குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 22, 2018

சித்தர்களும் மஹாயான பௌத்தமும்



************************************************

அண்மையில் இலங்கையின் ஆர்வமுள்ள இளம் சரித்திர ஆராச்சியாளர் துவாரகன் அவர்கள் வீரசோழியத்தின் பாயிரச் செய்யுள் பகிர்ந்திருந்தார். 

ஆயுங் குணத்தவ லோகிதன் 
பக்க லகத்தியன் கேட்
டேயும் புவனிக் கியம்பிய
தண்டமி ழீங்குரைக்க

என்ற செய்யுளடிகளை பகிர்ந்திருந்தார். இதன் படி அகத்தியர் தமிழிற்கு இலக்கணம் வகுத்தது அவலோகித புத்தரின் வேண்டுகோளின் படி என்று குறிப்பிடப்படுகிறது. 

அடடே நாமெல்லாம் அகத்தியர் தமிழிற்கு இலக்கணம் வகுத்தது சிவனின் ஆணையால், முருகனின் துணையால் என்றெல்லவா நம்பியிருந்தோம். இவர் என்ன புதுக்கதை விடுகிறார் என்று பலர் எண்ணியிருக்க கூடும். 

இனி அவலோகிதர் பற்றி சற்றுப்பார்ப்போம். அவலோகிதர் அல்லது அவலோகிதீஸ்வரர் அல்லது பத்மபாணி என்பது மஹாயான பௌத்தத்தில் சிவன் அல்லது பரம்பொருள் எனக்குறிப்பிடப்படும் தன்மைக்கு நிகரான தெய்வமாகும். 

மஹாயான பௌத்தகோட்பாட்டின் படி எல்லா உயிர்களும் அவலோகித புத்தரிடமிருந்தே வருகிறது. பின்னர் புத்தர் கூறிய விதிப்படி நடக்க போதிசத்துவன் ஆகி மீண்டும் புத்தருடன் கலக்கிறான். 

இதுவே அத்வைதமும் கூறுகிறது. 

இதையே சித்தர்களும் பேரொளி நிலையான சிவத்திலிருந்து 96 தத்துவங்கள் சூழ மனினாகிய உயிர் மீண்டும் சிவ வாசியோகத்தை கைக்கொள்ள மகாக்காரண சரீரமடைந்து சிவமாகிறான் என்கிறார்கள். 

மேலும் மஹாயான பௌத்தத்தில் சாதனைக்கு உபயோகிக்கப்படும் மூச்சு, மந்திரம், தெய்வங்கள் என்பவையே சித்தர் மார்க்கத்தில் வாசி, மந்திரம், உபாசனை தெய்வங்களாகின்றது. 

புத்தமித்திரனார் கூறியுள்ள "ஆயுங் குணத்தவ லோகிதன் பக்க லகத்தியன் கேட்டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க" என்ற இந்த செய்யுள் அடிகள் சித்தர் மார்க்கத்திற்கும் மஹாயான பௌத்தத்திற்கும் சாதனை (spiritual practice) ரீதியாக உள்ள தொடர்புகளுக்கு எடுத்துக்காட்டாகும். 

யோக சாதனையில் ஒருவனின் மனநிலைக்கு தக்க குருவின் துணையுடன் தெய்வங்களை உருவாக்கிக்கொண்டு தன்னில் இறைத்தன்மையை அடையக்கூடிய சுதந்திரம் உள்ளது. புத்த மித்திரனார் மஹாயான பௌத்த யோகப்பயிற்சி முறைகளான ஆனாப்பானா சதி, விபசனா என்பவையும் மந்திர யோகமும் பயின்றிருக்க கூடியவராக இருந்திருப்பார் என்பதில் ஐயமில்லை என்பதுடன் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்த அகத்திய மகரிஷியின் வாசி சிவ யோகங்கள் சரியாக புத்தர் உபதேசித்ததுடன் ஒத்துப்போவதைக் கொண்டு அகத்தியரும் சிவனார் ஆணைக்கு இணங்க வாசி சிவயோகத்தை பயிற்சித்து தமிழ் இயற்றியதையும் அறிந்து தமது பயிற்சி சாதனை நெறியும் அகத்தியர் கூறிய சாதனை நெறியும் அடிப்படையில் ஒன்றாக இருப்பது கண்டு அகத்தியர் அவலோகிதரின் ஆணைக்கு இணங்க தமிழ் இலக்கணம் வகுத்தார் என்று கூறியிருக்கலாம் என்பதே எமது துணிபு. 

அகத்தியரும் புத்த மித்திரனாரும் ஒரே யோக முறைகளை பயின்றிருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் வீரசோழியத்தின் முதலாவது பாயிரச்செய்யுளில் இருக்கிறது. 

மிக்கவன், போதியின் மேதக்
கிருந்தவன், மெய்த்தவத்தால்
தொக்கவன், யார்க்குந் தொடரவொண்
ணாதவன், தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற்
புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி
மன்புத்த மித்திரனே.

இந்தப்பாயிரத்தில் "பாதந் தலைமேற் புனைந்து" என்ற வரிகள் முக்கியமானவை. இது பொதுவாக சித்தர் மரபில் குருபாதுகையை சஹஸ்ராரம் எனும் தலை உச்சியில் தியானிக்கும் மரபு! இதுபற்றிய விளக்கம் அகத்தியர் யோக ஞானத்திறவுகோல் பாடல்களில் விரிவாக காணலாம். மேலும் மஹாயான தியான முறைகளை சித்தர்களின் தியான சாதனை முறைகளுடன் ஒப்பிட்டு அறிந்து கோள்ளலாம். 

ஆக புத்த மித்திரனார் தனது ஆழமான யோகப்பயிற்சியால் தமிழ் சித்தர் மரபில் அகத்தியர் சிவன் எனப்போற்றிய அந்த மூல பரம்பொருளை தான் பயிற்சிக்கும் மஹாயன பௌத்த மரபின் மூல பரம்பொருளான அவலோகிதீஸ்வரராக உணர்ந்து தான் கற்ற தமிழும் அவரிடமிருந்து வெளிவந்தாக உருவகித்து பாடியுள்ளார். 

மேற்பரப்பு ஆய்வில் புத்தமித்திரனார் கற்பனையில் ஏற்றிப்பாடியது போல் இருந்தாலும் ஆழத்தில் உண்மையை அனுபவத்தில் உணர்ந்து பாடியுள்ளார் என்பதை சித்தர் மார்க்க சாதனை புரிபவர்களும், மஹாயான பௌத்த தியானப்பயிற்சி அறிந்தவர்களுக்கும் உணர்வர்!

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...