குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, April 28, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 18: நாமங்கள் 10 - 17



மனோரூபேஷு கோதண்டா (10) 
மனமாகிய கரும்பு வில்லை உடையவள்
மனம் சங்கல்பம் விகல்பம் என்ற இரண்டு செய்கைகளும் உடையது. சங்கல்பம் எண்ணத்தில் சரியானது என்று முடிவெடுக்கும் செய்முறை, விகல்பம் என்றால் எண்ணங்களுக்கிடையிலான வேறுபாட்டினை உணர்ந்தறியும் செய்முறை. இரண்டும் ஒன்றுக்கொன்று முரணான செய்முறை. மனமும் அறிவைப்போன்று நுண்ணியது. மனம் ஐந்து புலன்களினூடாக பிரதிபலிக்கும். மனம் புலன்களூடாக பெறும் பதிவுகள் மூலம் சங்கல்ப விகல்பங்களை ஏற்படுத்தி எண்ணங்களை தூண்டி இறுதியில் செயலினை செய்ய வைக்கிறது.  இக்ஷு என்றால் கரும்பு என்று அர்த்தம், கோதண்ட என்றால் வில், இடது முன்னங்கையில் கரும்பாலான வில்லினை கொண்டிருக்கிறாள். ஏன் கரும்பாலான வில்? கரும்பினை பிழிந்து சாறு எடுத்தால் அது இனிப்பான சக்கரையினை தரும். அதுபோல் மனதினை பிழிந்து (கட்டுப்படுத்தி வழிப்படுத்தினால்) அவன் இனிப்பான பிரம்மத்தினை அறியலாம். இந்தக் கை மந்திரிணியான ராஜ சியாமளையை குறிக்கிறது.

பஞ்சதன்மாத்ர-ஸாயகா (11)
(சப்த ஸபர்ச ரூப, கந்த, ரச எனும்) ஐந்து தன்மாத்திரைகளை பாணங்களாக உடையவள்
பஞ்ச என்றால் ஐந்து, தன்மாத்ர என்றால் சுவை, தோடு உணர்வு, பார்வை, ஓலி, மணம் ஆகியவை. இவை ஐந்தும் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, அக்னி, நீர், நிலம் ஆகிய ஐந்தினதும் சுஷும வெளிப்பாடாகும்.

முந்தைய நாமம் வில்லைப்பற்றி பேசியது, இந்த நாமம் தேவியுடைய அம்புகளைப்ப்றி பேசுகிறது. தேவி ஐந்து அம்புகளை வைத்திருக்கிறாள். அந்த ஐந்து அம்புகளும் மலர்களால் ஆனது. இந்த ஐந்து அம்புகளும் பஞ்ச பூதங்களின் சூஷ்ம தன்மையினை விளக்குவது. இந்த ஐந்து மலர்கள் பற்றியும் தந்திர சாஸ்திரங்களில் பல்வேறு விளக்கங்கள் உள்ளன. இந்த ஐந்து மலர்களும் தாமரை, செவ்வாம்பல், வெண் அல்லி, கருப்பு நீர் அல்லி, இனிப்பு மாம்பூ ஆகும். இந்த ஐந்து பூக்களும் மனதினை மன எழுச்சி, பைத்தியம், குழப்பம், தூண்டல், அழித்தல் ஆகியவற்றினை செய்யும். அம்புகள் பொதுவாக போரில் எதிரிகள் மீது செலுத்தப்படுவது. ஆனால் லலிதை இந்த மரலம்புகளை தனது பக்தர்கள் மீது செலுத்தி மாயையின் ஐந்து அங்கங்களாக விளங்கு தன்மாத்திரைகளை வெல்கிறாள். இந்த பஞ்ச தன்மாத்ரைகள் மூலமாகவே மாயை செயற்படுகிறது. இது தேவியின் வலது முன்னங்கை, இது வாராஹி தேவியினை குறிக்கிறது.

8, 9, 10, 11வது நாமங்கள் ரகசிய பீஜ மந்திரங்களை கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு எட்டாவது நாமம் ஹ்ரீம் பீஜத்தினை கொண்டிருக்கிறது. இது மாயா பீஜம் எனப்படுகிறது. எட்டாவது நாமம் ராகஸ்வ என்று தொடங்குகிறது. இது ரா+அக+ஸ்வ எனும் அட்சரங்களால் ஆக்கப்பட்டுள்ளது. அக என்றால் சிவன் சென்று பொருள்.  சிவனின் பீஜம் ஹம் என்பதாகும். இது ஹ எனக்கொள்ளப்பட வேண்டும்.  அடுத்தது ர என்பது எடுத்துக்கொள்ள வேண்டும். ஸ்வ என்பது ஈம் என்ற எழுத்து மேலே பிந்துவுடன் அமைந்தது. இப்படி ஹ+ர+ஈம் என ஹ்ரீம் பீஜம் உருவாக்கம் பெறுகிறது. இது போல் மற்றைய நாமாக்களில் (ட , ர, ல, ய , ஸ, வ, அ, ஈ ,ஊ) போன்ற பீஜங்கள் அமைந்துள்ளன.

இந்தக்காரணத்தினாலேயே லலிதா சஹஸ்ர நாமம் வேதங்களுக்கு நிகராக கொள்ளப்படுகிறது.  மிக முக்கியமாக லலிதா சஹஸ்ர நாமம் ராகத்துடனோ, ஸ்வரத்துடனோ படிக்ககூடாது.

நிஜாரூப-ப்ரப-பூர-மஜ்ஜத்-ப்ரம்மாண்ட-மண்டலா (12) 
தனது சிவந்த திருமேனியின் காந்தி வெள்ளத்தால் உலகனைத்தையும் மூழ்கச் செய்பவள். 

அவளுடைய சிவந்த ரோஜாப்பூ நிறம் இந்த பிரபஞ்சம் பூராகவும் சிவந்த நிறமாக பரவி உள்ளது. இந்த நாமம் தொடக்கம் லலிதையின் முழுவடிவ வர்ணணை ஆரம்பமாகிறது. ஆண் தெய்வங்களை வர்ணிக்கும் போது பாதாதி கேச வர்ணனையும், பெண் தெய்வங்களை வர்ணிக்கும் போது கேசாதி பாத வர்ணனையும் கொள்ளப்படுவது மரபு. இதன் படி லலிதாம்பிகையின் தலையில் இருந்து வர்ணணை தொடங்குகிறது. சிவனை வர்ணிக்கும் போது பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய இரண்டு விதமும் பொருந்தும். ஏனெனில் சிவம் என்பது சிவனும் சக்தியும் கலந்த அர்த்த நாரீஸ்வர வடிவம் என்பதால்.  பஞ்சதசி மந்திரத்தில் மூன்று கூடங்கள் உள்ளன. அவற்றுள் வாக்ப கூடம் தேவியின் தலையினை தியானிப்பதற்கு கூறப்படுகிறது. இது மரபுப்படி கேசாதி பாத வர்ணனைக்கு பொருந்தி வருகிறது.

சம்பகாசோக-புன்னாக - ஸௌகந்திக - லஸத் கசாய (13) 
சம்பகம், அசோகம், புன்னாகம் சௌகந்திகம் என்ற புஷ்பங்களை கூந்தலில் அணிந்து விளங்குபவள். 

சம்பகம், அசோகம், புன்னாகம், சௌகந்திகம் ஆகிய நான்கு வாசனையுள்ள பூக்கள் தேவியினுடைய கூந்தலினை அலங்கரிக்கின்றது. ஆனால் அவளுடைய கூந்தல் இந்த மலர்களால் மணத்தினை பெறவில்லை, மலர்கள் அவளுடைய கூந்தலினால் மணத்தினை பெறுகிறது. தேவியினுடைய கூந்தல் எப்போதும் நறுமணம் கமழ்வது.

சௌந்தர்ய லஹரி (42 பாடல்) கூறுகிறது, " உன்னுடைய அடர்த்தியான, வழுவழுப்பான, மெல்லிய கூந்தல் மலர்ந்த நீலத்தாமரையினை நினைவு கூர்கின்றன. அது எமது அறியாமையினை அகற்றுகிறது. நான் நினைக்கிறேன் மலர் தோட்டத்தில் உள்ள வாசனைப்பூக்கள் எல்லாம் உன்னுடைய கூந்தலில் இருந்துதான் வாசனையினை பெறுகிறது என்று! கூந்தலின் ஈரத்தன்மை அவளுடைய கருணையினையும், மேன்மை தாய்மையினையும் குறிக்கிறது.
துர்வாசக ரிஷி தனது சக்தி மஹிம்ன தோத்திரத்தில் தேவியினுடைய கூந்தலின் இனிய நறுமணத்தினை ஹிருதய சக்கரத்தில் தியானிக்க கூறுகிறார். இந்த வர்ணனையின் உட்பொருள் தேவியினுடைய கூந்தல் அறியாமையினை போக்கும் வல்லமை உள்ளது என்பதாகும். பிரம்மத்தினை அடைவதற்கு ஞானமே உயர்ந்த பாதையாக கூறப்பட்டுள்ளது. கூந்தலே இத்தகைய பேற்றை கொடுக்க முடியுமானால் தேவியின் முழு வடிவம் என்ன பேற்றை கொடுக்கும். இந்த நான்கு மலர்களும் அந்தக்கரணங்கள் எனும் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் ஆகியவற்றை குறிப்பனவாகும்.

குருவிந்த-மணிச்ரேணீ - கநத் -கோடீர -மண்டீதா   (14) 
குருவிந்த மாணிக்கங்கள் பதிக்கப்பட்ட ஒளிவீசும் அழகிய கிரீடத்தை உடையவள். 

குருவிந்தம் என்பது ஒரு அரிய வகை சிவப்பு மாணிக்கம். இந்த வகை மாணிக்கம் அணிபவருக்கு அன்பு, செல்வம், விஷ்ணு (தேவியின் சகோதரன்) மீதான பக்தி என்பவற்றை அதிகரிக்கும். இந்தவகை மாணிக்கங்கள் தேவியினுடைய கிரீடத்தினை அலங்கரிக்கின்றது. இந்த குருவிந்த மாணிக்க கிரீடத்தினை ஒருவன் தியானிக்கும் போது அவனுக்கு ஆன்ம முன்னேற்றமும், செல்வவளமும் கிட்டும். சௌந்தர்ய லஹரியும் (42), சக்தி மஹிம்ன தோத்திரமும் தேவியின் கிரீடத்தின் மகிமை பற்றி கூறுகிறது.

அஷ்டமீ சந்த்ர - விப்ராஜ - தலிக  - ஸ்தல -சோபிதா (15)
அரைவட்ட வடிவான அஷ்டமி சந்திரன் போன்று விளங்கும் நெற்றியை உடையவள் 

தேவியின் நெற்றி அஷ்டமி சந்திரனைப்போல் தோற்றுகிறது. பௌர்ணமி அல்லது அமாவாசையில் இருந்து எட்டாவது நாள் அஷ்டமி எனப்படும். இந்த நாட்களில் சந்திரன் இருபுறமும் வளைந்து அழகாக காணப்படும்.

முகச்சந்திர - கலங்காப - ம்ருக நாபி - விசேஷகாயை (16)
சந்திரனில் தோன்றும் களங்கம் போன்று முக மண்டலத்தில் விளங்கும் கஸ்தூரி போட்டினை  உடையவள். 

தேவியின் நெற்றியில் கஸ்தூரி போட்டு காணப்படுகிறது. இது முழுமையான வெள்ளை நிற சந்திரனில் காணப்படும் புள்ளி  போன்றது. சக்தி மஹிம்ன தோத்திரத்தில் 32 பாடல் இந்த தியானத்தினை கூறுகிறது.

வதனஸ்மர - மாங்கல்ய - க்ருஹ - தோரண - சில்லிகாயை  (17)
 மன்மதன் வசிக்கும் மங்கள வீடாகிய முகத்திற்கு தோரணங்கள் போன்ற புருவங்களை உடையவள். 

தேவியினுடைய முகம் மன்மதனுடைய இருப்பிடமாக உருவகிக்கப்படுகிறது. மன்மதன் காதலின் தெய்வம். தேவியினுடைய புருவங்கள் அந்த வீட்டினை அலங்கரிக்கும் தோரணங்கள் போன்று இருக்கிறது எனக்கூறப்படுகிறது. சில்லிகா என்றால் புருவங்கள் எனப்பொருள். புராணங்களில் மன்மதன் லலிதாம்பிகையின் முகத்தை பிரதி செய்து ஒரு புனிதமான இடத்தினை உருவாக்கினான் எனக்கூறப்படுகிறது.




*****************************************************************************************************************************************
{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...