குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, August 27, 2021

ஆகமங்களது தோற்றம் பற்றிய மறையியல் விளக்கம்

இந்தப் பிரபஞ்சம் முழுவதும் எப்போதும் நிறைவானது, முழுமையான அறிவானதும், ஆனந்தமயமுமான சத் சித் ஆனந்த சிவபரம்பொருள் உயிர்கள் மேல் வைத்த கருணையால் தன்னை சதாசிவம் என்ற ஐந்து முகங்களுடைய மூர்த்தியாய் சகளீகரித்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. 

இதுவே தோற்றத்தின் முதல் நிலை; 

இந்த சதாசிவ ரூபத்தின் ஐந்து முகங்களும் உயிர்களுக்குத் தேவையான அறிவினை வெளிப்படுத்தியது. 

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்று நான்கு திசைகளை நோக்கிய முகங்கள் முறையே வாமதேவம், தத்புருடம், அகோரம், சத்தியோஜாதம் என்ற நான்கு பெயர்களால் அழைக்கப்படும். 

ஐந்தாவது முகம் ஈசானம் ஊர்த்துவமாக மேல் நோக்கி இருக்கும். இது உயிர்களை சிவத்தை நோக்கிச் செலுத்தும் அறிவிற்கானது. 

இந்த ஐந்து முகங்களூடாக சக்திநிபாதம் பெற்ற ரிஷிகளூடாக உருவாகிய சிவத்தை அடையக்கூடிய அறிவுகள் ஆகமங்கள் எனப்படும். 

இந்த ஐந்து முகங்களிலிருந்து சக்தி நிபாத தீக்ஷை பெற்ற மானுட குல ரிஷிகள் ஐவர்

வாமதேவம் - காசிபர்

த்புருடம் - கௌதமர்

அகோரம் - பரத்வாஜர்

சத்தியோஜாதம் - கௌசிகர்

ஈசானம் - அகத்தியர் 

ஆகமம் என்பது சதாசிவ மூர்த்தத்திலிருந்து சக்தி பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டுவரும் சக்திநிபாத மரபு! 

சக்தி நிபாதம் என்பது ஆன்மாக்களைச் சூழ உள்ள மும்மலங்கள் அழிந்து அங்கு சிவத்தை உணரும் தன்மையினை ஏற்படுத்தி சக்தியை நன்கு பதித்தல் என்று அர்த்தம். 

ஆகமங்களின் அறிவு உடலில் செயற்படும் தன்மையை உடலில் உள்ள ஆதாரங்களின் மூலம் புரிந்துகொள்ளலாம். 

சத்தியோஜாதம் - சுவாதிஷ்டானம்

வாமதேவம் - மணிப்பூரகம்

அகோரம் - அநாகதம்

விசுத்தி -தத்புருஷம்

ஆக்னை - ஈசானம்

மூலாதாரம் என்பது ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் என்ற நான்கினையும் கொண்ட வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் உழலுபவர்களுக்கு ஆகம வழி இல்லை என்பதை அறியலாம். தனது கீழ்மனதின் உணர்ச்சிகளான ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் ஆகியவற்றை வென்று சிவஞானத்தைப் பெறவேண்டும் என்ற உறுதி பெற்ற உயிர்களுக்குரிய அறிவை சக்தி நிபாதத்திற்கூடாக தருவதைப் பற்றியே ஆகமங்கள் பேசுகின்றன. 

மூலாதார அடிப்படை வாழ்க்கையை மனிதனின் பொது வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளலாம். இவற்றை சரிபடுத்தும் அறிவினை வேதங்கள் தருகிறது. வேதங்களின் பல துதிகள் ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இவற்றினை எப்படி சரி செய்வது, பிரச்சனைகளிலிருந்து வெளிவருவது பற்றியும் உரையாடும், அதேவேளை மிகவும் சூக்ஷ்மமாக ஆகமத்திற்குரிய கூறுகளையும் கொண்டிருக்கிறது. அதாவது வேதங்களின் பெரும்பகுதி மூலாதார வாழ்க்கையை சீர்படுத்தும் அதேவேளை உயர் ஞான வாழ்க்கை அடைவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசவில்லை. 

வேதங்கள் காலத்தால் முந்தியதாகவும் மனிதனின் ஆரம்ப பரிணாமத்தினை வழி நடாத்துவதாகவும் இருக்க, ஆகமங்கள் அவற்றின் உயர் ஞானக்கருத்துக்களை எடுத்துக்கொண்டு பிரபஞ்ச தோற்ற மூலமாகிய சதாசிவ தத்துவத்துடன் நேரடி சக்தி பரிமாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டு உயிர்களுக்கு வழிகாட்டும் முறையைக் கூறுகிறது. இதனால் ஆகமத்தில் குருவும், தீக்ஷை மரபும் முக்கியமாகிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...