குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, August 17, 2021

தலைப்பு இல்லை

ஸ்ரீ அரவிந்தர், யோக முறைகளை ஒருங்கிணைத்த மகாயோகி!

ஸ்ரீ அரவிந்தர் இன்புளுவென்சா தொற்றுக்காலத்தில் (1919 - 1920) வாழ்ந்தவர். அந்தக்காலத்தில் பரோடாவில் பேராசிரியராக பணிபுரிந்தவர். பிற்காலத்தில் Letters On Yoga நூலில் இந்த கொள்ளை நோயின் தாக்கம் பற்றி கீழ்வருமாறு பதிந்திருக்கிறார்;

{Complete Works of Sri Aurobindo, Vol. 31, Letters On Yoga-IV, P568-569}

நோயிற்கான சூஷ்ம காரணம் என்ன? விஞ்ஞானிகள் மனம் என்ற ஒன்றோ, எண்ணம் என்ற ஒன்றோ பௌதீக மூளையைத் தாண்டி இல்லை என்பதை மறுக்கிறார்கள். மனம் அல்லது எண்ணம் என்பது மூளையின் அதிர்விலிருந்து உருவாகிறது. அதேபோல் பிராணன் என்ற ஒன்று இல்லை அனைத்து இயக்கமும் உடலின் இரசாயனப் பதார்த்தங்களால் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். 

ஆனால் இங்கு பௌதீகத்தில் செயல் நடைபெறுவதற்கு supraphysical என்ற நுண்தளம் ஒன்று இருக்கிறது. அதன் சேவகர்கள்தான் மூளை, இரசாயனங்கள், இந்த நோயை உருவாக்கும் நுண்ணுயிரிகள் (germs) எல்லாம். 

இந்த supraphysical agent ஆகிய நுண்ணுயிரிகள் முதலில் உனது காந்த மண்டலத்தைத் தாக்கி உட்புகுகிறது. இந்தக் காந்த மண்டலம் வலிமையாக இருந்தால் எத்தனை மில்லியன் நுண்கிருமிகளும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. இவை உன்னைச்சூழ உள்ள காந்த மண்டலத்தை பிளந்தவுடன் அது உனது உடலை இயக்குகிற subconscient mind இனையும், பிராணசக்தியில் குழப்பத்தை உண்டு பண்ணி நோயைப் பற்றிய பயத்தையும், எண்ணத்தையும் உருவாக்குகிறது. இப்போது நீ அந்த நோய்க்கிருமிகள் உனது உடலில் செயற்படுவதற்குரிய சூழலை உனக்குள்ளே உருவாக்கியிருப்பாய். 

90% இறப்புகள் நோயுடன் போராட முடியாது என்ற பயம் உருவாகியவர்களுக்கே நடக்கிறது. பயம் உருவாகி விட்டால் உன்னால் உனது உடலை ஆளமுடியாது. 

மாற்றாக உனது subconscient mind இல் நோயை எதிர்க்கும் மனநிலை வலிமையாக இருக்குமாக இருந்தால் நீ கொலெரா, பிளேக் ஆகியவற்றிற்குள் பாதிப்பில்லாமல் நடமாடலாம்! எந்த நோய்த்தாக்கமும் உருவாகாது. 

இதை நான் பரோடாவில் கொள்ளை நோய்க்காலத்தில் வாழும் போது கண்டிருக்கிறேன். 

***************************

இந்தக் கருத்து நோய்வாய்ப்பட்டவர்களில் யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிய ஒரு நுண்மைப் புரிதலைத் தருகிறது! 

எவருக்கு எதிர்த்துப் போராடும் குணம் subconscient mind இல்லையோ அவர்களை இந்த supraphysical நுண்ணுயிரிகள் வெற்றிகொண்டு மரணம் வரை கொண்டு செல்லுகிறது.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...