குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 29, 2018

தீபாவளி ஸ்பெஷல்: ஸ்ரீ அரவிந்தர் அருளிய மகா லக்ஷ்மி தத்துவம்

Image result for Mahalakshmi Sadhana



ஸ்ரீ அரவிந்தர் அருளிய மகா லக்ஷ்மி தத்துவம்
ஞானமும் சக்தியும் மட்டுமே பராசக்தி அன்னையின் வெளிப்பாடுகளல்ல. அதி நுண்ணிய இரகசியம் ஒன்று அவளது இயல்பில் உளது. அஃது இன்றேல் ஞானமும் சக்தியும் முழுமை பெறா, பூரணம் பரிபூரணமாயிராது. அவற்றிற்கு மேல் என்றுமுள் எழிலின் அற்புதம், தெய்வீக இசைவுகளின் பற்ற முடியாத இரகசியம், தடுக்க முடியாத மோகன வசீகரத்தின் பரந்த மாயாஜாலம் உள்ளது. அது உலகளாவிய பொருட்களையும், சக்திகளையும் ஈர்த்துப் பிடித்து அவற்றை கூட்டி இணைத்து, மறைவிலுள்ள ஓர் ஆனந்தம் திரைக்குப் பின்னின்று தன் லீலைகளை நடத்தவும், அவற்றைத் தனது சந்தங்களாக்கவும் தனது வடிவங்களை ஆக்கவும் உதவுகிறது. இதுவே மகாலக்ஷ்மியின் மாட்சி.
உடல் கொண்ட ஆன்மாக்களின் இதயத்திற்கு இவளைவிட வசீகரமான தெய்வ சக்தி வடிவம் வேறு இல்லை. மகாலக்ஷ்மியை அனைவரும் மகிழ்ந்து விரும்பி நாடுகின்றனர். ஏனெனில் அவள் இறைவனின் இனிமையை போதை தரும் அந்த ஜாலத்தை வீசுகிறாள். அவளருகில் இருப்பது ஆழ்ந்த ஆனந்தமாகும். அவளை இதயத்தில் உணர்வது வாழ்வை ஓர் ஆனந்தப்பரவசமாக, அற்புதமாக ஆக்குவதாகும். வனப்பும் வசீகரமும், மென்மையும் கதிரவனிலிருந்து ஒளி வருவது போல் அவளிடமிருந்து பெருகி வருகின்றன. அவள் தனது அற்புத நோக்கை நாட்டுமிடமெல்லாம் புன்னை எழிலைப் பொழியுமிடமெல்லாம் ஆன்மா பிடிபட்டு, அவளுக்கே ஆட்பட்டு அளவில்ல ஆனந்தத்தின்  ஆழங்களில் அமிழ்த்தப்படுகிறது. அவள் கரங்களின் ஸ்பரிஸம் காந்தம் போன்றது. அவற்றின் இரகசிய நுண்ணிய பிரபாவம் மனத்தையும், பிராணனையும், உடலையும் மாசு நீக்கி நயமாக்குகிறது. அவள் மலரடிகளை ஊன்றிய இடமெல்லாம் அற்புதப் பரவசானந்த ஓடைகள் பொங்கிப் பாய்கின்றன.
ஆயினும் இந்த மோகன சக்தி கோருவதை நிறைவேற்றுவதும், அவளது சாந்நித்யத்தை தரிப்பதும் எளிதன்று. மனத்திலும் ஆன்மாவிலும் அழகு, இசைவு, எண்ணங்களிலும் உணர்ச்சிகளிலும் அழகு, இசைவு, ஒவ்வொரு புறச்செயலிலும் அழகு, இசைவு, வாழ்விலும் சூழலிலும் அழகு, இசைவு ஆகியவற்றி மகாலக்ஷ்மி கோருகின்றாள்.
எங்கே உலகானந்தத்தில் உள்ளார்ந்த சந்தங்களுக்கு உறவு உள்ளதோ, எங்கே சர்வ சௌந்தர்யத்தின் அழைப்பிற்குப் பதில் உள்ளதோ, எங்கே இறைவன்பால் திரும்பிய பல வாழ்க்கைகளின் இணக்கமும், ஒருமைப்பாடும், இன்ப ஓட்டமும் உள்ளதோ,அத்தூய சூழலில் அவள் எழுந்தருத் திருவுளம் கொள்கிறாள்.
அவலட்சணமானவை, சிறுமையுடையவை, அற்பத்தனமானவை, தரித்திரம் பிடித்தவை, கீழானவை, அழுக்கானவை, முரட்டுத்தனம் கொண்டவை,  பண்பு நயமற்றவை ஆகியவையெல்லாம் அவள் வருகையை தடுக்கின்றன.
அன்பும் அழகும் இல்லாத அல்லது அவை பிறக்க விரும்பாத இடத்தில் அவள் வருவதில்லை. அவை இழிவானவற்றுடன் கலந்து உருத்திரிந்திருந்தால் அவள் விரைவில் திரும்பிப்போய் விடுகிறாள் அல்லது தனது செல்வங்களை பொழிய விரும்புவதில்லை. மனித இதயங்களில் அவள் இறங்கும்போது அங்கு சுய நலம், பகைமை, பொறாமை, குரோதம், அசூயை, பூசல் இவை சூழ்ந்திருந்தாலும் துரோகம், பேராசையும், நன்றின்மையும் புனித பாத்திரத்தில் கலந்திருந்தால் முரட்டு வெறியும் பண்பற்ற ஆசையும் பக்தியும் மாசுபடுத்தினால் அத்தகைய உள்ளங்களில் அழகும் அருளும் பொலியும் தேவி தங்குவதில்லை.
ஒரு தெய்வீக அருவருப்புடன் அவள் விலகிச் சென்றுவிடுகிறாள். ஏனெனில் அவள் வறுபுறுத்தி வருந்தி முயல்பவள் அல்ல. அல்லது தனது முகத்தை மறைத்துக்கொண்டு இந்த சைத்தானின் கசப்பான விஷப்பொருட்கள் வெளிற்றப்படும் வரை காத்திருந்து அதன் பிறகே தனது இனிய உறவை மீண்டும் நாட்டுவாள்.
சந்தியாச வரட்சியும், கடுமையையும் அவள் வரும்புவதில்லை. அதைப்போல் இதயத்தின் ஆழ்ந்த உணர்ச்சிகளை அடக்குதலையும், ஆன்மாவின் வாழ்வின் அழகு அமிசங்களை ஒடுக்குவதும் அவளிற்கு சம்மதமில்லை. ஏனெனில் அன்பு, அழகு இவை மூலமே அவள் மனதரை கடவுளின் செல்வாக்கின் கீழ் கொண்டு வருகிறாள். அவளுடைய மகோன்னதப் படைப்புகளில் வாழ்வு ஒரு தெய்வீக கலைச் செல்வமாக மாறுகிறது. உலகம் ஒரு திவ்யானந்தத்தை கவிதையாக்குகிறது. உலகின் செல்வங்களெல்லாம் மிக உயர்ந்ததோர் ஒழுங்கமைப்பிற்கென ஒன்று சேர்க்கப்படுகிறன. அவளது ஐக்கிய திருஷ்டியாலும் ஆத்ம வீச்சினாலும் மிக எளிய சாதாரணப்பொருள்களும் அதிசயமானவையாகிவிடுகின்றன. அவளை இதயத்தில் ஏற்றால் ஞானத்தை அற்புதச் சிகரங்களுக்கு உயர்த்தி அறிவையெல்லாம் கடந்த ஆனந்த பரவசத்தின் ஆழ்ந்த மறைபொருள்களை அதற்கு வெளிப்படுத்துகிறாள். பக்தியைத் தீவிர தெய்வீக வசீகரத்துடன் இணைக்கிறாள். வலிமைக்கும் சக்திக்கும் அளவுடன் இசைந்து செயல்படுவதற்கான சந்தத்தைக் கற்பிக்கிறாள். சித்தியின் மீது அதை என்றும் நிலைத்து நிற்கச் செய்யும் மோகனத்தை வீசுகிறாள்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...