குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, November 18, 2019

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 01

Image result for SHambala

வைகாசிப்பௌர்ணமி என்பது எமது குருபரம்பரைக்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வு. இப்படியான ஒரு பௌர்ணமியில்தான் எனக்கும் எனது தாயாருக்கும் குருநாதர் தீக்ஷை தந்தார். 

வைகாசிப் பௌர்ணமியின் சிறப்பு என்னவென்பது பற்றி குருநாதர் தெளிவாகக் கூறியிருந்தார். 

மனிதகுலத்தில் உதித்து ஒளிசரீரம் பெற்ற மகரிஷிகள் பூலோகத்தின் ஹிமாலயத்தின் மிக உட்பகுதியில் அதீத தவ ஆற்றலால் சாதாரண மக்கள் நெருங்கமுடியாதபடி உலகின் பரிணாமம் இறைவனை நோக்கி தெய்வகுணத்துடன் நெருங்குவதற்கு தேவையான சக்தியை, அறிவினை, ஞானத்தினை பூவுலகிற்கு கொடுப்பதற்காக நீண்ட தபஸில் இருந்துகொண்டு, காலத்திற்கு காலம் தகுந்த பக்குவம் பெற்ற மனித உடலில் இருக்கும் ஆன்மாக்களை தேர்ந்தெடுத்து உலகின் பரிணாமத்தை உயர்விக்க தகுந்த சாதனை செய்விக்கிறார்கள், அல்லது சிலரிற்கு தமது சக்தியைக் கொடுத்து அவர்கள் உணர்வினை மேம்படுத்தி பலரையும் அந்த அருள் வட்டத்திற்குள் கோண்டுவந்து உணர்வினை மேம்படுத்தச் செய்கிறார்கள். இப்படி பாரதத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் செயல்கொள்கிறார்கள். 

இதில் தென் நாட்டின் ஆன்ம பரிணாமத்தைத் தீர்மானிக்கும் தலைமை ரிஷி ஸ்ரீ அகத்திய மாமகரிஷியாவார். நீலகிரிமலைச் சாரலில் உள்ள அவரின் சூக்ஷ்ம ஆஸ்ரமத்தில் தகுந்த ஆன்மாக்கள் ஆன்ம பரிணாமத்திற்காக (evolution of consciousnesses) பயிற்றுவிக்கப்படுகிறார்கள். எமது குருபரம்பரை அகத்தியமகரிஷியிடமிருந்து வழிகாட்டல் பெற்று வருகிறது.  வைகாசிப் பௌர்ணமி தினத்தில் அனைத்து ரிஷிகளும் இந்த ஸம்பளா என்ற இடத்தில் கூடி தங்கள் ஆற்றல்களை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றி முடிவெடுக்கிறார்கள். இதனைப் பற்றி குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் மகரிஷிகளின் மர்ம வாசம் என்ற கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள். 

இப்படி மனிதகுலத்தின் உணர்வினை (consciousnesses) உயர் நிலைக்கு கொண்டு செல்வதற்கு மகரிஷிகள் காலம் காலமாக பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். 

பூமியைச் சூழ ஆகாச தத்துவத்தில் மனிதகுலம் தோன்றியது முதல் உருவாகிய எண்ணங்கள் அனைத்தும் அழியாமல் சேமிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் தீய எண்ணப்பிரபாவங்கள், நல்ல எண்ணப்பிரபாவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் தீய எண்ணப்பிரபாவங்களின் அளவு சிறிதாக இருந்தாலும் அவை வீரியமிக்கதாகவே இருக்கிறது. இதுவரை உலகில் நடைபெற்ற போர்களும், ஓலங்களும், துன்பங்களும், வன்முறைகளும் இங்கு பதியப்பட்டு அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இப்படி ஏற்படுத்தப்பட்ட எண்ணங்கள் எதுவும் ஆகாசத்தில் இருக்கும் பதிவுகள் எதையும் அழிக்க முடியாது.  நல்ல எண்ண அதிர்வுகளால் சமப்படுத்த மாத்திரமே முடியும். இதைச் சாதிப்பதற்கு மனிதகுலத்தினால் மாத்திரமே முடியும் என்பதால் மனிதகுலத்தின் உணர்வினை தெய்வ குணத்திற்கு உயர்த்தி இந்த தீய எண்ண அதிர்வினை சமப்படுத்த முடியும். இப்படி சமப்படுத்துவதற்குரிய நல்ல அதிர்வினை ஏற்படுத்த பூமியில் வாழும் மனிதர்களின் உணர்வு தெய்வ உணர்வாக (Divine consciousnesses) இருப்பதற்காக காலம் காலமாக ஸம்பளாவில் இருக்கும் மகரிஷிகள் செயல்கொண்டு வருகிறார்கள். 

பூலோகத்தின் மனிதனின் உணர்வினை மேம்படுத்தும் அந்த ஒளி ஸம்பளாவில் உள்ள மகரிஷிகளின் வழி மனித குலத்திற்கு கொடுக்கப்பட்டு வருகிறது. 

திபேத்திய மொழியில் ஸம்பளா எனவும் பாரத புராணங்களில் ஸித்தாஸ்ரமம் என்றும் சீன மொழியில் ஷங்ரிலா எனவும் அழைக்கப்படுகிறது. 

எமது சித்த வித்யா குருமண்டல  நாமாவளியில் துதிக்கும் குருமார்கள் அனைவரும் இந்த ஸம்பளா எனும் ஒளி மண்டலத்தைச் சார்ந்தவர்களே. 


தலைப்பு இல்லை

எதைக் கூறினாலும் அவநம்பிக்கையும், வெறுப்பும், விரக்தியும் உமிழ்பவர்களுக்கு எதுவும் திருப்தி தராது. எப்போதும் எமக்கு தீமை தான் நடக்கும் என்று நம்பிக் கொண்டிருக்க அது நடப்பதற்கு ஏற்ற வகையில் மிக நுண்மையாகச் செயலைச் செய்து கொண்டிருப்போம். 
பலமுள்ளது உலகை இயக்குகிறது. நாம் பலமுள்ளவர்களாக வேண்டும் என்றால்; 
பலத்துடன் சார்ந்து பலத்தைப் பெறுவது ஒரு வழி
அல்லது பலத்தை எதிர்த்து பலத்தைக் கைப்பற்றுவது இன்னொரு வழி! 
இரண்டையும் செய்யாமல் இருப்பவன் பலகீனன், பலகீனனின் இயல்பு எதையும் பார்த்துப் புலம்புவது! அவ நம்பிக்கையை தன்னிலும் மற்றவர்களிலும் விதைப்பது! எனது துன்பத்திற்கெல்லாம் மற்றவன் தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது! 
ஆகவே பழங்கதைகளை வைத்துக் கொண்டு வெறுமனே எதிர்காலம் இருட்டாகி விடும் என்று அவநம்பிக்கையுடன் புலம்புவதை விட்டு பொருளாதாரத்தில், அரச நிர்வாகத்தில், அரசியலில், சமூக நல்லிணக்கத்தில், அபிவிருத்தியில் எப்படி பலம் பெறுவது என்று மாத்திரம் சிந்திப்போம், செயற்படுவோம்!

தலைப்பு இல்லை

ஸ்ரீ லங்காவின் தெரிவு செய்யப்பட்ட ஏழாவது ஜனாதிபதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்! 
சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்று பிளவுபட்டுள்ள மனங்களை ஒன்றிணைத்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒற்றுமையையும், அனைவரும் சிறந்த எதிர்காலத்துடன் சுபீட்சமாக வாழ நிர்வகிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்!

Sunday, November 17, 2019

தலைப்பு இல்லை

நாட்டின் ஜனாதிபதி தேர்வாகிக் கொண்டிருக்கிறார். 

பலர் முக நூலில் பய அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். 

பயத்தில் இருப்பவன் எப்போதும் தவறு தான் செய்வான், பயம் வெளிச் சூழல்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள உடல் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு! அதை வீணாக நாமாக கற்பனை செய்து ஏற்படுத்திக் கொண்டு உடலையும் சமூகத்தையும் கெடுக்க கூடாது. 

எல்லா முடிவுகளும் இறுதியில் ஏதோ ஒரு நன்மையைத் தான் தரப்போகிறது. 

ஆகவெ லாவோட்ஸு சொல்லும் அறிவுரையைக் கேட்போம்:

உங்கள் உணர்வை, செயலை முழுமையாக வெளிப்படுத்துங்கள், அதன் பின்னர் அமைதியாகுங்கள்! இயற்கையின் சக்தியைப் போல்! காற்று வீசும் போது காற்றாகவே இருக்கிறது; மழை பெய்யும் போது மழையாக மட்டுமே இருக்கிறது; மேகம் செல்லும் போது அதன் இடைவெளியில் சூரியன் ஒளிர்கிறது; தாவோவிற்கு முழுமையாகத் திறந்திருந்தால் நீங்கள் அந்தத் தாவோ ஆவீர்கள்; நீங்கள் அந்த சந்தர்ப்பத்தை முழுமையாக அனுபவிப்பீர்கள்; அந்தப் புரிதலுக்கு உங்களை முழுமையாக திறந்து வைப்பீர்களாக இருந்தால் அதை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்; அப்படிப் புரிந்து கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தை உங்களுக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் இழந்திருந்தால் அந்த இழப்பினை ஏற்றுக்கொண்டு உங்களை அந்த இழப்பிற்கு திறந்து கொள்ளுங்கள், அந்த இழப்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள். தாவோவிற்கு உங்களைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களை சூழ நடக்கும் இயற்கையின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள்; அனைத்தும் சரியாக நடக்கும். 

So, Be like the forces of nature


தலைப்பு இல்லை

ஜனநாயக தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று கூறுவது அறமற்ற செயல்! மனித மனதிற்குள் ஒளிந்திருக்கும் குள்ள நரித்தனத்தின் வெளிப்பாடு! வெற்றி பெறுவதற்கு இது விளையாட்டு இல்லை! 
அதிகமான மக்கள் ஒருவர் நாட்டின் நிர்வாகத்தினை செய்வதற்கு தகுதியானவர் என்று நினைக்கிறார்கள், அவர் தெரிவு செய்யப்படுகிறார் என்பதே இதன் அர்த்தம். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர் தன்னைத் தெரிவு செய்யாதவர்கள் ஏன் தன்னைத் தெரிவு செய்யவில்லை என்ற காரணத்தைப் புரிந்து கொண்டு அனைத்து மக்களுக்குமாக செயலாற்றி நாட்டினை அபிவிருத்தி செய்ய வேண்டும். இதைச் சிறப்பாகச் செய்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்கும். 
ஆகவே தேர்தலில் எவராவது வெற்றி பெற்றுவிட்டதாக கூச்சலிட்டால் அவர்கள் மக்களுக்குரிய தலைவர்களில்லை என்பதே அர்த்தம்! 
ஆகவே அறிவும் பண்பும் முதிர்ச்சியும் உள்ள சமூமாக நல்ல மனித குலத்தினை கட்டியெழுப்பப் பாடுபடுவோம்!

Saturday, November 16, 2019

தலைப்பு இல்லை

இன்றைய நாள் அடுத்து ஐந்து வருடங்களுக்கு நாட்டின் நிர்வாகம் எந்தத் திசையில் செல்லப் போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போகிறது! அந்த ஐந்து வருட நிர்வாகம் எத்தனை வருடம் நாடு பின்னோக்கிச் செல்லப் போகிறது என்பதையும் தீர்மானிக்கும்! 

ஒருவரின் தெரிவு தனிப்பட எந்த மாற்றத்தையும் தராது! ஆனால் பலரின் தெரிவு ஒன்றாக இருக்கும் போது விளைவு பலமானதாக இருக்கும்! தனிமரம் தோப்பாகாது! ஆனால் பலமரங்கள் சேர்ந்து தோப்பாகும்! 

ஆகவே எமது தனிப்பட்ட தெரிவு ஒட்டுமொத்த தெரிவிற்கு பங்களித்தாலும் மொத்த சமூகத்தின் பெரும்பான்மை விருப்பத் தெரிவே எமது நாட்டின் தலைமைத்துவத்தை, எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. 

நடக்கப்போவதை அனுமானிக்க இயலாது! இது நடந்துவிடுமோ அது நடந்துவிடுமோ என்று பயப்படவும் முடியாது, எமது தேர்விற்கு நாமே பொறுப்பாளிகள்! எம்மால் செய்யக் கூடியது எமது விருப்பத் தேர்வினை சரியாகத் தெரிவிப்பது மாத்திரமே! 

ஆகவே எமது சமூகக் கடமையைச் செய்வோம்! பலனை வரும் ஐந்து வருடங்களுக்கு அனுபவிப்போம்!    


Friday, November 15, 2019

பழங்காலமும் நிகழ்காலமும்

எல்லாவித பழைய ஞாபகங்களும் அனுபவத்திற்காவும், அனுபவத்தினால் வரும் அறிவும், அறிவு சேர்ந்து வரும் ஞானத்திற்காகவுமேயன்றி மனதில் எழுந்தமானமாக விருத்தியாகி எமது ஏகாக்கிரத்தையும் (Concentration) நிகழ்கால வாழ்க்கையையும் குழப்பக் கூடாது. 

மனித மனம் எப்போதும் பழையதைச் சிந்தித்து அதில் போலிப் பெருமை கொள்ளவோ, அல்லது முன்னர் நிகழ்ந்த துன்பம் தனக்கு மீண்டும் நிகழ்ந்து விடும் என்று அஞ்சவோ செய்யும். 

ஏதாவது தவறு எமது வாழ்வில் நடந்து விடும் போது அதை எண்ணி மீண்டும் அந்தத் தவறு நடந்துவிடும் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் போது நாம் அந்த எண்ணங்களுக்கு உயிர்கொடுக்கிறோம். 

எண்ணமும் உயிர்சக்தியான பிராணனும் இரட்டைகள், எதை நாம் எண்ணுகிறோமோ அதற்கு நாம் உயிர்கொடுக்கிறோம். 

பழையவற்றை எண்ணும் போது அவற்றிற்கு எப்போதும் உயிர்கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். நாம் பழைய வாழ்க்கையை நினைத்துத் துன்பப்படும் போது மீண்டும் அந்தத் துன்பகரமான வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதே அர்த்தம். 

பழைய நினைவுகள் எமது உணர்ச்சிகளைத் தாக்காமல் சாட்சி பாவமாக பார்க்கும் மனதினை பயிற்சியால் பெறவேண்டும். 

ஆகவே பழைய எண்ணங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களுக்கு சரியான கவனத்தை செலுத்த எமது வாழ்வு சிறக்கும்.


Wednesday, November 13, 2019

குரு தெய்வமா?


இப்போது ஆன்மீகத்தில் இருக்கும் பெரிய அறியாமை தமது குருவை உலகத்திற்கு குருவாகவும், அனைவருக்கும் கடவுளாகவும் பிரகடனப்படுத்தி தமது குருவையும் அவமதித்து, சித்தர்கள், ரிஷிகளின் பாரம்பரியத்தையும் அவமதிக்கும் செயலைச் செய்வது.

குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் உரிய தனிப்பட்ட தெய்வம் - Personalized God! எவரிடம் எமது மனம் அடங்கி, அகவிழிப்பு ஏற்படுகிறதோ அவரை நாம் குருவாக ஏற்கலாம்.

எமக்கு ஏற்படும் இந்த அனுபவம் மற்றவர்கள் எல்லோருக்கும் ஏற்படமுடியாது. ஆகவே குரு என்பவர் Marketing effort இன் மூலம் குருவாக முடியாது. எமது அக அனுபவத்தின் மூலமே குருவை நாம் அறிய முடியும்.

இப்படி எமக்கு அகவிழிப்பு அனுபவம் வாய்த்தால் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று மற்றவர்களுக்குப் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால் மற்றவர்களுக்கு எமது குரு மூலம் அகவிழிப்பு ஏற்படுமா என்பதை உறுதி செய்ய முடியாது. சூரியன் ஒளியை எங்கும் பரப்பினாலும் மண்ணிற்கு கீழ் இருக்கும் மண்புழுவிற்கு சூரியன் ஒவ்வாதது போல் குரு ஞானியாக இருந்தாலும் அறியாமையில் மூழ்கி இருக்கும் ஒருவனுக்கு ஞானியால் பலன் எதுவும் கிடைப்பதில்லை.

இன்று பலருக்கு தமது வியாபாரப் பிரச்சனை, உடல் நோய், மன அழுத்தம், வீட்டுப்பிரச்சனை, கடன் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பவரே குரு என்ற பிம்பம் ஏற்பட்டுவிட்டதால் பலருக்கு இந்தப்பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் உள்ளவர்களே குருவாகிப் போய்விட்டார்கள்.

அகவிழிப்பு வேண்டும் சாதகன் தனது குரு தனக்கு மட்டுமே உரித்தான இஷ்ட தெய்வம் என்ற உண்மை உணர்ந்து தனது சாதனையைத் தொடரவேண்டுமே அன்றி குருவின் புகழ் பரப்புகீறேன் என்று குருவைப் பற்றிய தேவையற்ற வதந்திகளை, அற்புத ஆற்றல் உள்ளவர் போன்ற நம்பிகைகளை மற்றவர்களுக்கு விதைக்கக் கூடாது. இது சாதகனின் ஆன்ம முன்னேற்றத்தையும், மற்றவரகளது மனதில் குழப்பத்தையும் ஏற்படுத்தும்.

காயத்ரி சாதனையும் புத்துணர்ச்சியும்

காயத்ரி சாதனை என்பது பிராண சாதனை. மூச்சை அடக்கி பிராணாயாமம் எதுவும் செய்யத்தேவையில்லை. சீரான நீண்டகால காயத்ரி சாதனையில் மனச் சலனம் அடங்குவதால் பிராண சேமிப்பு உண்டாகும். சரியான ஒழுக்கத்துடன், மன அடக்கத்துடன் காயத்ரி சாதனை செய்பவர்கள் உடலிலுள்ள நோய்கள் குறைந்து குணமாகும்.
ஆரோக்கியமானவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். பலர் காயத்ரி சாதனயால் வரும் புதுச்சக்தியை தம்மில் சேமிக்காமல் அதிகமான உடலுழைப்பு, பணம் சேர்த்தல் போன்றவற்றிற்கு செலவழித்து தமது சக்தியை இழந்து விடுவார்கள்.
கடன்வாங்கி வியாபரம் செய்த ஒருவன் காயத்ரி சாதனையால் தனது கடன் தீர்ந்தவுடன் தனது கர்மா தீர்ந்தது என்று ஞானத்துடன் அதற்குப் பிறகு கடனே வாங்கக்கூடாது என்று எண்ணம் கொண்டு தனக்கு அமைந்த வியாபாரத்தை சிறப்பாகச் செய்ய சிறந்து முன்னேறுவான். அப்படியில்லாமல் எம்மிடம்தானே காயத்ரி சாதனை இருக்கிறது, இன்னும் பல இலட்சம் கடன்வாங்கி வியாபாரத்தை விஸ்தரித்தால் சாதனை காப்பாற்றும் என்று பேராசைப் பட்டு செய்யப்போனால் பிரபஞ்ச ஞானசக்தி அவனுக்குத் துன்பத்தைக் கொடுத்து ஞானத்தை விழிப்பிக்கும். இந்தப்பாதை மிகக் கடினமானது. ஆகவே புத்தியுள்ள சாதகர்கள் தமது சாதனையில் வரும் சக்தியை அதிகமாக வீணாக்காமல் தம்மை பண்பிலும், குணமாற்றத்திலும் தெய்வ் உருப் பெற பயன்படுத்த வேண்டும்.
இதைப்போல் காயத்ரி சாதனை செய்யும் பிராண பலம் உள்ளவர்கள் இரவில் நித்திரை முழித்தாலும் அடுத்த நாள் உற்சாகமாக செயலாற்றும் வல்லமை இருக்கும். இப்படி இருப்பது ஒரு தற்காலிக நிலையே. ஸ்தூல உடல் இயற்கைக்கு கட்டுப்பட்டது. அது இரவில் ஓய்வெடுப்பதற்கும் படைக்கப்பட்டுள்ளது. ஒழுங்காகத் தூங்காமல் அதிக பிராணசக்தியால் உடலை களைப்படையச் செய்யாமல் வைத்திருந்தால் உடல் வலுவிழப்பது உணர்விற்குத் தெரியாமல் உடல் பாதிப்படைய ஆரம்பிக்கும்.
ஆகவே சாதகர்கள் தமது சாதனையால் அதிக பிராண சக்தி பெற்றாலும் அதை இயற்கைக்கு எதிரான வழியில் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.

கிருஷ்ணனும் காயாக் கோட்பாடும்

காயாக் கோட்பாடு கூறுவது பூமியின் சமனிலை மாறுபடும் போது அது தன்னை எப்போதும் ஒரு சீர்திட நிலையில் வைத்துக் கொள்கிறது என்பது. 
சம நிலையை குலைக்கும் செயல்களை எதிர்மறை பின்னூட்டம் (Negative feedback) என்றும் சரிப்படுத்தும் செயலை நேர்மறை பின்னூட்டம் (Positive feedback) என்றும் குறிப்பிடுகிறார். 
இதனை இந்த கோட்பாட்டினைக் கூறிய விஞ்ஞானி கடந்த 4.5 பில்லியன் ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்பமாற்ற அளவின் மூலம் உய்த்தறிந்துள்ளார். 
இப்படி பூமி தனது எதிர்மறை பின்னூட்டங்களை சமப்படுத்தி பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் செயலையே Gaia என்று குறிப்படுகிறார். 
Gaia defined as a complex entity involving the earth's biosphere, atmosphere, oceans, and soil; the totality constituting a feedback or cybernetic system which seeks an optimal physical and chemical condition of life on this planet.
இனி சுவாரசியம் என்னவென்றால் கிருஷ்ணன் பகவத் கீதையிலும் இப்படி ஒன்றினைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 
தர்மம் என்பது ஒழுங்கு, சம்ஸ்க்ருதத்தின் அதன் சரியான பொருள் அச்சில் சுழலுவதற்கு பிணைக்கும் அச்சாணி அல்லது செயல் என்று பொருள். அதாவது positive feedback என்று பொருள். அதர்மம் என்றால் ஒழுங்கைக் குலைக்கும் செயல் என்று பொருள். அதாவது negative feedback என்று பொருள். 
இனி கீதையில் கிருஷ்ணன் கூறுவதைப் பார்ப்போம். 
யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
எப்பொழுதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் சீர்குலைவு ஏற்பட்டு அதர்மத்தின் ஆதிக்கம் ஏற்படுகிறதோ, அச்சமயத்தில் நான் சுயமாகத் தோன்றுகிறேன். Gaia will establish the homeostasis. 
பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே
நல்லவற்றைக் காப்பாற்றவும், துஷ்டர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் நான் யுகம் தோறும் தோன்றுகிறேன். 
ஆக ஒழுங்கு கெடும் போது இயற்கை தன்னைத் தானே ஒழுங்குபடுத்தி சம நிலைப்படுத்த எப்போதும் ஏதாவது ஒரு வழிமுறையினை வைத்திருக்கிறது என்பதே இதன் அடிப்படை! 
ஆக இயற்கை தன் கடமையைச் செய்யும்!

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...