குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, June 16, 2012

கவச பிரயோகம் தாந்திரீக அடிப்படையில்

கீழ்வரும் பதிவுகளையும் வாசிக்கவும்:

விநாயகர் கவசம் பற்றிய 03வது பதிவில் குறித்த கவசப் பிரயோகத்தின் சாரத்தினை குறித்த தெய்வம் சாராமல் விளக்குவதாக கூறியிருந்தோம், அதன்படி இந்த பதிவில் அவற்றை விளக்குவோம். கவசம் என்பது தாந்திரீக வழிபாட்டில் தாம் உபாசிக்கும் தெய்வ சக்தியினை தமது ஸ்தூல, சூஷ்ம உடலினை மற்றைய தீய சக்திகள் அண்டாமல் பாதுகாப்பதற்காக சக்தி வாய்ந்த பீஜ மந்திரங்களையும், கட்டளைச் சொற்களையும் (suggestions) கலந்து உருவாக்கப்பட்டிருக்கும் ஒருவகை மந்திர தோத்திரங்களாகும்.

மனிதன் என்பவன் பிராணன், மனம், உடல் என்பவற்றினால் ஆக்கப்பட்ட உணர்வின் கலவையே ஆவான். எந்த தெய்வசக்தியாக இருந்தாலும், தீய சக்தியாக இருந்தாலும் இந்த மூன்றையும் தாக்கியே ஒருவரிற்கு பலனை ஏற்படுத்தவேண்டும். உதாரணமாக நோய் உருவாவது எப்படி என்பது சித்தவித்யா விளக்கத்தில் பார்ப்போம், நோய் முதலில் ஆழ்மனதில் சூஷ்மமாக உருவாகி, பின் பிராணனை தடைப்படுத்தி ஸ்தூல உடலில் வெளிப்படும். ஆழ்மனதில் உருவாவதற்கான காரணம் பூர்வ கர்மம், தவறான ஆழ்மனப்பதிவுகள், பயம் என்பனவாகும், ஆழ்மனத்தில் பதியாமல் எந்த ஒன்றும் செயலுக்கு வருவதில்லை என்பது தற்கால மனவியலும் ஏற்றுகொண்ட பெருண்மை. இப்படிப்பட்ட தவறான பதிவுகள் சூஷ்ம உடலில் முதலிம் பிரண ஓட்டத்தினை தடைசெய்கின்றன. அதனால் பிராண ஓட்டம் சூஷ்ம உடலில் தடை பட்டு அந்த தடை உடலில் நோயாக உருப்பெறுகிறது. 

இதுபோல் மற்றயோரின் எண்ண சுழல்களும் மனதினை தாக்கி எமது பிராண ஓட்டத்தினை தடைசெய்யும் வல்லமை உடையவை, இது எண்ணுவோரின் மன பிராண வலிமையினைப் பொறுத்தது. இத்தகைய தடைகளை நீக்கி எமது பிராண மன ஓட்டங்களை சீராக்கி, பின்னர் எமது மனதில் பிராணனில், உடலில் பலமான தெய்வ சக்தியினை பதிப்பிக்கும் செயன் முறையே கவசம் எனும் தோத்திர முறையாகும்.

மனம் பிராணன் உடல் இடைத்தொடர்பும் இடைத்தாக்கமும்

மனம், பிராணன், உடல் என்பன ஒன்றுடன் ஒன்று இடைத்தொடர்பும், இடைத்தங்கலும் உடையவை. ஒன்றை வைத்து இன்னொன்றினை கட்டுப்படுத்த முடியும் என்பது எமது சித்தர்களும், முன்னோரும் கண்டு பிடித்த இன்னொரு இரகசியமாகும். மனதில் ஒன்றை புகுத்தினால் அது பிராணனிலும், உடலிலும் மாறுதலைச் செய்யும், இதுவே மந்திர சாதனை தோத்திர பாடல்கள் என்பவற்றின் அடிப்படை தத்துவமாகும். 

இதன் படி கவச பாராயணத்தின் ஊடாக உடலின் ஒவ்வொரு பகுதியில் உணர்வைச் செலுத்த அதில் பிராண சக்தி பாய்ந்து பிராண ஓட்டத்தினை சீர் செய்ய தொடங்கும். மனம் எங்கு உள்ளதோ அங்கு பிராணனும் இருக்கும். இவை இரண்டும் இணைபிரியா இரட்டை சகோதரர்கள். இதுவே கவச பாராயணத்தின் அடிப்படை தத்துவம். இதனை கொண்டு கடவுள், மதம் சாராமல் எப்படிப் பயன் படுத்தலாம் என பார்ப்போம். முற்காலத்தில் கடவுளை சார்ந்து, யோக விளக்கங்கள் அறிந்தவர்களாகவே எமது முன்னோர்கள் இருந்தனர்,ஆனால் தற்காலத்தில் மதம் என்பது உண்மையான நோக்கத்தில் இருந்து விலகி பல குழப்ப நிலையில் இருப்பதால் அடிப்படையினை கொண்டு இதனை சாதிக்கும் முறையினை விளக்குவோம். இதன் படி சாதனை படிமுறை வருமாறு;

ஒளியால் கவசமிடல்

சாதனை:

  • தனியாக இதனை பயிற்சிப்பதற்கு அமைதியான, காற்றோட்டமான ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். 
  • சுகாசனம், சித்தாசனம் போன்று அமர்ந்த நிலையிலும் செய்யலாம். அல்லது சாய்ந்த நிலையிலும் மல்லாந்து படுத்த வண்ணமும் செய்யலாம். 
  • உங்களுக்கு இஷ்ட தெய்வம் இருப்பின் அந்த தெய்வத்தினது மந்திரத்தினைக் கொண்டு விநாயகர் கவச பதிவில் கூறியபடி செய்யலாம், இல்லையெனில் கீழ்வருமாறும் செய்யலாம்,
  • கண்களை மூடிக்கொள்ளுங்கள். மூச்சினை ஆழமாக இழுத்து சில முறை விடுங்கள். 
  • உடல் தளர்வாகிய பின்னர் ஒரு தங்க நிற ஒளி ஒன்று மூச்சினூடாக வெளியில் இருந்து நெற்றிப் பொட்டில் வந்து உறைவதாக பாவிக்கவும். ஒளி சூடற்ற குளிர்மையானதாகவும் பிரகாசம் பல சூரியனை ஒத்ததாகவும் பாவிக்கவும். பின்னர் இந்த ஒளி அப்படியே தலையின் உள்ளும் புறமும் சென்று மூளையினை நன்கு பலப்படுத்துவதாக பாவிக்கவும். 
  • அதன் பின் மூளையில், தலையில் அந்த ஒளி பரவிய பின்னர் அந்த பிரகாசம் அப்படியே இருக்க ஒளி அடுத்து படிப்படியாக ஒவ்வொரு உறுப்புகளினை அடைந்து அந்தந்த உறுப்புகளை ஒளியேற்றி பிரகாசிக்க செய்வதாக பாவிக்கவும். 


        1. புருவம்,
        2. கண்கள்
        3. மூக்கு
        4. காது
        5. வாய் 
        6. கழுத்து
        7. கைகள் இரண்டும்
        8. மார்பு
        9. நெஞ்சின் நடுப்பகுதி
        10. வயிறு
        11. தொப்புள்
        12. இன உறுப்புகள்
        13. தொடை
        14. முழங்கால்
        15. கணுக்கால்
        16. பாதம் 
        17. பெருவிரல் 

பின்னர் இந்த உறுப்புகளினூடாக பின்வரிசையில் ஒவ்வொரு உறுப்பகளினூடாக அந்தந்த உறுப்புகளில் ஒளி பிரகாசிப்பதை மனக்கண்ணில் கண்டு கீழ்வரும் ஒழுங்கில் செல்லவும். 
        1. பெருவிரல் 
        2. பாதம் 
        3. கணுக்கால்
        4. முழங்கால்
        5. தொடை
        6. இன உறுப்புகள்
        7. தொப்புள்
        8. வயிறு
        9. நெஞ்சின் நடுப்பகுதி
        10. மார்பு
        11. கைகள் இரண்டும்
        12. கழுத்து
        13. வாய்
        14. காது
        15. மூக்கு
        16. கண்கள்
        17. புருவம்,
        18. மூளை/தலை 

வரை சென்று பின்னர் மீண்டும் அந்த ஒளி புருவ மத்தியில் இருப்பதை உணருங்கள். இப்போது உங்கள் மனதில் உங்கள் உறுப்புகள் ஒவ்வொன்றிலிருந்தும் ஒளிக்கற்றை வீசுவதை மனக்கண்ணில் பாருங்கள். இப்பொது அடுத்தகட்டமாக இந்த ஒளியினை கவசமாக்கும் செய்முறையினைப் பார்ப்போம். 

இப்பொழுது மேற்குறித்த ஒவ்வொரு உடல் பகுதியிலுமிருந்து ஒளி விரிவடைந்து உடலைச் சூழ முட்டை வடிவில் உருவாவதை அனுபவியுங்கள். இது எவ்வளது தூரம் என்பது உங்களது பிராண மனோசக்திகளது ஆற்றலினால் தீர்மானிக்கபடும். சாதாரணமாக் உடலைச் சூழ முன்று - நாலு அடிகள் சூழ்ந்திருப்பதாக பாவியுங்கள். இந்த நிலையில் வேறு எந்த தீய சக்தியும் உங்க்களினுள் வரமுடியாது போகும். 

ஆரம்ப காலத்தில் காலையில் இப்படி சாதனை செய்துவிட்டு ஆபீஸுக்கு சென்றீர்களானால் மாலையில் வீடு வரும் போது மற்றவருடைய காந்தசக்தியினால் தாக்கமுற்று குறைந்திருக்கும். சிலமாத பயிற்சியில் நிரந்தரமான ஒளிகிரகணம் உடலைச் சூழ அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.

இந்த பயிற்சி செய்து உடலைச் சூழ ஒளி இருக்கும் போது மனதில் உங்க்களுக்கு வேண்டியவரிற்கு நல்லெண்ணத்தினை அனுப்பினால் அது அவரிற்கு பலிக்கும், இப்படி சிந்தித்தறிந்து கொள்வதன் மூலம் பல காரியங்க்களை செய்யலாம்.

இதன் அடிப்படை மனதிலும் உடலிலும் பிராண ஓட்டத்தினை சீராக்கி வலிமைப்படுத்தலேயாகும். 

பயிற்சித்து பலனைக் கூறவும். 

சத்குரு பாதம் போற்றி !

3 comments:

எமது பதிவுகளை FaceBook இல் பகிர விரும்புவவர்கள் தகுந்த இணைப்புடன் பகிரவும். தமது தனிப்பட்ட வலைத்தளங்களில் பகிர விரும்புவபர்கள் தனிப்பட்ட மின்னஞ்சல் மூலம் அனுமதி பெற்று பகிரவும். எழுந்தமானமாக பிரதி செய்து பகிர்வது முறையான செய்கையாக கருதப்படமாட்டாது.

பங்குனி உத்தரமும் சோடச மூல வித்தையும்

பங்குனி உத்தர நன்னாள் ஸ்ரீ பூர்த்தி அமைந்த நன்னாள்  எங்கும் நிறை ஆதிஸக்தி பொன்னிறக் கிரணங்களால்  சோடச மூலவித்தை விசுத்தியில் பதித்து ஊர்த்து...