குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, April 19, 2013

ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 09: பூர்வ பாகம் தொடர்ச்சி ....


ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ வித்தையில் உள்ள ஸ்ரீ புரத்தின் அமைப்பு, ஸ்ரீ சக்கரம், பஞ்சதசி மந்திரம், ஜெப முறைகள், பூஜை முறைகள், அந்தர் யாகம், பஹிர் யாகம் ஆகிய அனைத்தையும் கற்பித்துவிட்டார். ஸ்ரீ வித்தையில் தன்னையும், குருவையும், ஸ்ரீ சக்கரத்தினையும், ஸ்ரீ தேவியினையும் ஒன்றாக அபேத பாவனையினை பெறுவதே இறுதி இலட்சியம். ஹயக்ரீவர் ஏற்கனவே லலிதையின் மந்திரிகளான மந்திரிணி (ராஜா சியாமளா), தண்டினி (வாராஹி) ஆகிய இருவரது சஹஸ்ர நாமங்களையும் அகஸ்தியருக்கு கற்பித்திருந்தார். ஆகவே தற்போது அகஸ்தியர் ஹயக்ரீவரிடம் தனக்கு ஏன் லலிதையின் சஹஸ்ர நாமத்தினை கற்பிக்கவில்லை, தான் அதற்கு தகுதி அற்றவனா என்ற கவலையுடன் வினாவினார். அதற்கு ஹயக்ரீவர் " லோபாமுத்ரையின் பதியே, ஸ்ரீ வித்தை மிகவும் இரகசியமானது, அதனை கேட்காமல் உபதேசிக்க கூடாது, ஆதலால்தான் தான் வலிந்து உபதேசிக்கவில்லை" என்று சமாதானம் கூறினார்.  அகத்தியர் கேட்டதால் ஹயக்ரீவர் அதனை அவருக்கு உபதேசித்தார். அத்துடன் லலிதா சஹஸ்ர நாமத்தினை பாராயணம் செய்ய விரும்புபவனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன என்பது பற்றி கூறினார்;
அவை வருமாறு; ஸ்ரீ மாதாவின் மேல் அதீத பக்தி உடையவனாக இருக்க வேண்டும். தகுதியான குருவினால் பஞ்சதசி மந்திரம் தீட்சை பெற்றிருக்க வேண்டும். மனதில் உறுதியும் பணிவும் இருப்பவனாக இருத்தல் வேண்டும். தீய பழக்கவழக்கங்கல் அற்றவனாக இருத்தல் வேண்டும். இதற்கான காரணத்தினையும் கூறினார். 
பொதுவாக தந்திர சாஸ்திரப்பிரகாரம் செய்யும் சாதனைகள் விரைவாக சித்திகளை தரும். அதில் லலிதா சஹஸ்ர நாமம் அதி சிறந்தது. பொதுவாக தேவியின் சஹஸ்ர நாமங்களில் பத்து சிறப்பானவை. அவையாவன; கங்கா, காயத்ரி, சியாமளா, லக்ஷ்மி, காளி, பாலா, லலிதா, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, பவானி என்ற பத்துமாகும். மந்திரம் என்ற சொல் பொதுவாக ஆண் கடவுள்களை குறிப்பனவாகவும், வித்யா என்பது பெண் தெய்வங்களை குறிப்பதாகவும் இருக்கும். ஸ்ரீ வித்தை மந்திரமும், வித்தையும் கலந்த சிவசக்தி ஐக்கியத்தினை தருவது.  பஞ்சதசி மந்திரத்தில் பன்னிரெண்டு வகையான மந்திர மாறுபாடுகள் உள்ளது. இவற்றில் காதி வித்தை பிரபலமானது. இதனை பரா வித்தை என்றும் அழைப்பர். இந்த மந்திரம் பொதுவாக பதினைந்து எழுத்துக்கள் எனக்குறிப்பிடப் பட்டாலும் இதில் 37 எழுத்துக்கள் உள்ளன. அவையாவன 15 உயிர் எழுத்துகள், 16 மெய்யெழுத்துகள், 03 பிந்துகள், 03 நாதங்கள் ஆக மொத்தம் 37 எழுத்துகள் உள்ளன. (வரிவஸ்யா ரகசியம் II - 27), இந்த 37 எழுத்துக்களில் 36 தத்துவங்களையும், 37வது "அ" என்ற எழுத்து பரப்பிரம்மத்தினையும் குறிக்கும். லலிதா திரிசதி பஞ்சதசியின் எழுத்துக்களை மூலமாக கொண்டு உள்ள தோத்திர நூல், ஸ்ரீ வித்யா பூஜையில் திரிசதி மந்திரங்களில் பின்னர் வேறு எந்த அர்ச்சனையும் செய்யக்கூடாது. பூஜை ஆராத்தியுடன் முடிக்கவேண்டும். பஞ்சதசி மந்திரம் பற்றி முற்பகுதியில் விளக்கியுள்ளோம்.
இந்த் சகஹஸ்ர நாமத்தினை மனதாலோ, வாயாலோ ஜெபிக்கும் போது லலிதாம்பிகை மிக்க சந்தோஷம் அடைகிறாள், அர்ச்சனையாக செய்யும் போது தாமரை, துளசி பத்ரம், வில்வ பத்ரம் கொண்டு செய்யலாம். நித்திய பூஜையின் போது முதலில் ஸ்ரீ சக்கரத்தினை வணக்கி பஞ்சதசி மந்திரம் குறித்தளவு ஜெபம் செய்து பின்னர் சஹஸ்ர நாமம் ஜெபிக்க வேண்டும். இந்த மூன்றில் மற்றைய இரண்டினை செய்ய முடியாவிட்டாலும் சஹஸ்ர நாம பாராயணத்தினை கட்டாயம் செய்யவேண்டும். அர்ச்சனையாக செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை, பாராயணமாக மட்டுமே செய்யலாம். வேறு தோத்திரங்களை ஜெபிப்பதும் மேலதிக பலனைத்தரும், ஆனால் சஹஸ்ர நாமத்தினை விட்டு செய்யும் மற்றைய தோத்திரங்கள் பலன் தரமாட்டாது. லலிதாம்பிகை தனது வாக்கில் உதிர்ந்ததின்படி ஒருவன் வாழ நாளில் ஒருதடவை முயற்சித்து சஹஸ்ர நாம பாராயணம் செய்து விட்டாலே அந்த பக்தனின் பிரார்த்தனையினை தேவி மனமுவந்து கேட்பேன் என்று தேவி கூறியுள்ளாள் எனக்கூறி ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு லலிதா சஹஸ்ர நாமத்தினை உபதேசிக்க தொடங்கினார்.  


*****************************************************************************************************************************************

{இந்த லலிதா சஹஸ்ர நாம பதிவு ஆங்கிலத்தில்  ஸ்ரீமான் வீ. ரவி அவர்கள் Manblunder வலைப்பின்னலில் வெளியிட்ட Lalitha Sahashra Nama - A COMPREHENSIVE TREATISE என்ற ஆங்கில உரையினை தழுவி எம்மால் அவருடைய அனுமதியுடன் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது. ஆங்கில மூல நூலினை கீழ்வரும் இணைய முகவரியில் காணலாம்: http://www.manblunder.com" }  சுமனன் 
******************************************************************************************************************************************

1 comment:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...