குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 15, 2018

காயத்ரி சாதகன் கடைப்பிடிக்க வேண்டிய தினசரி வாழ்வின் பஞ்ச சீலங்கள்



ஒருவன் வெறுமனே காயத்ரி மந்திரத்தை உருப்போட்டுக்கொண்டிருந்தாலும் அதனால் உருவாகும் சக்தியை தேக்கி வைக்க தன்னில் சில ஒழுங்குகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடில் எவ்வளவு சாதனை செய்தாலும் ஓட்டைக்குடத்தில் இட்ட நீர் போன்று வழிந்து ஓடிக்கொண்டிருக்கும். ஒரு காயத்ரி சாதகனின் வாழ்க்கையை ஏழு நிலைகளில் பிரிக்கலாம். அவை உடல், மனம், குடும்பம், சமூகம், வாழ்க்கையின் தர்மம், வாழும் உலகம், ஆன்மாவை அறிதல்.
இந்த ஏழு நிலைகளையும் சம நிலையில் வைத்திருக்க ஒருவன் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கை குருதேவர் பண்டிட் ஸ்ரீ ராம்சர்மாச்சார்யா ஒழுங்கு படுத்தியுள்ளார்.
எமது காயத்ரி சாதகர்களுக்கு பயன்படும் என்பதற்காக இங்கு தொகுத்து தந்துள்ளோம். ஒவ்வொன்றையும் ஆழ்ந்து சிந்தித்து மனதில் பதிவித்து செயலில் கொண்டுவர ஒவ்வொரு சாதகரும் முயற்சிக்க வேண்டும்.

1. உடல் நலத்திற்கான பஞ்சசீலங்கள்
1.      அளவான சாத்வீக சைவ உணவு உண்ணல்
2.      சுத்தமான தண்ணீர் போதுமான அளவு அருந்தல்
3.      சுத்தமான காற்றுள்ள இடத்தில் பிரணாயாமம் அல்லது தீர்க்க சுவாசம்
4.      சக்திக்கு இயன்ற அளவு உடல் உழைப்பு
5.      இரவில் எல்லாவற்றையும் மறந்து எந்த சிந்தனையுமின்றி கவலையற்று உறங்குதல்
இந்த ஐந்து ஒழுக்கங்களும் ஒருவனுக்கு உடலாரோக்கியத்தை தரும்.

2.மன நலம் பேண்டும் பஞ்ச சீலங்கள்
1.      விளையாட்டு வீரனின் உற்சாகமும், வெற்றியை நோக்கிய மனவுணர்வு
2.      எப்போது புன்முறுவலுடன் இருக்கும் மனமும் முகமும்
3.      உழைப்பின் உயர்வை மனதில் கொண்டு முழுமனதோடு உழைக்கும் பண்பு
4.      தன்னடக்கம்
5.      வளர்ச்சியில் ஆர்வமும் திருப்தியும் அடையும் மனப்பாங்கு

3.சமூக பஞ்ச சீலங்கள்
1.       நேர்மை
2.      பொறுப்புணர்ச்சி
3.      பணிவும் இன்சொல்
4.      பிறர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்தல்
5.      கூட்டுறவு மனப்பான்மை

4.குடும்ப பஞ்ச சீலங்கள்
1.      பெரியோரை மதித்தல், தொண்டு செய்தல், உழைப்பில் பங்குகொள்ளல்.
2.      இளையவர்களிடம் அன்பு கொண்டு ஒற்றுமையாக வாழல்
3.      கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் ஆழ்ந்த அன்புடன் நேசித்தல்
4.      நேர்மையான பண்பினை உயர்ந்த செல்வமாக மதித்து நடத்தல்
5.      குழந்தைகளை அளவோடு பெற்று வளமோடு வாழல்.

5.தர்ம பஞ்சசீலங்கள்
1.      அற நூல்களை கற்றல் அதன் படி நடத்தல்
2.      தீய நெறிகளையும் நடைமுறைகளையும் எதிர்த்து போராடல்
3.      மற்றவர்களின் துன்பங்களைப்போக்க முழுமனதுடன் பாடுபடல்
4.      இறையை தன்னுள் உணரும் உயர்ந்த குறிக்கோளில் உறுதியாக இருத்தல்.
5.      கடமையும் கண்ணியமும் வாழ்வில் குறிக்கோளாக இருத்தல்.

6.அகில உலக பஞ்சசீலம்
1.      ஒற்றுமை
2.      சமத்துவம்
3.      கூட்டாட்சி
4.      மற்ற இனத்தவருடன் பொறுமையும் சகிப்பும்
5.      பெருந்தன்மையும் ஈடுபாடும்

7.ஆன்மீக பஞ்ச சீலம்
1.      செய்யும் செயலின் விளைவுதான் எமது வாழ்க்கை என்ற கர்மா கோட்பாட்டில் நம்பிக்கை.
2.      கர்மாவை இறை குரு அருளால் எதிர்கொண்டு மீளமுடியும் என்ற தன்னம்பிக்கை.
3.      வரவுக்கு மீறிய செலவு செய்து எளிய வாழ்க்கையும், மீதிப்படுத்தி பிறருக்கு உதவி செய்தல்.
4.      ஆன்ம சாதனை நெறியில் ஆர்வமும் ஈடுபாடும்,
5.      எல்லாவற்றிலும் பரம்பொருளைக் காணும் பரந்த மனப்பான்மை

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...