குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 23, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 13: மூன்றாவது தியான ஸ்லோகம்


இனி மூன்றாவது ஸ்லோகத்தின் விளக்கத்தினை பார்ப்போம்

த்யாயேத் பத்மாஸநஸ்தாம்  விகஸித
  வதநாம்  பத்ம  பத்ராயதாக்ஷீம் 
ஹேமாபாம்  பீதவஸ்த்ராம் கரகலிதலஸத்தேம 
  பத்மாம்   வராங்கீம்                               |
ஸர்வாலங்கார - யுக்தாம்  ஸததமபய 
  தாம்  பக்தநம்ராம்   பவாநீம் 
ஸ்ரீ வித்யாம்  சாந்தமூர்த்திம் 
 ஸகலஸுரநுதாம்  ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ||

பத அர்த்தம்: 
த்யாயேத் - தியானிக்கின்ற

பத்மாஸநஸ்தாம் - தாமரையில் அமர்ந்திருக்கின்ற அல்லது கால்கள் மடித்து 
பத்மாசனத்தில் அமர்ந்திருக்கின்ற

விகஸித வதநாம் - கவர்ந்திழுக்கும் முகம், விகஸ என்றால் சந்திரன் என்றும் பொருள், தேவியின் முகம் பௌர்ணமி சந்திரன் போன்றது, 

பத்ம- தாமரை 

பத்ராய - இதழ்

தாக்ஷீம் - கண்கள் (தாமரை இதழ் போன்ற கண்கள்

ஹேமாபாம் - தங்க நிறம்  

பீதவஸ்த்ராம் -  தங்க இழையுடைய ஆடை

கரகலிதலஸத்தஹேம - கைகளில் உடைய

ஹேமபத்மாம் - தங்க நிற தாமரை (தங்க நிற தாமரைகளை கைகளில் உடைய) 

வராங்கீம் - அதீத அழகான உடல் அங்கள் உடைய

ஸர்வாலங்கார - எல்லவிதமான அலங்காரங்கள் கொண்ட 

யுக்தாம் - நகைகள் 

ஸததமபயதாம்  - தொடர்ச்சியான அபயத்தை அளித்த 

பக்தநம்ராம் - தன்னை வணங்குகின்ற பக்தர்களின் பேச்சைக்கேட்டவண்ணம்

பவாநீம்- பவன் ஆகிய சிவனின் பத்தினி

ஸ்ரீ வித்யாம் - மந்திர தந்திர சாஸ்திரமான ஸ்ரீ வித்தை வடிவினள்

சாந்தமூர்த்திம் - சலனமற்ற உருவுடைய

ஸகலஸுரநுதாம்- எல்லா தேவ தேவியராலும் வணங்கப்படுகின்ற

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் - எல்லவித சௌபாக்கியங்களையும் தருபவள்

இதன் முழுமையான பொருள் உருவகம் வருமாறு: தாமரையில் அமர்ந்திருக்கின்றாள். எல்லோரையும் கவர்ந்திர்ளுக்கும் முகம், கண்கள் தாமரை இதழ்கள் போன்று அழகானவையாக இருகின்றது. அவளது உடலில் நிறம் தங்க நிறமாக ஜொலிக்கிறது, உடுத்திருக்கும் உடையின் நிறம் தங்க தங்க இழைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. கைகளில் தங்கத்தாமரைகளை கொண்டிருக்கிறாள். உடல் செதுக்கிய சிற்பம் போன்று அழகாக இருக்கிறது. உடலை அழகுபடுத்தும் எல்லாவித ஆபரணங்களையும் அணிந்ததிருக்கிறாள். தன்னுடைய பக்தர்களை இடைவிடாமல் காப்பாற்றுகிறாள், அவளுடைய பக்தர்களின் பிரார்த்தனைகளை தேவைகளை கேட்கிறாள், ஸ்ரீ வித்தையின் மந்திர மற்றும் தந்திர முறைகளில் உறைந்துள்ளவள். அமைதியான சலனமற்ற வடிவுடையவள். எல்லா தெய்வங்களாலும் வழிபடப்படுபவள். அதி உயர்ந்த தன்மை உடையவள், எல்லவித சௌபாக்கியங்களையும் தருபவள். 



*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...