குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, August 01, 2021

தலைமைத்துவம் - சிந்தனைகள்

அரசியல், வியாபாரம், சமூக முன்னேற்றங்களில் தலைமைத்துவம் தேவை என்பதை அனைவரும் அறிவார்கள். தலைமைத்துவத்தின் நோக்கம் குழுவை இலக்கினை நோக்கிச் செலுத்துவது. ஆனால் சரியான மனச்சுத்தி இல்லாமல் தலைமைப் பண்பு வாய்க்காது. 

எனது தொழில் நிபுணத்துவ ஆசான் சொல்லித்தந்தது, எப்போதும் உனது குழுவைத் தேர்ந்தெடுக்கும்போது உனக்கு உதவியானவர்களைத் தேர்ந்தெடுப்பது எவ்வளவு அவசியமோ அதைப்போல் உனக்கு சவால் விடும் ஒருவனையாவது தேர்ந்தெடு என்பது! குறிப்பாக ஆமாச்சாமி போடும் நபரைத் தூர வை என்பார்! கேள்வி கேட்கும் புத்திசாலியை வைத்து வேலை வாங்க வேண்டும் என்றால் நீ அதை விடப் புத்திசாலியாக இருக்க வேண்டும்! 

அனேக மனிதர்கள் தலைமைத்துவத்தை ஏற்க முன்னர் தமது அக உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வதில்லை; யானை மாலை போட்டு பட்டத்திற்கு வந்ததைப் போல் சந்தர்ப்ப வசத்தில் தலைமைப்பதவி கிடைத்திருக்கும்! தமது உணர்ச்சிகளிற்கு அடிமைப்பட்ட மனதுடன் மக்களைக் குழப்பிக்கொண்டிருப்பார்கள். 

பயம் - மனதில் பயம் உள்ளவன் தலைவனாகினால் எப்போதும் எவரையாவது எதிரியாக்கி மக்களுக்கு அவனால் ஆபத்து என்று மனமாயை உருவாக்கி மக்களை ஒருவித உணர்ச்சிக்கு அடிமையாக்கி தனது அதிகாரத்தினைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிப்பான்! இத்தகையவனது இலக்கு எப்படியாவது சாகும்வரை நான் அதிகாரத்தில் கதிரையில் இருக்க வேண்டும் என்பது. கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் பயம் காட்டியே வீணடிப்பான். 

பெருமை - பெருமை பிடித்தவன் எப்போதும் தன்னைப்பற்றி ஹீரோவாக பீற்றிக்கொண்டிருப்பதும், மற்றவர்கள் எல்லாரும் தனக்கு வாய்த்த அடிமை என்று நினைப்பதும், தனக்கு அடிமையாக இருக்கத் தகுதியாக எவனாவது இருந்தால் அவர்களை உடன் வைத்துக்கொள்வதும் இவனது பண்பு. 

தாழ்வு மனப்பான்மை - சிலருக்கு தாம் எப்படித் தலைவனானோம் என்பதையே நம்பமுடியாமல் ஆழ்மனக்குழப்பத்தில் இருப்பார்கள்; கிட்டத்தட்ட 23ம் புலிகேசி போன்றவர்கள்; தாம் தலைவர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அடிக்கடி தமது தொண்டர்களுக்கு குடைச்சல் கொடுத்து உறுதிப்படுத்திக் கொள்வார்கள். தன்னை விட தகுதிவாய்ந்தவர்கள் எவராவது குழுவில் இருக்கிறார்களா என்பதை அவதானித்து அவர்களை கவனமாக கவனித்து வெளியேற்றுவதில் சிறப்பாகச் செயற்படுவார்கள். 

கபடம் - தான் அதிகாரத்தில் இருக்க ஒருவரை ஒருவன் ஒத்திசைந்து வேலை செய்ய முடியாமல் குழுவிற்குள் விரோதம் விதைத்து நச்சினைப் பாய்ச்சிக்கொண்டிருப்பவன். 

உண்மைத் தலைவன் - ஒவ்வொரு நொடியும் தனது மக்களுக்கு என்ன தேவை? அதை எப்படி அடைவது? என்ற இலக்கு உடையவன்! தன்னை விட தனது மக்கள் சரியான திசையில் சென்று இலக்கினை அடையவேண்டும் என்ற உறுதி உடையவன்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...