குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, May 10, 2021

தலைப்பு இல்லை

மலையகத்திற்கு அந்நிய செலாவணியை பெற்றுத்தருவது தேயிலை, இறப்பர், கொக்கோ என்று பழைய சமூகக்கல்விப் பாடத்திட்டத்தில் கற்பிப்பதை நம்பிக்கொண்டு அந்தப் பெருந்தோட்டத்தினை முகாமைத்துவம் செய்யும் கம்பனிகளுடன் போராடிக்கொண்டிருக்கும் அரசியல் வழக்கத்திற்கு ஜனாதிபதி எடுத்த ஒரு முடிவு game changer ஆக மாறுமா?

உர இறக்குமதியைத் தடை செய்தல்; இது மேலோட்டமாகப் பார்த்தால் விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று எண்ணத்தோன்றும்; ஆனால் ஒவ்வொரு தடையும் அதைத்தாண்டி புதிய நிலையை அடைவதற்கான பரீட்சை என்ற பார்வையில் பார்த்தால் இது மிகப்பெரிய வாய்ப்பு! 

நுவரெலியாவின் மரக்கறிச் செய்கையை Organic ஆக மாற்றுவதற்கு இதைவிட வேறு அரிய சந்தர்ப்பம் இல்லை என்று சொல்லலாம். 

இப்படியொரு சந்தர்ப்பம் கியூபாவிற்கு 1989 களில் நடந்தது. 

சோவியட் யூனியனை மாத்திரம் ஒற்றை நம்பிக்கையாக ஏற்றுமதி நாடாகக் கொண்டு கரும்புச் செய்கையில் ஈடுபட்ட கியூபா 1989 இல் சோவியட் யூனியன் உடைந்ததுடன் விவசாயத்திற்கு தேவையான உர இடுபொருட்களை பெறமுடியாமல் போனது. உடனே மக்கள் அனைவரும் அரசினைக் குறைகூறாமல், கொள்கை வகுப்பாளர்கள் இப்படி ஆகிவிட்டதே என்று புலம்பாமல் மாற்றி யோசிக்க ஆரம்பித்தார்கள். இதனால் உருவாகியது Organic revolution. 

இதில் இரண்டு உத்திகளைப் பயன்படுத்தினார்கள்;

1. Urban agriculture: நகரத்தில் கிடைக்கும் சிறு இடங்களில் எல்லாம் உற்பத்தி செய்வது. 

2. Organic Production: கியூபாவின் சேதன விவசாய முறையை ஆராய்ந்த Peter Rosset கூறுகிறார்; அவர்கள் (கியூபா) இரண்டு விடயங்களைச் செய்தார்கள்; 1) அவர்களுடைய முன்னோர்கள் நவீன உரம், பீடை நாசினிக்கு முன்னர் எப்படி விவசாயம் செய்தார்கள் என்பதை ஞாபகப்படுத்தினார்கள்- ஊடுபயிர்களுடன், பயிர் சுழற்சி, இலைகுழை, விலங்குக் கழிவுகளை மண்ணிற்குக் கொடுத்தல் - இவற்றை பயிற்சிக்கத் தொடங்கினார்கள். 2) தாவர இடுபொருள்களிலிருந்து நவீன அறிவியலைக் கொண்டு biopesticides and biofertilisers தயாரிப்பில் ஈடுபடத்தொடங்கினார்கள். 

இன்று இலங்கை அமைச்சரவையின் இளம் அமைச்சரும், இலங்கையில் அதிக விவசாயிகள் வசிக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியுமான கௌரவ அமைச்சர் Jeevan Thondaman அவர்கள் உர இறக்குமதித்தடை காரணமாக விவசாயிகளுக்கு ஏற்படுள்ள இந்தப்பிரச்சனையைப் பற்றி கலந்துரையாடியதாக தனது முகநூலில் தெரிவித்துள்ளார். வழமையாக இப்படியான பிரச்சனைக்கு உடனடியாக உரத்தை இறக்குமதி செய்ய அரசிடம் விண்ணப்பிப்போம் என்ற திசையில் சிந்திக்காமல் இதை, நுவரெலியா ஒரு பெரும் விவசாய பூமி, இதை நாம் organic ஆக மாற்றினால் தேயிலைக்கு ஈடாக மத்திய கிழக்கு, ஐரோப்பிய நாடுகளுக்கு மரக்கறி ஏற்றுமதி செய்யலாம்; தேயிலைத் தோட்டங்களைத் தாண்டி வளமான எதிர்காலத்தை எமது மக்களுக்கு ஏற்படுத்தலாம் என்ற அடிப்படையில் சிந்திக்க வேண்டும். 

அரசியல் பிரச்சனையாகப் பார்க்காமல் மாற்றுவழிகள், அறிவியல் வழிகள் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். பாரதத்தில் தமிழ் நாடு, மகாராஷ்ரா ஆகிய இடங்களில் வெற்றிக்கதைகள் நிறைய இருக்கிறது. இதை எப்படி எமது சமூகத்திற்கு பாவிக்கலாம் என்ற சிந்தனை உருவாக வேண்டும். 

கீழே உள்ள நூல் இந்த சந்தர்ப்பத்திற்குரிய வழிகாட்டி;


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...