குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, October 27, 2021

அசுரன் - வேதாளம் - ராக்ஷதர்

புராணங்களின் மறையியல் உண்மைகளைப் புரிதல்! 

அ-சுர (ன்) என்றால் தனது தபஸினால் சுர என்ற அம்ருதத்தை அகாரம் தோன்றும் மூலாதாரத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்று அர்த்தம், மூலாதாரம் ஆங்கார ஸ்தானம். தூய பற்றற்ற ஆங்காரமே வைராக்கியம். அசுர குணமில்லாமல் தீவிர சாதனை இல்லை! இந்த ஆங்காரம் "இச்சை, பற்றுக்களுடன் கலந்து விகாரப்பட்ட வைராக்கியங்களையே புராணங்கள் அசுரர்கள் என்கிறது. இராவணன் வைராக்கிய சீலன், அந்த வைராக்கியத்தின் விகாரம் அவனை வீழ்த்தியது. அதுபோல் வேதாளம் transformation force.

சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் வேதாளம் என்பது உப ரசத்தினைக் குறிக்கும். இந்த வேதாள உபரசங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை; இவை இயல்பில் நச்சுத்தன்மை வாய்ந்தவை, ஆனால் மகா ரசமான பாதரசத்தினை சுத்தி செய்யக்கூடியவை. பாதரசத்தினை உயிர்காக்கும் மருந்தாக மாற்றக்கூடிய ஆற்றல் உள்ளவை இந்த வேதாளங்கள் என்று கூறக்கூடிய உப ரசங்கள்!

அன்னை காளியின் அஷ்ட வேதாளங்களும் இந்த ரச சித்தியை அறிவைத் தருபவை! எப்படி பாதரசத்தை நேரடியாக மருந்தாகப் பயன்படுத்த முடியாமல் உபரசங்களான வேதாளங்களைப் பயன்படுத்தி பயன் பெறுகிறோமோ, அப்படி அன்னையை நாம் நேரடியாக அழைக்கும் தகுதியை வேதாளங்களினூடாகப் பெறலாம்.

மகா காளி உபாசகனாகிய விக்கிரமாதித்திய மகாராஜாவும் வேதாளத்தின் கேள்வி பதிலும் இதற்கு உதாரணங்கள்! 

ராக்ஷஷர்கள் அசுரர்களில் ஒருவகையினர்; மனிதனுக்கு ஏற்படும் அதியாத்மிக, அதிதைவீக, அதிபௌதீக துன்பங்களில் அதிபௌதீக துன்பங்களை ஏற்படுத்தும் ஆற்றல்கள்.

ராக்ஷஷர்கள் பிரம்மாவின் கோப அலைகளிலிருந்து உதித்தவர்கள்; பிரம்மா கிருத யுகத்தில் வேதங்களைப் பராயணம் செய்து கொண்டிருக்கும்போது (தனது தபஸினால் யோக ஆற்றலை பெற்றுக்கொண்டிருக்கும்போது) மிகுந்த பசி உண்டாகியது. இந்தப் பசியின் துன்பம் உருவாக்கிய கோப அலைகளிலிருந்து உருவாகிய கணங்கள் ராக்ஷச கணங்கள். பிரம்மாவிடமிருந்து உருவாகியதால் பிரம்ம ராக்ஷசர்கள்!

இதைபோல் மிக உயர்ந்த சாதகர்கள், யோகிகள் படைப்பு ஆற்றல் மிக்க குருவிடமிருந்து, ரிஷிகளிடமிருந்து கோப அலைகளைப் பெற்று பிரம்ம ராக்ஷசர்கள் ஆவதும் உண்டு! அவர்களின் கோபத்தால் ராக்ஷச நிலைபெற்று பூமியிலிருந்து அதிபௌதீக துன்பங்களை மனிதரிற்கு கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் பணியைச் செய்து வருவார்கள்! பூஜை, யோக சாதனைகளின் போது தகுந்த காலம் முடியும் போது தம்மிடமிருந்த உயர்ந்த வித்தையை, ஆற்றலை தகுந்தவருக்குக் கொடுத்துப் பெறும் புண்ணிய பலனினால் அந்த நிலையிலிருந்து வெளியேறுவார்கள்.

சித்த ஆயுர்வேத ரச சாஸ்த்திரத்தில் நெருப்பில் சுடப்பட்ட - புடமிடப்பட்ட மருந்துகள் ராக்ஷசரசம் எனப்படும். மிகுந்த நச்சுத்தன்மை வாய்ந்தவை என்றாலும் சரியாக பிரயோகிக்கப்பட்டால் நோய் தீர்க்கும்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...