குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 05, 2019

சரஸ்வதி தியானம் - 03

சரஸ்வதி தியானம் - 03 {சகலகலாவல்லி மாலை - பாடல் 02)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
முதல் பாடலில் தேவியின் பாதங்களை தியானிக்கும் வழியைக் கூறியவர் அடுத்த பாடலில் சரஸ்வதி தேவியின் உருவை எப்படி தியானிக்க என்ன பலன் என்று கூறுகிறார்.
கற்றறிந்த அறிஞர்கள் வேண்டுவதெல்லாம் அறிஞர்களுடனும், மக்களுடனும் உரையாடும் போது தமது சொற்கள் இனிமையாக கேட்பவர்களுக்கு இதமாக சொற் சுவையுடனும், மற்றவர் மனதை ஈர்க்கும் வண்ணம் அர்த்தமுள்ளதாக பொருளுடையதாகவும் இருக்க வேண்டும் என்பதே!
இப்படி சொற்கள் சுவையுடையதாகவும், பொருளுடையதாகவும் இனிமையாக இருக்க தமிழ் வகுத்த இலக்கணம்தான் கவிதையின்பம் என்பது!
இப்படி மனதிற்கு இன்பம் தரும் கவிதைகளை நான்கு வகையாக பகுத்துள்ளனர், ஆசுகவி, மதுர கவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்பவை இவை. இந்த நான்கு வகைக்கவியும் பாடும் வல்லமை உள்ள ஒருவனது வார்த்தைகளும், சொற்களும் மற்றவர்கள் மனதிற்கு இன்பம் தரும், இரசிக்கக்கூடிய சுவையுடையதாக இருக்கும். இப்படியான சொற்களையுடைய கவி பாடவே எல்லாப்புலவர்களும் விரும்புகிறார்கள். இவற்றைப் பாட என்னைப்பணித்தருள்வாய் என்று முதல் இரண்டு வரிகளில் பாடி அதன் பின்னர் சரஸ்வதி தேவியின் அழகை வர்ணிக்கிறார்.
பங்கையாசனத்தில் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். முதல் பாடலில் உனது பாதங்களை எனது சஹஸ்ராரத்தில் வைத்து எனது மூளையை தண்தாமரையாக குளிர்ச்சியாக்கு என வேண்டியவர் இப்போது அந்த தாமரையில் நிரந்தரமாக சரஸ்வதி அமர்ந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இதை யோக மொழியில் கூறுவதானால் ஒருவனது எண்ணங்கள் சீராகி, மூளை குளிர்மையாகி சம நிலையுடைய மனதை அடைந்துவிட்ட நிலை, சரஸ்வதியின் ஆற்றல் அவனில் நிலைகொண்டுவிட்ட நிலையைக் குறிக்கிறது. இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்றால் தேவியை கீழ்வருமாறு தியானிப்பதன் மூலம் என்று அடுத்த வரியில் தியானிப்பதற்குரிய வழிமுறையைக் கூறுகிறார்.
வெள்ளைத்தாமரையில் அமர்ந்த அழகிய பொன்னிற உருவம், உடலோ மெல்லிய பொற்கொடி, அழகிய குன்றுகள் போன்ற மார்பு, ஐந்து வகையாகவும் தலையை அலங்கரித்துக்கொள்ளக்கூடிய காடு போன்று அடர்ந்த கூந்தல் இந்த அழகிய உருவைச் சுமந்த கரும்பின் இனிய சகலகலாவல்லியே என்று தேவியை கீழ்வரும் பாடலில் தியானிக்க வேண்டும்.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கையாசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகலகலாவல்லியே!
இப்படி தியானிக்கும் சாதகன்/மாணவன் சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டு மொழியைப் பிரயோகிக்கும் ஆற்றலைப் பெறுவான் என்பது இந்தப்பாடலின் தியான விளக்கம்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...