குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, September 21, 2012

காயத்ரி மந்திரத்தின் உள்ளார்ந்த பொருளும் தியான சாதனையும்

 
 
காயத்ரிமந்திரத்தினை சிலர் வெறும் சூரியனை நோக்கிய பிரார்த்தனை மந்திரமெனவே கருதி வருகின்றனர். உண்மையில் அது ஒளியான பரம்பொருளை குறிக்கும் பிரார்த்தனை, அத்துடன் பிரார்த்தனை மட்டுமல்ல அதன் சொல் அமைப்புகளும் ஒலியமைப்புகளும் மந்திர சாஸ்திரத்தின் மூலம் பிரபஞ்ச சக்தியின் ஒலிஅதிர்வுகளை ஜெபிப்பவர்கள் உடலிலும் மனதிலும் உருவாக்கும் வண்ணம் ரிஷிகள் ஒழுங்கமைத்திருக்கிறார்கள். ஆக அது பிரார்த்தனை மந்திரமாக இருக்கும் அதேவேளை பிரபஞ்ச மஹாசக்தியை ஆகர்ஷிக்கும் மந்திரமாகவும் இருக்கின்றது என்பது தனிச் சிறப்பு.
  
அதன் மூலக்கருத்து ஞானத்தினை அடைவதியே வலியுறுத்துகிறது, புத்தி ஞானத்தினை அடைந்தால் வாழ்க்கையின் எல்லாப்பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் ஆற்றல் உண்டாகின்றது. காயத்ரிமந்திரத்தின் மூலக்கருத்தும் அதை ஜெபிப்பதால் உண்டாகும் தெய்வ சக்தியும் இந்த ஆற்றலை சாதகனில் ஏற்படுத்துகிறது. ஆக இது ஒரு கண்மூடித்தனமான விளக்கமற்ற மத வழிபாடல்ல! மந்திர அலைகளால் உருவான சக்தி சாதகனின் மனப்பரிணாமத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தி ஞானத்தினை தந்து அதனூடாக சாதகனது வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கும் வழி முறையே காயத்ரி சாதனையாகும்.

இனி காயத்ரி மந்திரத்தினை பார்ப்போம்

ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந ப்ரசோதயாத்

இனி இவற்றின் உள்ளர்த்ததினைப் பார்ப்போம்;

  • ஓம்: பிரம்மம்
  • பூர்: பிராணன்
  • புவ: துன்ப‌த்தினை அழிக்கும் ச‌க்தி
  • ஸ்வ‌ஹ‌: இன்ப‌த்தினை த‌ரும் ச‌க்தி
  • த‌த்: அது
  • ஸ‌விது:சூரிய‌னைப் போன்று பிர‌காச‌மான‌
  • வ‌ரேண்ய‌ம்: சிற‌ந்த‌
  • ப‌ர்கோ: பாவ‌ங்க‌ளை அழிக்கும்
  • தேவ‌ஸ்ய‌:::  தெய்வ‌ ச‌க்தி
  • தீம‌ஹி: என்னுள் உறைய‌ட்டும்
  • தியோ: புத்தி
  • யோ: யார்?
  • ந‌:: எங்க‌ள்
  • ப்ர‌சோத‌யாத்: தூண்ட‌ட்டும்

சுருக்க‌மாக‌, எல்லாம் வ‌ல்ல‌ இறை ச‌க்தியே, பிர‌ப‌ஞ்ச‌த்தினை ப‌டைத்த‌ ம‌ஹாச‌க்தியே, எம‌து வாழ்விற்கு ஆதார‌மான‌ ச‌க்தி எதுவோ அது எம‌து துன்ப‌ங்க‌ளை நீக்கி, இன்ப‌த்தினை அளித்து அத‌னுடைய‌ தெய்வ‌ ச‌க்தி எங்க‌ளில் உறைந்து அத‌ன் மூல‌ம் எங்க‌ள் புத்தி தூண்ட‌ப்ப‌ட்டு ந‌ல்ல‌ வ‌ழியில் சென்று ச‌ரியான‌ ஞான‌த்தினை பெறுவோமாக‌ என‌ பொருள் ப‌டுகிற‌து.

எந்த‌ ஒரு ம‌னித‌ன் காய‌த்ரி மந்திர‌த்தினை ஜெபித்து இந்த‌ அர்த்த‌த்தினை ம‌ன‌தி பாவ‌னை மூல‌ம் நிலை நிறுத்துகிறானோ அவ‌ன் ப‌டிப்ப‌டியாக‌ இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌ ச‌க்தியினை த‌ன‌து மன‌திலும் உட‌லிலும் ஆக‌ர்ஷிக்கும் ஆற்ற‌லைப்பெறுகிறான்.

அடுத்த‌ ப‌திவில் ம‌ன‌த்திரையில் இந்த‌ ப‌வ‌னையினை எப்ப‌டி செய்வ‌து என்ப‌து ப‌ற்றி விரிவாக‌ப் பார்ப்போம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...