குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, October 11, 2018

தேவி மகாத்மியமும் தெய்வ குண வளர்ச்சியும்


***************************************************************

நவராத்ரியில் பிரபலமான உபாசனை முறை தேவி மஹாத்மியம் படித்தல், இதை சண்டி ஸப்தஸதி என்று கூறுவார்கள். இது மார்க்கண்டேய புராணத்தில் 76 தொடக்கும 88 வரையிலான அத்தியாயங்களில் வரும் 700 சுலோகங்கள் கொண்டது. இதை ஒரு சடங்காக செய்தலினும் மேலானது அதன் நோக்கத்தை அர்த்தத்தை புரிதல்.
அதன் தொடக்கம் இவ்வாறு அமையும்: சுரந்தா என்ற நாட்டை இழந்த அரசனும், சமதி என்று வியாபாரத்தில் தோல்வியுற்று குடும்பத்தால் ஒதுக்கப்பட்ட வியாபாரியும் மனவிரக்தியுற்று காட்டிற்கு சென்று தமது மனக்கவலைகளை பகிர்ந்து அங்கு தவம் புரியும் மேதஸ் எனும் முனிவரிடம் தமது துன்பங்களைப்பகிர்ந்து அதனிலிருந்து வெளிவரும் வழிவகையை கேட்க அதற்கு உபதேசிக்கப்படும் வழிமுறையே தேவி மகாத்மியம் ஆக பரிணமிக்கிறது.
அந்த மகாத்மியத்தை கேட்டு பின்னர் மூன்று வருடங்கள் சாதனை புரிந்து அரசன் தனது இராச்சியத்தை மீளப்பெறுகிறான், வியாபாரி தனது செல்வத்தை மீளப்பெறுகிறான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது, தேவி மகாத்மியம் அரசை இழந்த அரசனிற்கு மீண்டும் அரசை பெறுவதற்கு வழிகாட்டியுள்ளது, வியாபாரிக்கும் செல்வத்தை பெற வழிகாட்டியுள்ளது.
ஆக இது வெறும் கற்பனைப்புராணமல்ல, மனிதனின் மனதின் ஆழத்தில் வேரூன்றி ஆற்றலை வீணடிக்கும் தான் என்ற ஆணவம், அதி காமம், பேராசை, துர்குணங்கள் யாவற்றையும் அசுரர்களாக வர்ணித்து அந்த அசுரர்களை வெல்லுவதற்கு மனிதர்களுக்கு தேவையான குணங்களையும், பண்புகளையும் மகாகாளி, மகாலக்ஷ்மி, மகாசரஸ்வதியாக வர்ணித்து அவற்றை அடையும் வழியையும் காட்டி மனிதனை உயர்த்தும் ஓர் உயர்ந்த இரகசியம் தேவி மகாத்மியம்!
இந்த நவராத்ரியில் இயலுமான வரை தேவிமகாத்மியத்தினை பொருளறிந்து சிந்திப்பது மனதில் பண்பில் உயர்வை ஏற்படுத்தும்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...