குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, September 19, 2012

காயத்ரி சாதனையின் போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் (ப‌குதி 01)


இந்த பிரபஞ்சம் ஓர் ஒழுங்குமுறைக்கேற்பவே இயங்கி வருகிறது, ஆன்மீகம், சூஷ்ம சாதனைகள் புரிய விரும்புபவர்கள் அந்த நியதிக்கேற்ப்ப தம்மை ஒத்திசைய (Harmoney) வைத்துக்கொண்டால் மட்டுமே அவர்களால் தமது முயற்சியில் வெற்றியடைய முடியும். அதனால் காயத்ரி சாதனையின் போதுகடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள பற்றி இங்கு கூறுகிறோம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தால் அனைத்தையும் கடைப்பிடிக்கமுடியாவிட்டால் இயன்றளவு கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை கடைப்பிடித்தால் பலன் முழுமையாக கிடைக்கும் அன்றி தவறுவதால் துன்பங்களோ, பிழைகளோ நடந்துவிடாது. ஆகாயால் பயம் இன்றி நீங்கள் சாதனை செய்யலாம், காயத்ரி அறிவின் தாய், தாய் ஒரு நாளும் உங்களுக்கு தீங்கு செய்யமாட்டாள், தனது அன்பால் திருத்தி நல்வழிப்படுத்துவாள். அதுபோல் உங்கள் சாதனையில் உபாசனையில் பிழை இருப்பினும் மெது மெதுவாக உங்களில் அறிவில் அவள் அருள் காந்த சக்தியினை செலுத்தி மெது மெதுவாக உங்களை சரியான பாதையில் செலுத்துவாள்.

எமது வாழ்க்கையின் அனுபவம் என்பது மனதின் வழியே நடக்கிறது, மனமே இன்பத்திற்கும் துன்பத்தினையும் அனுபவிக்கும் காரணி. அதுபோல் எந்த தெய்வ சக்தியினையும், உயர்ந்த ஆற்றலையும் பெறுவதற்கும் மனதே தேவை.மனமே காயத்ரி மந்திர சக்தியின் மூலம் தெய்வசக்தியினை ஆகர்ஷிக்கின்றது. இது நமது எண்ணங்கள் மூலம் நடைபெறுகிறது. ஆக தெய்வ சக்தியினை ஆகர்ஷிக்க விரும்புவபர்கள் நல்ல எண்ணங்களை எண்ணுவதற்கு பழகிகொள்ளவேண்டும்.

நம்பிக்கைதான் (faith)  வாழ்க்கை என்பது பொதுவாக கூறப்படும் வார்த்தை, இது சாதனைக்கும் பொருந்தும். நம்பிக்கை இன்றி செய்யப்படும் எதுவும் முழுமையாக பயன் அளிப்பதில்லை. நம்பிக்கை என்பது ஆழமான ஒரு உணர்வு. மனதின் ஆற்ற்லை ஒரு விடயத்தில் குவிக்கும் குவிவு ஆடி (lence) போன்ற சாதனம். ஆகவே செய்யும் செயலில் ஆழமான நம்மிக்கை இருக்கவேண்டும்.

மற்றைய சாதனைகளினை விட காயத்ரி சாதனையின் சிறப்பு என்னவேன்றால் நீங்கள் மனத்தூய்மை இன்றி நம்பிக்கை இன்றியும் காயத்ரி ஜெபித்தாலும் அந்த மந்திர அலைகளின் மூலம் மனம் தூய்மையாக்கப்பட்டு உங்களில் அந்த பண்பு வளர்க்கப்படும். அதாவது சாதனையின் ஆரம்ப கால சக்தி உங்கள் மனதினை, பஞ்ச கோசங்களை தூய்மைப்படுத்த பயன்படுத்தி அந்த தகுதியையும் கொடுக்கும்.  இதற்கான  ப‌ய‌ன்பெறுவ‌த‌ற்கான‌ கால‌ம் அதிக‌மாகும்.
இனி கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகளை பற்றி கூறுவோம்.
  1. உடல் சுத்தமாக இருக்கவேண்டும், குளித்து சுத்தமான ஆடை அணிந்து சாதனையில் அமரவேண்டும். அப்படி முடியாத சமயத்தில் கை, கால் அலம்பி முகத்தினை கழுவிக்கொண்டும் அமரலாம். ஆக முடியாத காலத்தில் உடலினை ஈரத்துணியால் துடைத்து சுத்தப்படுத்திக்கொண்டு சாதனையில் அமரலாம்.
  2. உடலை தளர்வாகவைத்திருக்க கூடிய ஆடகளையே சாதனையின் போது அணியவேண்டும். இறுகிய காற்சட்டைகள், காலணி அணிந்து செய்யக்கூடாது. குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள் சால்வையால் உடலை போர்த்திக் கொள்ளலாம்.
  3. சாதனை செய்வதற்கு அமைதியான் சுத்தமான இடமொன்றினை தேர்ந்தெடுக்க வேண்டும். இவை புனித தலம், ஆற்றங்கரை, பூந்தோட்டம் போன்றவையாக இருக்கலாம். அல்லது வீட்டின் ஒரு மூலையில் அமைதியான தனியிடம் ஒதுக்கி கொள்ளவேண்டும்.
  4. சாதகன் பத்மாசன நிலையிலோ, அர்த்த பத்மாசனம், சுகாசனம் போன்ற நிலைகளில் அமர்ந்து கொள்ளலாம். அப்படி கால் மடித்து அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொள்ளலாம்.
  5. எப்படியாயினும் அமரும் போது முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும். இது மிக அவசியமான ஒன்றாகும், ஏனெனில் சாதனையின் போது பிராண ஓட்டம் அதிகரிக்கும், அது தடைப்படாமல் உடல் முழுவதும் பரவ ஏதுவாக முதுகுதண்டு நேராக இருக்க வேண்டும்.
  6. சாதனையின் போது உடல் வெறும் தரையுடன் தொடர்பு கொள்ளும் படி இருக்க கூடாது. இது உடலின் பிராண சக்தி ஓட்டத்தில் தடங்கல்களை ஏற்படுத்தும், ஆதலால் வெள்ளை அல்லது மஞ்சள் நிற பருத்தி துணியினையோ அல்லது தர்ப்பை பாயினையே ஆசனமாக இட்டுக்கொள்ளவேண்டும்.
  7. ஜெபத்திற்கு நூற்றூ எட்டு மணிகொண்ட துளசி அல்லது சந்தனம் அல்லது படிக ஜெபமாலை ஒன்று பாவிக்கலாம்.
  8. ஜெபம் சூரியோதயத்திற்கு இரண்டு மணி நேரம் முன்னதாக அதாவது பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலை 04.00 மணீயிலிருந்து 06.30 இற்குள் செய்யவேண்டும். மாலையில் சூரிய அஸ்தமனத்திலிருந்து ஒருமணி நேரத்திற்குள் செய்யவேண்டும்.
  9. தகுந்த பலனைப்பெற குறைந்தது ஒரு மாலை அதாவது 108 தடவை ஜெபம் செய்வது அவசியமாகும். அதிகம் செயவதும் நன்மை பயக்கும், ஆனால் ஒவ்வொரு நாளும் சம அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  10. சாத‌னையினை தொட‌ங்க‌ முன்ன‌ர் ஒரு சாத‌னா குருவினை (யார் இந்த‌ காய‌த்ரி சாத‌னையினை செய்து ப‌ய‌ன்பெற்ற‌ ஒருவ‌ர்) தொட‌ர்புகொண்டு த‌ன‌து சாத‌னைங்குவ‌தற்கான‌ முறையினை கேட்ட‌றித‌ல் வேண்டும். பின்ன‌ர் அவ‌ர‌து வ‌ழிகாட்ட‌லில் சாத‌னையினை தொட‌ர்வேண்டும். இந்த‌ விட‌ய‌த்தில் எம‌து வ‌லைத்த‌ள‌த்துட‌ன் தொட‌ர்பு கொண்டு ஆலோச‌னை பெற‌லாம்.
  11. ஜெப‌த்தின் போது காலையில் கிழ‌க்கு நோக்கியும் மாலையில் மேற்கு நோக்கியும் அம‌ர்ந்து செய்ய‌வேண்டும்.
  12. ஒரு ஆச‌ன‌த்தில் இருந்து ஜெப‌ம் செய்யும் போது கால் வ‌லி, மேல் வ‌லி ஏற்ப‌டின் ஆச‌ன‌த்தினை மாற்றி த‌ம‌க்கும் வ‌ச‌தியான் ப‌டி‌ இருந்து செய்ய‌வேண்டும்.
  13. ஜெப‌த்தின் இடையில் ஏதாவ‌து த‌ட‌ங்க‌ல் (உதார‌ண்மாக‌ மல‌ ச‌ல‌ம் க‌ழிக்க‌ வேண்டிய‌ உண‌ர்வு, வேறு தேவைக‌ளுக்காக‌) கார‌ண‌மாக‌ எழும்ப வேண்டி வ‌ந்தால் மேல‌திக‌மாக‌ ஒரு மாலை ஜெப‌ம் செய்ய‌ வேண்டும்.
  14. சாத‌னையின் போது தொட‌ர்ச்சி இருத்த‌ல் வேண்டும். குறைந்த‌து ஆர‌ம்ப‌த்தில் 48 நாட்க‌ள் தொட‌ர்ச்சியாக‌ செய்ய‌வேண்டும். இடையில் ஒருநாள் ஜெப‌ம் செய்ய‌ முடியாம‌ல் போனால் அடுத்த‌ நாள் அதே அள‌வு அதிக‌மாக‌ செய்து தொட‌ர‌வேண்டும்.
  15. பொதுவாக‌ வீட்டில் ஏதும் தீட்டு விட‌ய‌ங்கள் (மரணம் பிறப்பு) ந‌டைபெறும் போது மாலை கொண்டு முறையான‌ உபாச‌னை இன்றி மான‌சீக‌ ஜெப‌ம் செய்ய‌வேண்டும். மான‌சீக‌ ஜெப‌ம் செய்வ‌த‌ற்கு எதுவித‌ நிப‌ந்த‌னைக‌ளும் இல்லை.
  16. ஏதாவ‌து அவ‌ச‌ர‌ தெய்வ‌ உத‌வி தேவைப்ப‌டின், அல்லது எதிர்பாராத துர்சம்பவங்கள் நடந்தால், அல்லது அவற்றை தடுக்க‌ முழுமையான‌ அனுஷ்டான‌த்தின் மூல‌ம் சாதிக்க‌லாம். முழுமையான‌ அனுஷ்டான‌ம் என்ப‌து தொட‌ர்ச்சியாக‌ ஒரு ல‌ட்ச‌த்து இருப‌த்தி ஐயாயிர‌ம் ஜெப‌ம் முடிப்ப‌தாகும், இதை 48 நாட்க‌ளுக்குள் முடிப்ப‌து துரித‌ ப‌ல‌னைத்த‌ரும்.
  17. தொட‌ர்ச்சியான‌ நீண்ட‌ ப‌ய‌ண‌ங்க‌ள் செய்யும் போதோ, நோயுற்றிருக்கும் போதோ புற‌ச்சுத்த‌ம்  ப‌ற்றி அதீத‌ க‌ட்டுப்பாடு தேவையில்லை, மான‌சீக‌ ஜெப‌ம் மட்டும் செய்ய‌லாம் .
  18. உண‌வில் மாமிச‌ங்க‌ளை த‌விர்க்க‌ வேண்டும், அதிக‌ கார‌ம், புளிப்பு சுவையுடைய‌ த‌ம‌ஸிக‌ உண‌வுக‌ளை த‌விர்க்க‌ வேண்டும். எளிய‌ சைவ‌ உண‌வுக‌ள் ம‌ட்டுமே உண்ண‌ வேண்டும். மாமிச‌ உண‌வுக‌ள் உண்ப‌தால் த‌வ‌று கிடைக்கும் ப‌ல‌னின் அள‌வு குறைவாக‌ கிடைக்கும்.  ` 
அடுத்த‌ ப‌திவில் தொட‌ரும்...

ஸத்குருபாத‌ம் போற்றி!

2 comments:

  1. அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. காயத்திரி மந்திரம் சூரிய ஒளியில் இருந்து கொண்டு செய்ய வேண்டிய ஒன்று. அதனுடைய முழு அர்த்தமும் ஒளியை ஆதாரமாக வைத்துப் பிரபஞ்ச சக்தியை நம்முள் ஏற்றுக்கொள்வதாக அமைந்திருக்கிறது.

    சூரிய உதயத்திற்கு முன், அஸ்தமனத்திற்க்குப் பின் என்ற நெறிமுறைகள் ஏற்றுக் கொள்ளும்படியில்லை.
    தயவு செய்து சரி பார்க்கவும்.

    மேலும் காயத்திரி சாதனை உருவ வழிபாட்டிற்கு அப்பாற்பட்டது. எந்த மதமும் சாராதது.

    இந்த அற்புத மந்திரத்தை ஒரு தேவியாக சித்தரித்து இந்துக் கோவில்களில் சிறைபிடிப்பது இந்துவாகிய எனக்குக் கூட ஏற்புடையதாக இல்லை.

    சவிதூர் என்று கூறப்படுகின்ற அந்த பிரபஞ்ச சக்தி, மந்திரம் பற்றிய சரியான விளக்கம் இப்புவியில் வலம் வர ஆவன செய்வாராக.

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...