குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 05, 2019

சரஸ்வதி தியானம் - 06

சரஸ்வதி தியானம் - 06 {சகலகலாவல்லி மாலை பாடல் - 05}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பஞ்சப்பிதம் தரும் செய்ய பொற்
பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே?
நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும்
அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்
சகல கலாவல்லியே
அடுத்த பாடல் படைப்பாற்றல் பற்றியது. படைப்பாற்றல் இருக்க ஒருவனுக்கு ஹிருதயம் மலர்ந்திருக்க வேண்டும். ஹிருதயம் மலர்ந்திருத்தல் என்பது சரியாக நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டியது.
இன்று பலரும் செயல்களைச் செய்வது தமது புகழிற்காக, பணத்திற்கா, தமக்கு மட்டும் நன்மைக்காக என்ற அடைப்படையில் தமது அறிவாற்றலைப் பயன்படுத்துகிறார்கள். இது ஹ்ருதயம் மலராத நிலை.
பாட்டு எழுத வல்ல மொழியாற்றல் உள்ளவர்களும் தமது மனதில் இருக்கும் கசடுகளை அகற்றாமல் ஹ்ருதயம் மலராமல் சிக்கலில் மாட்டிக்கொள்வதைக் காண்கிறோம்.
ஹ்ருதயம் மலராது யோகம் செய்கிறோம் என்பவர்கள் வெறும் உடலை வளைத்து வித்தை செய்வதையே யோகம் என்று எண்ணத் தொடங்கி விடுகிறார்கள்.
ஹ்ருதயம் மலராத பேச்சாற்றல் உள்ளவர்கள் வீண்கருத்துக்களைக் கூறி சர்ச்சையில் மாட்டிக்கொள்கிறார்கள்.
ஹ்ருதயம் மலராமல் கடவுளை வணங்குகிறோம் என்று பக்திமானாகியவர்கள் பேதபுத்தி நீங்காமல் என்மதம் பெரிதா உன்மதம் பெரிதா என்ற சர்ச்சையில் இறங்கி பிரிவினை பேசத் தொடங்கி விடுவார்கள்.
ஹ்ருதயம் மலர்தல் என்பதை புரிவது என்றால் சுருக்கமாக மனதிலுள்ள தீய பண்புகளும் எண்ணங்களும் அகன்று தன்னைப்போல் மற்றைய உயிர்களையும் சமமாகப் பார்க்கும், பேதபுத்தி அற்ற ஞானம். நவீன உளவியலில் ஒப்பிடுவதாக இருந்தால் Empathetic character என்று ஒப்பிடலாம். ஆனால் முழுமையான அர்த்தத்தைத் தராது.
இப்படி ஹ்ருத்யம் மலரும் நடைமுறை சாதாரண தாமரை மலர்வதைப்போன்ற ஒன்றே! எப்படி சேற்றிலிருக்கும் தாமரை சூரியனைக் கண்டு சேற்றைவிட்டு, நீரை விட்டு வெளியே வந்து மலர்ந்து சிரிக்கிறதோ அதைப்போல் ஒருவனது மனமும், நெஞ்சும் காமம், குரோதம், அழுக்காறு, வெகுளித்தனம், கோபம் என்ற சேற்றால் நிறைந்திருக்கிறது. இதையே நெஞ்சத்தடத்து என்று நெஞ்சமாகிய தடாகத்திலிருந்து அறிவுக் கிரகணத்தை கதிர்க்கும் உனது பொற்பாதங்களை கண்டு எனது ஹ்ருதய கமலம் மலராதா? என்கிறார்.
சரஸ்வதியின் பாதங்களை செம்மையான செம்மஞ்சக் குழம்பு தீட்டப்பட்ட பொற்பாதங்கள் என்கிறார். இவை அறிவின் குறியீடு. எப்படி சேற்றிலிருக்கும் செந்தாமரை மலர சூரியன் காரணமோ, அதுபோல் அழுக்கு நிறைந்த நெஞ்சத்திலிருந்து அறிவு மலர தேவியின் பொற்பாதங்கள் காரணமாக இருக்கிறது.
இப்படி தேவியின் பொற்பாதங்களின் கிரணங்கள் ஒருவனது மனதைத் தாக்கினால் அவனது தீய குணங்கள் எல்லாம் நீங்கி படைப்பாற்றல் நிறைந்தவனாகிவிடுவான்.
அதை அடுத்த வரிகளில் பிரம்மாவின் நாவிலும், அகத்திலும் நீ வெள்ளைக்கமலத்தில் அமர்ந்து இருப்பதாலேயே அவர் அனைத்தையும் சீராக படைக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவராக இருக்கிறார் என்று ஒப்பிட்டு நிறுவுகிறார்.
முற்காலத்தின் மாணவனின் திறமை அவன் எடுக்கும் பெறுபேறுகளிலிருந்து கவனிக்கப்படவில்லை. அவனது பண்பு மலர்ச்சியிலிருந்தே அறியப்பட்டது. அறிவு கூடிப் பண்பு இல்லாதவர்களே அசுரகள் எனப்பட்டார்கள். அறிவுடன் பண்புள்ளவர்களே தேவர்கள் எனப்பட்டார்கள்.
ஆகவே கல்வியின் அடிப்படை பண்பு மலர்ச்சி!
இந்தப்பண்பு மலர ஒருவனுக்கு சிரத்தையும், ஒழுக்கமும் அவசியம்!
இதைப்பெற ஒரு சாதகன்/மாணவன் சரஸ்வதி தேவியில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட பொன் நிறப்பாதங்களை தனது ஹ்ருதயத்தில் தியானிக்க வேண்டும். இப்படி தியானிப்பவன் பிரம்மாவைப் போன்ற படைப்பாற்றல் உள்ளவனாக இருப்பான்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...