குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 27, 2021

தலைப்பு இல்லை

இன்னும் சில நியாய சாஸ்திர விளக்கங்கள்

6) மரச் சந்திர தர்க்கம் (ஸாக சந்திர நியாயம்)

******************************

சந்திரனை நேராகக் காண முடியாமல் வனத்திற்குள் தவிக்கும் ஒருவனிற்கு முதலில் மரத்தின் கிளைகளைப் பார்க்கச் சொல்லி பிறகு கிளைகளுக்கு பின்னால் இருக்கும் சந்திரனைப் பார் என்று படிப்படியாக புரிதலை உருவாக்கும் முறை. 

இதுபோல் இறைவனைக் காணவேண்டும் என்று கேட்பவனுக்கு அவனது மனம் என்று காடு இருள் சூழ்ந்து இறை ஒளியைப் பார்க்க முடியாமல் இருந்தால் முதலில் மனதைச் செம்மைப்படுத்த உபாசனை, பூஜை, மந்திரம் என்று கிளைகளைக் காட்டி பின்னர் அதற்குப் பின்னால் இருக்கும் ஜோதியான இறைவனைக் காட்டும் முறை. 

7) கூப மண்டூக தர்க்கம்

****************************

கூபம் என்றால் கிணறு, மண்டூகம் என்றால் தவளை; கிணற்றுத்தவளை கடல் என்ற ஒன்றோ, ஆறு என்ற பெரிய நீரோட்டம் இருக்கிறது என்றோ நம்பாது! அதுபோல் தமது அனுபவம் மாத்திரமே உண்மை என்று நம்பும் முட்டாள்தனம். 

இன்று யோகம் உபாசனை, கற்பவர்கள் கற்கும் ஆசிரியரிடம் இப்படி கிணற்றுத்தவளைத் தர்க்கத்துடன் தான் கேள்வி கேட்க வருகிறார்கள். தமது அனுபவம் மாத்திரமே உண்மை என்றும் அதற்கு மேல் ஏதும் இருக்க முடியுமா என்ற செருக்குடன் கேள்வி கேட்கும் பாங்கினைக் காணமுடியும். 

அறிவைப் பெறவிரும்புபவர்கள் தமது கிணற்றுத்தவளைத்தனத்தை விடவேண்டும். 

 தண்டுல விருக்ஷிக தர்க்கம்

**********************************

அரிசி மூட்டையில் இருந்து தேள் குஞ்சுகள் வந்தால் அரிசியில் இருந்துதான் தேள் உருவாகிறது என்ற முட்டாள்தனம். அரிசிக்குள் தாய்த்தேள் இட்ட முட்டைகள் அரிசியின் சூட்டினால் பொரிந்து அவை வருகிறது என்ற ஆழ்ந்த தெளிவு இல்லாமை. 

இதைப்போல் மனிதன் தனக்கு நடக்கும் அனைத்துக்கும் மேலோட்டமாக ஸ்தூல காரணிகளே காரணம் என்று ஆழமான சூக்ஷ்ம காரணிகளைப் பற்றி அறியாமல் இருக்கும் முட்டாள்தனம் இதனால் புரியப்படும். 

9) காக்கை இருக்க பனம் பழம் விழுதல் என்ற தர்க்கம்

******************************************************************

பனம் பழம் வெகு இலகுவாக குலையை விட்டுக் கழராது; இதனால்தான் நோகாமல் நுங்கு தின்ன ஆசைப்படுரான் என்று கூறுகிறோம். இப்படி உறுதியாக குலையுடன் இருக்கும் பனம் பழம் எளிய காகம் இருக்க விழுந்தது என்று வாதிடும் ஆழமற்ற முட்டாள்தனத்தைக் கூறும் தர்க்க முறை.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...