குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, November 28, 2021

துதி பாடும் தமிழரும் வசைபாடும் தமிழரும்!

கடந்த கால வரலாற்றினை கூர்ந்து ஆராய்ந்து உலகம் பயணிக்கும் திசையிற்கு தமது வரலாறு தந்த பாடம் என்னவென்று கற்காமல் தனிமனித துதிபாடும் எந்த இனமும் சிறப்புறுவதில்லை. 

காலம், தகுதியான நபரை அக்காலத்திற்குரிய தலைவராக தேர்ந்தெடுக்கும். சிறப்பான நபரை அல்ல! காலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அக்காலத்திற்குரிய சமூகத்தை புதிய திசையில் செலுத்தும் கருவியாக இருப்பார்! அந்த சமூகம் குறித்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்லும்போது அந்தத் தலைவர் பின்பற்றிய கொள்கையில் சிலது தற்காலத்திற்கு ஒவ்வாத முட்டாள்தனம் போல் இருக்கலாம்; மற்றவை சிறப்பாக இக்காலத்திற்கும் பொருந்தலாம். அதை அப்படியே தரவாக்கி அது எமக்குத் தந்த பாடத்தைத் தவிர வேறு ஒன்றும் வரலாற்றிலிருந்து சிறப்பாக மனிதர்களுக்கு பயன்படப்போவதில்லை. 

வரலாற்றில் இருந்த நபர்களைத் துதிபாடுவதும், வசைபாடுவதும், பொதுமைப்படுத்துவதும் தம்மையோ, தாம் சார்ந்தவர்களையோ மையமாக உருவாக்கும் அரசியலிற்கான நுண்ணிய நகர்வு! 

வள்ளுவர், லா வோட்ஸு போன்றவர்கள் எக்காலத்திற்கும் பொருந்தும் விதி வகுத்த பிரபஞ்சப் பேர் அறம் அறிந்தவர்கள்.

இவற்றில் தள்ள வேண்டியவற்றை தள்ளி, கொள்ளவேண்டியவற்றைக் கொள்வது அறிவுடையவர்கள் செயல்! அதைவிடுத்து தனிமனிதர்களை துதி பாடுவது, வசைபாடுவது இரண்டும் ஒருவித சமநிலையின்மையையே தோற்றுவிக்கும்! 

இன்றைய காலத்திற்குத் தேவையானது அடுத்த பத்தாண்டுகளுக்கு பூகோள அரசியல், பொருளாதாரம் எப்படிச் செல்லப்போகிறது, அதற்கு உகந்த வகையில் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு திறனை வளர்க்க என்ன செயல் திட்டமிடுவது? பொருளாதாரத்தை வளர்க்க என்ன செய்வது? என்பது பற்றிய தெளிவான விவாதமும் செயலுமே! 

அதைவிடுத்து இருநூறு வருடத்திற்கு முன்னர் வாழ்ந்தவரை கொண்டாடுகிறோம் என்று ஒருவர் தொடங்க, அவர் கொண்டாடுவதற்கு தகுதியானவாரா? என்று இன்னொருவர் வாதத்தை எழுப்ப, அவர் பெரியா ஆளா, இவர் பெரிய ஆளா என்று வாதம் களைகட்ட, ஒருவர் சேறுபூச என்று முகநூலில் இரணகளப்படுத்த மார்க் சுக்கப்பன் ஒவ்வொருவர் மனதில் என்ன இருக்கிறது என்று ஆராய்ந்து இவர்களது விவாதங்களை தரவாக்கி இவர்களை எப்படி தூண்டிவிட்டு எனது காரியத்தைச் செய்யலாம் என்ற செயற்கை நுண்ணறிவை ஆராய்ந்து கொண்டிருக்கிறான்.  


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...