குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 05, 2019

சரஸ்வதி தியானம் - 11

சரஸ்வதி தியானம் - 11 {சகலகலாவல்லி மாலை பாடல் - 10}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே
வெள்ளைக்குடை தர்மத்தின் சின்னம், தூய மனதுடன் வெண்குடைக்கு கீழமர்ந்து மண்ணை ஆளும் மன்னன் எனது பண் கண்ட அளவில் எனக்கு பணியவேண்டும் என்ற ராஜவசிய வேண்டுதல் வைக்கிறார்! ஏனென்றால் இது பாடப்பட்ட சந்தர்ப்பம் அத்தகையது.
இந்தக்காலத்தைப்போலவே அந்தக்காலத்திலிம் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்திருக்கும் போல! டில்லி சுல்தானுக்கு தமிழ் தெரியாது, குருமரகுருபரரிற்கோ இந்தி தெரியாது! ஆனால் எப்படியாவது மூடிக்கிடக்கும் காசி விசுவ நாதர் கோயிலை திறக்கவேண்டும். அதற்காக சுல்தானை மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு வேண்டுகோள் விடுக்க சுல்தான் "என்னுடன் பேசுவதற்குரிய மொழி தெரியாத உனக்கு உதவி செய்யமுடியாது என்று" அவமதித்து அனுப்பிவிட்டான். மனம் வெதும்பிய குமரகுருபரர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எதையும் செய்யாமல் 😂😂🤭 எல்லா ஞானத்தையும் தரக்கூடிய சரஸ்வதியை உபாசித்து இந்த சகலகலாவல்லி மாலையைப் பாடி இந்தியும், உருதும் பேசும் ஆற்றலைப் பெற்று சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சுல்தானிடம் பேசி காசி விசுவ நாதர் கோயிலை வழிபாட்டிற்காக மீளவும் திறந்து பெற்றார் என்பது கதை!
ஆக குருமரகுருபரர் தனது தாய்மொழியாம் தமிழ் மொழியை தெளிவுறக் கற்று அதனால் பெற்ற செம்மையான தெளிந்த மனத்தினால் விரைவாக அயல் மொழியான இந்தியை துரிதமாகப் படித்துக்கொண்டார் என்பது புலனாகிறது. இன்றைய நவீன ஆய்வுகளும் தாய்மொழியை சிறப்பாக கற்பவர்களுக்கு இரண்டாவது மொழி கற்கும் ஆற்றல் இலகுவாக வரும் என்பது நிருபணமாகியுள்ளது.
மொழியைக் கற்றால் வரும் கூர்மையான மனமும் மூளையும் ஆற்றல் மிக்க மன்னனைப் பணிய வைக்கும் ஆற்றலைத் தரும்.
சகலகலாவல்லி என்பதை சகல கலைகளிலும் வல்லமை உடையவள் என்றே பலரும் பொருள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்திற்குரிய சூடாமணி நிகண்டு வல்லி என்றால் விரைந்து என்று பொருள் தருகிறது. ஆக சகல கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தருபவள் என்று பொருள். குமரகுருபரரிற்கும் விரைந்து இந்தி கற்கும் ஆற்றலைத்தந்தால் இந்தப்பொருளே பொருந்தி வருகிறது.
எல்லாக்கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தரும் அன்னையே பிரம்மன் முதல் பல்கோடி தெய்வங்கள் இருந்தாலும் உன்னைப்போன்ற கண்கண்ட தெய்வம் இருக்கிறார்களா என்று வியந்து போற்றுகிறார்.
இந்தப் பாடல்தொகுப்பிற்குரிய கதைப்படி டில்லி சுல்தானை தான் வசப்படுத்த வேண்டும் என்ற இச்சாக்தியினை (will power) இந்தக்கடைசிப் பாடலின் முதல்வரியில் வைத்திருக்கிறார்.
இந்தப்பாடல் கற்கும் கல்வியால், சரஸ்வதியின் அருளால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை மாணவர்களுக்குத் தரும் ஒரு அரிய பாடல்!
இத்துடன் சரஸ்வதி தியானம் என்ற தலைப்பில் கடந்த நவராத்ரியின் கல்வித் தெய்வம் சரஸ்வதி தேவியையும் அவளது ஆற்றல்கள் பற்றிய சிந்தனையும் முற்றிற்று!
  

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...