
குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Monday, November 18, 2019
ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 01

தலைப்பு இல்லை
தலைப்பு இல்லை
Sunday, November 17, 2019
தலைப்பு இல்லை
நாட்டின் ஜனாதிபதி தேர்வாகிக் கொண்டிருக்கிறார்.
பலர் முக நூலில் பய அலைகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
பயத்தில் இருப்பவன் எப்போதும் தவறு தான் செய்வான், பயம் வெளிச் சூழல்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ள உடல் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஏற்பாடு! அதை வீணாக நாமாக கற்பனை செய்து ஏற்படுத்திக் கொண்டு உடலையும் சமூகத்தையும் கெடுக்க கூடாது.
எல்லா முடிவுகளும் இறுதியில் ஏதோ ஒரு நன்மையைத் தான் தரப்போகிறது.
ஆகவெ லாவோட்ஸு சொல்லும் அறிவுரையைக் கேட்போம்:
உங்கள் உணர்வை, செயலை முழுமையாக வெளிப்படுத்துங்கள், அதன் பின்னர் அமைதியாகுங்கள்! இயற்கையின் சக்தியைப் போல்! காற்று வீசும் போது காற்றாகவே இருக்கிறது; மழை பெய்யும் போது மழையாக மட்டுமே இருக்கிறது; மேகம் செல்லும் போது அதன் இடைவெளியில் சூரியன் ஒளிர்கிறது; தாவோவிற்கு முழுமையாகத் திறந்திருந்தால் நீங்கள் அந்தத் தாவோ ஆவீர்கள்; நீங்கள் அந்த சந்தர்ப்பத்தை முழுமையாக அனுபவிப்பீர்கள்; அந்தப் புரிதலுக்கு உங்களை முழுமையாக திறந்து வைப்பீர்களாக இருந்தால் அதை முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள்; அப்படிப் புரிந்து கொண்டால் அந்தச் சந்தர்ப்பத்தை உங்களுக்காக முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். நீங்கள் இழந்திருந்தால் அந்த இழப்பினை ஏற்றுக்கொண்டு உங்களை அந்த இழப்பிற்கு திறந்து கொள்ளுங்கள், அந்த இழப்பைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்வீர்கள். தாவோவிற்கு உங்களைத் திறந்து கொள்ளுங்கள். அதன் பின்னர் உங்களை சூழ நடக்கும் இயற்கையின் செயலை ஏற்றுக் கொள்ளுங்கள்; அனைத்தும் சரியாக நடக்கும்.
So, Be like the forces
of nature
தலைப்பு இல்லை
Saturday, November 16, 2019
தலைப்பு இல்லை
இன்றைய நாள் அடுத்து ஐந்து வருடங்களுக்கு நாட்டின் நிர்வாகம் எந்தத் திசையில் செல்லப் போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போகிறது! அந்த ஐந்து வருட நிர்வாகம் எத்தனை வருடம் நாடு பின்னோக்கிச் செல்லப் போகிறது என்பதையும் தீர்மானிக்கும்!
ஒருவரின் தெரிவு தனிப்பட எந்த மாற்றத்தையும் தராது! ஆனால் பலரின் தெரிவு ஒன்றாக இருக்கும் போது விளைவு பலமானதாக இருக்கும்! தனிமரம் தோப்பாகாது! ஆனால் பலமரங்கள் சேர்ந்து தோப்பாகும்!
ஆகவே எமது தனிப்பட்ட தெரிவு ஒட்டுமொத்த தெரிவிற்கு பங்களித்தாலும் மொத்த சமூகத்தின் பெரும்பான்மை விருப்பத் தெரிவே எமது நாட்டின் தலைமைத்துவத்தை, எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது.
நடக்கப்போவதை அனுமானிக்க இயலாது! இது நடந்துவிடுமோ அது நடந்துவிடுமோ என்று பயப்படவும் முடியாது, எமது தேர்விற்கு நாமே பொறுப்பாளிகள்! எம்மால் செய்யக் கூடியது எமது விருப்பத் தேர்வினை சரியாகத் தெரிவிப்பது மாத்திரமே!
ஆகவே எமது சமூகக் கடமையைச் செய்வோம்! பலனை வரும் ஐந்து வருடங்களுக்கு அனுபவிப்போம்!
Friday, November 15, 2019
பழங்காலமும் நிகழ்காலமும்
எல்லாவித பழைய ஞாபகங்களும் அனுபவத்திற்காவும், அனுபவத்தினால் வரும் அறிவும், அறிவு சேர்ந்து வரும் ஞானத்திற்காகவுமேயன்றி மனதில் எழுந்தமானமாக விருத்தியாகி எமது ஏகாக்கிரத்தையும் (Concentration) நிகழ்கால வாழ்க்கையையும் குழப்பக் கூடாது.
மனித மனம் எப்போதும் பழையதைச் சிந்தித்து அதில் போலிப் பெருமை கொள்ளவோ, அல்லது முன்னர் நிகழ்ந்த துன்பம் தனக்கு மீண்டும் நிகழ்ந்து விடும் என்று அஞ்சவோ செய்யும்.
ஏதாவது தவறு எமது வாழ்வில் நடந்து விடும் போது அதை எண்ணி மீண்டும் அந்தத் தவறு நடந்துவிடும் என்று மீண்டும் மீண்டும் எண்ணும் போது நாம் அந்த எண்ணங்களுக்கு உயிர்கொடுக்கிறோம்.
எண்ணமும் உயிர்சக்தியான பிராணனும் இரட்டைகள், எதை நாம் எண்ணுகிறோமோ அதற்கு நாம் உயிர்கொடுக்கிறோம்.
பழையவற்றை எண்ணும் போது அவற்றிற்கு எப்போதும் உயிர்கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். நாம் பழைய வாழ்க்கையை நினைத்துத் துன்பப்படும் போது மீண்டும் அந்தத் துன்பகரமான வாழ்க்கைக்கு உயிர் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதே அர்த்தம்.
பழைய நினைவுகள் எமது உணர்ச்சிகளைத் தாக்காமல் சாட்சி பாவமாக பார்க்கும் மனதினை பயிற்சியால் பெறவேண்டும்.
ஆகவே பழைய எண்ணங்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் நிகழ்காலத்தில் செய்ய வேண்டிய காரியங்களுக்கு சரியான கவனத்தை செலுத்த எமது வாழ்வு சிறக்கும்.
Wednesday, November 13, 2019
குரு தெய்வமா?
காயத்ரி சாதனையும் புத்துணர்ச்சியும்
கிருஷ்ணனும் காயாக் கோட்பாடும்
சிஷ்ய அதிகார மதிப்பீடு
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...
-
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...