குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, September 22, 2012

காயத்ரி மந்திர பாவனை தியானம்




சென்ற பதிவில் காயத்ரி மந்திரத்தின் பொருளை பாவனை மூலம் ஜெபிப்பவன் தெய்வ சக்தியினை ஆகர்ஷிக்கும் தன்மையினை பெறுவான எனப் பார்த்தோம், அதனை சாதிக்கும் பாவனையினை எப்படிச் செய்வது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். கீழே தரப்பட்டுள்ள மூன்று பாவனைகளையும் காயத்ரி மந்திரத்தினை மனதில் ஜெபித்த வண்ணம் மனத்திரையின் கண்டு வரவேண்டும்.

முதலாவது பாவனை:
பிரணவ மந்திரமான ஓம் இன மூலம் குறிப்பிடப்படும் பிரம்மம் எனப்படும் எல்லாம் வல்ல இறைசக்தி எல்லா உலகிலும் பரந்து நீக்கமற நிறைந்துள்ளது. மனதில் பூர், புவ, ஸ்வ எனும் மூன்று உலகிலும் இறை சக்தி ஒளிவடிவாய் வியாபிப்பதை காணவும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் இறைசக்தியின் வடிவே, அனைத்திலும் இறைவனையே காண்கிறேன், என்னிடமுள்ள தீயசக்திகள் விலகி இறை சக்தி நிறைவதை உணர்கிறேன், இதன் மூலம் என்னை தொடர்பு கொள்ளும் அனைத்திலும் இறைசக்தி நிறைகின்றது, அதன் பயனாக இறைவனின் குணங்களான சந்தோஷம், அமைதி, ஆனந்தம், அழகு என்பன என்னை சூழ‌ நிறைவ‌தை உண‌ர்கிறேன்.


இந்த‌ப் பாவ‌னையினை 'ஓம் பூர் புவ‌ ஸ்வ‌' என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.

இர‌ண்டாவ‌து பாவ‌னை:
இந்த‌ (த‌த்) இறைச‌க்தி அதீத பிரகாசமான ஒளிச் சக்தி, அது அதி உயர்ந்த (வரேண்யம்) பாவங்கள் அற்ற (பர்கோ) தெய்வ சக்தி (தேவஸ்ய. இத்தகைய தெய்வ சக்தியினை நான் என்னுள் ஈர்த்து எனது ஆன்மா அத்தகைய சக்தியினை, குணத்தினை, வல்லமையினை அடைகிறது. இதனால் எனது அறிவு சுத்தமடைகிறது. தெய்வ குணங்களும் சக்திகளும் என்னுள் வளர்கின்றது, நான் தெய்வமாகவே மாறிவிட்டேன்.


இந்த‌ பாவ‌னையினை "த‌த் ஸ்விதுர் வ‌ரேண்ய‌ம் ப‌ர்கோ தேவ‌ஸ்ய‌ தீம‌ஹி" வ‌ரியினை உச்ச‌ரித்து பாவிக்க‌வும்.

மூன்றாவ‌து பாவனை: 
தெய்வ‌ ச‌க்தி எம‌து அறிவினை தூண்ட‌ட்டும், அத‌னால் பெறும் ஞான‌ம் எம்மை ச‌ரியான‌ வ‌ழியில் ந‌ட‌த்த‌ட்டும். எம‌து புத்தி, என‌து குடும்ப‌த்த‌வ‌ர‌து புத்தி, என்னைச் சார்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள‌து புத்தி ஆகிய‌வ‌ற்றை இந்த‌ தெய்வ‌ ச‌க்தி தூய்மைப்ப‌டுத்தி அனைவ‌ரையும் ச‌ரியான‌ வ‌ழியில் ந‌டாத்த‌ட்டும். ச‌ரியான‌ ஞான‌த்தினைப் பெறுத‌லே உல‌கில் உண்மையான‌ இன்ப‌த்தினைப் பெறுவ‌த‌ற்கான‌ வ‌ழி, இத‌ன் ப‌ய‌னாக‌ பூவுல‌கிலேயே இன்ப‌ம‌யமான‌ வாழ்வினை பெறுகிறோம்.


இத‌னை 'தியோ யோ ந‌ ப்ர‌சோத‌யாத்" என்ற‌ வ‌ரியினை உச்ச‌ரிக்கும் போது பாவிக்க‌வும்.

இந்த‌ பாவ‌னைக‌ளை செய்யும் போது மெதுவாக‌ ம‌ன‌தில் அவ‌ற்றை உருவ‌க‌ப்ப‌டுத்து உண்மையிலேயே உல‌க‌ம் அப்ப‌டி மாறுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும்.

முத‌லாவ‌து பாவ‌னையினை செய்யும் போது இறைவ‌ன‌ மூன்று உல‌க‌ங்க‌ளான‌ பூமி, சொர்க்க‌ம், பாதாள‌ உல‌க‌ங்க‌ளில் இறைச‌க்தி ப‌ர‌வுவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ உல‌க‌ங்க‌ளில் காண‌ப்ப‌டும் வெப்ப‌ம், ஒளி, ந‌ட்ச‌த்திர‌ங்க‌ள், ம‌ண், ஆகாய‌ம் என்ப‌வ‌ற்றில் இறைவ‌ன் நிறைந்துள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ பிர‌ப‌ஞ்சமே இறை ச‌க்தியால் நிர‌ம்பி உள்ள‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இறைவ‌ன‌து ம‌டியில் தான் இருப்ப‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இந்த‌ நிலையில் த‌ன்னை எந்த தீய‌ ச‌க்திக‌ளும் பாதிக்காது என்ப‌த‌னை உண‌ர‌வேண்டும்.

இர‌ண்டாவ‌து பாவ‌னையில் த‌ன‌து இஷ்ட‌ தெய்வ‌ம் த‌ன‌து இத‌ய‌த்தில் இருப்ப‌த‌னை உண‌ர‌ வேண்டும். இஷ்ட‌ தெய்வ‌த்தினை விள‌க்கு சுட‌ராக‌ அல்ல‌து க‌ண‌ப‌தி, அம்பாள், இராம‌ன்,கிருஷ்ண‌ன் என‌ விரும்பிய‌ உருவில் பாவித்து இத‌ய‌த்தில் இருத்த‌ வேண்டும். காய‌த்ரி மாதாவின் உருவினை இருத்தி தியானிப்ப‌து மேலும் ப‌ய‌ன‌ளிக்கும். அது முழுமையான‌ தெய்வ‌ ச‌க்தி விழிப்பையும் ஞான‌த்தினையும் கொடுக்கும்.

மூன்றாவ‌து பாவ‌னையில் காய‌த்ரி மாதாவின் தெய்வ‌ ச‌க்தி எம‌து புத்தி உண‌ர்ச்சிக‌ளில் ப‌ர‌வி அவ‌ற்றை தெய்வ‌ ச‌க்தியுடைய‌தாக்குவ‌தாக‌ பாவிக்க‌ வேண்டும். இத‌னால் புத்தி ந‌ல்வ‌ழிப்ப‌ட்டு ச‌ரியான‌ வ‌ழியில் செல்ல‌ ஆர‌ம்பிக்கும். இத‌ன் ப‌ய‌னாக‌ வாழ்வின் பிர‌ச்ச‌னைக‌ளுக்கு ச‌ரியான‌ தீர்வினை காணும் ஆற்ற‌ல் உண்டாகும்.

இந்த‌ மூன்று பாவ‌னைக‌ளின‌தும் ப‌ல‌ன் சாத‌க‌ன் இந்த‌ சாத‌னை ஆர‌ம்பித்து சிறிது கால‌த்திலேயே எல்லாவித‌ தீய‌ எண்ண‌ங்க‌ளிலுமிருந்து விடுப‌ட்டு ந‌ற்காரிய‌ங்க‌ளில் த‌ன‌து ம‌ன‌தினை செலுத்த ஆர‌ம்பிப்பான். இத‌ன் மூல‌ம் அந்த‌ சாத‌க‌ன் இறைவ‌னை அடையும் பேரின்ப‌ பாதையில் இல‌குவாக‌ ப‌ய‌ணிக்க‌ ஆர‌ம்பிப்பான்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...