குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 26, 2019

மந்திர ஜெபத்திற்கு எந்த மாலையைப் பயன்படுத்தினால் அதிக நன்மை?

இன்று பலரும் மந்திர சாதனைக்கு எந்தமாலையைப் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை, அவ்வளவு நன்மை என்று புலம்புவதைக் காண்கிறோம்.  இது அடிப்படையில் மந்திர சாதனையின் நோக்கம் தன்மை புரியாதவர்கள் கூறும் கூற்று. 

மாலைகளை மாற்றியவுடன் அதிக சக்தி பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிப்பது தவறு. 

மந்திரம் என்றால் மனதைத் திடப்படுத்துவது என்று பொருள். மனம் என்ற சொல்லை விரித்துச் சொல்வதானால் மேல்மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் என்று நான் காக்கி அந்தக்கரணங்கள் என்று சொல்லுவார்கள் சித்தர்கள். 

மந்திர சாதனையின் முதல் சித்தி மேல் மனதின் சலனிக்கும் தன்மையைக் கட்டுப்படுத்தி எண்ணங்கள் குறைந்து சாதனைக்கு எடுத்துக்கொண்ட மந்திரத்தில் மேல் மனம் லயமாகுவது. இப்படி நடந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒரு மடங்கு. 

மந்திர சாதனையின் அடுத்த சித்தி புத்தி தெளிவடைதல், புத்தி தெளிவடைந்தால் சித்தத்தில் ஏற்படும்  விருத்திகளை கட்டுப்படுத்தலாம். இப்படி புத்தி தெளிந்தால் அந்த மந்திர ஜெபத்தின் பலன் ஒன்றுக்கு பத்து மடங்கு. 

மூன்றாவது சித்தி சித்த விருத்தி நிரோதமாதல், எண்ணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் உள்ளிருந்து எழுந்து எம்மைக் குழப்பாமல் சித்தம் புத்தியால் கட்டுப்படுத்தக்கூடிய அளவு ஆற்றலைப் பெறுதல். இப்படி ஜெபிக்கப்படும் மந்திரத்திற்கு ஒன்று 100 மடங்கு பலன். 

 நான் காவது எமது ஆங்காரம் நான் பணக்காரன், நான் அறிவாளி என்ற சிறு ஆங்காரம் ஒழிந்து நான் ஜெபிக்கும் மந்திர தெய்வத்தின் தன்மையுடையவன் என்று உணர்தல். இது நடந்தால் மந்திரத்திற்கு 1000 மடங்கு பலன். 

ஐந்தாவது எமது மனம், புத்தி, சித்தம், ஆங்காரம் ஆகிய அந்தக்கரணங்கள் நான்கும்  நாம் உபாசிக்கும் தெய்வத்தின் தன்மை பெறுதல், இதற்கு பலன் லட்சம், கோடி என்று உங்கள் மனத்திருப்திக்குத் தேவையான எண்ணிக்கையைச் சொல்லி வைத்துக்கொள்ளுங்கள். 

இதை விட சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கும் குறித்த மாலைகள், குறித்த மந்திரங்களுக்கு என்ற விதிகள் அவை சாதனைக்கு மேற்கூடியபடி அந்தக்கரணங்கள் ஒழுங்காகினால் பிரபஞ்சத்தில் இருந்து குறித்த தெய்வ சக்தியை எம்மில் ஈர்த்து சேர்ப்பதற்கு உதவியாக இருக்கும் என்பதே. 

ஆகவே ஒரு சாதகன் ஆரம்ப காலத்தில் தனது சாதனையை அந்தக்கரணங்கள் ஈடுபாடு கொள்ளச் செய்வதற்கான எளிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதை விடுத்து தங்கமணி மாலையில் ஜெபம் செய்தால் ஒரு லட்சம் பலன் என்று கூறியிருப்பதைக் கேட்டு தங்கமணி மாலை செய்ய பணமில்லையே, இருந்தால் விரைவாக முன்னேறலாமே என்று மயங்கி தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ளக்கூடாது. இவை எல்லாம் முற்காலத்தில் சாதனையைச் சாதாரணமானவர்கள், தகுதியற்றவர்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காக நுட்பமாகத் தடைகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட விதிகள். உண்மை சாதனை சித்தியின் நுட்பம் அந்தக்கரணங்களைச் சீர்படுத்துவதில் இருக்கிறது. 

தற்காலத்தில் சாதனை செய்யும் ஆர்வம் அதிகரித்து வருவதால் அதை வியாபாரமாக்க ஜெபமாலை வியாபாரம் நல்ல வழியாகிப் போவதால் இப்படியான சாதனையில் முக்கியத்துவம் குறைந்த விஷயங்கள் அதிகம் பிரபலப்படுத்தப்படுகிறது. 

ஆகவே உண்மையில் சாதனை செய்யும் ஆர்வமிருந்தால் உங்கள் கைகளில் எண்ணிக்கையினை எண்ணும் முறையினைக் கற்றுக்கொள்ளுங்கள். அதிக அளவு ஜெபம் செய்யும் சாதகர்களாக இருந்தால் குறித்த தெய்வ மந்திரங்களுக்கு சாஸ்திரம் கூறும் எளிய மாலைகளைப் பயன்படுத்துங்கள். அதை விடுத்து கிடைத்ததற்கரிய, விலைகூடிய மாலைகளைத் தேடி சாதனையைச் செய்யாமல் விடாதீர்கள். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...