குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 05, 2019

சரஸ்வதி தியானம் - 04

சரஸ்வதி தியானம் - 04 {சகலகலாவல்லி மாலை பாடல் - 03}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சென்ற இருபாடல்களிலும் சரஸ்வதி தேவியை தியானிக்க வழி சொன்னவர் அந்த தியானத்தால் தான் அடையும் இன்பத்தையும், தியானிப்பவரும் தியானிக்கப்படும் இறையும் வேறு இல்லை என்ற நிலையில் அடுத்த பாடலைப்பாடுகிறார்.
இந்தப் பாடலை குமரகுருபரரின் சரஸ்வதி தரிசனம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
உன்னை மனதில் இருத்தி எண்ணங்களைச் சீர்படுத்தி நால்வகைக் கவிகளும் பாட இந்த கடல் போன்ற, அமிழ்தம் போன்ற செழுந்தமிழில் மூழ்கிவிட்டேன்!
செழுந்ததமிழில் மூழ்குவதும் உன் அருட்கடலில் மூழ்குவதும் வேறு அல்லவே, ஆனாலும் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது, உனது அருளில் பரிபூரணமாக மூழ்கிவிட்டேனா என்று?
ஆனால் தோகையுடைய மயில் மழையைக் கண்டு ஆடுவதுபோல், நீ உள்ளம் தெளிந்து, நல்ல நூற்கள் எழுதும் புலமையுடையோர் கவி மழையைக் கண்டு மகிழ்வதைக் கண்டவுடன் நான் செழுந்தமிலில் மூழ்கியது உனது அருட்கடலில் மூழ்கியதுதான் என்று உணர்ந்து விட்டேன் என்று பொருள் பட கீழ்வருமாறு பாடுகிறார்;
அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே!
சகலகலா வல்லியே!
மொழியை ஆழ்ந்து கற்பவர்களது மூளை நரம்புப்பின்னல்கள் வலுவடைகிறது, மூளையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தற்போதைய மூளை ஆய்வுகள் நிருபிக்கின்றன. தமிழ் போன்ற செம்மையான மொழி மூளைக்கு இன்னும் ஆற்றலைத்தரும்! இப்படி செழுந்தமிழை ஆழ்ந்து கற்பதால் வரும் இன்பமே சரஸ்வதியின் பேரருளில் மூழ்கும் வழி!
கற்றலில் பெறும் இன்பமே சரஸ்வதியின் பூரண அருளைப் பெறும் வழி!
ஆகவே ஒரு சாதகன்/மாணவன் தினசரி புதுப்புது விஷயங்களைக் கற்று தனது மூளையினை இளமையாக வைத்திருப்பவன் சரஸ்வதி கடாக்ஷத்திற்கு உரியவன் என்பதில் ஐயமில்லை!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...