குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, October 04, 2019

சரஸ்வதி தியானம் - 10 {சகலகலாவல்லி மாலை பாடல் - 09}

சொற்கும் பொருட்கும் உயிராம்
மெய் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்
நிலந்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாண நடை
கற்கும் பாதாபுயத் தாயே 
சகலகலாவல்லியே
சொல்லும் சொல்லிலும், அதன் பொருளிலும் உயிர்த் தன்மை இருக்க வேண்டும். உயிர்தன்மையினை சைதன்யம் என்று சொல்லுவார்கள். இந்த சைதன்ய சக்தி எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதால் தான் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 
தைத்ரிய உப நிஷதத்தின் பிருகுவல்லீ சுலோகம் 10.4 கூறுகிறது; பரம்பொருளை அனைத்திற்கும் ஆதாரமானவராக போற்ற வேண்டும். அப்படிப்போற்றுபவன் தன்னை அறிந்து தன்னில் நிலைபெற்றவனாக ஆகிறான். அவரை ஆற்றலுள்ளவனாக அறிந்தவன் ஆற்றல் வாய்ந்தவனாகிறான். சிந்தனையாகப் போற்றுபவன் சிந்திக்க வல்லவன் ஆகிறான். ஆசைகள் அவனுக்கு அடிப்பணிகின்றன. அவரைத் தலைவராகப் போற்றுபவன் தலைவனாகிறான். அவரை அழிக்கும் சக்தியாகப் போற்றுபவனைச் சூழ உள்ள பகைவர்களும் வெறுப்பவர்களும், எதிரிகளும் அழிக்கப்படுகின்றார்கள் என்று கூறுகிறது. 
இந்த உபநிஷத வாக்கியத்தின் உட்பொருளை அறிந்த மகா ஞானியே குருமரகுருபர் என்பது இந்தப்பாடலில் முதல் வரிகளில் தெரிகிறது. சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உயிர்தருவது மெய்ஞானம், மெய்ஞானத்தின் தோற்றமே சரஸ்வதியிடமிருந்தே பிரவாகிக்கிறது. அந்த சரஸ்வதியை மெய்ஞானத்தின் பிரவாகமாக மேலே தைத்திரீய உப நிஷத்தின் பிரகாரம் தியானிக்க வல்லவர்களது சொற்கள் வாக்கு சித்தியாகிறது. சொன்ன சொல் உயிர்ப்புடன் நடக்கிறது. ஆசி கூறினால் அந்த ஆசியில் உயிர்த்தன்மையுடன் ஆசி பலிக்கிறது. ஆகவே சரஸ்வதியை சொல்லிற்கும் பொருளிற்கும் உயிராக இருக்கும் மெய்ஞானமாக தியானிக்க வேண்டும். 
எப்படித் தியானிக்க வேண்டும் என்ற அழகினை அடுத்த வரிகளில் கூறுகிறார். நிலத்தில் படும் அளவிற்கு நீண்ட துதிக்கையுடைய சிறந்த பெண் யானையும், அரச அன்னமும் வெட்கப்படும் அளவிற்கு இடை அசைவு இருக்கும் பேரழகுள்ள தாமரை போன்ற பாதங்களை உடைய தாயே உன்னை மெய்ஞானமாக தொழுது தியானிப்பவர்கள் சொல்லும், அதன் அர்த்தமும் உயிர்ப்படையும் என்ற உண்மை தெரிந்து தியானிப்பவர்கள் யார் உள்ளார்கள்? எனக்கு இந்த இரகசியம் தெரிதிருக்கிறது என்று உள்ளூர மகிழ்ந்து பாடுகிறார். 
சரஸ்வதியை மெஞ்ஞானத்தின் தோற்றமாக் தியானிப்பவர்கள் வாக்கும் சொல்லும் அதன் பொருளும் உயிர்ப்புடன் இருக்கும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...