குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 24, 2019

தலைப்பு இல்லை

The true physician - scientist of the era! worth to listen! 

Very good speech for illogical scientists and whom belong to Science religion.


Saturday, November 23, 2019

எண்வகை குணங்களை உருமாற்றும் தாய்சக்திகள்


நாம் எட்டுவகையான உணர்ச்சிகளால் (emotions) ஆக்கப்பட்டிருக்கிறோம். இந்த உணர்ச்சிகள் அடிப்படையில் மனிதனின் அனுபவத்திற்காக இருக்கிறது. இந்த உணர்ச்சிகளைச் சரியாகப் பயன்படுத்தும் அறிவினைத் தரும் சக்திகளை எண்வகைத் தாய்சக்திகள் - அஷ்ட மாத்ருகா என்று கூறுவோம்.

இது காயத்ரி சாதனையிலும், ஸ்ரீ வித்யா சாதனையிலும் இருக்கும் ஒரு நுட்பம்.
சாதகர்கள் எவராவது தமது உணர்ச்சிகள் ஏற்படுத்தும் தடைகளால் சாதனையில் முன்னேறிச் செல்ல முடியாமல் இருந்தால் இந்தத் தாய் சக்திகளின் உதவியுடன் துரித முன்னேற்றம் பெறலாம்.

1)காமம்/ஆசை - எதையாவது ஆசைப்பட்டுக்கொண்டிருப்போம் ஆனால் நிறைவேற்றமுடியாதபடி இருப்போம். இப்படி எமது மனதிலுள்ள ஆசைகளை நிறைவேற்றும் அறிவினைத் தருபவள் பிராம்ஹி என்ற தாய்சக்தி

2)கோபம் - ஆசை அல்லது நமது எண்ணங்கள் நிறைவேறாத போது ஏற்படும் நிலை. கோபத்தினை உருமாற்றி நிதானத்தினைத் தரும் தாய்சக்தி மாகேஷ்வரீ.

3) லோபம்/பேராசை - தமது தகுதிக்கு வலிமைக்கு மேல் உள்ள விஷயங்களை அடையவேண்டும் என்ற அதி ஆசை, ஆசையிருக்கும் ஆனால் தகுதி இல்லை, ஆனால் அறிவின் சொல்லைக் கேட்காது. ஆகவே அவசரமாகச் செயல்புரிந்து துன்பத்தில் மாட்டிக்கொள்வோம். பேராசையை உருமாற்றி தியாகத்தினைத் தரும் தாய்சக்தி கௌமாரி.

4) மோஹம் - ஒன்றைப் போலியாக எண்ணி மயங்கும் நிலை. பலரும் எதைப்பார்த்தாலும் அதை நம்பி மயங்கி அதை அடைய எண்ணி முயற்சி செய்து துன்பத்தில் விழுந்துவிடுவார்கள். இப்படி மோகத்தை அன்பாக மாற்றும் தாய்சக்தி வைஷ்ணவி.

5) மதம் - தன்னைப்பற்றி அதிகமாகச் சிறப்பாக எண்ணும் தற்புகழ்ச்சி: ஒருவன் தன்னைப் பற்றி அதிகமாகச் சிந்திக்குபோது சிறப்பாக மற்றவர்களுடன் இணைந்து செயற்பட முடியாது. யானைக்கூட்டத்தில் மதம் பிடித்த யானை தனது குழுவுடன் இணைந்து செயற்படமுடியாமல் கூட்டத்துடன் சண்டையிட்டு தன்னைப் கூட்டத்திலிருந்து பிரிந்து அழிவு நடவடிக்கையில் ஈடுபடும். இதைப்போல் மதம் கொண்ட மனிதன் தன்னைப்பற்றி அதிகமாக எண்ணி சுய நலத்துடன் செயல்புரிந்து துன்பம் ஏற்படுத்திக்கொள்வான். இந்த மதகுணமாகிய தற்புகழ்ச்சியை உருமாற்றி அடக்கத்தை அளிக்கும் தாய்சக்தி வாராஹி

6) மாத்ஸர்யம் - பொறாமை: ஒருவன் நம்மை விட சிறப்பாக இருந்தால் மனதில் எப்போதும் ஒரு எரிச்சல் அல்லது அந்த நபரைப்பற்றி ஏதாவது குறை கூறும் மன நிலை இருக்கிறது என்றால் மாத்ஸர்யம் என்று பொருள். இந்த பொறாமை குணம் இருந்தால் நாம் எப்போதும் மற்றவர்களைக் குறை கூறி மன நிம்மதி இன்றி இருப்போம், இப்படி மாத்ஸர்ய பொறாமை குணத்தை உருமாற்றி அமைதியை அளிக்கும் தாய்சக்தி மாஹேந்த்ரீ.

7) பாபம்: நாம் தர்மத்திலிருந்து விலகி செய்யும் செயல்கள் எல்லாம் எமது ஆழ்மனமாகிய சித்தத்தினை பதிவினை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் எம்மை பாபங்களை செய்வித்து அதனால் துன்பம் ஏற்படுத்தும் நிலையைத் தரும். இப்படி பாவங்களை உருமாற்றி புண்ணியமாக்கி, மீண்டும் பாவங்கள் செய்யாமல் தடுத்க்கும் தாய்சக்தி சாமுண்டா.

8) ஐஸ்வரியம்: மேலே உள்ள ஏழுகுணங்களையும் சரியாக உருமாற்றினால் எமக்குக் கிடைக்கும் பலன் ஐஸ்வரியம். எமது மனோ காமியங்களை அடையச் செய்து, கோபத்தினை உருமாற்றி நிதானம், லோபத்தை உருமாற்றி தியாகம், மோகத்தை உருமாற்றி அன்பு, மதத்தை உருமாற்றி அடக்கத்தை, மாத்ஸர்யத்தை உருமாற்றி அமைதியை, பாவங்களை உருமாற்றி புண்ணியத்தை தரும் நிலையினை சாதகன் காப்பாற்றி நிலைபேறாக வைத்திருக்கும் சக்தி மகாலக்ஷ்மி தாய் சக்தி.

Friday, November 22, 2019

சாதனையின் படிமுறைகளை எனக்கு விருப்பமான படி மாற்றிக்கொள்ள முடியுமா?

அண்மையில் ஒரு சாதகர் குரு அகத்திய காயத்ரி சாதனையின் அனைத்துப் படிகளையும் தன்னால் மனவிருப்புடன் செய்ய முடியவில்லை, மனம் ஏற்றுக்கொள்ளவில்லை, அகத்தியர் மூல குரு மந்திரமும், காயத்ரியும் மாத்திரம் தினசரி சாதகம் செய்து வருகிறேன், இது சரியா? என்று கேட்டிருந்தார்.

சாதனையை தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு மனம் எம்முடன் ஒத்துழைக்கும் விஷயத்திலிருந்து தொடங்க வேண்டும் என்பது எந்த விஷயத்திலும் நாம் நீண்டகால ஈடுபாட்டுடன் செய்வதற்கு மிக அத்தியாவசியமான நிபந்தனை. ஆகவே தற்போதைய நிலையில் தாங்கள் சரி!

ஆனால் மனதினையும் சித்தத்தினையும் பரிபூரணமாகச் சுத்தி செய்து தெய்வ உருமாற்றம் விரும்பினால் மனம் போன வழியில் சென்று குருகாட்டிய வழியிற்கு தடம் மாறவேண்டும்.

சாதனை முறை என்பது ஒரு Process, பயணத்தின் அனுபவத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் நாம் பயண ஒழுங்கினைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் பயணத்தின் முழு அனுபவமும் கிடைக்காது.

ஆகவே குறித்த இரண்டு மந்திரங்கள் மாத்திரம் எனக்குப் போதும் என்று நினைத்தால் அந்த அனுபவங்களுக்குள் எம்மை மட்டுப்படுத்திக்க்கொள்கிறோம்.

மனிதன் அடிப்படையில் சலனிக்கும் மனமும், சித்தமும் உடையவன், அவன் தனது இயல்புடன் தன்னை உருமாற்ற முடியாது. ஆகவே அவனுக்கு தன்னை விட ஒரு உயரிய சக்தியும் அந்த சக்திக்கான பாதையைக் காட்டும் படிகட்டுகளும் தேவை, இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே சித்த வித்யா குருமண்டல நாமாவளி.

பின்னர் அகத்தினை ஈசனாக்கும் வழியை இணைக்கும் மூல குரு மந்திரம்.

மனம் நாம் எதற்காக இந்த சாதனையைச் செய்கிறோம் என்ற எண்ணத்தினைக் தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இது அற்ப காரணங்களாக அல்லாமல் எமது இறுதி இலட்ச்சியத்தித்திற்கு வழிகாட்டும் சங்கல்பமாக இருக்கவேண்டும். அதற்காக காயத்ரி சங்கல்பம்

பின்னர் மனதினை கூர்மையாக்கி ஒருமைப்படுத்தி மனதினை புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளியுடன் இணைக்கும் காயத்ரி மந்திரம், இது பிராணசக்தியை எம்மில் அதிகரிக்கும்.

இப்படி அதிகரித்த சக்தியை எம்மில் தெய்வ உருமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டிய கட்டளைகளை எமது ஆழ்மனமாகிய சித்தத்திற்கு தரும் சாதனை சித்த சாதனை.

இறுதியாக எமது உலக வாழ்வு இன்பமாக இருப்பதற்குத் தேவையான பதினாறு பேறுகளையும் பெற துதி.

இப்படிச் செய்யப்படும் சாதனை ஒருவனை இந்தப் பிரபஞ்சத்தின் உயர் ஞான நிலையில் இருக்கும் குருமண்டலத்துடன் இணைத்து, சாதனையைச் சரியாகச் செய்யக்கூடிய வல்லமையை சாதகனில் உண்டாக்கி, அவனது அந்தக்கரணங்களைச் சுத்தி செய்து தெய்வ குணங்களால் நிரப்பத்தொடங்கும்.

ஆகவே இவற்றைச் சிந்தித்து இந்த process இனை பின்பற்றுவதால் உங்கள் பயணம் இலகுவாகும் என்பதை உங்கள் மனதிற்கு உணர்த்தினால் மனம் அதை ஏற்றுக்கொண்டு சாதனையை முழுமையாகச் செய்ய ஒத்துழைக்கும்.

காயத்ரி உபாசனை ஏன் கட்டாயம் தேவை?

காயத்ரி மந்திரம் ஏன் சிறப்பானது, இளமையில் உபதேசிக்கப்படுகிறது என்றால் ஒரு மனிதனின் இளம் வயதில் பிரபஞ்சத்தின் இறைவனின் உண்மை இயல்பு புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளி என்ற உண்மை ஆழமாகப் பதியவைப்பதற்காகவே.

ஒரு மனிதன் தன்னை தெய்வ உருமாற்றம் செய்துகொள்ள இறைவனின் உண்மையான ஸ்வரூபம் பற்றி அறிந்திருக்க வேண்டும். பலரும் உருவங்களில் இருக்கும் வடிவத்தை இறைவன் என்று எண்ணி மயங்கிவிடக்கூடாது என்பதற்காக இறைவனின் உண்மை ஸ்வரூபம் பேரொளி என்ற உண்மை சித்தத்தில் பதிய வேண்டும் என்பதாலேயே காயத்ரி உபதேசம் அடிப்படையும் கட்டாயமும் ஆக்கப்பட்டது.

எந்த உபாசனை செய்தாலும் காயத்ரி ஜெபம் கட்டாய என்பது எமது மனதினது, சித்தத்தினது அமைப்பிற்கேற்றவாறு பல்வேறு தெய்வ உருவங்களில் எமது மன ஒன்றுவதால் நாம் இஷ்ட தெய்வங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தைனைக் கொடுத்து அதே வேளை அந்த சுதந்திரத்தால் வெறுமனே ஸ்தூல உருவத்தில் மயங்கி இறுதிப்பாதையைத் தவறவிட்டுவிடக்கூடாது என்பதால் இறையின் உண்மை ஸ்வரூபம் புத்தியைத் தூண்டும் அந்தப்பேரொளி என்பது எப்போது ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்த தெய்வ உபாசனை செய்தாலும் காயத்ரி உபாசனை கட்டாயம் என்று சொல்லி வைத்தார்கள்.

Wednesday, November 20, 2019

சித்த வித்யா சங்கத்தின் இலச்சினை



மூன்று வெளிவட்டங்கள் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரத்தைக் குறிக்கும்.

உள்ளே இருக்கும் ஐங்கோணங்கள் பஞ்சபூதங்கள் {ப்ருதிவி,அப்பு, அக்னி, வாயு, ஆகாயம்} பஞ்சதன்மாத்திரைகள் {ரூபம், கந்தம், ஸ்பரிசம், சுவை, ஸப்தம்}, ஞானேந்திரியம் {கண், மூக்கு, தோல், நாக்கு, செவி} கர்மேந்திரியம் {பாதம், கைகள், எருவாய், கருவாய், வாய்} இவற்றை செம்மைப்படுத்தி பஞ்சகோசங்களை {அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய} உருவாக்கும் யோகமுறையைக் குறிக்கும்.

ஐங்கோணங்களினது நிறங்கள் பஞ்சகோச சித்திகளைக் குறிக்கும்.

சலனிக்கும் நீர் அந்தக்கரணங்களைக் குறிக்கும்.

தாமரை சேற்றிலிருந்து சூரியனை நோக்கி மலர்வது போல் சாதகன் தனது உலக, குடும்பக் கடமைகளிலிருந்து விலகாமல் சாதனையின் மூலம் ஞானத்தை தேடவேண்டும் என்ற உத்வேகத்தின் குறியீடு. தாமரையாக சாதகன் மலரும்போது அனைத்து சம்பத்துக்களும் பெற்ற லக்ஷ்மித்துவம் உடையவனாக சாதகன் இருப்பான்.

தங்க நிறச் சூரியன் ஸவிதாவாகிய புத்தியைத் தூண்டும் அந்தப் பரம்பொருளின் பேரொளி.

சிவப்புப் புள்ளி சாதகனின் உணர்வாகிய ஆன்மா.

சித்த வித்யா என்றால் ஒருவனை செம்மைப்படுத்தும் அறிவு என்று பொருள். விஞ்ஞான என்றால் சரியான புரிதலைத் தரும் என்று அர்த்தம்.

சங்கம் என்பது மேற்குறித்த ஆர்வம் உள்ளவர்கள் சேருமிடம் என்று அர்த்தம்.

சித்த வித்யா விஞ்ஞானச் சங்கம் ஒரு மனிதனின் அந்தக்கரணங்களைச் செம்மைப்படுத்தும் எது உண்மை என்ற அறிவினையும் புரிதலையும் தரும் ஆர்வமுள்ள சாதகர்கள் சேரும் இடம் என்று பொருள்.

தலைப்பு இல்லை

Skepticism - ஐயுறவு - எதிலும் நம்பிக்கை இன்றி கேள்வி கேட்கும் பண்பு தவறானதா? 

இந்தப் பண்பு மனிதன் கையில் இருக்கும் இருமுனைக் கூர்வாள் போன்றது. 

வாள் இருப்பது பாதுகாப்பானது, ஆனால் இடுப்பில் ஒழுங்காகச் சொருகத் தெரியாவிட்டல் ஆபத்தானது. 

அடிப்படையில் skepticism எமக்கு இருக்கும் ஒரு பாதுகாப்புக் கவசம், அறிவினைப் பெருக்குவதற்கும், ஆழமாக அறிதலுக்கும் உதவக் கூடிய ஒரு மன ஆற்றல். 

ஆனால் வாளை வீசத் தெரியாதவன் தனது கைகளையும், உடலையும் வெட்டிக் கொள்வது போல் skepticism இருப்பதால் தாம் பெரிய அறிவாளிகள் என்று பலர் மயங்கி விடுகிறார்கள். 

தமக்கு தெரியாத விஷயத்தை நாம் ஏற்றுக் கொள்ள மாட்டோம் அல்லது அதன் மீது சந்தேகத்தினை மாத்திரம் தெளித்து விட்டு ஏளனம் செய்து கொண்டு இருப்பது மட்டும் போதும் என்று நினைத்தால் அது அறிவைப் பெறும் முறையல்ல. 

ஒன்றைப் பற்றி அறிவதற்கு அதை நன்கு கூர்ந்து கவனிக்க வேண்டும், பின்னர் அது பற்றி எமக்கு முதல் கவனித்தவர்கள் கூறிய கூற்றுக்களை எல்லாம் படிக்க வேண்டும், அப்படிப் படித்த பின்னர் தொகுத்துப் புரிய வேண்டும். தொகுத்துப் புரிந்த பின்னரே அது பற்றி தமது கருத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். 

இப்படிச் செய்தால் மட்டுமே skepticism ஆக்கப் பூர்வ அறிவினைத் தரும். இல்லாவிட்டால் மூளையில் அதிக Cortisone இனை உருவாக்கி மன அழுத்தம் உருவாக்கி பைத்தியத்தை உருவாக்கும்    


தலைப்பு இல்லை

யாரிடமும் உரையாடச் செல்லும் போது எதிர்மறையாக (Negative) உரையாடினால் எமக்கு துன்பமாகவும், அழுத்தமாகவும் உணர்கிறோம் அல்லவா?

அதே நேரம் நேர்மறையாக (Positive) ஆகச் சொல்லும் போதும் மகிழ்ச்சியாகவும் நல்லதாகவும் உணர்கிறோம். 

இதற்குக் காரணம் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றம். மூளையில் நரம்புக் கணத்தாக்கினை ஏற்படுத்தும் மில்லியன் கணக்கான மூளைக் கலங்களின் ஒரு கலத்தை Dendrites என்று கூறுவோம். ஒரு எண்ணத்தை நாம் எண்ணத் தொடங்கும் போது அதை சீராக சிந்திக்கப் பழகிக் கொண்டால், யோகத்தில் சீரிய ஏகாக்கிரம் என்று சொல்லுவார்கள், இந்த Dendrites இருக்கும் இணைப்புகள் Serotonin என்ற இரசாயனத்தைச் சுரக்கும். இது இந்த இணைப்பை சுமூகமாக முன்னெடுக்கும். 

இப்படி சீரிய ஏகாக்கிரம் இல்லாமல், நாம் சிந்திக்கும் விஷயத்தை நம்பிக்கயீனமாக எண்ணத் தொடங்கினால் Dendrites இடையில் இருக்கும் இடைவெளியை Cortisone நிரப்பத் தொடங்கும். இது மனதின் ஏகாக்கிரத்தை தடுத்து அந்தக் கணத்தாக்கினை இடைமறிக்கும். இப்படி இடைமறிக்கும் போது எமக்கு துன்பமும், மன அழுத்தமும் ஏற்படும். 

பொதுவாக ஆய்வுப் படிப்பில் ஈடுபடுபவர்கள், professional skepticism தேவைப்படும் ஆடிட்டிங்க், பொலிஸ், சட்டத் தரணிகளின் மூளை மற்றவர்கள் சொல்லுவதை ஏற்க மறுத்து Cortisone இனால் ஆளப்படும். 

ஆகவே சீரிய ஏகாக்கிரம் பயிலல் அவசியமானது. ஒரு விஷயத்தை பற்றி சிந்திக்க முன்னர் அதைப் பற்றி ஆழமான கருத்துக்களை ஊன்றிப் படித்து மனதில் நம்பிக்கையினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். PhD போன்ற ஆய்வுப் படிப்புகளில் Literature Review இருப்பதன் காரணமும் இதனால் தான். எமக்கு, நாம் கேள்வி கேட்கப் போகும் விஷயத்தில் ஆழமான அறிவு இருந்தால் வீணாக இடையில் எதிர்மறையாகச் சிந்தித்து Cortisone இனை உருவாக்கி எமது மூளையை அழுத்தத்திற்கு உள்ளாக்க மாட்டோம். 

இதே போல் எப்போதும் எவரைப் பற்றியும் மாற்று அபிப்பிராயமும், தவறான அபிப்பிராயமும் கொண்டிருப்பவர்கள் மூளை Cortisone இனால் கணத்தாக்கு உருவாக்கப்பட்டு துன்பப்பட்டுக் கொண்டு இருக்கும். இப்படி அழுத்தத்திற்கு தம்மை உள்ளாக்கிக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவார்கள். 

ஆகவே தற்போதைய நவீன அறிவியல் மனமும் உடலும் எப்படி இணைந்து துணைபுரிகிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலைத் தருகிறது. இந்த அறிவினை எமது நலமான மகிழ்வான வாழ்விற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


Tuesday, November 19, 2019

தலைப்பு இல்லை

Demoralization அல்லது ஒழுக்கச் சிதைவு என்பது ஒரு சமூகத்தை தனது ஆயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டிலிருந்து விலகி தம்மை தாழ்வு மனப்பான்மையுடையவர்களாகவும், குழப்பமுடையவர்களாகவும் ஆக்கி சமூக ஒழுங்கை சீர்குலைக்கும் ஒரு தந்திரோபாயம். 

இந்த நிலை குறித்த பண்பாட்டினை பின்பற்றுவர்களின் ஸ்திரத்தன்மையினை இல்லாமல் ஆக்கி மெதுவாக சமூக ஒழுங்கினைக் குலைக்கும். இது பிரித்தானிய ஐரோப்பியவாத அடக்கு முறைச் சிந்தனை. ஒரு கலாச்சாரத்தை குழப்புவதற்கு அவர்கள் பின்பற்றும் முறைகளை தவறு, ஆபாசம் என்று சித்தரிப்பது. இதை மக்கள் மனம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினால் சமூகம் ஒன்றிணைந்து செயல்படாது. இப்படி சமூகம் பல கூறுகளாக பிளவுபட்டிருக்கும் போது பிரித்தாளுவதற்கு இலகுவாக இருக்கும். 

ஒரு விஷயத்தைப் பற்றி கருத்துச் சொல்வதாக இருந்தால், எனக்குப் புரியவில்லை தெரியவில்லை அதனால் இவை தவறானது என்று எண்ணுவதை விட முட்டாள் தனம் எதுவும் இருக்க முடியாது. ஒன்றைத் தவறு என்று சொல்வதற்கு அதைப் பற்றி விரிவாகத் தகவல்களைத் திரட்ட வேண்டும், திரட்டிய தகவல்களை தொகுத்து அறிய வேண்டும், அறிந்த தகவல்களைப் புரிந்து கொள்ள வேண்டும், புரிந்த பின்னர் அது சரியா தவறா என்று நிர்ணயிக்க வேண்டும். 

இதை விடுத்து தமது அதிகாரங்களையும், பட்டங்களையும் பதவிகளையும் வைத்துக் கொண்டு எல்லாவற்றிற்கும் கருத்துத் தெரிவித்துக் கொண்டிருப்பவர்கள் முட்டாள்கள். 

நல்ல தெளிந்த சிந்தனையுள்ள சமூகத்தை கட்டமைத்து உயர்ந்த பண்புள்ள மனித குலத்தை உருவாக்குவது ஒவ்வொருவரதும் கடமை!


Monday, November 18, 2019

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்தின் ஒளி - 03


ஸம்பளா பற்றிய நூற்குறிப்புகள் பெரும்பாலும் திபேத்தியப் பௌத்த நூற்களிலேயே நம்பக்கூடிய மகிமை வாய்ந்த தகவல்கள் கிடைக்கின்றன. எனினும் இந்த திபேத்திய நம்பிக்கைக்கு ஒத்த விஷயங்கள் மற்றைய கலாச்சாரங்களிலும் காணக்கிடைக்கின்றது.

இயல்பாக எழக்கூடிய முதலாவது கேள்வி ஸம்பளா என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதே. “ஸம்” என்றால் சமஸ்க்ருதத்தில் அமைதி அல்லது சாந்தி என்று அர்த்தம். புராணங்களில் ஸம்பளத் தீவு பற்றிய வர்ணனைகள் கிடைக்கின்றது. அந்த தீவில் அம்ருத வாவி இருப்பதாகக் குறிப்படப்பட்டுள்ளது. திபேத்திய பௌத்த நூற்களில் ஸம்பளாவைப்பற்றிய குறிப்புகள் பல பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதற்கு முந்திய இரண்டாயிரம் வருங்கள் பழமையான Bon மதப்புத்தகங்களிலும் ஸம்பளா பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றது. Bon மதப்புத்தகங்களில் ஸம்பளாவை அடைவதற்கான வரைபடங்களும் கிடைக்கின்றது.

அறு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஸம்பளாவில் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி ஒவ்வொரு நூற்றாண்டின் முடிவிலும் உலக அமைதிக்கும் ஒற்றுமைக்குமாக ஸம்பள யோகிகள் பூமியில் செயல்பட வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது.

உலக அமைதிக்கும் ஸாந்திக்குமாக பாடும் ஆன்மீகர்கள் அனைவரும் இந்தத்திட்டத்தில் ஒருபடியாகவே தமது பணிகளைச் செய்கிறார்கள். ஸம்பள யோகிகளின் நோக்கம் உலகைச் சூழ உள்ள ஆகாச ஏட்டில் இருக்கும் நல்ல உணர்வுகளை அதிகரித்து பூமியில் மனித குலம் தெய்வ நிலை அடையும் சந்தர்ப்பத்தை அதிகரித்து தெய்வ குணமுள்ள மனித குலத்தை ஏற்படுத்துவதாகும்.

அடுத்து ஸம்பளா பற்றி ஆன்ட்ரூ தோமஸ் அவர்கள் தமது அறிமுகத்தில் கூறியவற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

அந்த நூலின் நோக்கமாக பூலோகத்தில் பிரபஞ்ச ஒளிமிகுந்த ஒரு கலாச்சாரத்தை தெரிவிப்பதற்குரிய ஒரு வழிகாட்டி நட்சத்திரம் என வர்ணிக்கிறார். பல நூற்றாண்டுகளாக மனிதகுலம் தமது அறிவிலும், பண்பிலும் முன்னேறி, புரிதலை மேம்படுத்தி, உயர் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து அனைத்து மனிதர்களும் சகோதரத்துவத்துடன் பழகுவதற்குரிய பண்பினை உருவாக்குவதற்குரிய புரிதலை வழங்குவதற்காக என்று கூறுகிறார்.

உலகில் இருவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். உண்மையை உண்மை என்று உடனே புரிந்துகொள்பவர்கள் ஒரு வகை, மற்றவர்கள் உண்மை என்பதை இறுதியில் புரிந்துகொள்வார்கள்.

உலகம் உருண்டை என்பதை பலவருடங்களாக ஏற்றுக்கோள்ள மறுத்தவர்கள் சோவியத் ரஷ்டா ஸ்புட்னிக் விணகலத்தின் மூலம் எடுத்த படங்களைக் கோண்டு உருண்டை என்பதை அறிந்துகொண்டனர். ஆனால் அதற்கு பல காலத்திற்கு முன்னரே உலகம் உருண்டை என்பதை அறிந்தவரகள் இருக்கத்தான் செய்தார்கள்.

இதைப்போல மனித குலத்தின் ஆன்ம பரிணாமத்தை ஒரு இரகசிய உயர் ஆன்ம சக்தியுள்ள குழு வழி நடாத்திவருகிறது என்பதை நம்ப மறுக்கலாம். ஆனால் ஒருகாலத்தில் இது உண்மை என்று தெரியும் போது அனைவரும்  ஏற்றுக்கொள்வார்கள்.  ஆகவே இந்த அடிப்படையில் ஸம்பளா பற்றி படிக்கத்தொடங்குங்கள் என்கிறார்.   

ஸம்பளா - ஸித்தாஸ்ரமம் - பூலோகத்திற்கான ஒளி - 02

1957 ம் ஆண்டளவில் எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள் தான் வேலை செய்த கம்பனியின் சார்பாக ஏற்பட்ட வழக்கு ஒன்றிற்காக திருச்சியில் தங்கவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுதந்திரம் பெற்று சிறிது காலம் என்பதால் ஆங்கிலேயக்கம்பனியின் வழக்கு திருச்சி நீதி மன்றத்தில் நடந்து வந்தது. அதில் குறித்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்படும் கணக்கு வழக்குகள் சுவாமிகளில் கைகளால் எழுதப்பட்டது என்பதால் சாட்சிக்கு சுவாமிகள் பங்குபற்றச்சொல்லில் சில மாதங்கள் திருச்சியில் தங்கச் சொல்லிவிட்டார்கள். 

திருச்சியில் ஸ்ரீ ரங்கத்தில் ராமானுஜர் சன்னதியில் நின்றுகொண்டு இருக்கும் போது தனது சிறுவயதில் தன்னைச் சந்தித்து விநாயகர் கவசம் கொடுத்த அதே பெரியவர் அவரை என்னைத்தெரியுமாடா உனக்கு? என்று கேட்டுக்கொண்டு அவர் கையைப் பிடித்து இழுக்க சுவாமிகள் நினைவிழந்து போய்விடுகிறார்.  மீண்டும் பார்க்க அடந்த வனத்திற்குள் இருப்பதை உணர்ந்து எழுந்து பார்க்க அதே பெரியவர் மாட்டிக்கொண்டாயா? என்று கேட்டுவிட்டு மறைந்து விட காட்டிற்குள் சிக்கிக்கொள்கிறார். சிறிது தூரம் நடக்கும் போது வனவாசிகளிடன் மாட்டிக்கொள்ள அவர்கள் ஈட்டியும் அம்பும் எறிய ஓடிச் சென்று ஆற்றில் குதித்தவருக்கு அதன் பிறகு நடந்த எதுவும் தெரியவில்லை. 

நினைவு திரும்பிய போது அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பர்ணசாலையில் இருப்பதை உணர்ந்து எழுந்த போது, தன்னுடைய உடலில் தழும்புகளும், காயங்கள் முற்றாக மாறி இருப்பதை உணர்ந்தார். அங்கு பல மேல் நாட்டவர்களும், மற்றும் சிலரும் தியானத்தில் இருப்பதையும் எழுந்து அவதானிக்க அவர்களுக்கு குருவாக இருந்த தெய்வீகக் களை பொருந்திய ஒருவர் சுவாமிகளை புன்னகையுடன் "உனது குரு கண்ணைய யோகி, மதராஸில் அம்பத்தூரில் இருக்கிறார், சென்று சந்திப்பாய்" என்று கூறி விட்டு தன்னுடைய இரண்டு சீடர்களை அழைந்து இவர் குணமாகிவிட்டார் அழைத்துச் சென்று விட்டுவாருங்கள் எனக்கூறிவிட்டு தன்னுடைய வேலையைப் பார்க்கப் போய் விட சீடர்கள் அழைத்து வந்து  பணமும் கொடுத்து ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றனர். அது நீலகிரி ரயில் நிலையம் என்று சுவாமிகள் சொல்லுவார்கள். 

சுவாமிகள் நேர மதராஸ் வந்து, அம்பத்தூர் சென்று கண்ணைய யோகியாரைத் தேடிச் சென்றபோது அங்கு ஒரு பெரியவர் சிறு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு ஒரு கடையோரமாக இருக்க அவரிடம் சுவாமிகள் சென்று கண்ணைய யோகியாரின் வீடு எங்கிருக்கிறார்? என்று கேட்க, அந்தப்பெரியவர் கண்ணைய யோகி என்று ஒருவரும் இல்லை, கண்ணைய நாயுடு என்று ஒருவர் அந்த வீட்டில் இருக்கிறார் என்று கூறி வழிகாட்ட இவரும் அங்கு செல்ல வீட்டினுள்ளே நாலைந்து  நபர்கள் ஏதோ கற்பதற்கு வந்தவர்கள் போல் அமர்ந்திருந்தார்கள். சற்று நேரத்தில் கடையில் இருந்த பெரியவர் வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு உள்ளே வர அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். அவர்தான் கண்ணைய யோகி என்பது சுவாமிகளுக்கு புரிந்துகொண்டு அவரும் வணங்கினார். பின்னர் யோக வகுப்புகள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஒரு மேலை நாட்டு நபர் ஒருவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவரும் கண்ணைய யோகியாரிடம் மாணவராக கற்கும் படி ஸம்பளா எனும் ஆசிரமத்திலிருந்து ரிஷிகளால் அனுப்பப் பட்டவர் என்பதை பின்னர் சுவாமிகளுக்கு கண்ணைய யோகியார் கடிதம் மூலம் கூறியிருந்தார். 

அந்த மேலை நாட்டவர்தான் உலகத்திற்கு ஸம்பளா எனும் சூக்ஷம் ஆசிரமம் பற்றி எழுதிய ஆண்ட்ரூ தோமஸ் என்பவர். இந்த ஆண்ட்ரூ தோமஸ் Shambhala Oasis of Light எனும் நூலை எழுதியிருந்தார். 

ஆண்ட்ரூ தோமஸும், எனது குருநாதரும் ஒரே நாளில் ஸ்ரீ கண்ணைய யோகியாரை சந்தித்தார்கள் என்பது எனது குரு நாதருக்கு வழிகாட்டல் நீலகிரி மலைச்சாரலில் உள்ள சூக்ஷ்ம ஆசிரமத்திலிருந்தும், ஆன்ட்ரூ தோமஸிற்குரிய வழிகாட்டல் ஸம்பளா ஆசிரமத்திலிருந்தும் கிடைத்தது என்பது முக்கிய செய்தி. 

பின்னர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரர் ஆன்ட்ரூ தோமஸிற்கு ஆங்கிலத்தில் Sidhman course என்றும் எனது குரு நாதரிற்கு சித்தி மனிதன் பயிற்சி என்றும் பாடத்தொகுப்பு எழுதிக் கற்பித்தார். இந்த சித்தி மனிதன் பயிற்சி என்பது ஒரு மனிதன் தனது அந்தக்கரணங்களை எப்படி வலுப்படுத்தி சித்திகளை அடைவது என்பதற்கான பயிற்சியாகும். 

 நாம் குரு நாதரிடம் இந்த சித்தி மனிதன் பயிற்சிப்பாடங்களைப் பயிலும் போது ஆண்ட்ரூ தோமஸ் பற்றி சுவாமிகள் அடிக்கடி கூறுவார்கள். மிக உயர்ந்த மனப்பிராண ஆற்றல் பெற்று ஸம்பளாவின் ரிஷிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்று அடிக்கடி கூறுவார். 

அவர் எழுதிய நூற்கள் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். அவருடைய Shambhala Oasis of Light நூலிலுள்ள விஷயங்களைப் பற்றி இந்தக்கட்டுரைத் தொடரில் உரையாடுவோம். 

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...