குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Friday, December 24, 2021

தலைப்பு இல்லை

சாணக்கிய நீதியில் வரும் ஒரு சுலோகம் இப்படிச் சொல்கிறது; ஒருவனது அக உறவினர்களான - மனப்பண்புகள் எப்படி இருக்க வேண்டும். 

சத்தியம் எனது தாய்; 

ஞானம் எனது தந்தை; 

தருமம் எனது சகோதரன்; 

கருணை எனது தோழன்; 

அமைதி எனது மனைவி; 

மன்னித்தல் எனது மகன்; 

இந்த ஆறு நற்பண்புகளே 

எனது உறவுகள்.

நாம் தாயின் வயிற்றிலுருந்து வளர்கிறோம்; தந்தையின் வளர்ப்பில் ஞானத்தைப் பெறுகிறோம்; தம்பியுடையான் படைக்கஞ்சான் என்றபடி சகோதரன் இருக்கும் பிணைப்பில் வலிமை பெறுகிறோம். தோள்கொடுக்கும் தோழன் இருந்தால் வாழ்வு சிறக்கிறது. 

இறுதியாக மனதைப் புரிந்துகொள்ளும் மனைவி/கணவன் வாய்த்தால் வாழ்க்கை அமைதியாக இன்பமாகிறது. 

இதுபோல் ஒருவனின் மன ஆளுமை வளர எது உண்மை/ சத்தியம் என அறிதல் அவசியம். இதுபற்றி வள்ளுவர் வாய்மை என்ற அதிகாரத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சத் ஆகிய உண்மை பற்றிய தெளிவு சத்தியம். 

ஞானம் என்பது தான் யார் என்பது பற்றிய தெளிவு. 

தர்மம் என்றால் எம்மை பிணைப்பது என்று பொருள்; தர்மம் என்பதன் அடிச்சொல் த்ர என்ற சமஸ்க்ருதச் சொல்லில் இருந்து வந்தது. இதன் பொருள் அச்சாணி; எது எம்மை பிணைக்கிறதோ அது தர்மம். 

ஒருவன் உண்மையை அறிந்து, தன்னை அறிந்து, அனைவருக்கும் பயன்பட தன்னை சமூகத்துடன் பிணைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு தர்மத்தை சரியாக உணர வேண்டும். 

தர்மம் சரியாகத் தெரியாதவன் தன்னை மற்றவர்களுடன் பிணைத்துக்கொள்ள மாட்டான். 

உதாரணமாக ஆசிரியன் என்ற தர்மத்தை ஏற்றால் மாணவனை ஆசு என்ற மாசு நீக்கி தெளிவுபெற வைப்பதே கடமை என்பதை உணர்வது தர்மம். 

தர்மம் தெரிந்தாலும் நான், எனக்கு என்ற சுயநலப்புள்ளியில் இருந்து வெளிவந்து செயலாற்ற கருணை என்ற நண்பன் தேவை. நட்பு என்பது உயர்வு, தாழ்வு என்ற அந்தஸ்து பார்க்காது. அதுபோல் கருணை என்ற குணம் எதையும் எதிர்பார்க்காது உதவி செய்யும் குணம். 

ஒருவன் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ அவனது வாழ்க்கைத் துணை அமைதியான மனம் படைத்தவராக இருத்தல் அவசியம். குழப்பம் நிறைந்த மனம், வாழ்க்கையை சரியான திசையில் செல்ல விடாது. 

பிரச்சனைகள் எம்மை விட்டு நீங்கவேண்டும் என்றால் குரோதம் கொள்ளாமல் மன்னிக்கும் பண்பு வேண்டும். எப்பேர்பட்ட கோபக்காரனாக இருந்தாலும் பிள்ளைகளுடைய தவறுகளை மன்னிக்கும் மனமுடையவனாக இருப்பது மனிதனின் இயல்பு. மன்னிக்கும் மனம் உடைய மாந்தர்க்கு வாழ்க்கை உளப்பிரச்சனை அற்றதாக இருக்கும். 

ஆக இந்த ஆறுபண்புகளும் மனிதன் தன்னுடைய ஆளுமையை வளர்க்க அவசியமானவை என்பதை இந்த உவமானத்தால் கூறியிருக்கிறார் என்று கொள்ளலாம்.


No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...