The true physician - scientist of the era! worth to listen!
Very good speech for illogical scientists and whom belong to Science religion.
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
The true physician - scientist of the era! worth to listen!
Very good speech for illogical scientists and whom belong to Science religion.

Skepticism - ஐயுறவு - எதிலும் நம்பிக்கை இன்றி கேள்வி கேட்கும் பண்பு தவறானதா?
இந்தப் பண்பு மனிதன் கையில் இருக்கும் இருமுனைக் கூர்வாள் போன்றது.
வாள் இருப்பது பாதுகாப்பானது, ஆனால் இடுப்பில் ஒழுங்காகச் சொருகத் தெரியாவிட்டல் ஆபத்தானது.
அடிப்படையில் skepticism எமக்கு இருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம், அறிவினைப் பெருக்குவதற்கும், ஆழமாக அறிதலுக்கும் உதவக் கூடிய ஒரு மன ஆற்றல்.
ஆனால் வாளை வீசத் தெரியாதவன் தனது கைகளையும், உடலையும் வெட்டிக் கொள்வது போல் skepticism இருப்பதால் தாம் பெரிய அறிவாளிகள் என்று பலர் மயங்கி விடுகிறார்கள்.
தமக்கு தெரியாத விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் அல்லது அதன் மீது சந்தேகத்தினை மாத்திரம் தெளித்து விட்டு ஏளனம் செய்து கொண்டு இருப்பது மட்டும் போதும் என்று நினைத்தால் அது அறிவைப் பெறும் முறையல்ல.
ஒன்றைப் பற்றி அறிவதற்கு அதை நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டும், பின்னர் அது பற்றி எமக்கு முதல் கவனித்தவர்கள் கூறிய கூற்றுக்களை எல்லாம் படிக்க வேண்டும், அப்படிப் படித்த பின்னர் தொகுத்துப் புரிய வேண்டும். தொகுத்துப் புரிந்த பின்னரே அது பற்றி தமது கருத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.
இப்படிச் செய்தால் மட்டுமே skepticism ஆக்கப் பூர்வ அறிவினைத் தரும். இல்லாவிட்டால் மூளையில் அதிக Cortisone இனை உருவாக்கி மன அழுத்தம் உருவாக்கி பைத்தியத்தை உருவாக்கும்
யாரிடமும் உரையாடச் செல்லும் போது எதிர்மறையாக (Negative) உரையாடினால் எமக்கு துன்பமாகவும், அழுத்தமாகவும் உணர்கிறோம் அல்லவா?
அதே நேரம் நேர்மறையாக (Positive) ஆகச் சொல்லும் போதும் மகிழ்ச்சியாகவும் நல்லதாகவும் உணர்கிறோம்.
இதற்குக் காரணம் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றம். மூளையில் நரம்புக் கணத்தாக்கினை ஏற்படுத்தும் மில்லியன் கணக்கான மூளைக் கலங்களின் ஒரு கலத்தை Dendrites என்று கூறுவோம். ஒரு எண்ணத்தை நாம் எண்ணத் தொடங்கும் போது அதை சீராக சிந்திக்கப் பழகிக் கொண்டால், யோகத்தில் சீரிய ஏகாக்கிரம் என்று சொல்லுவார்கள், இந்த Dendrites இருக்கும் இணைப்புகள் Serotonin என்ற இரசாயனத்தைச் சுரக்கும். இது இந்த இணைப்பை சுமூகமாக முன்னெடுக்கும்.
இப்படி சீரிய ஏகாக்கிரம் இல்லாமல், நாம் சிந்திக்கும் விஷயத்தை நம்பிக்கயீனமாக எண்ணத் தொடங்கினால் Dendrites இடையில் இருக்கும் இடைவெளியை Cortisone நிரப்பத் தொடங்கும். இது மனதின் ஏகாக்கிரத்தை தடுத்து அந்தக் கணத்தாக்கினை இடைமறிக்கும். இப்படி இடைமறிக்கும் போது எமக்கு துன்பமும், மன அழுத்தமும் ஏற்படும்.
பொதுவாக ஆய்வுப் படிப்பில் ஈடுபடுபவர்கள், professional skepticism தேவைப்படும் ஆடிட்டிங்க், பொலிஸ், சட்டத் தரணிகளின் மூளை மற்றவர்கள் சொல்லுவதை ஏற்க மறுத்து Cortisone இனால் ஆளப்படும்.
ஆகவே சீரிய ஏகாக்கிரம் பயிலல் அவசியமானது. ஒரு விஷயத்தை பற்றி சிந்திக்க முன்னர் அதைப் பற்றி ஆழமான கருத்துக்களை ஊன்றிப் படித்து மனதில் நம்பிக்கையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். PhD போன்ற ஆய்வுப் படிப்புகளில் Literature Review இருப்பதன் காரணமும் இதனால் தான். எமக்கு, நாம் கேள்வி கேட்கப் போகும் விஷயத்தில் ஆழமான அறிவு இருந்தால் வீணாக இடையில் எதிர்மறையாகச் சிந்தித்து Cortisone இனை உருவாக்கி எமது மூளையை அழுத்தத்திற்கு உள்ளாக்க மாட்டோம்.
இதே போல் எப்போதும் எவரைப் பற்றியும் மாற்று அபிப்பிராயமும், தவறான அபிப்பிராயமும் கொண்டிருப்பவர்கள் மூளை Cortisone இனால் கணத்தாக்கு உருவாக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கும். இப்படி அழுத்தத்திற்கு தம்மை உள்ளாக்கிக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவார்கள்.
ஆகவே தற்போதைய நவீன அறிவியல் மனமும் உடலும் எப்படி இணைந்து துணைபுரிகிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலைத் தருகிறது. இந்த அறிவினை எமது நலமான மகிழ்வான வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
Demoralization அல்லது ஒழுக்கச் சிதைவு என்பது ஒரு சமூகத்தை தனது ஆயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டிலிருந்து விலகி தம்மை தாழ்வு மனப்பான்மையுடையவர்களாகவும், குழப்பமுடையவர்களாகவும் ஆக்கி சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு தந்திரோபாயம்.
இந்த நிலை குறித்த பண்பாட்டினை பின்பற்றுவர்களின் ஸ்திரத்தன்மையினை இல்லாமல் ஆக்கி மெதுவாக சமூக ஒழுங்கினைக் குலைக்கும். இது பிரித்தானிய ஐரோப்பியவாத அடக்கு முறைச் சிந்தனை. ஒரு கலாச்சாரத்தை குழப்புவதற்கு அவர்கள் பின்பற்றும் முறைகளை தவறு, ஆபாசம் என்று சித்தரிப்பது. இதை மக்கள் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால் சமூகம் ஒன்றிணைந்து செயல்படாது. இப்படி சமூகம் பல கூறுகளாக பிளவுபட்டிருக்கும் போது பிரித்தாளுவதற்கு இலகுவாக இருக்கும்.
ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்வதாக இருந்தால், எனக்குப் புரியவில்லை தெரியவில்லை அதனால் இவை தவறானது என்று எண்ணுவதை விட முட்டாள் தனம் எதுவும் இருக்க முடியாது. ஒன்றைத் தவறு என்று சொல்வதற்கு அதைப் பற்றி விரிவாகத் தகவல்களைத் திரட்ட வேண்டும், திரட்டிய தகவல்களை தொகுத்து அறிய வேண்டும், அறிந்த தகவல்களைப் புரிந்து கொள்ள வேண்டும், புரிந்த பின்னர் அது சரியா தவறா என்று நிர்ணயிக்க வேண்டும்.
இதை விடுத்து தமது அதிகாரங்களையும், பட்டங்களையும் பதவிகளையும் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள்.
நல்ல தெளிந்த சிந்தனையுள்ள சமூகத்தை கட்டமைத்து உயர்ந்த பண்புள்ள மனித குலத்தை உருவாக்குவது ஒவ்வொருவரதும் கடமை!
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...