குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, September 28, 2012

சூஷ்மதிருஷ்டி சாதகன் பெறும் ஆற்றல்கள் (பகுதி 07)


சூஷ்ம திருஷ்டி பற்றி முன்னைய பதிவுகளில் விளக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படிக்க கீழ்வரும் பகுதிகளைப் பார்க்கவும். 
பகுதி 06

இந்தபதிவில் சூஷ்மதிருஷ்டி சாதகன் பெறும் ஆற்றல்கள் பற்றிப் பார்ப்போம். 

சூஷ்மசாதனையில் சித்திபெற்ற மாணவன் முதலில் பெறும் ஆற்றல் ஆகாயப்பார்வை எனப்படும். இது சூஷ்ம கண்களால் பார்க்கப்படும் பொருட்களில், இடங்களில் வெறுமையாக வேறும் கண்ணிற்கு தோற்றமளிக்கும் இடங்கள் கூட புகை மண்டலங்களாக காட்சி அளிக்கத்தொடங்கும். பௌதீகப்பொருட்களை சூழ தடிப்பான ஒரு மண்டலம் இருக்கக்காண்பான். உதாரணமாக ஒருவரை நீங்கள் சூஷ்ம திருஷ்டியில் உருவகப்படுத்தும் போது முதலில் அவரது பௌதீக உருவம் மறைந்து படிப்படியாக அவரது பிராண சரீரம் தெரிய ஆரம்பிக்கும். அதை மேலும் ஏகாக்கிரமாக பார்க்கும் போது மேலும் அதன் தன்மைகள் பற்றிதெரிய வரும். இப்படி எந்தப்பொருளினதும் சூஷ்ம பிராண சரீரத்தினை காணும் ஆற்றல் வரும். இது சூஷ்ம திருஷ்டி சாதகன் பெறும் முதலாவது ஆற்றலாகும். இதன் படி சூஷ்ம உலகில் வாழும் தேவதைகள், இறந்த உடலைச் சூழ உள்ள ஆவிகள் என்பனவும் அவனது காட்சிக்கு தெரியும். 

அடுத்த ஆற்றல் தூரத்தில் உள்ள பொருட்களை உருவகப்படுத்தும் போது அவை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மிக அருகில் கண்களால் காணும் ஆற்றல் வரும். அதாவது தூரதிருஷ்டி கண்ணாடி - பைனார்குலர் மூலம் காணுவது போல் காட்சிகள் தெரியும். அணுக்களின் அசைவும் தெரியும். இதுவும் சூஷ்ம திருஷ்டி சாதகன் பெறும் ஒரு ஆற்றலாகும். 

அடுத்த ஆற்றல் பிராண உலகத்தினையும் மானச உலகத்தினையும் காணும் ஆற்றலாகும். இந்த ஆற்றலைப் பெற்றுவிட்டால் தேவருலகில் உள்ள ஆன்மாக்களுடன், தேவதைகளுடன் நேருக்கும் நேர் தொடர்பு கொள்ளும் ஆற்றலை சாதகன் பெறுவான். இப்படி பிராண மானச உலகங்களை காணும் ஆற்றல் பெற்றவர்களே பிரபஞ்ச பேரேடான ஆகாய மனத்துடன் தொடர்புகொள்ளும் ஆற்றலைப் பெறுவான். குறிப்பாக மானச உலகினை கண்டு அதில் குறித்த ஒருவரை ஏகாக்கிரம் செய்து அவரது கடந்த காலத்தினை அறியவேண்டும் என்று சகஸ்ரார ஜோதியினை செலுத்த அவரது கடந்த காலம், கடந்த பிறவி வரை திரைப்படக்காட்சி போல் தெரிய ஆரம்பிக்கும். 

இதைப்போல் எதிர்காலத்தினையும் அறிந்து கொள்ளலாம், இதுவே திரிகால ஞானம் எனப்படும் சித்தியாகும். திரிகாலஞானம் சூஷ்ம திருஷ்டியின் முன்னேறிய சாதனையாகும். 

இதைப்போல் கிரகங்களின் அமைப்பும் செயற்பாடு என பலவிடயங்களை சாதகன் தனது குருமூலமும் சிந்தித்தறிந்தும் தெரிந்து கொள்ளலாம். 

அடுத்த பதிவில் திரிகால ஞான சாதனை எப்படி செயற்படுகிறது என்பதனை சாதனை முறையுடன் பார்ப்போம். 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...