குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Sunday, June 24, 2018

சாதனா உரையாடல்கள் - 02

சாதகர்களே,
இன்றைய கேள்வி (24/06/2018)
சாதகருக்கு உடல் ஏன் அவசியம்?
இதன் நோக்கம் சாதனையில் உடலின் அவசியத்தை அறியும் அதே வேளை தேவைக்கதிகமாக உடலில் அதிகம் கவனம் செலுத்துவதால் சாதனையின் உயர்ந்த இலக்கினை அடையமுடியாமல் போய்விடலாம் என்ற உண்மையினையும் விளங்குவது.
இதற்கு திருமூலர் இரண்டு பாடல்கள் பாடமாக தந்துள்ளார்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் 
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் 
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.” (724)

இதன் பொருள் உடம்பினை அழியவிட்டால் உயிர் வளரும் வழியும் அழியும், இப்படி உயிர் வளராவிட்டால் மெய் ஞானம் கிட்டவும் மாட்டாது, அதனால் உடலை வளர்க்கும் உபாயம் அறிந்து, உடலையும் வளர்த்து, உயிரையும் வளர்த்தேனே.
அடுத்த பாடலில் (725)
உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன்
உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புள்ளே உத்தமன் கோவில் கொண்டான்என்று
உடம்பினை யான்இருந்து ஓம்புகின் றேனே.

பலர் உடலை விட்டுவிட்டு இறையை அடையமுடியும், உடல் தாழ்ந்தது என்றெல்லாம கூறுவதை கேட்டு அதை இழுக்கென்று எண்ணியிருந்தேன், பின்னர் தெரிந்தது அதற்குள்ளேயே நான் தேடும் பொருள் உள்ளேயே இருக்கிறது என்பதையும், அந்த உத்தமன் குடிகொள்ளும் கோயில் என்பதையும் அறிந்து கோண்டு உடலைப்பாதுகாக்கிறேன் என்றார்.
இந்த இரண்டு பாடல்களும் சாதகர்களாக உடலைப்பற்றிய பார்வை எப்படி இருக்க வேண்டும் என்று இந்த இரண்டு பாடல்களும் தெளிவைத்தருகிறது.
தெளிவாக புரியவேண்டியது:
1) உடல் இறைவன் அல்ல, 
2) உடல் இறைவன் வசிக்கும் வீடு
3) உடலில் இருந்துதான் உயிர் வளரவேண்டும். 
4) சாதகர் உடலை எப்போதும் தாழ்ந்ததாக நினைக்கக்கூடாது. 
5) உடல் மட்டும் இறைசக்தியை ஈர்க்கும் சாதனம் அல்ல, மனதையும், உணர்வையும் சரியாக இயக்கினால் மட்டுமே உயிர் வளரும். ஆகவே உடலுக்கு அதீத முக்கியத்துவம் தந்து சாதனையில் முன்னேறாமல் நின்று விடக்கூடாது.

மேற்கூறியவை ஒரு சாதகன் தெரிந்து இருக்க வேண்டியவை.
இனி உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்று பார்ப்போம்.
1) உடல் மனதால் ஆளப்படுகிறது, ஆகவே மனச்சம நிலை உடலாரோக்கியத்திற்கு அவசியம்.
2) உடல் உணவால் ஆளப்படுகிறது ஆகவே உணவில் சம நிலை அவசியம்
3) உடல் மூச்சால் ஆளப்படுகிறது, ஆகவே சரியாக சுவாசிக்கத்தெரிதல் அவசியம்
4) உடல் சுற்றுச்சூழலால் ஆளப்படுகிறது, ஆகவே சுத்தமான சூழலில் வசித்தல் அவசியம். 
5) உடல் ஓய்வினால் புத்துயிர் பெறுகிறது, ஆகவே உடலிற்கு தகுந்த ஓய்வு தருதல் அவசியம். 
6) உடல் மனம், எண்ணங்கள், உணவு, ஓய்வு ஆகியவை குறிப்பிட்ட ஒழுங்கில் இருக்கும் போது ஆரோக்கியமாக இருக்கிறது. ஆகவே தினசரி உணவில், எண்ணத்தில், ஓய்வில் ஒழுங்குமுறை அவசியம்.

இவற்றைக்கடைப்பிடித்தால் இவையே உடல் வளர்க்கும் உபாயம். இது உயிரை வளர்க்கும் உபாயத்திற்கு இட்டுச்செல்லும்.
அடுத்த உரையாடலில் மனம் பற்றி ஆழமாக இணைந்து சிந்திப்போம்.

No comments:

Post a Comment

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...