குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, August 09, 2021

தலைப்பு இல்லை

ஆடி அமாவாசை முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் - திருப்திப்படுத்தல் எல்லோரதும் கடன்! 

ஸ்தூல உடலை விட்டு நீங்கும்போது நாம் வாசனை - அதாவது வாழ்ந்த காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட இச்சைகளைச் சுமந்துகொண்டு இந்த ஐந்து பூதங்களாலான உடலை விட்டு வெளியேறுகிறோம். அடுத்த உடலைப் பெறவேண்டும் என்றால் இருக்கும் வாசனையை கரைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் உண்டு, உறவாடி, பாசம் கொண்ட புத்திரர்கள், மனைவி, உரிமை கொண்டாடிய நிலம், செல்வம் இவை எல்லாவற்றையும் அவன் தனது வாசனா சரீரத்தில் ஏற்றிக்கொண்டு பூவுலகில் சுற்றிக்கொண்டு அடுத்த நிலைக்குச் செல்ல முடியாமல் தவிக்கிறான். 

இப்படித் தவிப்பவர்களுக்கு அவர்களுடன் உணர்ச்சியால் உறவுகொண்ட உடலில் உள்ள மனிதர்கள் தமது உணர்வை ஒன்றி உதவ முடியும். திருப்திப்படுத்த முடியும். 

தர்ப்பணம் என்றால் திருப்திப்படுத்துதல் என்று பொருள்! இதை அந்த ஆன்மாக்களுக்கு பிடித்ததைப் படையல் இடுதல் என்று சிலர் பின்பற்றுவார்கள். 

சிலர் கோயில், குளம், தீர்த்தத்தில் சடங்காக பின்பற்றுவார்கள். 

சிவபெருமானே பசுபதி - பசுவாகிய ஆன்மாவின் தலைவன்! ஆகவே சிவ உபாசனையில் ஆன்மாக்களின் வாசனை நீங்கி சிவபெருமானின் அருள் பொழிய சிவபூஜையாலும் எமது முன்னோர்களின் ஆன்மாவிற்கு நன்நிலை பெற வேண்டலாம்!

இதனை பித்ரு மோக்ஷ சாதனை என்று கூறுவர்! சிவபெருமானை அம்ருதகடேசுவரராக - ம்ருத்யுஞ் ஜெயராக ஆவாஹித்து அவரது அம்ருத கடாக்ஷம் எமது பித்ருக்களுக்கு வேண்டி அருள் பெறுதல் இந்த சாதனையின் அடிப்படை! சிவ உபாசனை, காயத்ரி ம்ருத்யுஜெய உபாசனை உடையவர்கள் கடைப்பிடிக்கக் கூடியது. 

அனைவருக்கும் எம்முன்னோர்கள் வழிபட்ட வேதநாயகி அம்மையுடனுறை வேதவனநாதர் அருள் வேண்டி பிரார்த்தனைகள்! 

தென்னாட்டில் சிவன் என்றும் எந்த நாட்டிலும் இறைவன் என்றும் அழைக்கப்படும் அந்த பரத்திற்கு போற்றி!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...