குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, November 12, 2021

தலைப்பு இல்லை

சில வருடங்களுக்கு முன்னர் பாடசாலை உயர்தர மாணவர்களுக்கு கற்பது எப்படி என்று கற்பித்திருந்தேன்! அது பெரிதும் பலன் தந்து அந்த அணியில் பலர் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்தனர்! 

அடுத்த பெப்பிரவரி மாதம் பரீட்சை எழுதும் ஒரு மாணவன் தனது கற்றல் பிரச்சனையுடன் வந்திருந்தார். நல்ல ஊக்கமும், முயற்சியும் உள்ளவர். ஆனால் நடுக்காட்டில் நிற்பது போன்ற ஒரு மனநிலையில் திகைத்து பரீட்சையை எதிர்கொள்ள என்ன செய்வது என்ற திகைப்பு நிறைந்திருந்து. 

அமைதியாக உட்கார்ந்து நம்பிக்கை கட்டியெழுப்பியாயிற்று! உயிரியல் பாடத்தில் மொத்தம் 10 பாட அலகில் எவை முக்கியமான அலகுகள், ஒவ்வொரு அலகிலும் எத்தனை concepts இருக்கிறது, கடந்த கால வினாக்களில் ஒவ்வொரு அலகும் எத்தனை MCQ, அமைப்புக் கட்டுரை, கட்டுரை வினாக்கள் வருகிறது என்று ஆராயச் சொல்லி மனதிற்கு உறுதி கொடுத்து, வரும் இரண்டு மாதங்களுக்குள் 1000 MCQ பயிற்சி செய்விப்பது என்று திட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறேன். 

இரசாயனவியலிற்கும் திட்டம் கொடுத்திருக்கிறேன்; நாளை முடிப்பதாகக் கூறியிருக்கிறார். 

ஆசிரியர்கள் இந்தப் பாடம் முடிக்கவில்லை, அந்தப் பாடம் முடிக்கவில்லை என்ற புலம்பலுடன் வந்திருந்தார்கள்! அவரிடம் நான் சொன்னது "எமது வாழ்க்கைக்கு நாம் தான் பொறுப்பு, எந்தத் தடங்கல் வந்தாலும் கல்வி கற்பதில் சாக்குப் போக்குச் சொல்லிக் கொண்டிருந்தால் வீணாகப்போவது எமது வாழ்க்கை, இதை ஞாபகம் வைத்து சுய கற்றல் என்பதை யோசியுங்கள்! ஒவ்வொரு சொல்லைப் புதிதாக அறியும் போதும் அதன் வரைவிலக்கணம் என்ன என்பதைப் புரிந்து, கேள்வி கேட்டுப் படியுங்கள் என்று சொன்னேன்! 

ஆசிரியர்கள், தாம் கற்றலுக்கு உதவி புரிபவர்கள் என்ற உணர்வுடன் மாணவர்களை தாமாக, சுயமாக கற்கும் பண்பினை உருவாக்க வேண்டும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...