குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 31, 2019

தலைப்பு இல்லை

இதுவும் கடந்து போகும்! 

தவறுகளை அளவுக்கு மீறி பெரிதாக்கி எமது உணர்ச்சிகளைக் காட்டும் போது அந்தத் தவறு செய்பவன் சிந்தித்து திருந்தும் ஆற்றலையும் இழக்க வைத்து, சுட்டிக் காட்டுபவனின் சரியும் பிழையாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டு விடுகிறது. 

ஒரு உணவு விடுதி தமிழ் மொழியில் உரையாடக் கூடாது என்று அறிவுறுத்தல் செய்த விஷயத்தை சுட்டிக்காட்டி சரியான புரிந்துணர்வு வந்தவுடன் ஒரு சம நிலைக்கு கொண்டு வந்து ஒத்திசைவை ஏற்படுத்தி விட்டு நாம் எமது வேலையைப் பார்க்க வேண்டும். 

உணர்ச்சிவசப்பட்டு அளவுக்கு அதிகமாக தாக்கி அதளபாதாளத்திற்கு உன்னைத் தள்ளுவோம் என்று புத்தியில்லாமல் கூவிக் கொண்டு குழிவெட்டினால் தவறு செய்தவனுக்கு பாதிக்கப்படுகிறான், அவன் நம்மாள், அவனுக்கு உதவுகிறோம் என்று பெரிய கூட்டம் கிளம்பி தவறையே சரி என்று நிறுவி எம்மைக் குழிக்குள் வீழ்த்தும். அதன் பிறகு அவனை வீழ்த்துகிறோம் நாம் என்று இந்த சுழற்சி தொடரும். பிணைத்த மாடுகள் இரண்டு செக்கைச் சுற்றும் நிலைதான் இறுதியில். முன்னேற மாட்டோம். 

மக்களை உசுப்பேத்தி உணர்ச்சிக்குள் வைத்திருந்தால் தான் காரியம் சாதிக்கலாம் என்ற நுண்மை தெரிந்தவர்கள் இப்படி புத்தித் தெளிவிற்குள் மக்கள் வருவதை விரும்புவதில்லை! 

தவறு, தவறைச் சுட்டிக் காட்டுதல், தவறைத் திருத்துதல், அனைவருமாக ஒன்றிணைந்து முன்னேறுதல் என்று இருக்கும் சிந்தனைப் பண்பு சமூகத்திற்கு ஆரோக்கியம். 

தவறு, தவறைச் சுட்டிக்காட்டுகிறோம், மன்னிப்புக் கேட்கிறான், மன்னிப்பை நாம் ஏற்கமாட்டோம், அவனைப் பழி வாங்குவோம், அழிப்போம் என்று நாம், சரி நீ அழிக்க முனைந்தால் அதை நானும் பார்த்துக் கொள்கிறேன் என்று அவனும் சவால், அதற்கு ஆதரவாக சில முட்டாள் கூட்டங்கள், கருத்து மோதல்கள், நேர விரயம், இறுதியில் இதன் பெருவடிவம் கலவரம், வன்முறை, இன முரண்பாடு! 

மனிதனுக்குள் இருக்கும் பரிணாமத்தின் பிந்திய வளர்ச்சியடையாத உணர்ச்சிவசப்பட்ட மூளையின் செயற்பாட்டில் இருந்து வெளி வந்து மேல் மூளையின் மூலம் புத்துருவாக்க சிந்தனையின் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காணும்படி மனிதன் பழக்கப்பட வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...