குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Tuesday, April 30, 2019

தலைப்பு இல்லை

சிறுவயதில் நானும் எனது தம்பியும் அம்மா தரும் கைக்காசு (Pocket money) சேர்த்து புத்தகம் வாங்க கண்டிக்கு கலைவாணி புத்தக சாலைக்கு போவோம்! இதில் வாங்கியவை புலியூர்க்கேசினின் உரை நூற்கள்! அனேகமாக பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி என எல்லா நூற்களுமே இருந்தன. 

இந்தப் புத்தகங்கள் பின்னர் இருவரின் சதுரங்க சூதாட்டத்திற்கும் பிணையாகும். வெல்பவர்கள் அவர்கள் நூற்களை கொடுத்து விட வேண்டும். இப்படி புத்தங்களின் ஆட்சி ஆட்டத்திற்கு ஆட்டம் கைமாறும்! 

இதில் புலியூர்க்கேசிகனின் எனக்கு பிடித்த புத்தகம் காளமேகம் தனிப் பாடல்கள்!

ஆனேகமானவை சிலேடை அணியுடையவை, மேற்போக்கான சொல் அமைப்பில் ஒன்றாகவும் ஆனால் அமைதியினாலே இரண்டு மூன்றாகவும் பொருள் விளங்கும் அணி சிலேடையணி. 

இக் காலத்தில் சில இளைஞர்கள் கலாய்த்தல் என்று கூறி செய்யும் அலப்பரையின் மிக உயர்ந்த அறிவுசார் வடிவம்! 

காள மேகத்தின் கலாய்த்தலில் நுண் அறிவும், பொருட்ச் செறிவும் இருக்கும். 

சுவைக்காக ஒன்று, 

தாம் கவிராயர் என்று தற்பெருமை கொண்டிருந்த திருமலைராயரின் புலவர் கூட்டத்திடம் கேட்கிறார்,

வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு

காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே - சாலப்

புவிராயர் போற்றும் புலவீரகா ணீவிர்

கவிராயர் என்றிருந்தக் கால்

புவி ஆளும் இந்த திருமலைராயரின் அவையில் வீற்றிருக்கும் புலவர்களே உங்களை நீங்கள் உங்களைக் கவிராயர் என்கிறீர்கள்? அப்படி என்றால் எங்கே உங்கள் வால்? எங்கே உங்கள் நீண்ட வயிறு? முன்னங்கால்கள் எங்கே? உட்குழிந்த கண்கள் எங்கே? 

நீங்கள் குரங்குகளின் அரசன் என்று பொய் சொல்லுகிறீர்கள் என்று கலாய்க்கிறார்!


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...