குரு நாதர் ஆசியுடன்
குரு நாதர் ஆசியுடன்.............
இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!
இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!
ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ
ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ
ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ
ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !
ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ
ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!
ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!
ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ
இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!
மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here
2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்
நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.
அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே
உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!
ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே
இங்கே
Saturday, October 05, 2019
நவராத்ரி தத்துவம்
சரஸ்வதி தியானம் - 04
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே!
சகலகலா வல்லியே!
சரஸ்வதி தியானம் - 03
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கையாசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகலகலாவல்லியே!
சரஸ்வதி தியானம் - 02
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
பித்தாக அழிப்பவன் சிவன்!
சரஸ்வதி தியானம் - 01
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
Friday, October 04, 2019
தலைப்பு இல்லை
அன்பர்களே,
இது Like இற்கான பதிவு அல்ல!
Comment இற்கான பதிவு!
கடந்த ஐந்து நாட்களாக சரஸ்வதி தியானம் என்ற எமது சிந்தனையை சகலகலாவல்லி மாலை அடிப்படையிலும், சரஸ்வதி ஸ்லோக அடிப்படையிலுமாக பதினொரு பதிவுகள் பகிர்ந்துள்ளோம்.
இதை படித்து இன்புற்றவர்கள் தமது கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்!
உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்!
அன்புடன்
அகஸ்திய குலபதி
ஸ்ரீ ஸக்தி சுமனன்
சரஸ்வதி தியானம் - 11 {சகலகலாவல்லி மாலை பாடல் - 10}
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்டளவில் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி
உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ
சகல கலாவல்லியே
வெள்ளைக் குடை தர்மத்தின் சின்னம், தூய மனதுடன் வெண்குடைக்கு கீழமர்ந்து மண்ணை ஆளும் மன்னன் எனது பண் கண்ட அளவில் எனக்கு பணியவேண்டும் என்ற ராஜவசிய வேண்டுதல் வைக்கிறார்! ஏனென்றால் இது பாடப்பட்ட சந்தர்ப்பம் அத்தகையது.
இந்தக் காலத்தைப் போலவே அந்தக் காலத்திலும் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்திருக்கும் போல! டில்லி சுல்தானுக்கு தமிழ் தெரியாது, குருமரகுருபரரிற்கோ இந்தி தெரியாது! ஆனால் எப்படியாவது மூடிக்கிடக்கும் காசி விசுவநாதர் கோயிலை திறக்க வேண்டும். அதற்காக சுல்தானை மொழிபெயர்ப்பாளராக வைத்துக் கொண்டு வேண்டுகோள் விடுக்க சுல்தான் "என்னுடன் பேசுவதற்குரிய மொழி தெரியாத உனக்கு உதவி செய்யமுடியாது என்று" அவமதித்து அனுப்பிவிட்டான். மனம் வெதும்பிய குமரகுருபரர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எதையும் செய்யாமல் எல்லா ஞானத்தையும் தரக் கூடிய சரஸ்வதியை உபாசித்து இந்த சகலகலாவல்லி மாலையைப் பாடி இந்தியும், உருதும் பேசும் ஆற்றலைப் பெற்று சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சுல்தானிடம் பேசி காசி விசுவ நாதர் கோயிலை வழிபாட்டிற்காக மீளவும் திறந்து பெற்றார் என்பது கதை!
ஆக குருமரகுருபரர் தனது தாய்மொழியாம் தமிழ் மொழியை தெளிவுறக் கற்று அதனால் பெற்ற செம்மையான தெளிந்த மனத்தினால் விரைவாக அயல் மொழியான இந்தியை துரிதமாகப் படித்துக்கொண்டார் என்பது புலனாகிறது. இன்றைய நவீன ஆய்வுகளும் தாய்மொழியை சிறப்பாக கற்பவர்களுக்கு இரண்டாவது மொழி கற்கும் ஆற்றல் இலகுவாக வரும் என்பது நிருபணமாகியுள்ளது.
மொழியைக் கற்றால் வரும் கூர்மையான மனமும் மூளையும் ஆற்றல் மிக்க மன்னனைப் பணிய வைக்கும் ஆற்றலைத் தரும்.
சகலகலாவல்லி என்பதை சகல கலைகளிலும் வல்லமை உடையவள் என்றே பலரும் பொருள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்திற்குரிய சூடாமணி நிகண்டு வல்லி என்றால் விரைந்து என்று பொருள் தருகிறது. ஆக சகல கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தருபவள் என்று பொருள். குமரகுருபரரிற்கும் விரைந்து இந்தி கற்கும் ஆற்றலைத்தந்தால் இந்தப் பொருளே பொருந்தி வருகிறது.
எல்லாக்கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தரும் அன்னையே பிரம்மன் முதல் பல்கோடி தெய்வங்கள் இருந்தாலும் உன்னைப்போன்ற கண்கண்ட தெய்வம் இருக்கிறார்களா என்று வியந்து போற்றுகிறார்.
இந்தப் பாடல் தொகுப்பிற்குரிய கதைப்படி டில்லி சுல்தானை தான் வசப்படுத்த வேண்டும் என்ற இச்சா சக்தியினை (will power) இந்தக் கடைசிப் பாடலின் முதல்வரியில் வைத்திருக்கிறார்.
இந்தப் பாடல் கற்கும் கல்வியால், சரஸ்வதியின் அருளால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை மாணவர்களுக்குத் தரும் ஒரு அரிய பாடல்!
இத்துடன் சரஸ்வதி தியானம் என்ற தலைப்பில் கடந்த நவராத்ரியின் கல்வித் தெய்வம் சரஸ்வதி தேவியையும் அவளது ஆற்றல்கள் பற்றிய சிந்தனையும் முற்றிற்று!
சரஸ்வதி தியானம் - 10 {சகலகலாவல்லி மாலை பாடல் - 09}
சரஸ்வதி தியானம் - 09 {சகலகலாவல்லி மாலை பாடல் - 08}
சொல்விற்பனமும் அவதானமும்
கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை
கொள்வாய் நளின ஆசனம் சேர்
செல்விக்கு அரிது என்று ஒரு
காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே
சகல கலாவல்லியே
சொல்விற்பனம் என்பது மொழியையும் சொல்லியும் எப்படி திறமையாக உபயோகிப்பது என்று திறமை. இன்றைய காலத்தில் communication skill என்றும் சொல்லலாம். பலர் தமது அறிவை வெளிக்காட்டுகிறோம் என்று வார்த்தைகளைக் கொட்டுவதால் மற்றவர்கள் அவரை அறிவுடையவர்கள் என்று எண்ணிவிடமாட்டார்கள்.
சிலர் தமக்கும் முன் இருப்பவர்கள் மன நிலையைப் புரிந்துகொள்ளாமல் தமக்குத் தெரிந்ததையெல்லாம் கொட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் பேச்சிலும் சொல்விற்பனம் இருப்பதில்லை.
யார் சூழலுக்குத்தகுந்த சொற்களை மற்றவர்கள் கேட்கக்கூடிய வகையில் இனிமையாக திறமையாக, ஆழமாக, தெளிவாக கூறக்கூடிய வல்லமை இருக்கிறதோ அவனுக்கு சொல்விற்பனம் இருக்கிறது எனலாம். இப்படியான சொல்விற்பனம் சரஸ்வதியின் அருளால் வருவது.
அடுத்தது அவதானம், தற்கால நவீன மூளையியல் ஆய்வுகள் சாதாரணமாக ஒரு மனிதன் தனது முன் மூளையின் ஆற்றலில் நான்கு விஷயங்களை மாத்திரமே அவதானித்து கிரகிக்ககூடிய ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்று கண்டறிந்துள்ளார்கள். முற்காலத்திலும், தற்காலத்திலும் சரஸ்வதி உபாசனையின் வல்லமையால் நாற்கவனகம் என்று நான்கு விஷயங்களை ஒரே நேரத்தில் கிரகிக்கக் கூடியவர்களும், எண்கவனகம் என்ற எட்டு விஷயங்களை கவனிக்கக்கூடியவர்களும், பத்து விஷயங்களைக் கவனிக்கக்கூடிய பத்துக் கவனகர்களும், பதினாறு விஷயங்களை கவனிக்கக்கூடிய பதினாறு கவனகர்களும், முப்பத்திரெண்டு கவனகம், நூறுகவனகம் என்றெல்லாம் மன ஆற்றல் உள்ளவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் கவன ஆற்றல் ஒருவன் தனது மூளையையும் மனதையும் சரியாக ஒழுங்குபடுத்துவதால் கிடைக்கக் கூடியது. இதற்குரிய வழிதான் சரஸ்வதி உபாசனை.
கவி சொல்லும் வல்லமைக்கு யாப்பிலக்கணம் தெரிய வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தாலும் நல்ல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி கவி சொல்ல முடியாது. இதற்கு மனம் மிக நுண்மையாக சீராக சந்தமாக இயங்க வேண்டும். இப்படி இயங்க சரஸ்வதியின் அருள் இருக்க வேண்டும்.
ஆக முதல் வரியில் சொல்விற்பனமும், அவதான சக்தியும், கவி சொல்ல வல்ல ஆற்றலும் இவற்றிற்குரிய அறிவையும் தந்து தன்னை அடிமை கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். இவற்றைத் தரும் தேவி அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சகலகலாவல்லியான உனக்கு அறிவாற்றலால் சிதையாத புகழ் கிடைக்கவல்ல கல்வி என்ற பெரும் செல்வப்பேற்றை எனக்குத் தருவது முடியாத விஷயம் அல்ல.
இன்று பலரும் கல்வி என்று மனதை நெருக்கும், அழுத்தம் தரும் விஷயங்களையே கற்கிறார்கள். அவதானக்கலை எனும் கவனகம், கவி சொல்லும் யாப்பிலக்கணம் எல்லாம் நுண்மையாக மனதின் ஆற்றலை வளர்க்கும் கலைகள். இவற்றையும் மாணவர்கள் கற்க வேண்டும். இப்படி மனதின் ஆற்றலை வளர்த்துக் கொள்பவர்களுக்கு எந்தத் தொழிலும், கல்வியும் எளிதாக செய்யும் ஆற்றல் வாய்க்கும்.
சிஷ்ய அதிகார மதிப்பீடு
சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...
-
உயரிய சிந்தனைகளும் அவற்றின் வழியமைந்த செயல்களும் இடம்பெற்று வருவதனாலேயே இந்த உலகம் இன்றளவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஞானியர்களு...
-
போகர் ஏழாயிரத்தில் சில பாடல்கள் - உரை நடையில் ஒரு வாசிப்பு ஓம் போக நாதர் பாதம் போற்றி இது போகர் ஏழாயிரத்தினை வாசித்து யோக தாந...
-
இதனுடன் தொடர்புடைய மற்றைய பகுதிகள் பகுதி - 01 பகுதி - 02 பகுதி - 03 பகுதி - 04 பகுதி - 05 பகுதி - 06 பகுதி - 07 ***************...




