ஸ்ரீ காயத்ரி மந்திரத்தின் பொருள் புத்தியைத் தூண்டும் அந்தப் பேரோளியை எம்முள் இருத்தி தியானிப்போமாக என்பதாகும்!
அதாவது ஒருவனுக்கு புத்தியானது விளக்கில் எரியும் திரிபோல் தூண்டப்பட்டுக்கொண்டிருக்க வேண்டும்; அந்தத் தூண்டல் எல்லாவற்றிற்கும் மூலமான பேரொளியிலிருந்து நமக்குள் வரவேண்டும் என்ற முயற்சியை தியான சாதனையால் செய்ய வேண்டும்! இப்படி சாதனை செய்யும் ஒருவன் அறிவினைப் பெறுவான். இந்த அறிவு எப்படி இருக்க வேண்டும் என திருவள்ளுவர் அறிவுடமை என்ற அதிகாரத்தில் பட்டியலிட்டுள்ளார்.
1. ஒருவராலும் உட்புகுத்த, அழிக்க முடியாதது அறிவு
2. மனதைக் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் செல்லவிடாமல் தீமைகளில் செலுத்தாமல் நல்ல விஷயத்தில் மனதைச் செலுத்தும் ஆற்றல் அறிவு
3. பிறருடைய கருத்துக்களை எவ்வளவு கேட்டாலும் அதிலுள்ள உண்மைத்தன்மையினை அறிந்து தெளியும் ஆற்றலிற்கு அறிவு என்று பெயர்
4. கேட்பவர்களுக்கு புரியும்படி எளிமையாகச் சொல்வதும், பிறர் பேசும்போது நுண்மையாக எதைச் சொல்ல வருகிறார்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்வதும் அறிவு
5. உயர்ந்தவர்களை நட்பாக்கிக்கொண்டு அவர்களுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு உறவாடி, பின்னர் சலித்துவிடாமல் சமநிலையில் உறவைப் பேணுவது அறிவு எனப்படும்.
6. உலகம் இயங்கும் வகையை அறிந்து அதற்கேற்றால் போல் தானும் இயைந்து வாழ்வதே அறிவு
7. பின்னர் நடக்கப்போவதை சரியாக அனுமானிப்பதே அறிவு, அப்படி அனுமானிக்கத் தெரியாதவர்கள் எவ்வளவு கற்றாலும் கல்லாதவர்களே.
8. பயப்பட வேண்டிய இடத்தில் பயந்து விலகிச் செல்லுவது அறிவுடைய செயல்.
9. பின்னர் நடக்கப்போவதை அறிந்து செயற்படக்கூடியவனுக்கு எந்த துன்பமும் இல்லை.
10. அறிவிருந்தால் மாத்திரமே எம்மிடம் இருக்கும் மற்றைய செல்வம், அதிகாரம் அனைத்தும் பயன்; இல்லாவிட்டால் மற்ற எது இருந்தாலும் ஒரு பயனும் இல்லை!
No comments:
Post a Comment
எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.