குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Saturday, October 05, 2019

நவராத்ரி தத்துவம்

நவராத்ரியில் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற ஒழுங்கில் ஏன் கொண்டாடுகிறோம்? சிந்தையில் உதித்த சில கருத்துக்கள்!
இதற்கு ஒரு வலுவான ஒரு தர்க்க ரீதியிலான ஒழுங்கு இருக்கிறது. ஒருவன் முதலில் அறிவைப் பெறவேண்டும், பின்னர் அதைக்கொண்டு செல்வத்தினைப் பெறவேண்டும். பின்னர் அறிவையும் செல்வத்தினையும் காப்பாற்ற வீரம் வேண்டும். இதுவே வாழ்க்கையின் ஒழுங்கு! இப்படிப்பார்த்தால் அறிவைத்தரும் சரஸ்வதியல்லவா முதலாவதாக வணங்கப்படவேண்டும். தர்க்க ரீதியாகப்பார்த்தால் சரிதான்! ஆனால் யதார்த்தத்தில் இது உண்மையாக இருப்பதில்லை!
அறிவில் சிறந்த கற்ற பலர் இருந்தாலும் நல்ல செயல்களைச் செய்ய தைரியம் இருப்பதில்லை! எந்த ஒரு செயலையும் செய்ய துணிவும், தைரியமும், சோம்பலற்ற உத்வேகமும் தேவை. இந்தப்பண்பு இருந்தால் மட்டும் தான் ஒருவனால் எந்தச் செயலையும் செய்ய முடியும். செயலைச் செய்தாலும் பின்வாங்காமல் தடைகளை உடைத்து முன்னேற துர்க்கையின் ஆற்றல் இருந்தால் மட்டுமே முடியும். பலரும் செயல் புரிவதையே ஒரு துன்பமாக கருதும் மன நிலையைலேயே இருக்கிறார்கள்.
ஆகவே செயலைத் தொடங்க அறிவும், செல்வமும் இருந்தால் போதாது ஆனால் முதலில் தேவை தைரியம்! அதனால் தான் துர்க்கையை முதலில் பூஜிக்கும் படி வைத்தார்கள்! துர்க்கை என்றால் எவரும் அவளது ஆற்றலைத் தாண்டி வரமுடியாத வலிமையுடையவள் என்று பொருள்!
செயல் புரிய இந்த அபார ஆற்றல் வேண்டும்!
துர்க்கையை வழிபடுவது என்பது எம்மில் இந்த வலிமையை உண்டுபண்ணுவது என்று அர்த்தம்!

சரஸ்வதி தியானம் - 04

சரஸ்வதி தியானம் - 04 {சகலகலாவல்லி மாலை பாடல் - 03}
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
சென்ற இருபாடல்களிலும் சரஸ்வதி தேவியை தியானிக்க வழி சொன்னவர் அந்த தியானத்தால் தான் அடையும் இன்பத்தையும், தியானிப்பவரும் தியானிக்கப்படும் இறையும் வேறு இல்லை என்ற நிலையில் அடுத்த பாடலைப்பாடுகிறார்.
இந்தப் பாடலை குமரகுருபரரின் சரஸ்வதி தரிசனம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
உன்னை மனதில் இருத்தி எண்ணங்களைச் சீர்படுத்தி நால்வகைக் கவிகளும் பாட இந்த கடல் போன்ற, அமிழ்தம் போன்ற செழுந்தமிழில் மூழ்கிவிட்டேன்!
செழுந்ததமிழில் மூழ்குவதும் உன் அருட்கடலில் மூழ்குவதும் வேறு அல்லவே, ஆனாலும் எனக்கு இன்னும் சந்தேகம் இருக்கிறது, உனது அருளில் பரிபூரணமாக மூழ்கிவிட்டேனா என்று?
ஆனால் தோகையுடைய மயில் மழையைக் கண்டு ஆடுவதுபோல், நீ உள்ளம் தெளிந்து, நல்ல நூற்கள் எழுதும் புலமையுடையோர் கவி மழையைக் கண்டு மகிழ்வதைக் கண்டவுடன் நான் செழுந்தமிலில் மூழ்கியது உனது அருட்கடலில் மூழ்கியதுதான் என்று உணர்ந்து விட்டேன் என்று பொருள் பட கீழ்வருமாறு பாடுகிறார்;
அளிக்கும் செழுந்தமிழ் தெள்ளமுது
ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்கு என்று கூடும் கொலோ?
உளம் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே!
சகலகலா வல்லியே!
மொழியை ஆழ்ந்து கற்பவர்களது மூளை நரம்புப்பின்னல்கள் வலுவடைகிறது, மூளையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதை தற்போதைய மூளை ஆய்வுகள் நிருபிக்கின்றன. தமிழ் போன்ற செம்மையான மொழி மூளைக்கு இன்னும் ஆற்றலைத்தரும்! இப்படி செழுந்தமிழை ஆழ்ந்து கற்பதால் வரும் இன்பமே சரஸ்வதியின் பேரருளில் மூழ்கும் வழி!
கற்றலில் பெறும் இன்பமே சரஸ்வதியின் பூரண அருளைப் பெறும் வழி!
ஆகவே ஒரு சாதகன்/மாணவன் தினசரி புதுப்புது விஷயங்களைக் கற்று தனது மூளையினை இளமையாக வைத்திருப்பவன் சரஸ்வதி கடாக்ஷத்திற்கு உரியவன் என்பதில் ஐயமில்லை!

சரஸ்வதி தியானம் - 03

சரஸ்வதி தியானம் - 03 {சகலகலாவல்லி மாலை - பாடல் 02)
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
முதல் பாடலில் தேவியின் பாதங்களை தியானிக்கும் வழியைக் கூறியவர் அடுத்த பாடலில் சரஸ்வதி தேவியின் உருவை எப்படி தியானிக்க என்ன பலன் என்று கூறுகிறார்.
கற்றறிந்த அறிஞர்கள் வேண்டுவதெல்லாம் அறிஞர்களுடனும், மக்களுடனும் உரையாடும் போது தமது சொற்கள் இனிமையாக கேட்பவர்களுக்கு இதமாக சொற் சுவையுடனும், மற்றவர் மனதை ஈர்க்கும் வண்ணம் அர்த்தமுள்ளதாக பொருளுடையதாகவும் இருக்க வேண்டும் என்பதே!
இப்படி சொற்கள் சுவையுடையதாகவும், பொருளுடையதாகவும் இனிமையாக இருக்க தமிழ் வகுத்த இலக்கணம்தான் கவிதையின்பம் என்பது!
இப்படி மனதிற்கு இன்பம் தரும் கவிதைகளை நான்கு வகையாக பகுத்துள்ளனர், ஆசுகவி, மதுர கவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி என்பவை இவை. இந்த நான்கு வகைக்கவியும் பாடும் வல்லமை உள்ள ஒருவனது வார்த்தைகளும், சொற்களும் மற்றவர்கள் மனதிற்கு இன்பம் தரும், இரசிக்கக்கூடிய சுவையுடையதாக இருக்கும். இப்படியான சொற்களையுடைய கவி பாடவே எல்லாப்புலவர்களும் விரும்புகிறார்கள். இவற்றைப் பாட என்னைப்பணித்தருள்வாய் என்று முதல் இரண்டு வரிகளில் பாடி அதன் பின்னர் சரஸ்வதி தேவியின் அழகை வர்ணிக்கிறார்.
பங்கையாசனத்தில் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். முதல் பாடலில் உனது பாதங்களை எனது சஹஸ்ராரத்தில் வைத்து எனது மூளையை தண்தாமரையாக குளிர்ச்சியாக்கு என வேண்டியவர் இப்போது அந்த தாமரையில் நிரந்தரமாக சரஸ்வதி அமர்ந்து விட்டாள் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
இதை யோக மொழியில் கூறுவதானால் ஒருவனது எண்ணங்கள் சீராகி, மூளை குளிர்மையாகி சம நிலையுடைய மனதை அடைந்துவிட்ட நிலை, சரஸ்வதியின் ஆற்றல் அவனில் நிலைகொண்டுவிட்ட நிலையைக் குறிக்கிறது. இவையெல்லாம் எப்படி சாத்தியம் என்றால் தேவியை கீழ்வருமாறு தியானிப்பதன் மூலம் என்று அடுத்த வரியில் தியானிப்பதற்குரிய வழிமுறையைக் கூறுகிறார்.
வெள்ளைத்தாமரையில் அமர்ந்த அழகிய பொன்னிற உருவம், உடலோ மெல்லிய பொற்கொடி, அழகிய குன்றுகள் போன்ற மார்பு, ஐந்து வகையாகவும் தலையை அலங்கரித்துக்கொள்ளக்கூடிய காடு போன்று அடர்ந்த கூந்தல் இந்த அழகிய உருவைச் சுமந்த கரும்பின் இனிய சகலகலாவல்லியே என்று தேவியை கீழ்வரும் பாடலில் தியானிக்க வேண்டும்.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய் பங்கையாசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே
கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே
சகலகலாவல்லியே!
இப்படி தியானிக்கும் சாதகன்/மாணவன் சொற்சுவையும், பொருட்சுவையும் கொண்டு மொழியைப் பிரயோகிக்கும் ஆற்றலைப் பெறுவான் என்பது இந்தப்பாடலின் தியான விளக்கம்!

சரஸ்வதி தியானம் - 02

சரஸ்வதி தியானம் - 02
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
நவராத்ரியென்றாலே பள்ளி நாட்களில் சரஸ்வதி பூசை தொடங்குகிறது என்றுதானே சொல்லப்படுகிறது.
பாடசாலை ஞாபகத்தில் இருப்பது சகலகலாவல்லி மாலை! இதைப் படித்திருப்போம், பொருளுணர்ந்து சிந்திக்க ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு!
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
பதம் பிரித்தால்,
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத் தண் தாமரைக்குத் தகாது கொலோ என்றால் வெள்ளைத் தாமரையில் பாதங்களை வைத்திருப்பவளே உனது பாதங்களை எனது வெள்ளை உள்ளத்தில் இருத்தினால் அதன் ஆற்றலால் எனது உள்ளம் குளிர்ச்சியுள்ள தண் தாமரையாக மாற அருள் புரியமாட்டாயா? என்பதே பொருள்.
தாமரை என்பது யோகத்தில் எமது உடலில் உள்ள சக்கரங்களைக் குறிப்பது. இந்த சக்கரங்களில் எமது உடலிற்கு பிரபஞ்ச சக்தி இறங்கும் சக்கரம் சஹஸ்ராரம் எனும் ஆயிரம் இதழ் சக்கரம், ஸ்தூலத்தில் இது மூளையைக் குறிக்கும். இங்கு வெண்தாமரை என்பது தூய எண்ணங்கள் நிறைந்த மூளை என்று பொருள் கொள்ளலாம். எப்படி மூளை தூய எண்ணங்களால் நிறையும்? உனது பாதம் அந்த வெண்தாமரையாகிய எனது மூளையில் அருட்கிரணங்களைப் பாய்ச்சினால் எனது மூளையில் எழும் எண்ணங்கள் தூய்மையாகி, வெள்ளை உள்ளம் வாய்க்கும். இப்படி உன் பாதங்கள் எனது மூளையில் அருள் கிரணங்களைப் பாய்ச்சினால் அந்த வெண்தாமரை தண் தாமரையாகும்.
தண் என்றால் குளிர்ச்சியாகும், மூளை குளிர்ச்சியடைந்தால் சிந்திக்கும் திறன் பெருகும். மனம் ஒருமையடையும், எல்லாக்கலைகளையும் கற்றும் ஆற்றல் இலகுவாகப் பெருகும். மூளையில் எண்ணங்கள் ஒழுங்கில்லாமல் கொதித்துக்கொண்டிருந்தால் மனதை ஒருமுகப்படுத்த முடியாது. ஆகவே மூளை குளிர்ச்சியடைதல் என்பது மூளையின் சம நிலை குலையாத சிந்தனை செய்யும் ஆற்றல், இந்த ஆற்றலே சரஸ்வதி.
ஆக எமது சஹஸ்ராரத்தில் தேவியை குருவாக அவள் பாதத்தை அந்த வெண்தாமரையில் வைத்து தியானிக்க எமது மூளை குளிர்ந்து தண்தாமரையாகும்.
அடுத்து சக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் என்ற வரியில் சகம் ஏழையு அளித்தவன் பிரம்மா, அதை உண்டு ஆலிழைமேல் உறங்கிக் காப்பவன் விஷ்ணு
பித்தாக அழிப்பவன் சிவன்!
ஏழு உலகையும் படைப்பதற்கு நுண்மையான அறிவு தேவை, அந்த அறிவு நீ!
காப்பவன் ஓய்வாக அமைதியாக இருக்கவேண்டும்! அப்படி அமைதியாக இருப்பவனால் மட்டுமே அனைத்தையும் பொறுமையாகக் காக்க முடியும். அதனால்தான் விஷ்ணு யோக நித்திரையில் இருக்கிறார் என்று சுட்டினார்கள். அமைதியாக நடப்பதைப் பார்த்துக்கொண்டு குளிர்மையாக, பொறுமையாக இருப்பவனால் மட்டுமே மற்றவர்களைக் காக்க முடியும். அதனால் உண்டான் உறங்க என்று விஷ்ணுவைக் குறிப்பிட்டார். இப்படி விஷ்ணு சலனப்படாமல் அமைதியாக பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் புரிந்து செயல்கொள்ள மூலமாக இருக்கின்ற அறிவு நீ! இந்த அறிவு சக்தி இருப்பதால் தான் விஷ்ணு எந்த சலனமும் இன்றி அமைதியாக யோக நித்திரையில் இருந்து தனது காத்தல் தொழிலைச் செய்கிறார்.
ஒழித்தான் பித்தாக என்றால் அழித்தலைச் செய்யும் ருத்திரன் அழிப்பதற்கு ஆக்ரோஷமாக பித்தாக இருக்க வேண்டும். இந்த அழித்தலை செய்வதற்கும் தகுந்த அறிவு வேண்டும். அழித்தலும் ஒரு ஒழுங்கில் சம நிலை கெடாமல் இருக்க வேண்டும். இப்படி ருத்திரன் பித்தாக அழிக்கும் போதும் அதை சரியான ஒழுங்கில் செய்வதற்குரிய அறிவினைத் தருபவளும் நீயே!
பிரம்மா, விஷ்ணு ருத்திரன் மூவருக்கும் அவர்கள் தொழிலைச் செய்ய அறிவுசக்தியாக இருக்கும் உன்னை கண்டு கொண்டவன் பிரம்மா! அவனுக்கு நீ சுவை கொள்ளும் கரும்பாக, இனிமையாக இருக்கிறாய் சகல கலைகளிலும் வல்லமையுள்ள சகலகலா வல்லியே!
இதன் யோக நுட்ப பொருள்: சரஸ்வதி என்பது மனதின் எண்ணங்களை ஒழுங்குபடுத்து சக்தி, ஒழுங்கு! Order and perfection is Saraswathi! இதை ஒருவன் தன்னில் இருத்த அவன் மனம் ஒழுங்காக செயற்பட்டு அவனது மூளையை குளிமைப்படுத்தி மனதினைத் தூய்மைப்படுத்தி வெள்ளை உள்ளத்தினைத் தரும். இந்த அறிவு சக்தியே படைத்தல் காத்தல் அழித்தல் என்பவற்றிற்குரிய ஒழுங்கினை ஏற்படுத்துகிறது. இதை ஒருவன் மனதில் பெறுவதன் மூலம் எல்லாக்கலைகளிலும் வல்லவனாகிறான். இதுவே சரஸ்வதி உபாசனையின் அடிப்படை!

சரஸ்வதி தியானம் - 01

சரஸ்வதி தியானம் - 01
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா
இது சரஸ்வதி தேவியை துதிக்கப் பாவிக்கப்படும் எளிய மந்திர சுலோகம் இது!
தேவி சரஸ்வதி! உனக்கு வணக்கம், வரம் தருபவளே, ஆசைகளின் வடிவானவளே கற்க ஆரம்பிக்கிறேன் எனக்கு இந்த வித்தையை சித்திக்கச் செய் என்பது இதன் பொருள்!
சரஸ் என்பதை சாரையாக வெளிப்படும் நதி என்று வேதங்களை மொழிபெயர்த்தவர்கள் பொருள் கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஏற்றாற்போல் சரஸ்வதி என்ற நதியும் இருந்திருக்கிறது என்ற அடிப்படையில் கூறப்பட்டதாக இருக்கும்.
ஆனால சரஸ்வதி என்பதன் உண்மைபொருள் தடங்கலற்று சாரையாகப் பாயும் எண்ணங்களை ஒழுங்கு படுத்தும் ஆற்றலைக் குறிக்கும். எவருக்கு தடங்கலற்ற, சீரான சீரிய ஏகாக்கிரம் இருக்கிறதோ அவருக்கு சரஸ்வதியின் அருள் இருக்கிறது என்று அர்த்தம்.
ஆகவே சரஸ்வதி நமஸ்துப்யம் என்றால் சீரான எண்ணத்தை உண்டுபண்ணும் ஆற்றலுக்கு அதிபதியே உனக்கு வணக்கம் என்று பொருள்!
அடுத்த சொல் வரதே காமரூபிணி, சரஸ்வதி காமரூபிணி! இச்சை இல்லாமல் ஒரு செயல் நடைபெற முடியாது. ஆகவே வித்தையை கற்க விரும்புவனுக்கு வித்தை மேல் இச்சையை உண்டுபண்ணும் காமரூபிணி அவள்! வித்தை மேல் காமம் இருந்தால்தான் கற்பதற்குரிய ஆர்வத்தைத் தூண்டும்!
ஆகவே ஒருவன் தனது மனத்தில் எண்ண ஓட்டத்தை சீராக்கிக்கொண்டு, கற்கவேண்டும் என்ற இச்சையுடன் வித்தைய கற்க ஆரம்பிக்க வேண்டும் என்பதை இந்த சுலோகம் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறது. இப்படிக் கற்கப்படும் வித்தை சரஸ்வதியின் அருட்கடாக்ஷத்தால் வாய்க்கிறது!
சரஸ்வதி எனும் ஆற்றல் ஒரு விஷயத்தை தெளிவாக, சிறப்பாக, ஆழமாக கற்பதற்குரிய மனதின் ஆற்றல்! இந்த ஆற்றலுடன் அவன் கற்பதற்குரிய இச்சையை வளர்த்துக்கொண்டாலே அவனுக்கு அந்த வித்தை சித்திக்கும்!

தலைப்பு இல்லை

ஆனந்த ஒளி வெள்ளம்

பொன்னிறம் நிறை உள்ளம்


Friday, October 04, 2019

தலைப்பு இல்லை

அன்பர்களே, 

இது Like இற்கான பதிவு அல்ல! 

Comment இற்கான பதிவு! 

கடந்த ஐந்து நாட்களாக சரஸ்வதி தியானம் என்ற எமது சிந்தனையை சகலகலாவல்லி மாலை அடிப்படையிலும், சரஸ்வதி ஸ்லோக அடிப்படையிலுமாக பதினொரு பதிவுகள் பகிர்ந்துள்ளோம். 

இதை படித்து இன்புற்றவர்கள் தமது கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்! 

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்! 

அன்புடன்

அகஸ்திய குலபதி

ஸ்ரீ ஸக்தி சுமனன்


சரஸ்வதி தியானம் - 11 {சகலகலாவல்லி மாலை பாடல் - 10}

மண்கண்ட வெண்குடைக் கீழாக

மேற்பட்ட மன்னரும் என் 

பண்கண்டளவில் பணியச் செய்வாய்

படைப்போன் முதலாம் 

விண்கண்ட தெய்வம் பல்கோடி

உண்டேனும் விளம்பில் உன்போல்

கண்கண்ட தெய்வம் உளதோ

சகல கலாவல்லியே

வெள்ளைக் குடை தர்மத்தின் சின்னம், தூய மனதுடன் வெண்குடைக்கு கீழமர்ந்து மண்ணை ஆளும் மன்னன் எனது பண் கண்ட அளவில் எனக்கு பணியவேண்டும் என்ற ராஜவசிய வேண்டுதல் வைக்கிறார்! ஏனென்றால் இது பாடப்பட்ட சந்தர்ப்பம் அத்தகையது. 

இந்தக் காலத்தைப் போலவே அந்தக் காலத்திலும் தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்திருக்கும் போல! டில்லி சுல்தானுக்கு தமிழ் தெரியாது, குருமரகுருபரரிற்கோ இந்தி தெரியாது! ஆனால் எப்படியாவது மூடிக்கிடக்கும் காசி விசுவநாதர் கோயிலை திறக்க வேண்டும். அதற்காக சுல்தானை மொழிபெயர்ப்பாளராக வைத்துக் கொண்டு வேண்டுகோள் விடுக்க சுல்தான் "என்னுடன் பேசுவதற்குரிய மொழி தெரியாத உனக்கு உதவி செய்யமுடியாது என்று" அவமதித்து அனுப்பிவிட்டான். மனம் வெதும்பிய குமரகுருபரர் இந்தி எதிர்ப்புப் போராட்டம் எதையும் செய்யாமல்    எல்லா ஞானத்தையும் தரக் கூடிய சரஸ்வதியை உபாசித்து இந்த சகலகலாவல்லி மாலையைப் பாடி இந்தியும், உருதும் பேசும் ஆற்றலைப் பெற்று சிங்கத்தின் மீது அமர்ந்து சென்று சுல்தானிடம் பேசி காசி விசுவ நாதர் கோயிலை வழிபாட்டிற்காக மீளவும் திறந்து பெற்றார் என்பது கதை! 

ஆக குருமரகுருபரர் தனது தாய்மொழியாம் தமிழ் மொழியை தெளிவுறக் கற்று அதனால் பெற்ற செம்மையான தெளிந்த மனத்தினால் விரைவாக அயல் மொழியான இந்தியை துரிதமாகப் படித்துக்கொண்டார் என்பது புலனாகிறது. இன்றைய நவீன ஆய்வுகளும் தாய்மொழியை சிறப்பாக கற்பவர்களுக்கு இரண்டாவது மொழி கற்கும் ஆற்றல் இலகுவாக வரும் என்பது நிருபணமாகியுள்ளது. 

மொழியைக் கற்றால் வரும் கூர்மையான மனமும் மூளையும் ஆற்றல் மிக்க மன்னனைப் பணிய வைக்கும் ஆற்றலைத் தரும். 

சகலகலாவல்லி என்பதை சகல கலைகளிலும் வல்லமை உடையவள் என்றே பலரும் பொருள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பாடல் எழுதப்பட்ட காலத்திற்குரிய சூடாமணி நிகண்டு வல்லி என்றால் விரைந்து என்று பொருள் தருகிறது. ஆக சகல கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தருபவள் என்று பொருள். குமரகுருபரரிற்கும் விரைந்து இந்தி கற்கும் ஆற்றலைத்தந்தால் இந்தப் பொருளே பொருந்தி வருகிறது. 

எல்லாக்கலைகளையும் விரைந்து கற்கும் ஆற்றலைத் தரும் அன்னையே பிரம்மன் முதல் பல்கோடி தெய்வங்கள் இருந்தாலும் உன்னைப்போன்ற கண்கண்ட தெய்வம் இருக்கிறார்களா என்று வியந்து போற்றுகிறார். 

இந்தப் பாடல் தொகுப்பிற்குரிய கதைப்படி டில்லி சுல்தானை தான் வசப்படுத்த வேண்டும் என்ற இச்சா சக்தியினை (will power) இந்தக் கடைசிப் பாடலின் முதல்வரியில் வைத்திருக்கிறார். 

இந்தப் பாடல் கற்கும் கல்வியால், சரஸ்வதியின் அருளால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்ற உத்வேகத்தை மாணவர்களுக்குத் தரும் ஒரு அரிய பாடல்! 

இத்துடன் சரஸ்வதி தியானம் என்ற தலைப்பில் கடந்த நவராத்ரியின் கல்வித் தெய்வம் சரஸ்வதி தேவியையும் அவளது ஆற்றல்கள் பற்றிய சிந்தனையும் முற்றிற்று!


சரஸ்வதி தியானம் - 10 {சகலகலாவல்லி மாலை பாடல் - 09}

சொற்கும் பொருட்கும் உயிராம்
மெய் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்
நிலந்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு
அரசன்னம் நாண நடை
கற்கும் பாதாபுயத் தாயே 
சகலகலாவல்லியே
சொல்லும் சொல்லிலும், அதன் பொருளிலும் உயிர்த் தன்மை இருக்க வேண்டும். உயிர்தன்மையினை சைதன்யம் என்று சொல்லுவார்கள். இந்த சைதன்ய சக்தி எல்லாவற்றிலும் நிறைந்திருப்பதால் தான் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. 
தைத்ரிய உப நிஷதத்தின் பிருகுவல்லீ சுலோகம் 10.4 கூறுகிறது; பரம்பொருளை அனைத்திற்கும் ஆதாரமானவராக போற்ற வேண்டும். அப்படிப்போற்றுபவன் தன்னை அறிந்து தன்னில் நிலைபெற்றவனாக ஆகிறான். அவரை ஆற்றலுள்ளவனாக அறிந்தவன் ஆற்றல் வாய்ந்தவனாகிறான். சிந்தனையாகப் போற்றுபவன் சிந்திக்க வல்லவன் ஆகிறான். ஆசைகள் அவனுக்கு அடிப்பணிகின்றன. அவரைத் தலைவராகப் போற்றுபவன் தலைவனாகிறான். அவரை அழிக்கும் சக்தியாகப் போற்றுபவனைச் சூழ உள்ள பகைவர்களும் வெறுப்பவர்களும், எதிரிகளும் அழிக்கப்படுகின்றார்கள் என்று கூறுகிறது. 
இந்த உபநிஷத வாக்கியத்தின் உட்பொருளை அறிந்த மகா ஞானியே குருமரகுருபர் என்பது இந்தப்பாடலில் முதல் வரிகளில் தெரிகிறது. சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் உயிர்தருவது மெய்ஞானம், மெய்ஞானத்தின் தோற்றமே சரஸ்வதியிடமிருந்தே பிரவாகிக்கிறது. அந்த சரஸ்வதியை மெய்ஞானத்தின் பிரவாகமாக மேலே தைத்திரீய உப நிஷத்தின் பிரகாரம் தியானிக்க வல்லவர்களது சொற்கள் வாக்கு சித்தியாகிறது. சொன்ன சொல் உயிர்ப்புடன் நடக்கிறது. ஆசி கூறினால் அந்த ஆசியில் உயிர்த்தன்மையுடன் ஆசி பலிக்கிறது. ஆகவே சரஸ்வதியை சொல்லிற்கும் பொருளிற்கும் உயிராக இருக்கும் மெய்ஞானமாக தியானிக்க வேண்டும். 
எப்படித் தியானிக்க வேண்டும் என்ற அழகினை அடுத்த வரிகளில் கூறுகிறார். நிலத்தில் படும் அளவிற்கு நீண்ட துதிக்கையுடைய சிறந்த பெண் யானையும், அரச அன்னமும் வெட்கப்படும் அளவிற்கு இடை அசைவு இருக்கும் பேரழகுள்ள தாமரை போன்ற பாதங்களை உடைய தாயே உன்னை மெய்ஞானமாக தொழுது தியானிப்பவர்கள் சொல்லும், அதன் அர்த்தமும் உயிர்ப்படையும் என்ற உண்மை தெரிந்து தியானிப்பவர்கள் யார் உள்ளார்கள்? எனக்கு இந்த இரகசியம் தெரிதிருக்கிறது என்று உள்ளூர மகிழ்ந்து பாடுகிறார். 
சரஸ்வதியை மெஞ்ஞானத்தின் தோற்றமாக் தியானிப்பவர்கள் வாக்கும் சொல்லும் அதன் பொருளும் உயிர்ப்புடன் இருக்கும்.

சரஸ்வதி தியானம் - 09 {சகலகலாவல்லி மாலை பாடல் - 08}

சொல்விற்பனமும் அவதானமும் 

கவி சொல்ல வல்ல

நல்வித்தையும் தந்து அடிமை

கொள்வாய் நளின ஆசனம் சேர்

செல்விக்கு அரிது என்று ஒரு

காலமும் சிதையாமை நல்கும்

கல்விப் பெரும் செல்வப் பேறே

சகல கலாவல்லியே

சொல்விற்பனம் என்பது மொழியையும் சொல்லியும் எப்படி திறமையாக உபயோகிப்பது என்று திறமை. இன்றைய காலத்தில் communication skill என்றும் சொல்லலாம். பலர் தமது அறிவை வெளிக்காட்டுகிறோம் என்று வார்த்தைகளைக் கொட்டுவதால் மற்றவர்கள் அவரை அறிவுடையவர்கள் என்று எண்ணிவிடமாட்டார்கள். 

சிலர் தமக்கும் முன் இருப்பவர்கள் மன நிலையைப் புரிந்துகொள்ளாமல் தமக்குத் தெரிந்ததையெல்லாம் கொட்டிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் பேச்சிலும் சொல்விற்பனம் இருப்பதில்லை. 

யார் சூழலுக்குத்தகுந்த சொற்களை மற்றவர்கள் கேட்கக்கூடிய வகையில் இனிமையாக திறமையாக, ஆழமாக, தெளிவாக கூறக்கூடிய வல்லமை இருக்கிறதோ அவனுக்கு சொல்விற்பனம் இருக்கிறது எனலாம். இப்படியான சொல்விற்பனம் சரஸ்வதியின் அருளால் வருவது. 

அடுத்தது அவதானம், தற்கால நவீன மூளையியல் ஆய்வுகள் சாதாரணமாக ஒரு மனிதன் தனது முன் மூளையின் ஆற்றலில் நான்கு விஷயங்களை மாத்திரமே அவதானித்து கிரகிக்ககூடிய ஆற்றல் உள்ளவனாக இருக்கிறான் என்று கண்டறிந்துள்ளார்கள். முற்காலத்திலும், தற்காலத்திலும் சரஸ்வதி உபாசனையின் வல்லமையால் நாற்கவனகம் என்று நான்கு விஷயங்களை ஒரே நேரத்தில் கிரகிக்கக் கூடியவர்களும், எண்கவனகம் என்ற எட்டு விஷயங்களை கவனிக்கக்கூடியவர்களும், பத்து விஷயங்களைக் கவனிக்கக்கூடிய பத்துக் கவனகர்களும், பதினாறு விஷயங்களை கவனிக்கக்கூடிய பதினாறு கவனகர்களும், முப்பத்திரெண்டு கவனகம், நூறுகவனகம் என்றெல்லாம் மன ஆற்றல் உள்ளவர்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் கவன ஆற்றல் ஒருவன் தனது மூளையையும் மனதையும் சரியாக ஒழுங்குபடுத்துவதால் கிடைக்கக் கூடியது. இதற்குரிய வழிதான் சரஸ்வதி உபாசனை. 

கவி சொல்லும் வல்லமைக்கு யாப்பிலக்கணம் தெரிய வேண்டும். யாப்பிலக்கணம் தெரிந்தாலும் நல்ல எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய உறுப்புகளை ஒருசேரக் கட்டி கவி சொல்ல முடியாது. இதற்கு மனம் மிக நுண்மையாக சீராக சந்தமாக இயங்க வேண்டும். இப்படி இயங்க சரஸ்வதியின் அருள் இருக்க வேண்டும். 

ஆக முதல் வரியில் சொல்விற்பனமும், அவதான சக்தியும், கவி சொல்ல வல்ல ஆற்றலும் இவற்றிற்குரிய அறிவையும் தந்து தன்னை அடிமை கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறார். இவற்றைத் தரும் தேவி அழகிய ஆசனத்தில் அமர்ந்திருக்கும் சகலகலாவல்லியான உனக்கு அறிவாற்றலால் சிதையாத புகழ் கிடைக்கவல்ல கல்வி என்ற பெரும் செல்வப்பேற்றை எனக்குத் தருவது முடியாத விஷயம் அல்ல. 

இன்று பலரும் கல்வி என்று மனதை நெருக்கும், அழுத்தம் தரும் விஷயங்களையே கற்கிறார்கள். அவதானக்கலை எனும் கவனகம், கவி சொல்லும் யாப்பிலக்கணம் எல்லாம் நுண்மையாக மனதின் ஆற்றலை வளர்க்கும் கலைகள். இவற்றையும் மாணவர்கள் கற்க வேண்டும். இப்படி மனதின் ஆற்றலை வளர்த்துக் கொள்பவர்களுக்கு எந்தத் தொழிலும், கல்வியும் எளிதாக செய்யும் ஆற்றல் வாய்க்கும்.


சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...