குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, December 27, 2011

முரண்பாடுகளை, குதர்க்கங்களை எப்படி சமாளிப்பது?- புத்தரின் ஞானம்


உலகில் பலவகையான மனிதர்களுடன் பழகுகிறோம், வாழ்கிறோம். குறிப்பாக சமூக அமைப்பில் பலதரப்பட்ட மனிதர்கள், பல்வேறு குணாதிசயங்களுடன் இருக்கிறார்கள், அவர்கள் அனைவரும் ஒருதளத்தில் இருந்து சிந்திப்பதில்லை. அவர்கள் சிந்திக்கும் முறை அவர்கள் வாழ்ந்த சூழல், சமூக அமைப்பு, குடும்பம், கல்வி, சிந்தனைத்திறன் என்பவற்றிற்கேற்ப வேறுபடுகிறது. வேறு பட்ட எண்ணங்களுடையவர்கள் ஒரு தளத்தில் சந்திக்கும் போது தளம் ஒன்றாகவும், ஒரு பொருள் பற்றிய பார்வை வேறுவேறாகவும் இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் முரண்பாடு தோன்றுகிறது, இந்த முரண்பாடு சாதாரண வாக்கு வாதத்திலிருந்து, சமூகச் சண்டைகள் வரை நீண்டு சென்று அந்த தளத்தின் சமனிலையை, ஒத்திசைவினைக் குலைக்கிறது. இப்படி சமனிலை குலைவது அந்த தளத்தின் ஆக்கபூர்வ நிலையினை சீர்குலைக்கிறது, இதனால் இறுதியில் பயன் எதுவும் இருப்பதில்லை.

இதன் அடுத்த நிலை கர்ம விதிப்படி செயற்படுகிறது, அதாவது வினை விதைத்தவன் வினையறுப்பான் என்ற விதி. சமனிலையினை குலைப்பவனே இறுதியில் பலமடங்காக அந்த நிலையினை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

ஆக அகச் சமநிலை பெறுவது, கர்மாவினை எப்படி சமப்படுத்துவதும் என்ற உத்தியினை மனதின் செயற்பாடுகளை முற்றும் உணர்ந்த விஞ்ஞானியான புத்தபெருமானின் வாழ்க்கைச் சம்பவம் ஒன்றின் மூலம் அறிந்து கொள்வோம்.

உலகில் உதித்த ஞானிகளில் தனது புத்திமயகோசத்தினை அதி உச்ச நிலையில் விழிப்படைய வைத்த மனிதன் புத்தர் என்பது அறிஞர்கள் பலரின் கருத்து. அவரது வாழ்க்கைச் சம்பவங்களும் எமக்கு பயன்படக்கூடியவை. இங்கு மேற்குறிப்பிட்ட நிலையிற்கு அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சுவையான சம்பவம் ஒன்றினைப் பார்ப்போம்.

ஒரு நாள் புத்தர் தனது உபதேசத்தினை நிறைவு செய்துவிட்டு ஒரு கிராமத்தினூடாக சென்று கொண்டிருக்கிறார், அப்போது ஒரு  வயதில் இளமையான, நன்கு (தர்க்க சாஸ்திரம் கற்றிருப்பான் என நினைக்கிறேன்) கற்ற இளைஞன் புத்தரை இடைமறித்து வாதத்திற்கு அழைத்தான்.

வாதம் என்றால் நேர்மையான வாதமில்லை,அவனது நோக்கம் அவரை எப்படியாவது தூற்றி பலர் முன்னிலையில் அவமானப்படுத்திவிடவேண்டும் என்பதே! கண்டபடி தூற்றினான்.

உமக்கு யாருக்கும் தியானம் கற்பிப்பதற்கு எதுவித தகுதி இல்லை, ஏதோ பொய்யான ஒன்றை கற்பிக்கிறீர்! உமது குரு யார்? உமக்கு யார் புத்தர் என பட்டம் தந்தது? எந்தப்புத்தகத்தில் உமது தியானப்பயிற்சிகள் உள்ளது? நீர் ஒரு போலி ஆசாமி என கண்டவாறு திட்டித்தீர்த்தான்.

இவ்வளவற்றையும் கேட்ட புத்தர் அமைதியாக, சமனிலை மாறாத மனதுடன், புன்னகைத்தவண்ணம் தன் கருணைமிகுந்த கண்களால் அவனை ஆழமாக பார்த்தவண்ணம் அவனிடம் கெட்டார்; " அன்பனே சரி நீ சொல்வதெல்லாம் சரியாகவே இருக்கட்டும், இப்பொழுது நான் கேட்ட்கும் கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்வாயா?" என்றார்.

அந்த இளைஞனிற்கு பலத்த ஏமாற்றமாகிவிட்டது, அட நாம் இவ்வளவு அவமானப்படுத்தியும் இந்த மனிதன் திருப்பியும் என்னுடன் பேசுகிறானே என்று எண்ணிய வண்ணம் "சரி" என்றான்.

அதன்பின்பு புத்தர் "அன்பனே நீ ஒருவருக்காக பரிசுப்பொருளை வாங்குகிறாய், அவரிடம் கொடுக்கும் போது அவர் அதை வாங்கிகொள்ள மறுத்துவிடுகிறார், அப்படியாயின் அந்தப்பரிசுப்பொருள் யாருக்குச் சேரும்?" என்றார்.

அந்த இளைஞன் சற்று வியப்புடன் "அவர் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் நான் தானே பணம் கொடுத்து வாங்கினேன், ஆதலால் என்னையே அவை சாரும்" என்றான்.

புத்தர் புன்னகைத்த வண்ணம் "மிகச்சரி,இதே விதி உன்னுடைய கோவம்,பழிச் சொல், ஆணவம், அன்பு, கருணை உட்பட எந்த மன உணர்ச்சிக்கும் பொருந்தும், நீ என்னை அவமானப்படுத்த முனையும் போது உன்னையே அவமானப்படுத்துகிறாய், நீயே இறுதியில் அவமானப்படுகிறாய். நீ செய்து கொண்டவை அனைத்தும் உனக்கே திருப்பி வரும், அவற்றை நீ மறுக்க முடியாது என்பதே கர்மாவின் விதி, அவற்றில் இருந்து மீளவிரும்பினால் நீ உருவாக்கும் தீய உணர்ச்சிக்கு எதிரான நல்ல உணர்ச்சிகளை உருவாக்கு, உனது மனம் அமைதியுறும் ஆனந்தமடையும், மகிழ்ச்சியாக இருப்பாய்" என்று கூறிவிட்டும் மௌனமாக புத்தர் தன் பாதையில் நடக்கத்தொடங்கி விட்டார், அந்த இளைஞன் அதைக்கேட்டு திருந்தினானோ அல்லது வாதிடுவதற்கு இன்னொருவர் வரும் வரை காத்திருந்தானோ தெரியவில்லை. அதைப் பற்றி எமக்கு என்ன கவலை? அவனால் எமக்கு கிடைக்கவேண்டிய ஞானம் கிடைத்திருக்கிறது என்று அகம் மகிழ்வோம்.

இதில் பெறவேண்டிய நீதி:
புத்தரைப் போன்ற பெரிய ஞானியையே கேள்வி கேட்டு குதர்க்கம் புரிந்த சமூகம், எம்மைப் போன்ற சாமானியர்கள் ஒரு காரியம் செய்யும் போது தூற்றாது என்பது என்ன நிச்சயம், அப்படியான சந்தர்ப்பத்தில் அவர்கள் கூறுவதை அவர்களிடமே வைத்துக்கொள்ளச் சொல்லி, அவர்கள் பால் மனதைச் செலுத்தாமல் எமது பாதையில் நாம் பயணிக்கவேண்டியதுதான்!   இப்படிச் செய்யும் போது நாம் எமது சமநிலை இழக்காத நிலையுண்டாகும். அவர்கள் தாம் செலுத்தும் மன அலைகளுக்குரிய பலனைப் பெற்றுக்கொள்வார்கள். சமூக வழக்கில் சொல்வதானால் "சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வார்கள்"

சித்தர்களின் பிராணமய கோச விளக்கம்

சித்தர்கள் மனிதனது அமைப்பு பற்றி விளக்குவதற்கு கூறிய மாதிரியுரு பஞ்சகோசம் என்பதாகும். இந்த அமைப்பு மனிதனது ஸ்தூல சூஷ்ம அமைப்பு இரண்டையும் விளங்கிக்கொள்ள சிறந்த ஒரு விளக்கமாகும். அதாவது மனிதனானவன் ஐந்து ஸ்துல சூஷ்ம பகுதிகளால் ஆக்கப்பட்டவன்;
  1. அன்னமய கோசம்
  2. பிராணமய கோசம்
  3. மனோமய கோசம்
  4. புத்திமய கோசம்
  5. ஆனந்த மய கோசம்
என்ற ஐந்துமே பஞ்சகோசம் எனப்படும். இவற்றுள் நாம் இந்தப்பதிவில் பார்க்கப்போவது இந்த ஐந்து கோசங்களுக்கும் இணைப்பாக விளங்கும் பிராணமய கோசம் எனும் பிராண உடல் பற்றி!

பிராணமய கோசத்தின் முக்கிய இயல்புகளை மூன்று பகுதிகளாக பிரிக்கலாம்;
  1.  பிரபஞ்சத்தையும் தனியொருவரையும் இணைத்தல்
  2. ஸ்தூலத்தினையும் சூட்சுமத்திற்கும் இடையில் இணைப்பாக இருத்த‌ல்
  3. யோக‌ப்ப‌யிற்சி மூல‌ம் ம‌னித‌னது சூஷ்ம‌ ச‌க்திக‌ளை விழிப்பிக்க‌ ஆதார‌மாயிருத்த‌ல்
ஆகிய‌ இந்த‌ மூன்று இய‌ல்புக‌ளுமே பிராண‌ம‌ய‌ கோச‌த்தின் முக்கிய‌ இய‌ல்புக‌ளாகும்.

இனிச் சுருக்கமாக இந்த மூன்று இயல்புகளைப்பற்றியும் பார்ப்போம்;
முதலாவதாக பிரபஞ்சத்தினையும் தனியொருவரையும் இணைத்தல்; பிராணனே தனியொரு மனிதனையும் பிரபஞ்சத்தினையும் இணைக்கும் இணைப்பகும். அதாவது அணு முதல் அண்டம் வரையிலான அனைத்திலும் அசைவாக இருப்பது பிராணனே!அதன் அதிசூட்சும அசைவு அணுவிலும், பௌதீகத்தில் ஒளி, ஒலி, வெப்பசக்தியாகவும், பூமியின் அசைவாகவும், அண்டங்களின் அசைவாகவும் காணப்படுகிறது. இதனை வைத்தே சித்தர்கள் அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் என்றார்கள், யோக சாதனையின் அடிப்படையே எம்மில் உள்ள பிராணனின் அசைவை உணர்ந்து அறிவதன் மூலம் அண்டத்தின் சக்தி இயக்கத்தினை அறிவதே! அதுபோல் எமது பிராணன் கட்டுப்படும் அளவிற்கேற்ப அண்டத்திலுள்ளவற்றை கட்டுப்படுத்தும் தன்மை பெறுவதே அஷ்டமா சித்திகளின் அடிப்படை.

அடுத்து இரண்டாவது தன்மையான ஸ்தூலத்தினையும் சூட்சுமத்திற்கும் இடையில் இணைப்பாக இருத்த‌ல். பிராண‌ன் அதி சூஷ்ம‌மான‌து ம‌ற்றைய‌ நான்கு கோச‌ங்க‌ளையும் ஊடுருவும் த‌ன்மை வாய்ந்த‌து. அதாவ‌து ம‌ற்றைய‌ கோச‌ங்க‌ளுக்கு உயிப்பினை/ச‌க்தியினை வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ப் பிராண‌ம‌ய‌ கோச‌மே!இன்னும் விள‌க்க‌மாக‌ அறிவ‌தானால் ஆன‌ந்த‌ம‌ய‌, விஞ்ஞான‌ம‌ய‌, ம‌னோம‌ய‌ கோச‌ங்க‌ள் அன்ன‌ம‌ய‌ கோச‌த்தில் செய‌ற்ப‌டுவ‌த‌ற்கான‌ ஆற்ற‌லையும் இணைப்பையும் வ‌ழ‌ங்குவ‌து இந்த‌ பிராண‌ம‌ய‌கோச‌மே! பிராண‌ன் ப‌ல‌ப்ப‌ட்டால் ம‌ட்டுமே எல்லா கோச‌ங்க‌ளில் உள்ள‌ ஆற்ற‌ல்களும் வெளிப்ப‌ட‌முடியும். அடுத்து இந்த‌ப் பிராண‌ன் ஸ்தூல உட‌லில் உற்ப‌த்தியாவ‌து இல்லை. வெளியிலிருந்து பிராண‌ம‌ய‌ கோச‌த்தால் ஏற்க்க‌ப்ப‌ட்டும் 72000 நாடிக‌ளால் உட‌லிற்கு விநியோகிக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ பிராண‌ம‌ய‌ கோச‌த்தின் அமைப்பிய‌ல் ப‌ற்றி விரிவாக வேறோரு ப‌திவில் பார்ப்போம்.

மூன்றாவது இயல்பு: சித்தர்கள் பிராணசக்தி எல்லாக்கோசங்களையும் ஊடுருவும் என்று அறிந்திருந்தார்கள், அதனைப் பயன்படுத்தி மனிதன் எப்படி தன்னை உயர்த்திக்கொள்வது என்று கண்டறிந்ததே சித்தர்களது அட்டாங்க யோகம், கிரியா யோகம் என்பவையெல்லாம். இதன் மூலம் யோக‌ப்ப‌யிற்சிகள் எல்லாம் ம‌னித‌னது சூஷ்ம‌ ச‌க்திக‌ளை விழிப்பிக்க‌ ஆதார‌மாயிருத்த‌ல் என்ப‌து பெறப்படுகிறது. பிராண‌னுட‌ன் எதைக்க‌ல‌ந்தாலும் அத‌ன்மூல‌ம் ஸ்தூல, ம‌ன‌, புத்தி, ஆன‌ந்த‌ம‌ய‌கோச‌ம் மாறுத‌லையும் என்ப‌த‌ன் அடிப்ப‌டையிலேயே யோக‌ப்ப‌யிற்சிக‌ள் அனைத்தும் உள்ள‌ன‌.
 
அனேகமான யோகசாத்திரம் தொடர்பான பதிவுகளில்,நூற்களில் பிராணமய கோசத்தினை இரண்டாவது கோசம் எனக்குறிப்பிட்டு விளக்கம் அளிக்கப்படுகிறது. அதாவது பஞ்ச கோசங்களை ஒன்றின் மேல் ஒன்றான அடுக்குகளாக உருவகிக்கப்படுவதாக விளக்கம் தரப்படுகிறது. இது தவறானதாகும் ஸ்தூல உடலாகிய அன்னமய கோசம் தவிர்ந்த மற்றைய நான்கும் சூஷ்மதன்மை நிறைந்ததாகும். அவை பிரபஞ்சத்தில் எங்கும் பரவும் தன்மை வாய்ந்தவை.
 
இந்த சுருக்கமான விளக்கத்தின் மூலம் பிராண மயகோசத்தினை வலுப்படுத்துவதால் மனிதன் பெறக்கூடிய பலன்கள் என்ன என்பதனை வாசகர்கள் மேலும் சிந்தித்து அறிந்து கொள்ளலாம்.

Saturday, December 24, 2011

சனி மஹாத்மியத்தில் சூரியனார் பெருமை




விக்கிரமாதித்திய மஹாராஜா கிரகங்களில் யார் முதன்மையானவர் என்ற கேள்வியினை முன் வைத்தவுடன் ஒவ்வொரு கிரகத்தினை உபாசித்து சித்தி பெற்ற பண்டிதர்கள் ஒவ்வோருவராக தமது கிரகத்தின் பெருமையினை ஒருவர் பின் ஒருவராக எடுத்துரைக்கத் தொடங்கினர். முதலில் நவக்கிரகங்களிலேயே ஒளிமிக்கதாகிய சூரியன் பற்றி பண்டிதர் ஒருவர் எடுத்துரைக்கத் தொடங்க்கினார்.

அவர் ஒளிமிகுந்த கண்ணுடன், உறுதியான உடல், மற்றும் வசீகரிக்கும் தோற்றத்துடன் கணீரென்ற குரலுடன் சூரியனது பெருமை பற்றி எடுத்துரைக்கத் தொடங்கினார்; 

"சூரியனே கிரகங்களில் உயர்ந்தவர், யார் தன்னை தொடர்ச்சியாக பிரார்த்திக்கிறாரோ அவர்களுக்கு கேட்பவற்றை கொடுப்பவர், நவக்கிரகங்களிலேயே சூரியனே பரம்பொருளின் அவதாரம், யாரொருவர் சூரியனை தொடர்ச்சியாக மனம் ஒன்றி வழிபடுகிறாரோ அவர் தனது மனக் கவலைகள், நோய்கள், வறுமைகள் நீங்கப் பெற்றவராகின்றார்கள். 

சூரியனின் தோற்றம் மெல்லிய, சுருண்ட தலை முடியுடையவர், ஒருமையான மனமுடையவர், வசீகரமான தோற்றம், கணீரெண்ர‌ குரல், அளவான உயரமுடையவர்,  தேன் போன்ற நிறமுடையதும் மது போன்ற ஒளியுடைய கண்களைக் கொண்டவர். எலும்புகள் உறுதியானவர், பித்த தோஷத்தினை உடையவர், அவர் உறுதியானவர், திடமானவர், அவரது உடல் நிறம் செம்புகலந்த பொன்னிறம் உடையது, அவரது பாதங்கள் காணமுடியாதவை, சிவப்பு பூக்களையும் பொன்னிற மஞ்சள் நிற உடையினையும் அணிந்திருப்பார். கைகளில் சிவப்பு தாமரை காணப்படும். அவருக்குரிய உலோகம் பொன் அல்லது செம்பு, இரத்தினம் மாணிக்கம், மனித உடலில் எலும்பின் தன்மையினை ஆழ்கின்றார். 

"அனைத்தும் சூரியனிலிருந்தே உற்பத்தியாகின்றன, அவரே அனைத்துக்கும் ஆத்மாவாகின்றார், அவரே வானாத்தின் அரசன், பூமிக்கும் வானத்தில் உள்ள தெய்வீக சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்துபவர், கிழக்குத்திசையின் அதிபதி, வாரத்தில் ஞாயிற்றுக் கிழமையினையும், ராசிகளில் சிம்மத்தினையும் ஆழ்பவர். ஒவ்வொரு நாளும் உருவாக காரணமானவர், தந்து உஷ்ணக்கதிர்களால் துளைப்பவர், உலகின் ஆனந்ததிற்கு காரணமானவர், இதனால் அவரை பிரகாசமானவர், உற்பத்திக்கு காரணமானவர், உருவாக்குபவர், உயிர்கொடுப்பவர், ஒளியானவர், நாள் ஒன்று உருவாக காரணமானவர் என அழைக்கப்படுகிறார். சூரியனது ஒளியில் காணப்படும் ஏழு நிறங்களே வேதங்களின் ஏழு சந்தஸ் ஆகிய காயத்ரி, துருஷ்டுப், அனுஷ்டுப், ஜகதி, பங்கி, ப்ருகதி, உச்ஷ்னிக் ஆகிய ஏழும். ஆகவே சூரியன் இன்றி காலக்கணிப்பு இல்லை. காலம் இன்றி வேதங்களும் இல்லை, கால நிலைகளும் இல்லை, எதுவுமில்லை. 

வருடம் என்பது சூரியனாரின் ரதம், அவரது ரத சக்கரம் 12 கம்பிகளால் ஆனது அவை ஒவ்வொரு மாதங்கள், மதிப்புக்குரிய அரசரே ஒவ்வொரு மாதத்திற்கும் அதிபதியாக அவரவர் தொழில்களை செய்வதற்கு ஒரு தேவதை, ஒரு அப்சரஸ், ஒரு ராக்ஷ்ஷர், ஒரு நாகன், ஒரு யக்ஷ்ஷன், ஒரு கந்தர்வன், ஒரு ரிஷி காணப்படுவர். உதாரணமாக ஜ்யேஷ்ட (ஆனி) மாதத்தினை எடுத்துக் கொண்டால் தேவதை - மித்ரா, அபசரஸ் - மேனகை, ராஷஷன் - பௌருஷ்ஷேயன், நாகன் - தக்ஷ்ஷக, யக்ஷ்ஷன் - ரதஸ்வானன், கந்தர்வன் - ஹாஹன், ரிஷி - அத்ரி ஆவர். தேவர்கள், ரிஷிகள், அப்சரஸுகள் அந்த மாதத்திற்குரிய நன்மையினையும், ராக்ஷ்ஷர், யக்ஷ்ஷர், நாகர்கள் அந்த மாதத்திற்குரிய தீயவற்றையும் செய்வர்.

ஸ்ரீ சனீஸ்வரர் பெருமை - சனீ தோஷத்திற்கு ஓர் எளிமையான பரிகாரம்!


இந்தப் பதிவினை படிக்கு முன் கட்டாயம் கீழ்வரும் இணைப்புகளை படித்தபின் வாசிக்கவும்

============================================================================



முன்னொரு காலத்தில் மாவீரன் விக்கிரமாதித்தியன் உஜ்ஜனி எனும் நகரை ஆண்டு வந்தான், அவன் மிகுந்த இரக்க முடையவனும், அறிவாற்றலும் உள்ள அரசன். அவன் பல கலைகளை கற்று தேர்ந்ததுடன் அந்தக்கலைகளில் விற்பனராகிய அறிவாளிகளை மிகுந்த மதிப்புடன் தனது அவையில் வைத்திருந்தான். தனது குடிமக்களை தந்து சொந்தப் பிள்ளைகள் போல் கருதினான். அதுபோல் மக்களும் தமது அரசனை தமது தந்தைபோல் மதித்து போற்றி வந்தனர். ஆகவே அவனது அரச எல்லைக்குட்பட்ட அனைத்துக் குடிமக்களும் மிக்க மகிழ்வுடனும் மன நிறைவுடனும் வாழ்ந்து வந்தனர். 

பத்துத் திசைகளிலுமிருந்து தேனுடைய பூக்களை நோக்கி வண்டுகள் வருவது போல் அவனது அறிவாற்றலும், அறிவைத் தேடும் பண்புகண்டு அவனது காலத்திலிருந்த அனைத்து துறைசார் அறிஞர்களும் அவனை நோக்கி வந்தனர். அரசனும் தன்னை அண்டி வந்த அனைத்து அறிஞர்களையும் தக்க மரியாதை செலுத்தி அவர்களுடன் கருத்துப்பகிர்ந்து தனது அறிவையும் வளர்த்துக்கொள்வதை பெரும் மகிழ்வுடன் செய்து வந்தான். 

அதாவது தற்காலத்தில் பேராசிரியர்கள் ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்டு ஆண்டுகொருமுறை கலந்துரையாடல் நடத்தும் முறையினை தனது அரச அவையில் ஏற்பாடு செய்து தானும் அதில் ஒருவனாக பங்குபெற்றி வந்தான். அரசியல், சமயம், தத்துவம், மருத்துவம் என பலதுறைகளில் கலந்துரையாடல் செய்து அறிவு பரவ வழி செய்தான். 

இப்படியாக அறிவுபரவச்செய்து வரும் பல கலந்துரையாடல்கள் நடாத்தி வந்தான். மன்னனோ மற்றவர்களோ தமது கருத்தினை, சந்தேகங்களினை அவையினர் முன் வைப்பார்கள், அவற்றிற்கு மன்னன் விக்கிரமாதித்தியன்  உட்பட மந்திரிகள், பண்டிதர்கள், தாந்திரீகர்கள், ஜோதிடவிற்பனர்கள் போன்ற துறை சார்ந்த அறிஞர்கள் தமது கருத்தினை தெளிவு படுத்துவர், ஒரு நாள் இப்படியான அறிஞர்கள் குழுமியிருந்த அவையில் விக்கிரமாதித்தியன் தனது சந்தேகம் ஒன்றினை முன் வைத்தான்; அது ;

நவக் கிரகங்களில் முதன்மையானவர் யார்? என்பது!

அந்த அவையில் வராஹமிரர் போன்ற ஜோதிட சாஸ்திரத்தில் கரைகண்ட ஜோதிட ஞானிகள் பலர் இருந்தனர், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கிரகத்தினையும் உபாசித்து அந்த கிரகம் தொடர்பான அறிவையும் அந்த கிரகத்துக்குண்டான அருளையும் ஞானத்தினையும் பெற்றிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் மன்னனது இந்தக் கேள்விகளை தங்களது பக்கங்களிலிருந்து அணுக தயாராகினர். விக்கிரமாதித்திய மன்னனும் மன்னனது அவையினரும் ஆவலுடன் அந்த விற்பனர்களது பதிலினை கேட்க ஆவலாயினர்! 

நாமும் ஆர்வமுடன் அவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள் என்பதனை நாளை பார்ப்போம்!


Thursday, December 22, 2011

சனீஸ்வர மஹாத்மியம் - எளிய பரிகாரமுறை


அறிமுக உரை - I
பொதுவாக புராணக் கதைகள் அனைவராலும் விரும்பப்படுபவையல்ல, அவற்றில் அறிவுக்கொவ்வாத விடயங்கள் பலது காணப்படுகின்றது சிலரது வாதம், இன்னும் சிலர் புராணக்கதைகள் ஆபாசம் நிறைந்த கூறுகள் உள்ளன என்றும் அவற்றை மறுப்பவரும் உள்ளனர், எமது பதிவுகளில் புராணக்கதைகள் (அதாவது அடுத்து வரும் சில காலத்திற்கு பார்க்கவுள்ள சனி மாஹத்மியம் என்ற புராணக்கதையிற்கு அடிப்படையாக) எவ்வாறு எடுத்தாளப்படுகிறது என்பது பற்றி விளக்கவே இந்த பதிவு.

அடுத்து எந்த‌ ஒருவிட‌ய‌த்தினை அணுகுவ‌த‌ற்கு ஒரு முறை காண‌ப்ப‌டுகிற‌து, அத‌ன் மூல‌ம் அணுகும்போது ம‌ட்டுமே அவ‌ற்றின் உண்மையான‌ செய்திக‌ளை அறிந்து கொள்ள‌ முடியும், ஆக‌வே அவ‌ற்றையும் இந்த‌ப்ப‌திவில் சுருக்க‌மாக‌ விள‌க்க‌ப்ப‌டும்.

சென்ற பதிவில் கதைகள் எனப்படுபவை நேரமற்ற ஒரு பகுதியில் (Domine) சேமிக்கப்பட்டு பின்னர் வாய்மொழி மூலமோ, எழுத்து மூலமோ கடத்தப்படுகின்றது என்பதையும் அவை நிகழ்காலத்தை மனதில் உருவாக்கி ஒருவரது அகப்பிரபஞ்சத்தில் மாற்றத்தினை உருவாக்குகின்றது என்பதனையும் பார்த்தோம். சரியாக புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு பல அரிய விடயங்களை விளக்கக்கூடியவை.

பொதுவாக புராணக்கதைகள் பிரபஞ்சவியல் தரவுகளையோ, மனிதனது அகப்பிரபஞ்சத்தின் இயக்கத்தினையோ(தேவாசுர யுத்தங்கள்), கலாச்சார சமூக மறைவுகள் (காமம் போன்ற விடயங்கள்), மருத்துவ தரவுகள் என்பவற்றை மறைபொருளில் விளக்கப்பட்ட கதைகளை கொண்டிருக்கும்.

அவற்றை விளங்கும் தன்மை ஒவ்வொரு நபரிற்கும் ஏற்ப மாறுபடும், பொதுவான வரைவிலக்கணம் என ஒரேதன்மையில் விளக்கம் அளிக்க முடியாதவை.

அடுத்து இந்தக் கதைகள் மனிதனது ஆழ்மனதையும், மறை மனதிற்குமான செய்திகளை கொண்டிருக்கும். அவற்றை தர்க்க மனது கொண்டு ஆராயமுயலும் போது அவற்றின் பொருள் விளங்கும் தன்மைகள் புரியமுடியாத நிலை ஏற்படும், அதாவது ஒரு விடயத்தை ரசிப்பதற்கும் ஆராய்வதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது. ஒரு விடயத்தினை ரசிப்பதால் மனதிற்கு இன்பத்தினையும் அமைதியையும் பெறுகிறோம், ஆராய்வதால் அறிவினையும், பல சமயங்களில் பயவுணர்ச்சியுனையும் அடைகிறோம். புராணக்கதைகள் படித்து ரசிப்பதற்குரியவை, ஆராய முற்பட்டால் அதனால் உள்மனம் பெறக்கூடிய தகவல்கள் இழக்கப்படும்.

புராணக்கதைகள் படிக்கும் போது மனம் திறந்த நிலையில் இருத்தல் வேண்டும். ஜென் கதைகளில் வரும் காலி தேனீர் கோப்பை பொன்ற நிலை வேண்டும். இது வேறெந்த ஆழ்மனத்துட‌ன் தொடர்புடைய பயிற்சிகளுக்கும் பொருந்தும். த‌ர்க்க‌புத்தியுட‌ன் எதையும் அணுக‌விரும்புப‌வ‌ர்க‌ள் புராண‌க்க‌தைக‌ள் ப‌டிப்ப‌த‌னால் எதுவித‌ ப‌ல‌னும் பெற‌ப்போவ‌தில்லை, ஏனெனில் புராண‌க்க‌தைக‌ளுல் எதுவித‌ உண்மைக‌ளையும் நேர‌டியாக வாதித்து பெற‌முடியாது, ஆனால் அவ‌ற்றின் உருவ‌க‌ங்க‌ள் ஆழ்ம‌ன‌த்தின் இய‌க்க‌த்தினை சீர‌மைக்கும் த‌ன்மை உடைய‌வை.

இப்ப‌டியான‌ திற‌ந்த‌ ம‌ன‌ம‌டையும் நிலையையே ப‌க்தி என்ற‌ வ‌ழிமுறையாக்க‌ப்ப‌ட்ட‌து. இப்ப‌டியான‌ மன நிலையில் பிர‌ப‌ஞ்ச‌த்தில் உள்ள‌ அனைத்தும் குருவாகி வ‌ழிகாட்டும்.

எம்மில் ப‌ல‌ர் மேல்ம‌ன‌தாகிய‌ த‌ர்க்க‌ ம‌ன‌த்தினை ந‌ம்பியே வாழ்கிறோம், அனேக‌மாக‌ த‌ர்க்க‌ ம‌ன‌திற்கு ச‌ரியென‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ங்க‌ளே ச‌ரியென‌ ந‌ம்புகிறோம், ம‌ற்றைய‌ விட‌ய‌ங்க‌ளை ஒருவித‌ ப‌ய‌த்துட‌னே அணுகுகிறோம். உண்மையில் ம‌னித‌ன‌து மேல்ம‌ன‌தாகிய‌ த‌ர்க்க‌ புத்தி ஆழ்ம‌ன‌திற்கு இட்ட‌ பாதுகாப்பு க‌வ‌ச‌மே, அதாவ‌து ஒரு வாயில் காப்போன் போல், உள்ளே வ‌ரும் எண்ண‌ங்க‌ள் ச‌ரியான‌வையா, பிழையான‌வையா என்று சோதித்து உள்ளேயுள்ள‌ "ம‌ந்திரியாகிய‌" ஆழ்ம‌ன‌திட‌மும் "அர‌ச‌னான‌" மறைம‌ன‌த்திட‌மும் அனுப்பும் வாயில் காப்போனே மேல்ம‌ன‌ம். ந‌ம்மில் ப‌ல‌ர் அந்த‌ வாயில் காப்போனாகிய‌ மேல்ம‌ன‌த்திட‌ம் ம‌ட்டுமே சிக்கிக்கொண்டு எப்போதும் த‌ர்க்கித்து ஆழ்ம‌ன‌த்தின் செய்கையினை த‌டை செய்த‌வ‌ண்ண‌ம் உள்ளோம். மேல்மனதின் செய்கை நிச்சயமாய் அவசியமானது, எமக்கு எது சரி, எது பிழை என ஆராய்ச்சி செய்து முடிவெடுக்கும் வரை, முடிவெடுத்தபின் அதனை செயல்படுத்துவதற்கு சக்திவாய்ந்த மற்றைய இருவரது செயற்பாட்டினை மேல்மனம் கட்டுப்படுத்தாத நிலைக்கு எம்மை பயிற்றுவிக்க வேண்டும். ஆனால் பொதுவில் நம்மில் பலர் ஒன்று எப்போதும் தர்க்கித்து மேல்மனமாகிய காவலாளியிற்கு அடிமையாக இருப்போம் அல்லது மேல்மனதை இழந்துவிட்டும் மந்திரியிற்கும், அரசனிற்கும் அடிமையாக இருப்போம். முன்னையவர்கள் எப்போதும் வாதித்து குதர்க்கம் செய்பவர்கள், பின்னையவர்கள் பக்தி, சாமியார், கோயில், குளம் என தமது கடமைகளை விட்டுவிட்டு அலைபவர்கள், ஆக எந்த யோக முறையும் கூறும் சமநிலை என்பது சரியான விகிதத்தில் இந்த மூன்று மனதையும் பயன்படுத்தும் முறையினை அடைவதே. அடுத்து வரப்போகும் சனீஸ்வர மஹத்மியத்தினை படிப்பதற்கும், வேறு எந்த புராண இதிகாசங்களையும் அணுகுவதற்கு இந்த சமநிலை அவசியம் என்பதற்காகவே இங்கு விளக்கப்படுகிறது.

இனிவரப்போகும் சனீஸ்வர மஹாத்மியம் மூட நம்பிக்கைகளை கொண்டதாகவோ, பயமுறுத்தும் பாணியிலோ அமையாது, உண்மையில் இந்த பிரபஞ்சத்தில் நவகோள்களில் உயர்ந்தவர் தாழந்தவர் என்று பாகுபாடு காட்டாமல் தன்கடமையை சரியாக செய்யும் சனீஸ்வரப்பெருமான் மனிதனிலும் எப்படி செயற்படுகிறார் என்றும்,பிரபஞ்ச அமைப்பில் எவ்வாறு செயற்படுகிறார் என்ற தகவல்களை கதை வடிவில் பார்க்கப்போகிறோம்.

இந்தக்கதைகள் நீங்கள் வாசிக்கும் போது உங்கள் உணர்வில், ஆழ்மனதில் சனீஸ்வர பகவானின் ஆற்றல் செய்கைகளை தெளிவுற உணர்வீர்கள், அந்த உணர்வு உங்கள் அகப்பிரபஞ்சத்தில் பதிவதால் எந்தெந்தெந்த விடயங்களில் சனீஸ்வரர் உங்களுக்கு தாக்கங்களை தருவார், உயர்வினை தருவார் என்ற ஞானம் மனதில் பதியும், அதன் பயனாக எமது அகப்பிரபஞ்சம் மாறுதலடைவதால் அவரது செய்கைகள் எல்லாம் எமக்கு நன்மையினைப் பயக்கும் அருள் நிலையை பெறலாம்.


Wednesday, December 21, 2011

சனிபெயர்ச்சியும் சனி பகவான் தோஷத்திற்கான‌ எளிய பரிகார முறையும்



நவக்கிரகங்களிலே ஈஸ்வர பட்டமுடைய சனீஸ்வர பகவான் கன்னிராசியிலிருந்து தனது உச்ச ராசியான துலா ராசியிற்கு இடம் பெயருகின்றார். மற்றைய கிரகங்களை விட சனி பகவானின் பெயர்ச்சி அனைவரது மத்தியிலும் அதிக பயத்துடன் எதிர் நோக்கப்படுகின்ற ஒன்று. சனி பெயர்ச்சிப்பலன்களே அதிகம் வாசிக்கப்படும். கன்னி, துலா,விருட்சிகத்திற்கு ஏழரைச் சனி ஆட்படுகையும் மீன ராசிக்கு அட்டமத்து சனியும் ஆகிறது. சனி பலமில்லாதவர்கள், ஏழரைச்சனி, அட்டமத்து சனி உள்ளவர்கள் எல்லாம் சில நூறுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து பரிகாரம், சாந்தி என்பன செய்துவரும் இந்தக் காலத்தில் மிக இலகுவாக சனியின் தாக்கத்தில் இருந்து மீளும் வழி ஒன்று பாரம்பரியமாக‌ உள்ளது என்பதை மறந்துவிட்டோம். அது என்ன?

இன்றைய நிலையில் சனிபெயர்ச்சியும் கர்பரேட் மார்க்கட்டிங்கில் ஒன்றாகிவிட்டதால் சனிபெயர்ச்சி பலன்களை படித்தல், கோயிலிற்கு சென்று சனிபகவானிற்கு எள்ளெண்ணெய் எரித்தல், அர்ச்சனை செய்தல், யாகம் செய்தல் என்பன வியாபாரமாகியே விட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் பணம் செலவழித்துதான் சனிபகவானின் அருள் பெறவேண்டும் என்ற நிலையில் உள்ளவர்களுக்கு நாம் சொல்லப்போகும் இந்த சனி பரிகாரமுறை வியப்பை அளிக்கும் என்பதில் ஐயமில்லை!

சரி அதிக பீடிகை போடாமல் விடயத்திற்கு வருவோம்! முதலில் அந்த எளிய பரிகாரம் என்ன என்பதனை தெரிவதற்கு முன்னர் அதற்கான சில‌ அடிப்படைகளை அறிதல் அவசியமானது.

ஏன் எமது பாரம்பரியத்தில் புராணங்கள், இதிகாசங்கள், என பல்லாயிரக்கணக்கான கதைகள்  தலைமுறை தலைமுறையாக பாட்டிகதைகளாக சொல்லப்பட்டுவந்துள்ளது? குரு உபதேசங்கள் கதைகளாக கூறப்படுகின்றன! அவற்றின் தாத்பரியம் என்ன? நோக்கங்கள் இன்றி வெறும் நேரப்போக்கிற்காக சொல்லப்பட்டனவா?

பதஞ்சலி யோகம் என்ற அதி உன்னத மனவியல் நூலையும், மனதின் செம்மைபற்றி உற்றறிந்த சித்தர்களது உபதேசங்களினையும், அறிவின் அதிஉச்ச நிலையினையும் அடைந்த ஒரு கலாச்சாரத்தில் மூடத்தனமான அறிவுக்கொவ்வாத கதை சொல்லும் பாரம்பரியம் இருந்திருக்குமா?
நிச்சயமாக இல்லை!

இதே போல் ஜப்பானிய ஜென் கலாச்சாரத்திலும் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றது.

அப்படியானால் கதைகளது தாத்பரியம் என்ன?

அது எமது முன்னோர்கள் கையாண்ட ஒரு உளவியல் சிகிச்சை முறை,
ஒவ்வொரு கதைகளும் நீதி ஒன்றினை போதிக்கும் கதைகளாகவே காணப்படும். கதைகள் ஒருகாலத்தில் எமது முன்னோர்கள் பெற்ற வாழ்க்கை ஞானம், அந்த வாழ்க்கை ஞானம், ஒருவருடைய வாழ்க்கை அனுபவ ஞானம் கதைகளாகும் போது அது நேரம் அற்ற ஒரு பகுதியில் (Domine) இல் சேகரிக்கப்படுகின்றது, அந்த சேகரிப்பு அதன் பின் நேரத்தினால் மாற்றமடைவதில்லை, இதனை விளங்குவதற்கு தற்கால‌ திரைப்படக்காட்சியினை உதாரணமாக கொள்ளலாம், ஒரு நிமிடத்தில் நடிகரது அனுபவமாக பெறப்பட்டது பின் காலம்பூராகவும் பதியப்பட்டு பின்பு அந்த படம் போடும் நேரத்தில் அந்த நடிகர் பெற்ற அனுபவத்தினை பார்ப்பவர்களது அகச் சூழலில் உருவாக்குகின்றது. அதனால் பார்ப்பவரது அகச்சூழல் மாற்றமடைகிறது.

இந்த இடத்தில் ஏன் எம்மவர்கள் சினிமா, நாடக சீரியலில் அதிகம் அழுந்தியுள்ளார்கள் என்பதற்கு காரணம் பாரம்பரியமாக எம்மில் கதை கேட்க்கும் ஜீன்கள் தான் என்பதனை  உணரலாம். கதை கேட்க்கும் ஜீன்களை மாற்றமுடியாது, ஆனால் கேட்க்கும் கதைகளை மாற்றலாம் அல்லவா?

கதை கேட்க்கும் போது அகச்சூழல் மாற்ற மடைகிறது எனப்பார்த்தோம், அது எவ்வாறு எனப்பார்ப்போம், பொதுவாக அனைவரது வெளிப்பார்வைக்கும் மாம்பழம் என்பது அதன் தோற்றம், அளவு, நிறம் என்பன ஒரேமாதிரித்தான் தெரியும், ஆனால் அதன் சுவை, உண்பதற்கான விருப்பம், அதுபற்றிய மனவுணர்வு ஆகிய அகச்சூழல் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானவை. அவை சூஷ்ம உலகமாகிய அக உலகத்துடன் தொடர்பு பட்டவை. எமது முன்னோர்கள் இந்த உண்மையினை நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

ஒவ்வொரு மனிதர்களுக்கும் இரண்டு வகையான உலகங்கள் காணப்படுகின்றன. புறப்பிரபஞ்சம் இது அனேகமாக புலனறிவு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியானது. அகப்பிரபஞ்சம் இது ஒவ்வொரு மனிதனிற்க்கு தனியானது, அவனது எண்ணங்கள், சிந்தனை, கற்பனை என்பவற்றால் ஆனது. புறப்பிரபன்ஞமும் அகப்பிரஞ்சமும் ஒன்றாக சந்திக்கும் புள்ளிகள் அகப்பிரபஞ்சத்தில் உணர்ச்சிகளாக, எண்ணங்களாக, மன நிலைகளாக அகப்பிரபஞ்சத்தில் எண்ண சலனத்தினை உருவாக்குகின்றன. உருவாக்கப்படும் சலனங்கள் வலுப்பெறும் போது, அந்த எண்ணங்கள் செயல் பெறுவதற்கு உரிய புறச்சூழலை உருவாக்குகின்றது. புறப் பிரபஞ்சத்தினை விட அகப் பிரபஞ்சத்தில் பதியப்படுபவை புறப்பிரபஞ்சத்தில் இருப்பவற்றைவிட நிரந்தரமானவையும் உறுதியானவையுமாகும்.

எமது அகப்பிரபஞ்சத்தில் ஏற்படும் உணர்ச்சிகளும், எண்ணங்களுமே தொடர்ச்சியாக‌ வலுப்பெறும் காலத்தில் புறப்பிரபஞ்சத்தில் எமது அன்றாட நிகழ்வுகளாகின்றன என்பது யோக, தாந்திரீக தத்துவங்களின் அடிப்படையாகும். அதாவது எமது அகப்பிரபஞ்சத்தினை மாற்றுவதன் மூலம் எமது புறப்பிரபஞ்சத்தில் நிகழும் நிகழ்வுகளை மாற்றலாம்.

இதுபோல் இந்த நீதிக்கதைகளை வாசித்தோ கேட்டோ தமது அனுபவமாக்கிக் கொள்பவர்களுக்கு அந்த நீதி அவர்களது அகப்பிரபஞ்சத்தின் ஒரு அமிசமாகிறது. இதன் மூலம் அவரின் அகப்பிரபஞ்சம் மாற்றப்படுகிறது. அது வலுப்பெறும் போது எமது புறஉலகில் நடக்கும் நிகழ்வுகளும் மாற்றமடைய ஆரம்பிக்கிறது. இந்த தத்துவமே பிரார்த்தனை, பக்தி, தியானம் என்பவற்றின் அடிப்படை, அவை உண்மையில் எமது அகப்பிரபஞ்சத்தினை மாற்றமடைய வைக்கிறது, அதன் மூலம் படிப்படியாக எமது புறப்பிரபஞ்சத்தில் நிகழ்வுகளை எமக்கு சாதகமாக நிகழவைக்கும் செயல் முறையே இவை.

இந்த அடிப்படையினை வைத்துத்தான் இன்றைய அரசியல், வணிக தந்திரங்கள் கூட நடைபெறுகின்றன. தேவையானவர்கள் சிந்தித்து உய்த்தறிந்துகொள்ளுங்கள்! துரதிஷ்டவசமாக இது சமுகத்தினை சீரழிக்கும் உத்தியாகிவிட்டது என்பதும், மதம், ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்ட வரலாற்றுக்கதைகளும் இதே செயல் முறையில்தான் அடங்குகின்றது என்பதும் ஏற்றுக்கொள்ளவேண்ட ஒன்றாகவே இருக்கிறது.

ஆக நாம் கூற வருவது சனி பகவானின் அருள் பெற, அவரது தோஷங்கள் நீங்க, தீய பலன்கள் குறைய நாம் எமது அகப்பிரபஞ்சத்தில் ஏற்படுத்தியுள்ள தீய எண்ணப் பதிவுகளை குறைப்பது ஒன்றுதான் உண்மையான பரிகார வழி, ஏனெனில் சனிபகவான் கர்மகாரகர், அதாவது எமது அகப்பிரபஞ்சத்தில் பதிவுற்ற எண்ணப்பதிவுகளை இராசிச் சக்கரத்தில் சரியான இடத்திற்கு வரும் போது புறப்பிரபஞ்சத்தில் நிகழ்வாக ஆக்கித்தருவார், யாரும் தப்பமுடியாது, ஆக அகப்பிரபஞ்சத்தில் நல்ல எண்ண உணர்ச்சிப்பதிவுகள் உள்ளவர்கள் நன்மையும், தீய பதிவுகள் உள்ளவர்கள் தீமையும் பலனாக அடைவார்கள். ஆகவே யாரும் சனிபெயர்ச்சி பலன்களை பார்த்துவிட்டு தீயதை நினைத்துக்கொண்டு இருப்பார்களேயானால் அவர்களுக்கு அந்தப்பலனை தவறாமல் வழங்கும் வள்ளல் அவர்.

நாம் மேலே விளக்கிய யோக தந்திரிக அடிப்படையில் சனி பகவானினால் நன்மையினைப் பெறும் வழி அவர் எப்படி நன்மை அளித்தார் என்ற‌ கதைகளை கேட்டறிவதும் ஒன்றாகும். அக்கதைகளை கேட்கும் போது உங்கள் அகப்பிரபஞ்சத்தில் ஏற்படும் மாற்றங்களினால் சனிபகவான் எப்போதும் நமையே செய்யும்  நிலை எமக்கு உண்டாகும்.

அடுத்த பதிவிலிருந்து "சனி மஹத்மியமாக" உங்களுடன் நானும் அந்த சனீஸ்வர பெருமானின் செயல்களை எனது அகப்பிரபஞ்சத்தில் பதியவைக்கும் முயற்சியுடன் உங்களுக்கும் பகிர்ந்தளிக்க உள்ளேன்.

அனைவரும் சனீஸ்வர பெருமானின் அருள் பெற பிரார்த்திபோமாக!

Tuesday, December 20, 2011

சாணக்கிய நீதி

  


  • மனிதன் தனியாக பிறந்தான், தனியாக இறக்கிறான், நல்லதோ கெட்ட கர்மாவினையோ தனியாகவே அனுபவிக்கிறான், இறுதியாக சொர்க்கமோ நரகமோ தனியாகவே செல்கிறான்
  • ஒரு மனிதனது உயர்வு அவனது செய்கையாலேயே தீர்மானிக்கப்படுகிறது, பிறப்பால் அல்ல.
  • ஒரு மனிதன் எப்போதும் அதீத நேர்மையுடன் இருத்தல் கூடாது, நேரான மரங்களே முதலில் வெட்டப்படுகின்றன, அதுபோல் நேர்மையான மனிதனே முதலில் தண்டிக்கப்படுகிறான்.
  • ஒருவேலையினை தொடங்குமுன் மூன்று கேள்விகளை கட்டாயம் உன்னுள் கேள்;
    1. இதை ஏன் நான் செய்கிறேன்?
    2. இதன் விளைவு என்ன?
    3. இதில் தற்போது நான் வெற்றிபெறுவேனா?
    இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகள் அழ்ந்த சிந்தனைக்குபின் திருப்திகரமாகவும் உண்மையாகவும் உன்னுள் பெற்றவின் காரியத்தினை செய்!
  • முட்டாளுக்கு புத்தகம் அறிவைதரும் என்பது குருடனுக்கு கண்ணாடி பார்வைதரும் என்பதைப் போலாகும்.
  • கல்வியே உண்மையான நண்பன், கற்றவன் எங்கும் மதிக்கப்படுகின்றான், கற்றவனின் அழகு இளைமை அழகையும் விட மேலாக காட்டுகிறது.
  • பாம்பு தற்போது விஷமற்றதாக இருக்கலாம், ஆனால் எப்போதாவது விஷத்தினை கக்கும் என்பதில் அவதானமாக இரு!
  • கடவுள் சிலைகளில் இல்லை, உன்னுடைய ஒவ்வொரு உணர்ச்சியும் கடவுளே, அதனை உள்ளிருந்து உருவாக்கும் ஆத்மனே கோயில்,
  • யார் ஒருவன் தன்னுடைய குடும்பத்துடன் அளவுக்கதிகமான பற்றுக்கொள்கிறானோ அவன் எப்போதும் பயமும், அதிக துன்பமுடையவனாக இருக்கிறான், எந்த துன்பத்தினதும் மூலம் பற்று, ஆதலால் இன்பத்துடன் இருக்க அதீத பற்று அறுத்தல் அவசியம்.
  • உன்னுடைய தகுதிக்கு மேற்பட்டவரிடமோ, தாழ்ந்தவரிடமோ நெருங்கிய நட்புவைத்தலால் நீ எப்போதும் சந்தோஷமடையப்போவதில்லை.
  • அறிவுள்ளவனே உன்னிடமுள்ள செல்வத்தினை எப்போதும் பயன்படுத்தக்கூடியவனிடம் கொடு! உப்பான கடலிலிருந்து பெறும் நீரினை மேகங்கள் இனிப்பான நீராகத்தான் தருகின்றன. அதுபோல் உன் செல்வமும் சரியான முறையில் பயன்படுத்தப்படும்!
  • நீ ஏதாவதொரு வேலையினை தொடங்கும் போது அது பிழையாகிவிடும் என்ற பயத்துடனோ , சரியாக வரும் என்ற சந்தேகத்துடனோ தொடங்காதே! நான் உண்மையாக சிரத்தையுடன் செய்கிறேன் வெற்றிபெறும் என்ற எண்ணத்துடன் தொடங்கு!
  • புத்தகத்திலுள்ள அறிவும், மற்றார் கையிலுள்ள செல்வமும் உனக்கு தேவைப்படும் போது பயன்படாது.
  • தெய்வதன்மை அடைய விரும்புபவன் தனது பேச்சில், எண்ணத்தில், செய்கையில் தூய்மையும் இதயத்தில் இரக்கமும் உடையவனாயிருத்தக் வேண்டும்.
  • வேலைக்காரனின் தன்மையை வேலையை விட்டு நீக்கும் போது அறியலாம்,உறவினரின் தன்மையை துன்பத்தில் அறியலாம், நண்பனின் தன்மையை ஆபத்தில் அறியலாம், மனைவியின் தன்மையை துரதிஷ்டத்தில் அறியலாம்.
  • உனது இரகசியங்கள் எவற்றையும் எந்த சந்தர்ப்பத்திலும் யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதே அதுவே உன்னை அழிக்கும்.
  • பூவின் மணம் காற்று வீசும் திசையிலேயே பரவும், ஆனால் நல்லவனின் குணம் எல்லா திசைகளிலும் பரவும்.
  • ஒருவன் இன்பமும் ஆனந்தமும் அடைவது ஆன்மாவினை உணர்தலினால் மட்டுமே, இதுவ‌ல்லாம‌ல் பேராசையுட‌ன் எல்லாவ‌ற்றையும் தேடி ஓடும் ச‌ல‌ன‌முடைய‌ ம‌ன‌தை உடைய‌வ‌ரால் அல்ல!
  • அறிவுள்ள மனிதன் தனது புலனுணர்வுகளையும் அறிவையும் ஒரு கொக்கைப் போல் பயன்படுத்தவேண்டும், அதாவது தனது நோக்கம் குறித்த இடத்தில் நிறைவேறுமா, நேரம் குறித்த காரியத்திற்கு சாத்தியமானதா, அவனது ஆற்றல் அந்த காரியத்தினை செய்ய போதுமானதா என அறிந்து காரியமாற்றல் வேணடும்.
     
  • உலகில் மிக சக்திவாய்ந்தது பெண்ணின் அழகும் இளமையும்!
  • உலகில் சமமான மனநிலையை விட சிறந்த செல்வம் எதுவும் இல்லை, திருப்தியை விட சிறந்த மகிழ்ச்சி எதுவுமில்லை, பேராசையினை விட பெரிய நோயுமில்லை, இரக்கத்தினைவிட சிறந்த குணமுமில்லை!
  • பாம்புக்கு வாயில் விஷம், தேளிற்கு கொடுக்கில் விஷம், தீயமனிதனிற்கு மனம் பூராகவும் விஷம்!
  • எந்த ஒரு நட்பிலும் ஒரு சுய இலாபம் உள்ளது, சுய இலாபம் இல்லாத புனிதமான நட்பு என்று எதுவும் இல்லை, இது ஒரு கசப்பான உண்மை.
  • ஒருவன் கடந்தகாலத்தினை நினைத்து கவலை கொள்வதோ, எதிர்காலத்தினை நினைத்து பயப்படுவதோ கூடாது, நிகழ்காலத்தில் செய்வதை கருத்தூன்றி செய்தலே சரியான வழி!

 

Saturday, December 17, 2011

அஜபா ஜெபம் பற்றி சில கேள்விகள்

ஆதித்த கரிகாலன் என்பவர் அனைவரும் தினசரிசெய்யக் கூடிய எளிய யோகப்பயிற்சி பதிவின் கீழ் இட்ட கேள்விக்கான பதில், பதிலின் விரிவுகருதி தனிப்பதிவாக இடப்படுகிறது. அவரின் ப்ரொபைலில் வேறு விபரங்கள் எதுவும் காணப்படவில்லை.

கேள்வி வருமாறு:

ஐயா,

அஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் "சம்" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் "ஹம்" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் "சோ-ஹம்" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன். முறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. அஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன். இது பற்றி உங்கள் மேலான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

இந்தக் கேள்வியில் மூன்று கூறுகள் காணப்படுவதால் பதிலளிப்பதற்கான  வசதிகருதி மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன

அஜபா ஜபம் என்பது, மூச்சு இழுக்கும் போது வரும் "சம்" என்னும் ஓசையினயும் மூச்சு விடும் பொழுது வரும் "ஹம்" என்னும் ஓசையையும் கவனிப்பது என்று ஒரு தியான புத்தகத்தில் படித்திருக்கிறேன். தவிர, இந்த அறிதலையே அஜபா காயத்ரி என்றும் படித்ததாக ஞாபகம். மேலும்,பிரம்ம யோகத்தில் "சோ-ஹம்" என்னும் தியான முறையும் இதனையே குறிக்கும் என்றும் அறிகிறேன். 

அஜபா என்பதன் பொருள் "மீண்டும் நடைபெறாதது" என்பதாகும், அதாவது ஒருமுறை நடந்தது திரும்பவும் நடைபெறாது எனபதாகும், மூச்சு அஜபா, இரத்தோட்டம் அஜபா, இதயதுடிப்பு அஜபா, நதியின் நீரோட்டம் அஜபா, இப்படி மீளவும் நடைபெறாத விடயங்கள் எல்லாம் அஜபாதான், விழிப்புணர்வினை அடைவதற்கு அந்தக்கணத்தில் நடைபெறும் விடயத்தினை அவதானித்தல் வேண்டும், சம்பிரதாய ரீதியில் மூச்சினை அவதானித்தல் அஜபா என கொள்ளப்பட்டு வருகிறது, நீங்கள் கூறவரும் கருத்து பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றே! விழிப்புணர்வுடன் மீண்டுவராத எந்த ஒன்றையும் அவதானிக்கும் எந்த பயிற்சியினை அஜபா எனலாம் என்பது எமது விளக்கம். உதாரணமாக நதியின் நீரோட்டத்தினை உற்று நோக்கி அவதானிக்கும் பயிற்சி ஜென் தியான முறையில் காணப்படுகிறது, இது கூட ஒரு வித அஜபாதான்.

நாம் அவதானிக்கும் பொழுது மனதாலேயே அவதானிக்கிறோம், மனம் சங்கற்ப விகற்பங்களுக்கு உள்ளாக கூடியதுடன், மற்றைய புலன் வழியும் செல்லக்கூடியது. ஆதலால் ஒலியுடன் தொடர்பு படுத்தும் போது விழிப்புணர்வு இன்னும் அதிகமாகும், ஆதலாம் இயல்பாக நீங்கள் மூச்சினை உள்ளிழுக்கும் போது உருவாகும் ஒலி "ஸோ" என்பதும், வெளிவிடும் போது உருவாகும் ஒலி "ஹம்" என்பதுமாகும். இதனை அவதானிக்கும் செயல் முறையே அஜபா காயத்ரி யாகும்.

மேற்கூறிய நிலையினை அடைவதற்கு உண்மையாக பயிலும் போது படிப்படியான நிலைகள் சிலது உள்ளது, அதாவது நீங்கள் "ஸோ""ஹம்" என உணரும் நிலை இதை பயிலத்தொடங்கியவுடன் வந்துவிடாது, பலர் அஜபா ஜெபம் செய்கிறேன் எனக்கூறி "ஸோ ஹம்" என மனதில் ஜெபித்துவருவார்கள்.

எமது பதிவில் அஜபா ஜெபத்தின் படிமுறைகளை எமது குருநாதர் பயிற்றுவித்த முறைப்படி மிக இலகுவாக்கி வெளியிடுகிறோம், இதனை பயிற்சி செய்யும் போது நீங்கள் எந்த முயற்சியும் இல்லாமலே அடுத்த படியிற்கு செல்வீர்கள். உதாரணமாக மேற்கூறிய பயிற்சியினை செய்ய முயன்றிருந்தால் இயல்பாகவே அடுத்தகட்டமாகிய "ஆழமான தீர்க்க சுவசத்தினை" அடைந்திருப்பீர்கள்.

எமது பதிவுகளை படிக்கும் போது எமது பொருள் கொள்ளல் சற்று பொதுப்பொருளுடன் விலகல் இருப்பதனை நாம் அறிவோம், அதற்கான காரணம் அவை எமது குருபரம்பரையில் பெறப்பட்ட விடயங்கள் என்பதாலாகும். உண்மையினை அறிவதற்கு அகராதி, பொதுப்பொருளினும் மேலாக குழுக்குறி அறிதல் அவசியம் என்பது எமது அனுபவ உண்மையும், கருத்தாகும்.

மற்றைய பதிவுகளை பார்த்தீர்களானால் இதனை புரிந்துகொள்ள இலகுவாக இருக்கும்.

இவற்றையும் பாருங்கள்:
முறையாக பயிற்றுவிக்கும் ஆசிரியரிடம் மட்டுமே இதனை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

இதனை இப்படி இப்படி நான் புரிந்துகொள்ளலாம் என எண்ணுகிறேன், 

புத்தகங்களை, பதிவுகளை பார்த்து இதுபோன்ற பயிற்சிகளை கற்றுக்கொள்ளலாமா? அது சரியான முறையா?

குருவிடம் கற்றுக்கொள்வது முதன் நிலையானது, ஆனால் குருவென்பது மனிதனாக இருக்கவேண்டும் என்பதில்லை, உங்களுக்கு விழிப்புணர்வினை தரும் எதுவும் குருவாகலாம். அஜபா ஜெபத்தில் உண்மையான குரு எமது மூச்சுத்தான். இங்கு உண்மையான பிரச்சனை எமது மனதிற்கு கற்பிக்கப்பட்ட பயம், பழங்காலத்தில் சித்தர்கள் மாணவன் தவறாக வித்தையினை பிரயோகித்து மற்றவர்களை துன்பத்தில் ஆழ்த்திவிட‌க்கக்கூடாது என்பதற்காக வரைமுறையாக வைத்திருந்த குருபக்தியும் இவ்வாறான கருத்துக்களும் இன்று ஒரு வியாபார தந்திரமாகிவிட்டது. தன்னிடம் மட்டும்தான் குறித்த வித்தை உள்ளதாகவும், தான் அதில் தேர்ச்சிபெற்றதாகவும் கூறி தன்னைதேடிவரவைக்கும் தந்திரமும ஆகிவிட்டது. குருதத்துவம் பற்றிய எமது கருத்துக்களை இந்த பதிவில் பார்க்கவும்;

நீங்கள் உண்மையில் இவற்றை பயிலவேண்டுமானால் மனதில் பயத்தினை உதறிவிட்டு பயிற்சிக்க முயற்சிக்கவேண்டும், பயத்தினை உதறிவிட்டு என்றவுடன் எதனையும் எதிர்கொள்வேன் என அசட்டுத்தனமாக இல்லாமல் நிதானத்துடன் அணுகி பயிற்சிக்க முயற்சித்தால் மெதுமெதுவாக வெற்றியடைவீர்கள், யோகம், தாந்திரீகம் என்பன மனதில் பயத்தினை நீக்காமல் கற்றமுடியாது. முயற்சியுடன் பயிற்சியே உண்மையாக அனுபவம் பெறவழி, அல்லது எத்தனை குருமாரிடம் சென்றாலும் எதுவித பயனும் பெற இயலாது.

எமது பதிவுகளில் இந்த விடயங்களினை வெளியிடுவதன் நோக்கம் நாம் அறிந்த விடயம் மற்றயவரும் அறிந்து பயன்பெறவேண்டும் என்ற‌ உள்ளக்கிடக்கையே ஆகும். இவற்றை புரிந்து முயற்சிக்க இயலும் என மனத்துணிவு, மனத்தெளிவு உங்களுக்கு இருக்குமானால் தைரியமாக முயற்சிக்கலாம். இல்லையெனின் வெறும் தகவலாக மட்டுமே படித்துவிட்டு விடவும்.


அஜபா காயத்ரி ஜெபமே முக்தி அளிக்க வல்லது என்றும் படித்தேன்.

முக்தியைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அதுபற்றி எனது நோக்கமும் இல்லை, அஜபா ஜெபம் நல்ல ஆரோக்கியத்தையும் தெளிவான மனதையும் தரும் என்பது அனுபவம். 

இந்த பதிவில் நான் இடுபவை நான் விரும்பிக் கற்ற விடயங்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதே! பயனுள்ளதாக இருந்தால் கற்று பயன்பெற்று, மற்றவருக்கும் தெரிவியுங்கள், இல்லாவிடின் Just Ignore it! :)

தங்களுடைய இந்த பயனுள்ள கேள்விக்கு மிக்க நன்றி!

Friday, December 16, 2011

தியானம் யோக பயிற்சிகளில் தடைகள் வருவதற்கான காரணமும் மீள்வதற்கான வழிமுறையும்

எத்தனைதான் சாமிகள் கும்பிட்டாலும்
ஏற்றமிகு சொற்பொழிவு கேட்டிட்டாலும்
பலகாலம் புத்தகங்கள் படித்திட்டாலும் 
பலகலைகள் பாங்குறவே கற்றிடாலும் 
பரிணாமம் உயரும்வரை ஞானம் தோன்றாதப்பா!
பரந்தாமன் மோஷமது கிட்டிடாதப்பா!
-ஸ்ரீ கண்ணைய யோகீ-

யோகிகளும் சித்தர்களும் மனித வாழ்க்கையின் நோக்கம் தன்னை அறிந்து இறுதி நிலையாகிய பிறவிப் பேரின்பம் பெறுதல் எனக் கூறுகின்றனர். இந்த உபதேசத்தினைக் கேட்பவர்கள் அந்த நிலையினை அடைய வேண்டி யோகசாதனை, தியானம் என தேடி அலைந்து கற்றுக் கொள்கின்றனர். பின்பு சிலகாலம் தியான யோகங்களில் ஈடுபடுகின்றனர், ஒரு சில தடைகள் வந்தவுடன் அவற்றை விட்டு விடுகின்றனர். பின் அதன் மீதான ஆர்வம் குறைந்து விடுகிறது. பின்பு தமக்கு அவை சரிவரவில்லை என மனம் வேதனைப்படுகின்றனர்அல்லது கற்றுத்தந்த குருவின் முறை பிழை என குறை கூறுகின்றனர்

இன்னொரு சாரார் யோக நூற்களை கற்று தேர்ச்சி பெறவேண்டும் என முயற்சித்து பெரும் குழப்பத்தில் ஆழ்கின்றனர்

பலரிற்கு பலகாலம் உண்மையான முயற்சியுடன் தியானம் செய்தும் எதுவித பலனும் இல்லை

அவர்கள் கூறும் காரணங்களில் ஓரளவு உண்மை இருப்பினும் இன்னொரு பக்கத்தில் பயிற்சியே இல்லாமல் உயர்ந்த நிலை அடைந்தவர்கள் பலர் உள்ளனர்.

சிலரிற்கு ஒருவார்த்தை கூறியவுடன் யோகத்தினைப்பற்றி விளங்குகிறது, சிலரிற்கு எவ்வளவு எடுத்துக்கூறியும் விளங்குவதில்லை! என்ன காரணம்?

இன்று பல்லாயிரக்கணக்கான யோக பயிற்சி நிலையங்கள், பயிற்சி முறைகள் என பல வழிகள் இருந்தும் அனைவரது பிரச்சனையும் ஒன்றுதான், எவ்வளவுதான் முயற்சித்தும் பலன் கிட்டவில்லை எனபதுதான்.

பட்டினத்தாரிற்கு  "காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே" என்ற ஒரு வார்த்தை ஞானத்தை தந்தது.

நாத்திகராக கடவுள் உண்டா இல்லையா என வாதம் செய்த விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்சரை கண்டவுடன் ஞானத்தினைப் பெற்றார். ஆனால் பல ஆண்டுகள் தியானம் செய்தும் அந்த ஞானத்தினை பலரால் பெறமுடியவில்லையே என்ன காரணம்?

காமுகனான அருணகிரிநாதர் வைராக்கியத்துடன் முருகனை நினைத்தவுடன் ஞானம் பெற்றார்.

இந்த வேற்றுமைக்கு காரணம் என்ன?

பரிணாம உயர்வு, பரிணாமம் என்றவுடன் சாள்ஸ் டார்வினின் கூர்ப்பு கொள்கைனை எண்ணுபவர்கள் பலர் உள்ளனர். அது பௌதிக பரிணாமம். இங்கு நாம் கூற வருவது அகப் பரிணாமம். மனிதரது ஸ்துல வடிவம் இருப்பதைப்போல் சூஷ்ம உடல் உண்டென்பதனை சித்த வித்தை, யோக வித்தை பயில விரும்புபவர்கள் அறிவர்.

 சித்தர்களது கூற்றுப்படி சூஷ்ம உடலும் ஸ்துல உடலும் 96  தத்துவங்களினால் ஆனதுஉண்மையான மனிதனது அமைப்பு       சூஷ்மத்திலேயே தங்கியுள்ளது
இந்த சூஷ்மத்தின் வடிவமே   மனிதனது ஸ்துலத்தினை ஆக்குகின்றது என்பதனை சித்தர்கள் தெளிவாக அறிந்திருந்தனர். அதனால் தான் நோய் நிதானிப்பதற்கு நாடியை மூலமாக கொண்டிருந்தனர்இன்றைய மேற்கத்தைய வைத்திய முறையில் உள்ளதைப் போல் பல கருவிகள் கண்டுபிடிக்க முனையவில்லை

எந்த செயலும்எண்ணமும்  ஸ்தூல நிலைக்கு வரமுதல் சூஷ்ம நிலையிலேயே செயல் கொள்ள ஆரம்பிக்கும்இவற்றை அறிவதே  உண்மையான சித்த மருத்துவத்தின் பண்புகள். இவை பற்றி விளக்கமாக வேறு ஒரு பதிலில் பார்ப்போம்இங்கு நாம் எடுத்துக்கொண்ட விடயத்தினை மட்டும் ஆராய்வோம்.

ஒருவருடைய அகப் பரிணாமம் அவருடைய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்களில் தங்கியுள்ளதுஇந்த அந்தக்கரணங்கள் பிராண சக்தியின் மூலமே இயங்குகின்றதுபிராணன் அதிர்வு (freequency) அளவு (quantity) ஆகிய இரு காரணிகளினால் அந்தக்கரணங்களை ஆளுகின்றது. பிராணனின் அளவு அதிகமாக அல்லது குறையும் பொது அது ஸ்துலத்தில் செயல் கொள்ளும் நிலை அதிகமாகிறது அல்லது குறைகிறதுஉதாரணமாக நாம் நினைக்கும்  எண்ணத்தினை உதாரணமாக கொண்டால் அது செயல் நிலை கொள்ள பிராணனின் அளவும் மற்றைய காரணிகளும் (சூழல், எதிர் காரணிகள், கர்மா) முக்கியமானவைஅதுபோல் நோய், ஆரோக்கியம் என்பது ஒருவருடைய பிரானனுடைய அளவு தொடர்புடையது.

அதுபோல் ஒருவருடைய பரிணாமம் பிரானனுடைய அதிர்வு (frequency) இனை சார்ந்தது. அந்தக்கரணங்களில் எத்தகைய அதிர்வில் உள்ளதைப் பொறுத்து அவருடைய நிலை வேறுபடும்இந்த பிரானனுடைய அதிர்வினைப் பொறுத்து ஒருவருடைய ஆன்மிக, அக நிலை வேறுபடுகிறது.

இதனை இயற்பியலின் அலைவேக சமன்பாட்டின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்,

V= fλ
V = வேகம் = ஒரு செயல் மனதில் எண்ணமாக தோன்றி செயல் பெறுவதற்கான அளவு என கொள்ளலாம்.
f  = அதிர்வு (freequency) = மனதில் பிராணன் இன்  அதிர்வு
λ = அலை நீளம் = எண்ணத்தினை மனதில் ஒருமைப்படுத்தக்கூடிய அளவு அல்லது ஒருமைப்படுத்தலின் அளவு (concentration power)

இங்கு அதிர்வுதான் தனித்தன்மையுடையதுபொதுவாக ஒளியின் அதிர்வின் அளவைப் பொறுத்தே அதனை பகுப்பதை போல் (x ray, Gamma, UV, IR, visible) சூஷ்ம உடலின் பிராண அதிர்வினைக் கொண்டே அவனது அக பரிணாமம் தீர்மானிக்கப்படுகிறது.  athaavathu அந்தக் கரணங்களான மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியவற்றின் பிராண அதிர்வின் தன்மையே ஒருவருடைய அக பரிணாமத்தினை தீர்மானிக்கும். ஒவ்வொரு செயலினை செய்வதற்கும் மனம், புத்தி, சித்தம், அகங்காரத்தில் குறித்த பிராண அதிர்வு ஏற்பட வேண்டும்இது தெய்வ சாதனை, யோக சாதனை செய்வதற்கும் பொருந்தும்.

இந்த குறித்த பிராண அதிர்வினை அந்த அதிர்வுடைய நபரிடமிருந்து பெறுவதுதான் தீட்சை எனப்படும் சடங்கின் உண்மை தத்துவம் .

உயர் பிராண அதிர்வுகளை சேமித்து வைத்து வருபவர்களுக்கு அளிக்கும் சேமிப்பகம் தான் கோயில்களும், ஜீவ சமாதிகளும்.

இந்த பிராண அதிர்வின் தன்மையை வைத்துத்தான் சித்தர்கள் பரிபாஷையிலும், பழைய யோக தத்துவ நூற்கள் சூத்திரமாகவும் படிவைத்தனர். இவற்றை படித்தவர்களுக்கு தெரியும் ஒரு பாடலிற்கு பல பொருள் விளங்கும். இவை அவரவர்களது பிராண அதிர்வின் தன்மையினைப் பொறுத்து அவர்களுடைய மனம், புத்தி, சித்த அகங்காரங்கள் பொருளினை விளக்கும். அந்த சித்தருடைய பிராண அதிர்விற்கு சரியாக தன்னை ஒத்திசைக்க வல்லவரிற்கு அதனுடைய உண்மை பொருள் விளங்கும்.

இனி எமது கேள்விகளுக்கான பதில்களிற்கு வருவோம். யோக சாதனை, தியானம் செய்யத்தொடங்கி தடங்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம்? தொடங்கும் பொது உள்ள பிராண அதிர்வின் நிலையினை இழப்பதுதான் அவ்வாறு ஏற்படுவதற்கு காரணமாகும்.

இதனை தடுக்க என்ன வழி?

சித்தர்களின் இரகசிய சாதனைகளில் பரிணாமத்தினை துரிதப்படுத்துவதற்கான சாதனைகள் சில உள்ளன. இலகுவான முறை பிரார்த்தனை, உயர் பிராண அதிர்வுடன் எமது மனதினை ஒத்திசைய வைப்பதன் முலம் எமது பிராண அதிர்வினை உயர்த்திக் கொள்வதே உண்மையான பிரார்த்தனையின் செயல் முறை இரகசியமாகும்.

இதைத்தவிர சித்தர்களது முறையில் சில பிரத்தியேகமான பிராணாயாம முறைகள், தியான பயிற்சிகள்மூலிகைகள்  என வேறு முறைகளும் காணப்படுகின்றன.

இந்த பதிவின் நோக்கம் பிராணனின் அதிர்வு நிலை எப்படி ஒருவருடைய அகபரிணாமத்தினை பாதிக்கின்றது என்பதனை தெரிந்து கொள்வதேயாகும்.

இந்த தகவல் உண்மைத் தேடல் உள்ள யாருக்காவது பயன் படும் என எண்ணுகிறோம்.  


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...