குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 24, 2021

தலைப்பு இல்லை

நாம் கனவு கண்ட கனவாகிய இயற்கை வழி விவசாயத்தினை நோக்கி இலங்கை நகர்கிறது! 

மூன்று வருடங்களுக்கு முன்னர் எனது வாழ்க்கைப் பாதையை மாற்ற தெய்வாதீனமாக நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்! அப்போது முழுமையாக நவீன விவசாயத்தினை பெரும் வணிக அடிப்படையில் செய்ய அனுபவம் உடைய நான், நண்பர் ஒருவரால் "இல்லை இயற்கை விவசாயம் செய்வோம்” என்று உந்தப்பட, அது நான் கற்ற சூழலியலிற்கும் இதயத்திற்கும் அருகில் இருந்ததால் ஏற்றுக்கொண்டு ஆரம்பித்தோம்! 

ஸ்ரீ அரவிந்தர் பிரக்ஞை (consciousness) மாற்றத்தினைப் பற்றிப் பேசுகிறார்; உலகை மாற்ற விரும்பினால், நீ விரும்பும் உலகை முதலில் உனக்குள் படைத்து நீ உருமாறு (transform yourself), பின்னர் அதை நூறு பேரை படைக்கும்படி உதவி செய்! அந்த நூறு பேர் அதைப் பயிற்சிக்க, மெதுவாக உலகம் அந்த நிலையை அடையும் தன்மையை தன்னுள் உருவாக்கும் என்று!

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு யோகசாதனையாக நிலம் ஒன்றை எடுத்து இயற்கை விவசாயப் பண்ணையை வடக்கில் அமைத்தோம்! அதேவேளை இன்னொரு பக்கம் யாழ்ப்பாணத்தில் தம்பி Dr. Prabu Nadaraja அவர்களும் நண்பர்களும் இயற்கை வழி இயக்கம் என்று ஆரம்பித்து உணர்வுப் பூர்வமாக செயற்பட ஆரம்பித்தார்கள்! ரஜிந்தன் Rajethan Makeswaran Jenojan Kanthasamy Suje Tharma Nivetha Sivarajah மகேஸ்வரநாதன் கிரிசன் இயற்கைவழி விவசாயிபோன்ற இன்னும் பல இளைஞர்கள் இதில் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டு வந்துள்ளார்கள். 

இன்று இலங்கை அரசாங்கம் இதனை எதிர்காலத்தின் தேவையாக உணர்ந்திருக்கிறது. எதிர்காலத்திற்கு பயன்படக்கூடிய அறிவில் நாம் உத்வேகப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்பது மிகவும் மகிழ்வு தரும் செய்தி!

 

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...