குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, October 01, 2012

துரித மந்திர சக்தி விழிப்பு பெற காயத்ரி சாதனை உயர் சாதனைமுறைகள் - பகுதி 01

முன்னைய பதிவுகளில் நாளாந்த எளிய முறை காயத்ரி சாதனைகளை செய்யும் முறைகளை கூறி வந்தோம். இவை நாளாந்தம் அனைவரும் செய்யக்கூடியவை. சிலர் சாதனையிற்காக அதிக நேரம் ஒதுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு பெரியளவிலான சாதனையின் வடிவினை இங்கே கூறுவோம்.

இந்த சாதனையின் முக்கியத்துவம் யாதெனில் ஒருவர் தனது ஆத்ம சக்தியின் அளவினை துரிதமாக கூட்டிக்கொள்ள விரும்பின், ஏதாவது உடனடியாக நிறைவேற வேண்டிய விருப்புகள் இருப்பின் இந்த முறையினை பின்பற்றி துரித முன்னேற்றம் காணலாம். இது ஒரு நோக்கம் கருதி செய்யப்படும் உபாசனையாகும். இதனை அனுஷ்டானம் எனபர். இதனைச் செய்வதால் சாதகன் தனது கிரகப்பாதிப்புகள், வேலையின்மை, பணப்பற்றக்குறை போன்ற உலகியல் பிரச்சனைகளை தீர்ப்பதுடன் ஆன்மீக முன்னேற்றமும் துரிதமாக ஏற்படக்காண்பான்.

இந்த‌ முறையில் ஒருமுறை அனுஷ்டான‌த்தினை பூர்த்தி செய்து விட்டீர்க‌ளானால் பின்ன‌ர் எளிய‌ உபாச‌னையில் சிறிய‌ள‌வில் நாளாந்த‌ம் செய்யும் போது அதிக‌ ப‌லனைப் பெற‌முடியும். இது கிட்ட‌த்த‌ட்ட‌ வெளிநாடு சென்று அதிக‌ள‌வு ப‌ண‌த்தினை குறுகிய‌ கால‌ம் வெலைசெய்து சேமித்து பின்ன‌ர் வ‌ங்கியில் இட்டுவிட்டு உள்நாட்டில் ச‌ம்ப‌ள‌ம் குறைவான‌ தொழிலானாலும் வ‌ங்கியில் இட்ட‌ ப‌ண‌த்திற்கு வ‌ட்டி வ‌ருவ‌தால் கையில் இருக்கும் ப‌ண‌ம் அதிக‌மாக‌ இருக்கும‌ல்ல‌வா! இந்த‌ நிலையினை ஒத்த‌தே இந்த‌ அனுஷ்டான‌மும்!

பொதுவாக‌ வாழ்க்கையில் பிர‌ச்ச‌னையினை எதிர்நோக்கும் போது ம‌ன‌ம் கல‌ங்கி ச‌ரியா எதிர்கொள்ள‌முடியாத‌ப‌டி புத்தி த‌டுமாறி நிற்கும். இந்த‌ துரித‌ அனுஷ்டான‌ம் ம‌ன‌தினை, புத்தியினை சுத்தி செய்து தெய்வ‌ ஒளியினை ம‌ன‌திற்கும் புத்தியிற்கும் பாய்ச்சி சாத‌க‌னை சரியான‌ பாதையில் செல்ல‌ வைக்கும். உண்மையில் காய‌த்ரி சாத‌னை சாத‌க‌ன‌து அக‌த்தினை மாற்றி புது வ‌ழிகாட்டும்.

அனுஷ்டான‌ம் என்ப‌து 125,000 ஜெப‌த்தினை பூர்த்தி செய்யும் செய‌ன்முறையாகும். எந்த‌வொன்றும் ப‌ல‌ன் த‌ர‌வேண்டுமானால் அத‌ன் விதை இட‌ப்ப‌ட்டு, க‌ருவாகி, வ‌ள‌ர்ந்து, ம‌ர‌மாகி ப‌ல‌ன்த‌ரும‌ல்ல‌வா! அதுபோல் காய‌த்ரி ம‌ந்திர‌த்தின் மூல‌ம் ப‌ல‌ன் பெற‌ விரும்புப‌வ‌ர்க‌ள் க‌ட்டாய‌ம் இந்த‌ எண்ணிக்கியினை குறித்த காலத்தினுள் பூர்த்தி செய்ய‌ வேண்டும்.

இந்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்தபின் உங்களது நாளாந்த உபாசனை இலகுவாக சித்திக்கும். அதாவது உங்கள் நேரிய பிரார்த்தனைகள் விரைவில் பலிக்கும்.

இவற்றை தொடங்குமுன் கீழ்வரும் பதிவுகளை கட்டாயம் படிக்கவும்.



No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...