குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Thursday, May 27, 2021

தலைப்பு இல்லை

ந்யாய சாஸ்திரம் என்பது ஒருவன் தனது அந்தக்கரணங்கள் {மனம், புத்தி, சித்தம், ஆங்காரம்} நான்கிலும் மனம், புத்தி ஆகிய இரண்டையும் சரியான முறையில் தர்க்க ரீதியில் பயிற்றுவிப்பது என்பதைக் கூறும் ஒரு அறிவு!

மனதைச் செம்மைப்படுத்துவதில் நியாய சாஸ்திரம் கற்பது அவசியமானது! இல்லையென்றால் சாஸ்த்திரங்களை மனம் போன போக்கில் அர்த்தப்படுத்திக் கெடுத்து விடுவோம். 

இது சிந்தனைக்கான சில உருவகங்களைத் (metaphor) தருகிறது. 

1) ஆட்டுப் பால் மடி தர்க்கம்: (அஜ கல ஸ்தான நியாய)

**********************************

ஆட்டின் மடியிலிருந்தே பால் கறக்கப்படுகிறது என்பதற்காக ஆட்டின் மடியிலேயே பால் உற்பத்தியாகிறது என்று நம்பும் அறியாமை. 

பலர் வேலைத்தளத்தில் தமது முகாமையாளர்தான் தனக்கு சம்பளம் தரும் முதலாளி என்று நம்பிக்கொண்டு முட்டாள்களுக்கு அடிமையாகி, விரக்தியடையும் நபர்கள் இப்படியான தர்க்கம் உடையவர்கள். 

2) அந்தகனும் முடவனும் தர்க்கம் (அந்தக கன்ஜ நியாய)

***************************************

ஓரிடத்தில் குருடனும், முடவனும் இருந்தால் குருடன் தோளில் முடவன் ஏறி இருந்து வழிகாட்ட, குருடன் முடவன் கூறுவதைக் கேட்டு அவன் கூறும் வழியில் செல்ல வேண்டும். அப்படியில்லாமல் குருடன் முடவன் தோளில் ஏறி அமர்ந்து அவனை நடக்கச் சொன்னால் எதுவும் நடக்காது. 

இதைப் போல் வேலைத்தளத்தில் சில அறிவில்லாத சோம்பேறிகள் மற்றவர்களை முதுகில் ஏறி சவாரிசெய்யும் முட்டாள்தனத்தை விளங்க இந்தத் தர்க்கம் உதவும்.

3) வாத்து அண்ட தர்க்கம் 

(பகண்ட நியாயம்)

***************************** 

வாத்துகள் தமக்கு முன்னே செல்லும் காளைமாட்டின் குறிகளை (testicles) பார்த்து தமக்கு பெரிய முட்டைகள் விருந்தாகக் கிடைத்திருக்கிறது என்ற மிதப்பில் அலையுமாம். இறுதியில் காளை மாடு ஒரு உதை கொடுத்தால் ஓடிவிடும். 

இதுபோல் பலரும் தமக்கு ஒவ்வாத கற்பனையை வளர்த்துக்கொண்டு, தேவையற்றவற்றிற்கு பின்னால் ஓடிக்கொண்டு கடைசியில் ஏமாந்து போகும் முட்டாள்த்தனத்தை இது குறிக்கும். 

4) சுப்தோதித நியாயம்

****************************

ஒருவன் தூக்கத்தில் கனவை அனுபவித்து விட்டு எழுந்தவுடன் அது உண்மை அல்ல என்று தனது தினசரிக் கடமைகளைச் செய்வதைப் போன்றதே எமது பிறப்பு, இறப்பு என்ற அறிவினை விளக்குவது இந்தத்தர்க்கம்.

5) நிர்வாணக் குழந்தை தர்க்கம் (நக்ன மாத்ரிக நியாயம்)

************************************

ஒரு குழந்தை பிறக்கும் போது நிர்வாணமாகப் பிறந்தது என்பதற்காக வாழ்க்கை பூராகவும் நிர்வாணமாக இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கும் முட்டாள்த்தனம். 

இன்று சோதிடத்தை நம்பும் பலரும் இத்தகைய முட்டாள்தனத்தைத் தான் செய்கிறார்கள். ஒருவன் பிறக்கும் போது இருக்கும் கிரகப் பிரபாவம் தான் ஒருவனுடைய ஜனன ஜாதகம்; அவன் பிறந்த பின் ஒவ்வொரு கணமும் கிரகமும் மாறுகிறது; அவனும் புதிய கர்மங்களைச் செய்கிறான். ஆனால் தான் பிறந்த போது இருந்த கிரக பலம் தான் தனது துன்பம் முழுமைக்கும் காரணம் என்று நம்புகிறான். ஆனால் அறிவு பலத்தால் தனது வாழ்க்கையை மாற்றமுடியும் என்பதை உணராமல் இருக்கும் முட்டாள்தனத்தை உணர இந்தத் தர்க்கம் உபயோகமாக இருக்கிறது. 

தொடரும்...


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...