குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, March 20, 2020

புனித தலங்களும் நோய்ப் பரவலும்

நண்பர் ஒருவர் எல்லா மதஸ்தலங்களும் கொரோனா வைரசினால் மூடப்பட்டுவிட்டது. கடவுளிற்கே வைரசு பயமா? புனித நீர் கொரோனா பரவும் என்ற பயத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, பிறகு எப்படி புனித நீர் என்றாகும் என்று கேள்வி எழுப்பினார்; 

சுத்தம் அசுத்தம் என்பது இயற்கையிற்கு பயந்த மனிதனின் பாகுபாடு; இயற்கையோ தனக்கு தரும் எதையும் வெறுத்து ஒதுக்காமல் எப்படி உயிர்களுக்கு நன்மை தரும் ஒன்றாக மாற்றுவது என்பதற்கு வேலை செய்துகொண்டிருக்கிறது. மண்ணில் போடும் கழிவை உரமாக மாற்றுகிறது, மண் உரமாக்கவே முடியாத பிளாஸ்டிக் கழிவினை உருவாக்கி இயற்கையே சவால் விடும் அறிவினைப் பெற்றதுதான் இன்றைய மனித குலத்தின் சாதனையும் பிரச்சனையும்; 

நாம் புனிதம் என்று நினைக்கும் நீர் தான் நவீன அறிவியலில் அதியுச்ச அசுத்தமாக இருக்கும், புராதன கலாச்சாரம் இயற்கையின் தக்கனத் தேர்விற்கு மதிப்புக்கொடுத்து, மந்தை நிர்ப்பீடனத்தை உருவாக்க இத்தகைய முறைகளைப் பின்பற்றினார்கள் என்று நினைக்கிறேன். 

அவர் இன்னும் புரியும் படி சொல்லுங்கள் என்றார்; 

கோவில்கள், சர்ச்சுகள் மக்கள் அனைவரும் கூடும் இடம். தற்போதைய சுத்தம் என்ற வரைவிலக்கணப்படி மிகவும் அசுத்தமாகக்கூடிய இடங்கள், புனிதமான நதி, இடங்கள் என்பதன் மறுபுற அர்த்தம் நாம் அதிகம் அசுத்தப்படுத்தப்போகும் நதி என்பதாகும். எமது அசுத்தங்களைக் கொட்டப்போகும் இடம் என்பதாகும். ஆகவே நாம் புனித தலங்கள் என்று நம்பும் இடங்கள் அனைத்தும் பௌதீகமாக மிக அசுத்தமான இடங்கள் ஏன் என்றால் மிகவும் அசுத்தமான மிருகமான மனிதன் தனது பாவங்களையும், அசுத்தங்களையும் கொட்டும் இடங்கள். 

அப்படியானால் இந்த அசுத்தங்கள் கேடு விளைவிக்காதா என்றால் அளவிற்கு மிஞ்சினால் அம்ருதமும் நஞ்சு என்ற விதிப்படி அளவு மீறினால் கேடு விளைவிக்கும். அளவோடு இருந்தால் உடல் அதை தனக்கு ஏற்றதாக மாற்றிக்கொள்ளும். 

இப்படி உடல் தீயதை நல்லதாக மாற்றிக்கொள்ள உணர்வு (Consciousnesses) உயர் நிலையில் இருக்க வேண்டும். 

இப்படி உணர்வை உயர் நிலைக்கு கொண்டு செல்லும் பயிற்சிகளையே ஆன்மீகம், சாதனை என்றார்கள். அவற்றை அடைய கோயில், குளம், மலை, தீர்த்தம் என்று உருவாக்கி வைத்தார்கள். 

இந்த இடங்களுக்கு செல்லும் போது உணர்வு மிக உயர்ந்த நிலையில் (our consciousnesses need to be in higher level) இருக்க இறைவனை எண்ணச் சொன்னார்கள். உயர்ந்த உணர்வு நிலை (elevation of consciousnesses) மனதினை வலுப்படுத்தும், மனம் வலுவடைந்தால் உடல் வலிமையடையும். ஆகவே புனித இடங்களிற்குச் செல்லும் போது உயர் உணர்வு நிலையைப் பெற மனப்பண்பு மிக அவசியமாகியது. 

இப்படி உயர்ந்த உணர்வுடன் அசுத்தமான இடத்தை அணுகும் போது அந்த அசுத்தம் எமக்குள் சேர்ந்து அந்த அசுத்தத்தை வென்று நிர்ப்பீடனம் உருவாகிறது. அசுத்தம் எம்மை வெல்லாத எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிறோம். இதை இன்னும் வலுப்படுத்த ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மூலிகை, வாசனைப் பூ பிடிக்கும் என்று உருவாக்கி

சக்திக்கு வேப்பிலை,

விஷ்ணுவிற்கு துளசி,

பிள்ளையாருக்கு அருகம்புல்,

சிவனுக்கு வில்வம்,

என்று சொல்லி அதனை தீர்த்ததில் கலந்து, உபசாரமாகப் படைத்து பிரசாதமாகக் கொடுத்தார்கள். 

இவை எல்லாம் பலன் தருவதற்கு சமூகம் ஒரு குறித்த நிபந்தனையில் இயங்கவேண்டும். இன்று அந்த ஒழுங்குமுறை அற்றுப் போய் இவற்றை தமது பணம், பேராசை, புகழ், அதிகாரம் என்பவற்றிற்காக போலியாகப் பின்பற்ற இவ்வகையான முறைகள் பலன் தராமல் போகத்தொடங்கியது. 

ஆக கோவில், சர்ச்சு, நதிகள், மலைகள் ஏறுவதெல்லாம் உணர்வினை உயர்வாக்கி, மனதினைச் சுத்தப்படுத்தி, அங்கு உள்ள அசுத்தங்களை ஏற்று, அதை வென்று நிர்ப்பீடனத்தை ஏற்படுத்தி வலிமையாக்கும் நிலையைப் பெறுவதற்காக. 

{அறிவியலை மதமாகப் பின்பற்றிக்கொண்டு மதங்களைக் கேலி செய்வதையே அறிவியல் என்று நம்பிகொண்டிருக்கும் அறிவியல் பக்தர்களே, நான் ஏதோ மதத்திற்கு முட்டுக்கொடுக்கிறேன் என்ற முன் துணிபுடன் வாசித்து விட்டுக் கடுப்பாகும் நாத்திக நண்பர்கள் கவனத்திற்கு; நான் ஒரு சூழலியல் சிந்தனையாளன் எனது சிந்தனை நவீன அறிவியலையும், புராதன யோக விஞ்ஞானத்தையும் அடிப்படையாகக் கொண்டது; ஒவ்வொரு செயலுக்கும் மறைவான காரணம், ஏன் அது நடக்கிறது என்ற தத்துவத்தையும் ஆராயும் நோக்கில் இவற்றை அணுகுகிறேன்}


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...