குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, April 27, 2019

தலைப்பு இல்லை

ரசவாதி என்று உலகப்புகழ் பெற்ற ஒரு தத்துவ நாவல், தமிழில் கிடைக்கிறது! 

இதில் ஒரு ஞானிக்கும், ஞானம் பெறவந்த இளைஞனுக்குமான உரையாடல் வாழ்வை எப்படி சம நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பதைப் புரிந்துக் கொள்ள அனைவருக்கும் தேவையானது. 

ஞானம், மகிழ்ச்சியைப் பெற வேண்டும் என்று சென்ற இளைஞன் ஒருவர் ஒரு பெரிய மாளிகையில் வசிக்கும் ஞானியை சந்திக்கிறார். அவர் அவனைச் சந்திக்க நேரமாகும் என்று அந்தப் பெரிய மாளிகையை சுற்றி வரும்படி கூறி ஒரு கரண்டியில் இரண்டு துளி எண்ணெயை கொடுத்து அதை சிதறாமல் கொண்டு வரவேண்டும் என்று நிபந்தனை கொடுத்து வரப் பணிக்கிறார். அவனும் அதன் படி செய்து எண்ணெயை சிதறாமல் கொண்டு வருகிறான். பின்னர் ஞானி கேட்கிறார் அழகிய திரைச் சீலைகளைப் பார்த்தாயா? பூந்தோட்டத்தைப் பார்த்தாயா? நூலகத்தைப் பார்த்தாயா? என்று அதற்கு இளைஞன் எதையும் பார்க்கவில்லை எண்ணெய்த் துளி சிதறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால் எதையும் பார்க்கவில்லை என்றான். 

அதற்கு ஞானி சரி இன்னொரு தடவை சென்று அதே எண்ணெய் கரண்டியுடன் சென்று எல்லாவற்றையும் பார்த்து வா என்று சொல்ல இளைஞனும் சுற்றி பார்த்து வந்தான். வந்த உடனே தான் பார்த்த எல்லாவற்றையும் அப்படியே சரியாக ஒப்புவித்தான். எல்லாவற்றையும் கேட்ட ஞானி சரி எண்ணெய்த்துளி எங்கே என, கொட்டி விட்டது என்றான். 

சிரித்துக் கொண்ட ஞானி எப்போது எண்ணெய்த்துளியை சிந்தாமல், உலகின் அழகையும் இரசிக்கப் பழகுகிறாயோ அப்போது உனக்கு மகிழ்ச்சிக்கான வழி கிடைக்கும் என்று கூறினார். 

இதுப் போலவே நாம் எமது தினசரி வாழ்வில் சம நிலை இன்மையால் தொழில், படிப்பு, குடும்பம் என்று ஒன்றை மட்டும் கவனித்துக் கொண்டு அழகிய உலகின் இன்பங்களை அனுபவிக்கத் தவறி விடுகிறோம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...