குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 27, 2018

சாதனை உரையாடல் - 07

இனி கடைமாணாக்கர் ஒப்பீடு

ஓட்டைக்குடம், ஆடு, எருமை, அல்லது வடிகட்டி போன்றவர்.

குடத்தின் இயல்பு நீரை ஏற்றல், அதுபோல் மாணவனின் இயல்பு அறிவை ஏற்றல், இப்படி அறிவை ஏற்று நிறைந்த நிறைகுடம் பின்னர் தளும்பாமல் தன்னிலையை பாதுகாத்து தேவையான நேரத்திலும் தேவையான சூழலுக்கு தன்னில் உள்ள அறிவை பயன்படுத்தும் இயல்பே நன்மாணாக்கருக்குரியது. இங்கு ஓட்டைக்குடத்தை கூறி நிறைகுடத்தை நன்மாணாக்கருக்கு மறைமுக உவமை கூறப்பட்டுள்ளது. இப்படி சுவாரசியமாக விடுகதை மன நிலையில் கற்பதே பண்டைய குருகுல முறை. ஆனால் சிலர் தாம் சிறிது அறிந்தவுடனேயே தாம் முழுமை அடைந்துவிட்டதாக மனதின் மாயையில் சிக்கி தாம் மற்றவர்களுக்கு வழிகாட்ட, கற்பிக்கத் தொடங்கி விடுவார்கள். இதனால் மனம் மேலும் விரிந்து முழுமையான பண்பைப் பெற்றும் மேலும் வளர முடியாமல் போய்விடும். பொதுவாக சாதனை செய்யும்போது ஏற்படும் அனுபவத்தில் தம்மை உயர் நிலை அடைந்து விட்டதாக கற்பனை செய்யும் நிலை அனைவருக்கும் ஒரு கட்டத்தில் வரும். அந்த நிலையை தாண்டி பசுவைப்போல், அன்னத்தைப்போல், நிறைகுடமாக மனதை வைத்திருக்க தெரிந்தவர்களுக்கு மாத்திரமே மேலும் முன்னேற முடியும்.

அடுத்த உதாரணம், ஆடு, ஆட்டிற்கு பசுவைப்போல் பெரிய இரைப்பை இல்லை, அதனால் அசைபோட முடியாது. அதுபோல் கடைமாணாக்கர்கள் உயர்ந்த அறிவை பெறுவதற்கு தமது மனதை விசாலப்படுத்திக்கொள்வதில்லை. அதேவேளை ஆட்டிற்கு காணும் செடியெல்லாம் சுவைக்க ஆசை, அதுபோல் தமது மனதை விசாலப்படுத்தி கற்றலை ஆழமாக செய்ய தம்மை பண்படுத்தாமல், எல்லா நூற்களையும் நுனிப்புல் மேய்ந்துகொள்ளும்.

மேலும் ஆடு துள்ளித்திரியும், அமைதியாக இருக்காது, அதுபோல் சிறிது தெரிந்து கொண்டு தமக்கு எல்லாம் தெரியும் என்பது போல் தம்மை முன்னிறுத்திக்கொள்ளும் மாணவர்களை இப்படி குறிப்பிடப்படுகிறார்கள்.

மேலும் ஆடு தனது குழுவிற்குள் சக ஆண் ஆடுகளுடன் முட்டிக்கொண்டு தமது பலத்தை நிருபிக்க முயலும். இதுபோல் கடை மாணாக்கர்கள் தமது சகமாணாக்கர்களுடன் தாம் அறிவில் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என நிருபிக்க எப்போதும் முட்டிக்கொள்வார்கள்.

ஆக கடை மாணாக்கர்கள் இயல்பு ஓட்டைக்குடம் போன்று முழுமையாக கற்கும் முன்னர் கொட்டிவிடும் மனப்பண்பையும், அதனால் ஆணவமாக நடக்கு மனப்பண்பை ஆட்டின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதையே குரு நாதர் அகத்தியர் ஞானத்தில் "மதிகெட்டு விள்ளாதே மகிழ்ந்திடாதே" என்ற வரிகளில் உபதேசித்துள்ளார்.

அடுத்த பதிவில் எருமையும், நெய்யரியும் பற்றிய விளக்கம்....

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...