குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, July 31, 2021

அநீதிகளைக் கண்டு பொங்குதல்

சில நாட்களாக ஒரு பிரபல அரசியல்வாதியின் வீட்டில் ஒரு ஏழைச்சிறுமிக்கு நேர்ந்த அவலத்திற்கு பொங்கும் இளைஞர்களைப் பார்க்கிறோம்! 

ஆத்திரம் ஒரு அரிய ஆற்றல்! அதை பால் சட்டியில் பொங்கி வழிந்து அடங்கி கருகுவது போல் பாவிக்கக்கூடாது! எமது சமூகத்தில் ஒரு சிறுமிக்கு அப்படியொரு நிலை ஏன் ஏற்பட்டது என்று சிந்திக்க வேண்டும்! 

மேலும் கிளப் ஹவுஸில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்று அரட்டை அடிப்பதில் பயன் எதுவுமில்லை. செயல் வேண்டும்!

எதிர்காலத்தில் எமது சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்ற திட்டம் இருக்க வேண்டும். 

நாம் பெருந்தோட்டத்தில் வாழும் எமது உறவுகள் மேம்பட எமது தகுதிக்குள் என்ன உதவி செய்கிறோம் என்று பார்க்க வேண்டும்! 

எங்கள் மனம் எப்படி இயங்குகிறது என்று கூர்ந்து கவனிக்க வேண்டும்! தோட்டத்திலிருந்து படித்து வந்தபின்னர் மீண்டும் எமது சமூகத்தின் கல்வி, பொருளாதாரத்தினை முன்னேற்ற நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சிந்திக்க வேண்டும். 

சிறு மாத வருமானத்தை ஈட்டக்கூடிய சிறிய தொழில்கள் உருவாக்கப்படவேண்டும். பணமுள்ள பணக்காரர்கள் முதலிட வேண்டும். 

ஆலயங்களில் சேரும் பெருந்தொகையான பணத்தினை வீண் ஆடம்பரத்திற்கு சேர்க்காமல் சமூகத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு பாவிக்க வேண்டும்! 

தனது தேவையற்ற தேவைகளை அகற்றி பணத்தை சமூக முன்னேற்றத்திற்குப் செலவிட வேண்டும். 

கற்றறிந்தவர்கள் தமது நேரத்தை சமூகம் முன்னேறத் தரவேண்டும். 

1) கல்வி முன்னேற்றம்

2) பொருளாதார முன்னேற்றம்

3) அடிப்படை உட்கட்டமைப்பு வசதி

இந்த மூன்று தளங்களிலும் எல்லா வசதிகளும் அனைவருக்கும் கிடைக்கும்படி திட்டம் வகுக்க வேண்டும்! 

இவற்றை மேம்பட அரசாங்கத்தைக் குறைகூறிக்கொண்டு பிச்சைக்கார அரசியல் செய்யாமல் எம்மிடம் இருக்கும் தொழிலதிபர்கள், பணவசதி படைத்தவர்களின் ஆற்றல் ஒன்றிணைக்கப்பட்டு சமூகத்திற்குச் செலுத்தப்பட வேண்டும். 

internet coverage இல்லை, மாணவர்கள் படிக்கக் கஷ்டப்படுகிறார்கள் என்று facebook இல் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் அதைத் தீர்க்க டயலோக், SLT இன் சிரேஷ்ட பொறியலாளருடன் ஆலோசனை செய்து பிரச்சனையைத் தீர்வு செய்யவேண்டும்! coverage இல்லாத ஊரிற்கு coverage கொடுக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து அதற்குரிய மாற்று யோசனை என்னெவென்று செயற்பட வேண்டும்!

தலைவன் வருவான், எம்மைக் காப்பாற்றுவான் என்று பொன்னியின்செல்வன் மனப்பாங்கில் இருக்காமல் பிரச்சனைக்குத் தீர்வு தர ஒவ்வொரு இளைஞனாலும் முடியும்; அதற்குரிய அடிப்படை அறிவும் திறனும் என்னவென்று பயிற்றுவிக்கப்பட வேண்டும்! 

நாம் ஒவ்வொரு முறை அநீதி நடக்கும் போதும், அழிவு நடக்கும் போதும் அதை இட்டுப் புலம்புவதையே வாடிக்கையாக்குகிறோம்! தூர நோக்குடன் அந்த சந்தர்ப்பம் மீண்டும் நடக்காமல் இருக்கத் தேவையானதை செய்யாமலிருக்கிறோம்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...