குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 12, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 03: காட்சி

இந்தப்பகுதி எம்மை இந்த சஹஸ்ர நாமம் முதன்முதலாக உருவான காட்சிக்கு இட்டுச் செல்லும். எல்லா தேவ தேவியர்களும் லலிதாம்பிகையின் அரச அவையில் வீற்றிருக்கின்றனர்.  சப்த ரிஷிகள், மற்றைய ரிஷிகள், பதினெண் சித்த புருஷர்கள் அவையில் சட்டத்திற்கமைய  அவரவர் ஆசனத்தில் வீற்றிருக்கின்றனர்.  தங்கத்தினாலும் விலை மதிப்பற்ற இரத்தின கற்களாலும் ஆக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சிம்மாசனம் காணப்படுகிறது. திடீரென தெய்வீக மணம் கமழத்தொடங்குகிறது. முழு அரச அவையிலும்  சிவப்பு நிற ஒளி பரவத்தொடங்குகிறது. லலிதாம்பிகை தந்து சேவகிகளுடன் நுழைகிறாள். அமர்ந்திருக்கும் அனைவரும் எழுந்து மரியாதை செலுத்துகின்றனர். அவளது தோற்றம் தியான ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது. அவளின் முன்னர் எட்டு வாக்தேவிகளும் பிரசன்னமாகி இருக்கின்றனர், அவர்களிடன் தேவி: நீங்கள் எண்மரும் எனது ஆசியுடன் வாக் சித்தி பெற்றுள்ளீர்கள், நான் உங்களுக்கு எனது பக்தர்களுக்கு வாக்கு சித்தியினை அளிக்கும் பொறுப்பினை கொடுத்திருக்கிறேன். நீங்கள் எனது ஸ்ரீ சக்கரத்தின் இரகசியங்களை அறிந்தவர்கள். நீங்கள் பலகாலமாக பக்தியுடன் எனது நாமாக்களை உச்சரித்து வருகிறீர்கள், ஆகவே அவற்றை தொகுத்து 1000 நாமங்களாக்க கட்டளை இட்டிருந்தேன். அவற்றை எனது பக்தர்கள் கூறும்போது நான் மிக்க திருப்தி அடைவேன். இந்த ஸ்லோகங்கள் எனது நாமங்களின் தொகுப்பாக அமைய வேண்டும்" எனக்  கட்டளை இட்டாள். தேவி இந்த நாமாவளியினை பற்றி மூன்று விடயங்களை விதந்துரைத்திருந்தாள். முதலாவது 1000 நாமங்களை கொண்டிருக்க வேண்டும், இரண்டாவது, ஒவ்வொரு ஸ்லோகமும் தனது பெயரினை கொண்டிருக்க வேண்டும், மூன்றாவது, அந்த நாமங்களை பக்தன் ஜெபிக்கும் போது தேவி சந்தோஷப்பட வேண்டும். இந்த மூன்று கட்டளைகளையும் மனதில் கொண்டு வாக்தேவிகள் அத்தகைய ஸ்லோகங்களை இயற்றி படிப்பதற்கு தயாராக இருந்தனர். லலிதாம்பிகை ஆகட்டும் என தலையசைத்தவுடன் வாக்தேவிகள் இந்த பிரபஞ்சத்திற்கு தெரியப்படுத்த படிக்கத்தொடங்கினார். லலிதை மிக்கமகிழ்ச்சியுடன் தலையினை நன்கு ஆட்டிய வண்ணம், தொடர்ச்சியான  புன்சிரிப்புடன் ஆமோதித்த வண்ணம் கேட்டுக்கொண்டிருந்தாள். இடையிடையே வாக்தேவிகளுக்கு "நன்றாக இருக்கிறது" "அபாரம்" எனப்பாராட்டினாள். 

அடுத்த பகுதியில் லலிதையின் முல யந்திரமான ஸ்ரீ சக்கரம் பற்றி பார்ப்போம்.
*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...