குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, May 09, 2021

தலைப்பு இல்லை

ஒரு பாடசாலையின் நிர்வாகம் தனது இலக்கினை, வினைத்திறனை எப்படி நிர்ணயிக்க வேண்டும். இதற்குரிய ஆய்வு முறை என்ன? 

நடந்து முடிந்த பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடும் போது இத்தனை சதவீதம் சித்தி என்று வெறுமனே ஒற்றை இலக்கத்தில் இதனைக் கூறிப் பெருமைப்பட்டுகொள்ள முடியாது. 

நிர்வாகம் ஒவ்வொரு வருடமும் அதன் முன்னைய வருடங்களிலிருந்து தாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம், பின்னே சறுக்கியிருக்கிறோம் என்ற ஆய்வு அதி முக்கியமானது. 

O/L சித்தியடைந்த மாணவர்களில் எத்தனை பேரை A/L வரை கொண்டு சென்று பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை, சூழலை பாடசாலையில் ஏற்படுத்துகிறோம் என்பதும், அதற்கான திட்டம் என்ன என்பதும் அதிமுக்கியமானது. 

O/L சித்தியடையாத மாணவர்களை மீண்டும் சித்தியடைய வைக்கும் வாய்ப்பினை எப்படி உருவாக்குகிறோம் என்பது கேட்கப்படவேண்டும். 

O/L இலிருந்து A/L முடியும் இரண்டு வருடத்திற்குள் பொருளாதாரம், உளவியல் காரணங்களிற்காக எத்தனை மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு நீங்குகிறார்கள் என்பது ஆராயப்பட வேண்டும். 

இந்தக்காரணங்களை நிவர்த்தி செய்ய பெற்றோர் ஆசிரியர் சங்கம், பழைய மாணவர்கள் சங்கம், கல்வி அபிவிருத்திச் சங்கங்களின் வளங்களை, உதவிகளை எப்படிப் பெறுவது என்ற மூலோபாயம் இருக்க வேண்டும். 

பாடசாலையில் மாணவர்கள் தகுந்த பெறுபேறுகளைப் பெறவில்லை என்றால் அதற்குரிய உளவியல் காரணம், பாடசாலைச் சூழல், ஆசிரியர் உத்வேகம், குடும்ப பொருளாதாரம் என்பவை ஆராயப்படவேண்டும். 

இவற்றை வெறுமனே அட்டவணைப்படுத்தி அறிக்கைகளில் உறங்கவிடாமல் உரையாடல் களங்கள், வாதப்பிரதிவாதங்களுக்கு உட்படுத்தி அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக பெறுபேறுகளைப் பெறுவது எப்படி என்று சிந்திக்கவேண்டும். 

இதற்கு சிறுபிள்ளைத் தனமான அதிபரைக் குற்றம் சாட்டுதல், ஆசிரியரைக் குறைகூறுதல், பெற்றோரைக் குறைகூறுதல் என்று குட்டையை குழப்பாமல் பிரச்சனையை சரியாக அறிவுப் பூர்வமாக புரிந்துகொண்டு ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...