்ம ஊர் இனம் என்பதில் பெருமை     

எமது பாகற்காய் உண்டவர்கள் அதன் சுவை பற்றி உயர்வாகக் கூறுகிறார்கள். மகிழ்ச்சி!

பாகல் ஒரு மூலிகை. நவீன ஆய்வில் புற்று நோய் தடுப்பானாகவும் இனங்காணப்பட்டுள்ளது. 

பொதுவாக மரக்கறிகளை மருத்துவ குணமுடையது என்று கூறுவதாக இருந்தால் அது இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டிருக்க வேண்டும். 

கத்தரி ஈரலிற்கு நல்லது என்று சித்தர்கள் பதார்த்த குணவிளக்கத்தில் கூறியிருக்கிறார்கள். இதை அப்படியே எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது அடிக்கப்படும் பூச்சிகொல்லி ஈரலை முழுமையாக கெடுத்துவிடும். 

பிறகு கத்தரிக்காய் சாப்பிட்டதால் ஈரல் பழுதாகியது என்றும் சித்த மருத்துவத்தில் சொல்லப்படுவதெல்லாம் பொய் என்றும் பரப்புரை செய்யத் தொடங்கிவிடுவோம். 

சரியான முறையில் விளைவிக்கப்பட்டால் உணவே மருந்தாகும்!


Saturday, November 09, 2019

c

திருமணமான பின்னர் சென்னை செல்கிறேன், ஒரு சீட்டினைக் கொடுத்து அதிலுள்ள பொருட்களும், துணிமணிகளும் அங்கு சரவணா ஸ்டோர்ஸிலும், நல்ல இனிப்புக் கடையில் மைசூர்பாகும் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று சொன்னாள் மனைவி! 

சென்னையிற்கு வந்த எமக்கோ கிரி ட்ரேடிங்கிலும், இக்கின் போதம்ஸிற்கு சென்றதுடன் 40 கிலோ லக்கேஜ் புத்தகங்கள் நிரம்பிவிட்டது. சீட்டும் மறந்துவிட்டது, மைசூர்பாகும் மறந்து விட்டது. 

இரண்டு பெட்டி நிறைய வீடு செல்ல, துணியும், மைசூர்பாகும் இருக்கும் என்று ஆர்வமுடன் பெட்டியைத் திறந்த மனைவிக்கோ பெட்டி நிறையப் புத்தகங்கள்! 

நானோ பாரதியார் செல்லம்மாவிற்கு சொன்னதைப் போல அறிவுரை எல்லாம் சொல்லாமல் புத்திசாலித்தனமாக சென்னையில் மைசூர்பாகு இல்லை மைசூரில் தான் இருக்காம் என்று சமாளிக்க இன்று வரை ஒவ்வொரு முறை சென்னை செல்லும் போதும் சென்னையில் மைசூர்பாகு இல்லையா என்று சிலேடைப் பேச்சு சுவாரசியம்!    

ஒவ்வொரு முறையும் சென்னையிலிருந்து பெட்டி நிறைய புத்தங்கள் தான் வந்திறங்கிக் கொண்டு இருக்கிறது. 

கீழுள்ள சம்பவம் இதனிலும் சுவாரசியம்!


தலைப்பு இல்லை

எனது பல்கலைக்கழக சூழலியல் விஞ்ஞான பட்டப்படிப்பின் இறுதியாண்டு ஆய்வுத் திட்டம் சூழலியல் முகாமைத்துவம் தொடர்பானது. நகர சூழலியல் முகாமைத்துவத்தை (Urban Environmental Management) எப்படி காயா கோட்பாட்டின் (Gaia Theory) மூலம் புரிந்துக் கொள்ளலாம் என்று தொடங்கி பின்னர் அதற்குள் குழப்பக் கோட்பாட்டின் (Chaos Theory) மூலம் புரிந்து கொள்வது பற்றி ஆராய்ந்திருந்தேன். இளநிலைப் பட்டத்திற்கு அது தேவையில்லை என்றாலும் எனக்கு வாய்த்த எனது ஆய்வு மேற்பார்வையாளர் எனது அறிவுப் பசிக்கு எவ்வளவு அள்ள முடியுமோ அவ்வளவு அள்ளிக் கொள் என்ற அளவில் சுதந்திரம் தந்திருந்ததால் இது சாத்தியமாகியது. 
இந்த காயாக் கோட்பாடு பூமியை ஒரு ஒருங்கிணைந்த ஒரு உயிரினமாக பார்க்க வேண்டும் என்று அறிவியலுக்கு பரிந்துரை செய்திருந்தது. சுருக்கமாகச் சொல்லுவதானால் பூமியிலுள்ள உயிரங்கிகள் அனைத்துமாக ஒன்று சேர்ந்து சடப்பொருட்களை தமது வாழ்க்கையிற்கு ஏற்றவாறு சரிபடுத்தி சம நிலைப்படுத்துகிறது என்று இந்தக் கோட்பாடு முன்மொழியப்பட்டது. பரிணாமத்தில் சூழலும் உயிரங்கிகளும் ஒன்றையொன்று சார்ந்து வளர்ச்சியடைகிறது. உயிரங்கிகள் சூழலின் மீது செல்வாக்குச் செலுத்த அந்தச் சூழலில் உயிரங்கிகள் டார்வீனியன் பரிணாமக் கோட்பாட்டின் மூலம் இந்தப் புவி பரிணாமம் அடைந்தது என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை!
இந்தக் கோட்பாடும் சூழலியல் சார்ந்த பல பிரச்சனைகளை கேள்விக்குள்ளாக்குகிறது, வளி மாசடைதல், புவிவெப்பமடைதல் போன்றவை தற்போது கூறப்படும் கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற வாதத்தையும், கடந்த 4.5 மில்லியன் வருடங்களில் புவி தன்னைத் தானே சம நிலைப்படுத்தி உயிர் வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்கிறது என்பதையும் முன்வைக்கிறது. 
உயிர் வாழ்க்கை பற்றி விஞ்ஞானம் புரிந்துக் கொள்வதற்காக அடிப்படைகளை இந்தக் கோட்பாடு ஒன்று சேர்க்கிறது.

Friday, November 08, 2019

தலைப்பு இல்லை

Indian Roller sitting on our Farm fence to do its duty
They feed mostly on ground insects. Nearly 50% of their prey are beetles and 25% made up by grasshoppers and crickets. So obviously they are our unpaid workers in our farm as a pest controllers

Thursday, November 07, 2019

வளி மாசடைதல் எனும் ஞானி

மனிதனின் தன்னைத் தாண்டி தான் செய்யும் செயல் மற்றவனையும் பாதிக்கும் என்பதை புரியவைக்கும் ஞானகுருவே வளிமாசடைதல். 
நீங்கள் அனுபவிக்கும் வளி மாசிற்கு நீங்களே காரணமாக இருக்க வேண்டியதில்லை என்பதே உண்மை! காரணம் எங்கோ இருக்கும் பலரின் கூட்டு விளைவாக இருக்கும். 
இதை trans-boundary effect என்பார்கள். மனிதன் பகுத்து வைத்த எனது நாடு, உனது நாடு என்ற வேற்றுமை இல்லாமல் எங்கும் எங்கு ஊடுருவும் வல்லமை உள்ளது நீரும், வளியும் ஆகாயமும். 
நேற்று இரவு கொழும்பில் வளிமாசடைந்துள்ளது, பாவப்பட்ட கொழும்புச் சனங்கள் என்று கூறி தூங்கி எழுந்தால் காலையில் கண்டியிலும், மாத்தளையிலும் புகை மண்டலம்! பனி என்று நினைத்தால் வழமையான குளிர் இல்லை. 
சரி என்று யாழ்ப்பாணத்திலிருக்கும் நண்பருக்கு அழைத்தால் யாழ்ப்பாணமும், வன்னியும் அதே நிலமை தானாம்!
ஆக இலங்கை முழுமைக்கும் வளிமாசடைதல் நிகழ்ந்துள்ளது. 
பஞ்ச பூதங்களில் நிலத்தை மட்டும்தான் மனிதன் மேலோட்டமாக தனக்கு என்று உரிமை கொண்டாட முடியும், மற்றவை எல்லாம் அசைந்து மனிதன் கட்டுப்பாடு இல்லாமல் ஓடுபவை. இவற்றைச் சீண்டும் போது அது தனது பங்கிற்கு நாம் தருவதை மீண்டும் பல பங்காக தந்துவிட்டுப் போகும். 
ஆக மனிதன் தன்னை இலங்கையன், இந்தியன், சீனன், அமெரிக்கன் என்று கற்பனை செய்து கொண்டாலும் இயற்கைக்கு அவனும் புழுவும், மண்ணும், பாம்பும் எல்லாம் ஒன்று தான்! அவன் செய்யும் செயல்களை சேர்த்து வட்டியும் முதலுமாக பெருக்கிக் கொடுக்கும்!

கொழும்பு வளி மாசும் டெல்லியும்

The problem is we don't know what the climate is doing, We though we knew 20 years ago. that led to some alarmist books - mine included - because it looked clear cut, but it hasn't happened.

- James Lovelock - 

Earth System Scientist

இன்று 06/11/2019 கொழும்பும் சுற்றுப்புறமும் வளி மாசடைதல் உயர்வாக காணப்பட்டுள்ளது. 

எல்லாவற்றிற்கும் காரணம் உடனடியாக டெல்லியும் மோடியும் என்ற தமிழ் நாட்டுப் பாணியில் இங்கும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

இதனை அறிவித்த இலங்கை கட்டிடங்கள் திணைக்கள ஆய்வாளர் டெல்லி மாசு காரணமாக இருக்கலாம் என்று ஊகம் வெளியிட்டிருக்கிறார். இது வேடிக்கையான ஒரு கூற்று. 

டெல்லியில் இருந்து கொழும்பிற்கு வளி மாசு வருவதற்குரிய காற்றுப் பாதை எதுவுமில்லை. தற்போதைய காற்றுச் சுழற்சி அரபிக் கடலில் இருந்து வந்து இலங்கையைக் கடந்து வங்காள விரிகுடாவிற்குச் சென்று கொண்டு இருக்கிறது. படம் பார்த்துப் புரிக. 

அமெரிக்க தூதுவராலய கண்காணிப்பின் படி வளிமாசடைதல் சுட்டெண் (Air Quality Index - USA) பிரகாரம் 187 எண்ணை அதிகபட்சம் அடைந்து தற்போது குறைந்து வருகிறது. 

வளிமாசடைதல் சுட்டெண் என்பது ஐந்து காரணிகளை அளவீடு செய்து மதிப்பிடுவது. 

1) Ground-level ozone, 

2) Particulate matter, (PM 2.5 & PM 10)

3) Carbon monoxide, 

4) Sulfur dioxide, and 

5) Nitrogen dioxide

இவற்றுள் இலங்கையில் அதிகரித்துள்ளதாக காணப்படுவது PM - 2.5 எனப்படும் நுண் துணிக்கைகள். இதன் அர்த்தம் வளியில் காணப்படும் துணிக்கைகளின் அளவு 2.5 மைக்ரோ மீற்றருக்கு (μm) குறைவான அளவில் உள்ள துணிக்கைகள் அதிகரித்துள்ளன. 

இந்த துணிக்கைகளுக்குரிய மிக அதிக பங்களிப்பாளர்கள் மணல், கனிமத் துணிக்கைகள்!

இரண்டாவது பெரிய பங்களிப்பாளர் கடல் காற்றிலிருக்கும் உப்பு! இதிலிருந்து magnesium, sulfate, calcium, potassium போன்றவை இருக்கலாம். 

ஆக இலங்கையிற்கான சாத்தியம் கடல் உப்பிலிருந்து வந்திருக்கலாம். மழை காலம் கடலிலிருந்து வரும் நீர் உப்பினைக் கொண்டு வரும்.

இவ்வளவு காலமும் இல்லாத மாசு இப்போது ஏன் வர வேண்டும் என்ற கேள்விக்கு எனது அனுமானம் கடலிலிருந்து வரும் காற்றை மறித்து கொழும்பிற்குள் காற்றைச் சுற்றவிடும் வானுயர்ந்த கோபுரங்களும் கட்டிடங்களும் தான்! 

முன்னர் கடலிலிருந்து எழும் காற்று கொழும்பைத் தாண்டி அப்படியே மலை நாட்டில் வந்து தாக்கி தனது உப்பைக் கொட்டிக் கொண்டிருந்த காற்றை மறித்து கொழும்பிலே கொட்டும் காரியத்தை இனிமேல் இந்தக் கட்டிடங்கள் செய்யும்! 

கட்டிடம் கூடக் கூட இந்தப் பிரச்சனை கூடத்தான் போகிறது!


தலைப்பு இல்லை

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் பலவாறாக ஊகிக்கப்படுகிறது. 
என்னைப்பொறுத்த வரையில் நாம் உள்ளுணர்வு அற்ற சமூகமாகவும், மற்றவர்கள் உணர்வைப் புரிந்து கொள்ள முடியாத இறுக்க மனம் படைத்தவர்களாக்கும் கல்வி முறையும், சமூகக் கட்டமைப்பும் இருக்கிறது என்பது தான் காரணமாக இருக்கிறது. 
சிறுவயதிலிருந்து எதையாவது சாதிக்க வேண்டும் என்று மனதை நெருக்கும் பெற்றோர்களும், சமூகமும் எப்படிச் சாதிப்பது என்ற வழியைச் சொல்லிக் கொடுப்பதில்லை! அப்படிச் சாதிக்க முடியாவிட்டல் அதைப் படிப்பினையாக எடுப்பது எப்படி என்பதைச் சொல்லித் தருவதில்லை! 
மனம் என்ன? மனதிற்கும் உடலுக்கும் ஓய்வு தரவேண்டிய அவசியம் என்ன? பரீட்சையிலோ வாழ்க்கையிலோ சித்தியடையாவிட்டால் அதற்கு காரணம் என்ன என்று சிந்திக்கும் படி மனதைப் பழக்காமல் உணர்ச்சிவசப்படவும், கவலைப்படவும், பயப்படவும், எம்மை நாமே தாழ்வாக எண்ணவும் நாம் எம்மையும், குழந்தைகளையும் பழக்குகிறோம். 
கல்வி என்பதை வகுப்பறையும், பரீட்ச்சைத் தாள்களும், பெறுபேறுகளும் என்று கடிவாளம் கட்டிய குதிரைகளாக மாணவர்களை ஆக்கிவிட்டு படிக்க வரும் பல்கலைக்கழகத்தில் பகிடிவதை, விரிவுரையாளருக்கு வால் பிடித்தால் தான் நல்ல பெறுபேறு, அங்கும் யார் முதல் என்ற போட்டி இப்படித் தான் எமது பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. விரிவுரையாளரிடம் கேள்வி கேட்டால் அவரை அவமதிப்பு செய்துவிட்டதாக பழிவாங்கல் படலம் இப்படி எல்லாம் சமூக ஒழுக்கங்களைக் கற்பிக்கும் கூடங்களாகத் தான் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. 
மாணவனின் உளத்தை வளர்க்காத கல்வியால் என்ன பயன்?

Tuesday, November 05, 2019

தலைப்பு இல்லை

திருவள்ளுவர் யார் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டு வாக்குவாதப்படுவது, வள்ளுவர் யாராக இருந்தால் அவர் கூறிய கருத்து எமது கருத்தாகாமல், வாழ்வாகாமல் அதனால் எந்தப் பயனும் இல்லை என்பதே உண்மை! 

எந்த ஒரு ஞான நூலிலும் அது எழுதப்பட்ட காலத்திற்குரிய சமூக வழக்கின் நியதியும், மனித குலத்தின் எந்தக் காலப் பகுதிக்கும் பொருந்தும் நியதிகளும் இருக்கும். எந்தக் காலத்திற்கும் பொருந்தும் அதிக நியதிகளைக் கொண்ட நூல் திருக்குறள்! அது மனித குலத்தின் முழுமைக்கும் வழிகாட்டும்! 

கடந்த நூற்றாண்டு மனோ பாவம் தான் தனது தகுதியை வளர்த்துக் கொள்ளாமல் தற்பெருமைக்காக பழம் பெருமை பேசுதல், திருவள்ளுவர் எம்மவர் என்று உரிமை கொண்டாடும் ஒவ்வொருவனும் திருவள்ளுவருக்கு இருக்கும் ஞானத்தில் ஒரு பங்காவது இருக்கிறதா என்பதை சுய பரீட்சை செய்வதும், திருக்குறள் எவ்வளவு ஆழமாகக் கற்றிருக்கிறோம், கற்றபடி எவ்வளவு நிற்கிறோம் என்பதை சுய ஆராய்ச்சி செய்வது நலம். 

திருவள்ளுவர் எந்த ஜாதியாக இருந்தாலென்ன? மதமாக இருந்தாலென்ன? வள்ளுவன் கூறிய வாழ்க்கை முறையில் வாழ்கிறோமா என்பதே கேள்வி!

திருவள்ளுவர் எம்மவர் என்ற பழம் பெருமை என்பது அந்த ஞானத்தை அடைவதற்குரிய உந்துதலை உருவாக்கவேயன்றி சமூகத்தைக் குழப்பும் விஷமாகக் கூடாது. திருவள்ளுவர் நம்மவர் என்றால் திருக்குறள் கூறும் வாழ்க்கை முறையை நாம் வாழவேண்டுமே அன்றி அதைச் சர்ச்சையாக்கக் கூடாது. 

அரசியலுக்கும், முட்டாள் உணர்ச்சிவசப்பட்ட சமூகத்தை உருவாக்கவும் நல்ல விவாதங்கள் இவை! 

#திருவள்ளுவர்


Sunday, November 03, 2019

தலைப்பு இல்லை

We grow little... path is long!
Need to work with Nature 
We corrected our major packaging to be eco friendly paper bags! Still need to improve..
Who ever supporting this initiative is a part of this journey..we thanks and gratitude to them    
Real meaning of Supporting is not only ideas & advice, but also being a customer to the business.
We pledge to provide healthy naturally grown vegitables whoever supporting our initiative...

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...