குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, March 21, 2020

தலைப்பு இல்லை

வைரசு நோயிற்கு ஏன் ஊரடங்குச் சட்டம்?
காரண காரியம் புரியாமல் மக்களின் நடத்தையைக் கட்டுப்படுத்துவது மிகுந்த சிரமமானது. 
ஆகவே தெளிவிற்கு இந்தப்பதிவு;
வைரசை கட்டுப்படுத்துகிறோம் என்பது ஒரு வேடிக்கையான நகைச்சுவை! வைரசு ஒரு மாயக்கள்வன், எப்படி உடலுக்குள் வருகிறான், வந்துவிட்டானா இல்லையா என்று தெரியாது! வைரசு உடலிற்குள் வந்து விட்டால் எமது கலங்கள் எமது உடலில் பாதுகாப்பு அமைச்சான (defense ministry) நிர்ப்பீடனத் தொகுதிக்கு (immune system) செய்தி அனுப்பும். செய்தி பறந்ததும் நிர்ப்பீடனத்தொகுதி தனது படைகளைச் சரி செய்து சண்டைக்குத் தயாராக வேண்டும். 
இங்குதான் வைரசுடனான போரானது உடலின் பாதுகாப்பு அமைச்சான நிர்ப்பீடனத்தொகுதிக்குச் சிக்கலானது. இந்தச் சிக்கல் இரண்டு காரணிகளைக் கொண்டுள்ளது. 
1) உடல் வைரசுடனான சண்டைக்காக தனது படையினை உருவாக்கும் வேகத்தினை விட வைரசு தன்னை பெருக்கிக் கொள்ளும் வேகம் அதிகமானது. நீ ஒரு தடவை பெருகினா நான் நூறு தடவை பெருகுவேன் என்று பஞ்ச் சொல்லிக்கொண்டு வைரசு உடலிற்குள் பெருகிக் கொள்ளும்.
2) மனிதன் ஒரு அறிவு (கெட்ட) விலங்கு; வைரசு புகுந்து விட்டது என்று உடல் அறிவித்து சோர்வை, காய்ச்சலை ஏற்படுத்தி நான் போருக்குத் தயார், நீ வேறு வேலைகள் எதுவும் செய்யாமல் ஓய்வெடுத்து சக்தியை வீணாக்காமல் எனது போருக்கு ஒத்துழைப்புச் செய் என்று செய்தி அனுப்பினாலும் வேலை, பணம், கேளிக்கை என்று எவற்றாவதன் பின்னால் ஓடி நிர்ப்பீடனத்தொகுதியின் வேலையைக் குழப்பி அழிவைத்தான் தேடுவான். 
இதனால் தான் வைரசு நோய்களுக்கு ஓய்வு தான் முதல் மருந்து, எமது உடல் நிர்பீடன சக்திக்கு உதவும் வகையில் நாம் எமது உடலின் சக்தி விரயத்தைத் தடுக்க வேண்டும். 
உடலிற்குள் வைரசு புகுந்தவுடன் விளையாட்டு ஆரம்பமாகும்! வைரசு வேகமாக பல்கிப் பெருகும், உடல் அதை எதிர்த்துப் போராடத் தேவையான முழுமையான நிர்ப்பீடன சக்தியைப் பெற குறைந்தது மூன்று நாட்கள் தேவை! இது பரிபூரண ஆரோக்கியமானவர்களுக்கு!
குடி, கும்மாளம், புகை என்று உடலைக் கெடுத்து வைத்திருப்பவர்களுக்கும் சதா மன அழுத்ததில் இருப்பவர்களுக்கு, வேறு நாட்பட்ட நோய் இருப்பவர்களுக்கு இதைவிட அதிக நாள் எடுக்கும். 
முதல் தடவை புதிய வைரசினை எதிர்கொள்ள, நிர்ப்பீடனத்தை உருவாக்க உடல் மிகுந்த சிரமம் அடையும். இந்தக்கட்டத்தைத் தாண்டி விட்டால் பிறகு எப்போது உள்ளே நுழைய முயன்றாலும் தகுந்த தாக்குதலைக் கொடுத்து உடல் வெல்லும்! 
ஆகவே மக்களே வீட்டிற்குள் இருக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்றவுடன் மற்றவர்களுக்குப் பரவி விடும் என்று எதோ ஓசியில் பொதுச் சேவை செய்கிறோம் என்ற நினைப்பை விட்டுவிட்டு, இந்த மூன்று நாள் ஓய்வு நீங்கள் வைரசு தொற்று இருந்தாலும் உங்கள் உடலை வைரசுடனான போரிற்கு தயார்படுத்தும் காரியத்திற்கான ஓய்வாக, நல்ல மகிழ்ச்சி தரும் உணவையும், குடும்பத்துடன் ஆரோக்கியத்தைத் தரும் கேளிக்கையையும் கொள்ளுங்கள்!
உடல் ஆரோக்கியமாகவும் ஓய்வாகவும் இருந்தால் எந்த நோய் வந்தாலும் உடலில் பாதுகாப்பு அமைச்சான நிர்ப்பீடனத் தொகுதி (Immune system) பார்த்துக்கொள்ளும்! நீங்கள் செய்யவேண்டியது உடலையும் மனதையும் ஓய்வாக வைத்துக்கொள்ளவேண்டியதுதான்
ஆகவே ஊரடங்குச் சட்டம் உங்களை வைரசுடனான போரிற்காக தயார்படுத்தலுக்கானது! அதன் அடிப்படை உடலிற்கும், மனதிற்குமான ஓய்வும், உங்கள் நிர்ப்பீடனத் தொகுதிக்கு உதவி நிர்ப்பீடன சக்தியை அதிகரித்தலும்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...