குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 10, 2012

யோகம் பயில்வதற்கான நிலை என்ன? (பதஞ்சலி யோக சூத்திர புரிதல்கள் - 03)-



முதலாவது சூத்திரத்தின் முதலாவது சொல்லில் "அத -இப்போது"  எனக் குறிப்பிடுகிறார். அந்த இப்போது என்ற மன நிலையின் பக்குவம் என்ன? பொதுவாக யாருக்கும் உண்மையான யோக வழியில் செல்லவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்? மாயை என்ற ஒன்று உள்ளது அது எம்மை கட்டுப்படுத்துகிறது, அதனால் இன்பம் வருகிறது, பின்னர் அது நிலையிலாமல் துன்பமாகிறது. இப்படி எப்போதும் ஏதோ ஒருவகையில் இன்ப துன்பம் ஏற்படுகிறது என்பதனை உணர்ந்தவனிற்கு இந்த மன நிலை ஏற்படும். 

வாழ்க்கையில் எல்லவித துன்பத்தினையும் அனுபவித்து, இனித்துன்பம் வேண்டாம் நிலையான் இன்பம் ஒன்று இருந்தால் அதனை தேடவேண்டும் என்ற நிலை ஏற்படும் போது யோகம் பயிலவேண்டும் என்ற தகுதி உண்டாகிறது. இப்படியான இரு நிலையில் ஒவ்வொருவரும் குழம்பிய, ஒழுங்கற்ற நிலையினை அடைகின்றனர். அதாவது கடந்தகால அனுபவங்கள் மாயையின் விளையாட்டுகளால் துன்பத்தினை அனுபவித்து குழம்பி, தன்னை விட மேலான ஒன்று உளது என்ற உணர்ந்த நிலையில் யோகம் என்ற பிரம்மத்துடன்/சிவத்துடன் இணைய வேண்டும் என்ற முயற்சி உண்டாகிறது. இந்த முயற்சிக்கான சரியான வழிதான் அனுசாஸனம் - ஒழுங்கு முறை. 

ஏன் ஒழுங்கு முறை?  

இப்போது நீங்கள் குழம்பி உள்ளீர்கள், உங்களிடன் ஒரு புள்ளியில் நிலைத்திருக்க கூடிய மையம் இல்லை, அதனை உருவாக்கினால் தான் நீங்கள் உங்களது உண்மையான சொருபம் நோக்கி நகரமுடியும் என்பதனை குறிக்கவே ஒழுங்கு முறை தேவை என்றார். அதாவது பேராற்றலான மனம் (இன்னும் எதை ஒழுங்கு படுத்தவேண்டும் என்பதனை பதஞ்சலியார் கூறவில்லை, அதனை அடுத்த சூத்திரத்தில் கூறுகிறார், அது மனமே ஆகும்) மாயையினால் குழம்பி ஒரு மையமற்று செயற்பட இயலாத நிலையில் உள்ளது. இதுவே இன்றைய பெரும்பாலனோரது நிலை, இந்த நிலையில் உள்ள மனதை ஒழுங்கு முறைப்படுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தி எமது அடையவேண்டிய இறை நிலையை நோக்கி செலுத்த வல்லதாக்க ஒழுங்கு படுத்த வேண்டி உள்ளது. 

ஏன் ஒழுங்கு படுத்த வேண்டும்? ஒழுங்கு படுத்தும் போதுதான் மனதினை விழிப்புணர்வுடன் ஆற்றலுடன் இலக்கு நோக்கி செலுத்த முடியும். 

ஆக யோக சூத்திரத்தின் முதலாவது சூத்திரமான ""அத யோகானுசாஸனம்" - இப்போது யோக ஒழுங்கு முறை" என்பது ஒரு யோக சாதகன் யோகம் பயில்வதற்கான தகுதி, அதாவது எந்த நிலையில் பயிலத்தொடங்க வேண்டும் என்பதனையும், அதற்கான வழிமுறை ஒழுங்கு படுத்துதல் என்பதனையும் குறிப்பிட்டுள்ளர். அடுத்த சூத்திரத்தில் எதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதனைக் கூறுகிறார். அதன் விளக்கத்தினை அடுத்த பதிவில் பார்ப்போம். 

3 comments:

  1. Please write more about Yama, Niyama, concentration etc. Atleast write Four to five pages in one publication. Then only it will be useful. I like this article very much.

    ReplyDelete
  2. அன்பின் திரு முருகானந்தன் அவர்கட்கு,

    உங்கள் வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!

    அதிகமாக எழுத விருப்பம் இருந்தாலும் எனது நாளாந்த கடமைகளுடன் எழுத நேரம் போதாமல் உள்ளது.

    உங்கள் கருத்துப்படி பதஞ்சலி யோக‌ சூத்திரத்தின் அடுத்த பகுதிகளும் தொடர் பதிவுகளாக வரும்,

    அன்புடன்
    சுமனன்

    ReplyDelete

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...