குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Wednesday, June 05, 2019

இன்று உலக சுற்றுசூழல் தினமும் காரை நகரின் நிலத்தடி நீர்பிரச்சனையும்

சுற்றுச் சூழல் தினம்  வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்குரிய தினமல்ல! சிந்தனை செய்வதற்குரிய தினம்! 

ஒரு சூழலியல் விஞ்ஞானம் பயின்ற சிந்தனையாளன் என்ற அடிப்படையில் கருத்துப் பகிர்வது கட்டாயமாகிறது!

இன்று சூழலைப் பாதுகாக்க மரம் நடவேண்டும், அரசிற்கு எதிராக புரட்சி செய்ய வேண்டும் என்பது trend ஆக இருக்கும் காலத்தில் எது சூழலியல் பாதுகாப்பு என்ற கேள்வி எழுகிறது. 

நுகர்வுக் கலாச்சாரத்தினால் மனம் போதை ஏற்றப்பட்டிருக்கும் வரை உண்மையான சூழலியல் பிரச்சனைகள் தீர்க்கப்படமாட்டாது என்பது தான் உண்மை! 

மனிதன் தனது அடிப்படைத் தேவைகள் என்பதைத் தாண்டி சுகபோகத் தேவைகள் என்னும் நிலைக்கும் உற்பத்தியை பெருக்க விளையும் போது இயற்கை வளத்தை கொள்ளையடிப்பது அவசியமாகிறது. 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் காரை நகரிற்கு சென்றிருந்தேன். அங்கு எமக்கு வேண்டப்பட்ட ஒரு பெரியவர் முன்னர் மண்ணியல் விஞ்ஞானியாக (Soil Scientist) ஆக இருந்த அறிவியலாளர். அவருடன் காரைநகரின் மண்ணியல் அமைப்பைப் பற்றி உரையாடினோம். காரைநகர் கடல் சூழ்ந்த மணல் பாங்கான மண்ணை உடையது. இந்த வகை மண்ணில் மழை நீர் உடனடியாக கீழே சென்று நன்னீர் தேக்கத்தை உருவாக்கி ஒரு அழுத்தத்தை கடல் நீரிற்கு எதிராக உருவாக்கி கடல் நீர் உள்ளே வராமல் தடுத்துக் கொண்டிருக்கும், (படம் பார்க்க) 

இந்த அழுத்தத்தை சரியாக வைத்திருந்தால் மட்டும் தான் அந்த இடத்தின் நன்னீர் வளம் சரியாக இருக்கும். 

ஆனால் ஊரிலுள்ள எல்லோருக்கும் சொந்தமாக கிணறு வேண்டும் என்றும், நிலத்தடி நீரின் நுகர்வு அதிகரிக்க வேண்டும் என்றால் ஒட்டுமொத்த ஊரினதும் நீர்வளம் போய்விடும்! நீர்வளம் போவது மட்டுமல்ல, தொடர்ச்சியாக தாவரங்கள் அழிந்து பாலைவனமாகும் நிலைக்கு சூழல் தள்ளப்படும். 

ஆகவே சூழலியலில் செயலிற்கு முன்னர் புரிதல் அவசியம்! இப்படியான கடற்கரையோரங்களில் மக்களை முன்னேற்றுகிறோம் என்று வீட்டிற்கு ஒரு கிணறு கொடுக்க வேண்டும் என்ற திட்டம் தவறானது. கடல் நீரை சுத்திகரித்து நன்னீராக்கும் திட்டங்கள் பொருத்தமானவை! 

ஆகவே சூழலியல் பிரச்சனைகள் சிக்கலும் ஆழமான பார்வையும் கொண்டு அணுகப்பட வேண்டியவை.

தலைப்பு இல்லை

ஒரு மனிதன் மூன்று தளங்களில் வசிக்கிறான். நான் என்ற சொந்த சுய நலத்தளம், நானும் எனது குடும்பமும் என்ற சற்று விரிந்த நான், மூன்றாவது நாம் என்ற சமூக தளம். 

உண்மையான முன்னேற்றம் இந்த மூன்று தளங்களையும் சரியாக ஒருங்கிணைப்பதன் மூலமே உருவாகிறது. 

ஒருவன் முதலில் தன்னை முன்னேற்றிக் கொள்ள வேண்டும். தன்னை முன்னேற்றுவது என்பது தனது மனம், அறிவு, உடல் நலம், பொருளாதாரம் என்ற எல்லாத் தளங்களிலும், இப்படி தன்னை முன்னேற்றிய ஒருவன் தனது முன்னேற்றத்தை குடும்பத்துடன் பகிர்ந்து தனது குடும்பத்தவர்கள் முன்னேறுவதற்கு உதவ வேண்டும். இறுதியாக அது சமூகத்திற்கான பங்களிப்பாக மாறவேண்டும். 

இது பற்றி குருநாதர் ஸ்ரீ அம்ருதானந்த நாதர் கூறிய கருத்து அடுத்து வரும் வாரங்களில் விரிவாக எழுதுவோம்!


Tuesday, June 04, 2019

தலைப்பு இல்லை

இன்று பலருக்கு கேள்வி கேட்கும் அளவிற்கு பதிலைத் தேட உரையாட பொறுமையும் சிரத்தையும் இல்லை!
மேலும் தாம் நினைப்பது பதிலாக கிடைக்கவில்லை என்றவுடன் தாம் மட்டும் தான் அறிவாளி மற்றவர்கள் எல்லாம் முட்டாள் என்ற போக்கில் அதிருப்தியைக் காட்டுவதன் மூலம் சுய திருப்தி அடையக் கூடாது. 
கேள்வி கேட்டால் அறிவு வளரும் என்று சொல்லிக் கொடுக்கக் கூடாது. கேள்வியைக் கேட்டு சிரத்தையாக அதற்குரிய பதிலைப் பெற விடாது முயற்சித்து, திருப்தியான பதிலைப் பெற்று பின்னர் தானும் ஆராய்ந்து தனது அனுபவத்திற்கு சரியாக வரும் வரை முயற்சிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். 
மற்றவர்களிடம் கேள்வி கேட்டு கிடைக்கும் பதிலைக் கொண்டு திருப்தியடைவதை விட அது தொடர்பான நூற்களை ஆழமாக கற்று புரிவதற்கு முயற்சிக்க வேண்டும். 
தமிழில் கற்றல் என்பது கல்லுதல் என்ற சொல்லிலிருந்து வந்தது, கல்லுதல் என்றால் தோண்டுதல்! அறிவினைத் பெற மனதைத் தோண்ட வேண்டும். தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.

Monday, June 03, 2019

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 03

ஆதி காண்டம்
முதற்சர்க்கம்
சங்கேத வைகறை - முதல் 10 - 22 வரிகள்
A power of fallen boundless self awake 
Between the first and the last Nothingness, 
Recalling the tenebrous womb from which it came, 
Turned from the insoluble mystery of birth 
And the tardy process of mortality 
And longed to reach its end in vacant Nought. 
As in a dark beginning of all things, 
A mute featureless semblance of the Unknown 
Repeating for ever the unconscious act, 
Prolonging for ever the unseeing will, 
Cradled the cosmic drowse of ignorant Force 
Whose moved creative slumber kindles the suns 
And carries our lives in its somnambulist whirl. 
(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)
வீழ்ந்திருந்த வரம்பிலா ஜீவனின்
ஆற்ற லொன்று இன்மையின் ஆதி
யந்த மிரண்டின் இடையே விழித்தது
தானு தித்த அந்த காரக்
கருவறை தன்னை நினைவு கூர்ந்து,
மரணந்தன் நெடிய மந்த கதியைனையும்
பிறவியின் அவிழ்க்க வொண்ணாப் புதிரினையும்
ஏற்க விருப்பமின்றி சூனிய வெளியில் 
தன்முடி வினையே மிக்க விழைந்தது
அனைத்துப் பொருள்களின் இருண்ட துவக்கத்
தினிலே போல புலன்களுக் கெட்டா
அறியாப் பொருளின் அவயவ மில்லா
ஓர் ஊமைச் சாயல் உணர்விலா கருமந்
தன்னைத் திரும்பத் திரும்பச் செய்து
கண்மூடிய இச்சை யதனை நீடித்த
வாறே பிரபஞ்சத் துயில்மயக் கத்தின்
சக்தி தன்னை ஏந்தி யணைத்தது
ஆக்கும் திறனுடை அந் நித்திரை தானே
சூரியர் தமையும் ஒளிரச் செய்து
நம்முடைய வாழ்வனைத்தையுமே தன்னுடை
துயில் நடைச் சுழலினில் தாங்கிச் செல்லும்.
ஜீவன் அல்லது ஆத்மன் எல்லையற்ற பரம்பொருளின் கருவறையிலிருந்து வந்து மனிதப் பிறவி எடுத்திருக்கிறது. அந்த ஜீவனின் ஆற்றல் வரம்பில்லாதது. தற்போது ஆத்மன் இருக்கும் நிலை தொடக்கத்திற்கும் முடிவிற்கும் இடையில் இருக்கும் ஒரு இடை நிலை. இதை பகவான் தனது ஒருங்கிணைந்த யோகத்திலும், மனிதனை தெய்வமாக வல்ல ஆற்றலுள்ள ஒரு இடை நிலை ஆற்றலாகவே குறிப்பிடுகிறார். தான் எங்கிருந்து வந்தோம் என்ற நினைவு ஆத்மனிற்கு ஆழத்தில் இருக்கிறது. காயத்ரிதேவியின் "ஆயாது வரதே தேவி பிரம்ம வாதினி காயத்ரீம் ஸந்தஸாம் மாதா பிரம்ம யோனிர் நமோஸ்துதே" என்ற ஆவாகன ஸ்லோகத்தில் வரும் பிரம்ம யோனி என்ற சொல்லின் பொருளை இந்த "Recalling the tenebrous womb from which it came" இந்த வரிகளில் குறிப்பிடுகிறார். Tenebrous womb என்பது இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் தோற்றம் பெற்ற ஒரு கருப்பை. இதுவே பிரம்ம யோனி! இங்கிருந்துதான் பிரபஞ்சத்தின் அனைத்தும் தோற்றம் பெறுகிறது.
இந்தக் கருப்பையிலிருந்து நாம் வந்தோம் என்ற நினைவு ஆத்மனுக்கு ஆழமாக இருக்கிறது. தான் வந்த இடத்தினை மீண்டும் அடைவதற்கு அவன் அமரத்துவம் பெற வேண்டும். ஆனால் இறப்பும் பிறப்பும் என்று அவன் பயணம் தாமதமாகிக் கொண்டு இருக்கிறது.  இப்படி பிறந்து இறந்து கொண்டிருப்பதால் vacant Nought என்ற மூல சூன்யத்தை அடைவதற்கு தாமதமாகிக் கொண்டு இருக்கிறான். 
எல்லாவற்றிற்கும் மூலமான அந்த காரிருள் கருங்குழி dark beginning of all things, புலன்களுக்குப் புலப்படாத வெறுமையான அந்த மௌனத் தோற்றம், விழிப்புணர்வு இல்லாமல் தனது கர்மத்தினை மீண்டும் மீண்டும் செய்து பிரபஞ்சத்தின் அந்த துயில் மயக்கத்தில் ஈடுபடுகிறது. விழிப்புணர்வு இல்லாமையால் எதையும் அறியமுடியா குருட்டு நிலையில் மீண்டும் மீண்டும் இந்த பிரபஞ்ச துயில் மயக்கத்தில் தனது இச்சையை ஏற்படுத்திக் கொண்டு, அனைத்தையும் படைக்கும் அந்த சக்தி பிரபஞ்ச மயக்கம் எனும் அறியாமை சக்தியின் தொட்டிலாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அந்த சக்தி படைப்புத் தீயாக வெளிப்படாமல் தூக்கத்தில் இருந்து கொண்டு சூரியப் பிரகாசமாக எமது மயக்கம் நிறியந்த இந்த வாழ்க்கைச் சுழலை இயக்குகிறது. 
ஸாவித்ரியின் இந்த வரிகள் சாதகர்களுக்கு கூறும் ஆன்ம உண்மைகள்:
மனித ஆன்மாவும் பிரபஞ்சமும் ஒரு மூல கருப்பையில் இருந்து வந்து முடிவினை அடைவதற்காக தமது பரிணாமத்தில் பாடுபட்டுக் கொண்டு இருக்கின்றன. 
இந்த கருப்பையினை ஸ்ரீ அரவிந்தர் "Tenebrous womb" என்கிறார். இதை வேதம் பிரம்ம யோனி என்கிறது. 
மனிதன் பூரணமடையாத ஆனால் பூரணம் அடைய முயன்று கொண்டு இருக்கும் ஒரு இடை நிலைப் பொருள். 
மனிதன் விழிப்புணர்வு இன்மையால் இந்த பிரபஞ்ச மயக்கத்தில் சிக்கிக் கொள்கிறான். 
இந்த பிரபஞ்ச மாயசக்தி நுணுக்கமாக உறங்கு நிலையில் இருந்து கொண்டு விழிப்புணர்வு இல்லாதவர்களை பிறப்பு இறப்பில் ஆழ்த்திக் கொண்டும் விழிப்புணர்வு அடைந்தவனுக்கு ஆன்ம ஒளிதரும் சூரியனாகவும், படைப்புத் திறனாகவும் வெளிப்படுகிறது. 
தொடரும்... 
குறிப்பு: 
இந்த உரை எனது ஸாவித்ரியின் மீதான சுயகற்கையும் ஸாதனா அனுபவத்தின் மூலமும் எழுதப்படுவது. கால ஓட்டத்தில் திருத்தி புரிதல் மேம்படுத்தப்படலாம்.

பாராயணமும் அனுபவ பொருளும்

ஏன் பாராயணம் அவசியம்? வேதங்கள், தேவாரங்கள், திருவாசகம், சித்தர் பாடல்கள் இவற்றை தொடர்ச்சியாக படிக்க வேண்டிய தேவை என்ன? 

இவை அவரவர் பெற்ற அனுபவங்களின் அதிர்வினை குறித்த சந்தத்தில் ஏற்றிப்பாடியிருப்பார்கள். நாமும் தொடர்ச்சியாகப் பாராயணம் செய்யும் போது அந்த அதிர்வினைப் பெறும் வாய்ப்பினைப் பெறுவோம். அப்படி அந்த அதிர்வு நமக்குக் கிடைத்தால் நாமும் அவர்கள் பெற்ற அனுபவத்தைப் பெறுவோம். 

ஆனால் பாராயணத்தின் மூலம் அனுபவத்தைப் பெற மனம் ஒன்றுமில்லா, முன் துணிபில்லா நிலையில் இருக்க வேண்டும். அறிவைப் பாவித்து பொருள் காண விளையும் அறிவாளிகள் அனுபவத்தைத் தவற விடுவர். அவர்கள் தம்முள் ஏற்கனவே ஏற்றிய குப்பையினை வைத்துக் கொண்டு குழப்பமுறுவர். 

ஆகவே எவர் எந்த முன் துணிபு இல்லாமல் பாராயணம் செய்து, பின்னர் மெதுவாக ஒவ்வொரு சொல்லினதும் பொருள் என்ன என்று ஊன்றிக் கவனித்து ஆராய்ந்து வர அவற்றின் பொருள் ஆழ்மனத்திற்கு புலப்படும். பின்பு அதுவே அவரவர் ஆன்ம அனுபவத்திற்கு பாதையாகும்.

இப்படித் தான் வேதங்கள், தேவார திருவாசகம், சித்தர் பாடல்கள், திருப்புகழ், அபிராமி அந்தாதி, விநாயகர் அகவல், போன்ற நூற்கள் தொடர்ச்சியாக படிக்கப்பட வேண்டும்.


ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 02

ஸ்ரீ அரவிந்தர் தனது ஸாவித்ரி காவிய முன்னுரையில் கீழ்வருமாறு அந்தக் காவியத்தின் ஆசிரியர் குறிப்பாக கூறுவதை கீழே தந்துள்ளோம். 

ஸத்தியவான் ஸாவித்ரி கதை என்பது மகாபாரதத்தில் திருமணக் காதல் மரணத்தை வெல்கிறது என்ற கதையாக இருக்கிறது. ஆனால் இந்தப் புராணம் மனிதனின் பல சிறப்பமிசங்களைக் கூறுகிறது, வேத பரிணாம சுழற்சியின் பல குறீயீட்டு இரகசியங்களைக் கூறுகிறது. 

ஸத்யவான் தெய்வீக உண்மைகளைத் தன்னுள்ளே தாங்கிய ஆத்மன், ஆனால் மரணத்தினதும் அறியாமையினதும் பிடிக்குள் சிக்கியவன். ஸாவித்ரி என்பது தெய்வீகச் சொல், சூரியதேவனின் மகள், எல்லையற்ற உண்மைப் பொருளான பெண் தெய்வம், மேலிருந்து கீழிறங்கி ஸத்யவானை காக்க பிறப்பெடுக்கிறது; அஸ்வபதி ஸாவித்ரியின் மனித தந்தை, தபஸின் அதிபதி, இறப்பிலிருந்து அமரத்துவத்திற்கு முயற்சிக்கும் ஏகாக்கிரமடைந்த ஆன்ம சக்தி, தியுமசேனன் தெய்வீக மனம், ஆனால் குருடாகிவிட்டது, தனது தெய்வீக இராச்சியத்திற்கான பார்வையை இழந்து விட்டது. அதனால் தனது இராச்சியத்தின் பெருமையை இழந்து விட்டவன். இந்த கதையில் வரும் அனைத்தும் வெறும் கற்பனைகள் அல்ல, கதையில் உள்ள பாத்திரங்கள் குணங்களை மட்டும் காட்டுகிற ஆளுமைகளில்லை, ஆனால் ஆழமாக நாம் தொட்டுணரக் கூடிய உயிர்சக்தி அல்லது உணர்வுச் சக்தியின் அவதாரங்கள், அவை மனித உடல் எடுத்து மனிதனிற்கு உதவி அவனது மரணத்தைத் தழுவும் வாழ்விலிருந்து மரணமற்ற தெய்வ உணர்வு வாழ்க்கைக்கு வழிகாட்டுபவை. 

ஒரு மனிதன் தனது ஆன்ம உயர்வினை அடைய ஸாவித்ரி என்ற பேரொளி அறிவுசக்தி எப்படி கீழிறங்கி வந்து அன்பு செலுத்தி உயர்த்துகிறது என்ற அற்புதக் கதை!


Sunday, June 02, 2019

ஸ்ரீ அரவிந்தரின் ஸாவித்ரி யோக காவியம் பகுதி - 01

ஆதி காண்டம்
முதற் சர்க்கம்
சங்கேத வைகறை - முதல் 09 வரிகள்
It was the hour before the Gods awake. 
Across the path of the divine Event 
The huge foreboding mind of Night, alone 
In her unlit temple of eternity, 
Lay stretched immobile upon Silence' marge. 
Almost one felt, opaque, impenetrable, 
In the sombre symbol of her eyeless muse 
The abysm of the unbodied Infinite; 
A fathomless zero occupied the world. 
கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது
திவ்விய நிகழ்ச்சியின் பாதை நடுவே
நிமித்தம் காணும் நிசியின் மாமனம்
தீபமேற்றா திருண்டதன் நித்திய கோயிலில் 
தனியே தன்னை விரித்து நீட்டி
மௌனத் திருவின் விளிம்பினை யடுத்து
அசையாது குறுக்கே கிடந்த தாமே. 
அவள்தன் கண்ணிலாச் சிந்தனையின் மங்கிய
சின்னந் தன்னில் வடிவிலா அனந்தமதன்
ஒளிபுகா அடர்ந்த அதலக் குழியினை
உணரலாகும்: ஆழங்காணா வொரு 
சூன்யம் அவனி தன்னைப் பற்றியது.
(விஜயா சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பு)
ஸாவித்ரி யோக காவியம் சாதகனின் மரணமில்லாப் பெரு வாழ்வினைப் பற்றிய பாதையை ஸ்ரீ அரவிந்தர் தனது அனுபவத்தை மகாபாரதத்தில் உள்ள சத்தியவான் ஸாவித்ரி கதையை காவியமாக்கியுள்ளார். 
யோக சித்தியை நெருங்கும் சாதகனின் அனுபவத்தை சங்கேத வைகறை எனும் முதல் சர்க்கத்தில் குறிப்பிடுகிறார். 
முதல் இரண்டு வரிகளும் "கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது திவ்விய நிகழ்ச்சியின் பாதை நடுவே" இன்னும் தெய்வ சக்தி அவனில் முழுமையாக விழிப்படையவில்லை, அதுவே கடவுளர் துயிழெழாக் காரிருட் போழ்தது; சாதகன் அந்த விழிப்பிற்கான திவ்விய நிகழ்ச்சியின் பாதையின் நடுவில் இருக்கிறான். தெய்வ 
சக்தியை தன்னில் விழிப்பிக்கும் முயற்சியில் உள்ள சாதகன் அதை அடையும் பாதையில் நடுவில் இருந்தாலும் தான் அடையப்போகும் நிலையிற்கான நிமித்தக் குறிகளை காண ஆரம்பிக்கிறான். என்றாலும் அந்த மாமனம் நிசியின் இருள் சூழ்ந்து தான் இருக்கிறது. நாம் சாதனையில் பூர்த்தி செய்து சித்தி செய்துவிடுவோமா இல்லை தவறாகிவிடுமா என்ற சிந்தனையுடன் கூடிய மனம் (foreboding mind)
தெய்வ சாதனையின் நடுவில் இன்னும் தான் அடைய வேண்டிய நிலையை அடையாத அந்த சாதனை செய்யும் மாமனம் அவளது இந்த எல்லையற்ற அண்டம் எனும் கோயிலில் தெய்வ ஞானம் எனும் விளக்கை ஏற்றவில்லை. {In her unlit temple of eternity,}
மாமனம் அந்த மௌனம் நிறைந்த திருவின் விழிப்பினை காண்பதற்கு அசையாமல் தெய்வ சக்தியின் உதயத்தைக் காணக் காத்திருக்கிறது. மனம் ஏகாக்கிர சித்தமாக தெய்வ சக்தியின் உதயத்தைக் காண காத்திருக்கிறது. 
இந்த நிலையில் சாதகன் ஒளி துளைக்க முடியா இருளையும், தனது மனதில் வீணான கற்பனைகளையும் பெறுவான் {Almost one felt, opaque, impenetrable, In the sombre symbol of her eyeless muse }
இந்த நிலை ஒரு ஆழம் காண முடியாக் காரிருளில் இருக்கும் சூன்ய நிலை!
இது யோக சாதனையில் ஒருவன் தனது கண்களை மூடி சாதனைக்கு அமர காரிருள் சூழ்ந்த நிலை வரும், மனம் ஏகாக்கிரமடைய அடைய அந்த இருள் இன்னும் அதிகமாகும். ஒரு நிலையில் இருளில் மூழ்கி இருக்க மனம் நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்று குழம்பும்! அதே வேளை சின்னஞ் சிறு ஒளிக் கீற்றுகளாக சாதனையின் சித்தியும் தெரியும். சாதகன் தன்னில் தெய்வ சக்தி விழிப்பு நடைபெறும் என்ற எண்ணமும் வரும், அதே வேளை தியானசாதனையில் ஒளி கிடைக்காமல் காரிருள் சூழ்ந்து குழப்பவும் செய்யும். இந்த நிலையையே முதல் ஒன்பது வரிகளில் பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடுகிறார். 
தொடரும்.... 
Disclaimer: இது எனது தனிப்பட்ட ஸாவித்ரி படிப்பின் மீதான புரிதல்.

தலைப்பு இல்லை

இன்று இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த நாள், அவருக்கு அன்புப் பரிசாக நாம் எழுதிய "அகத்தியர் யோக ஞானத் திறவுகோல்" வழங்கப்பட்டுள்ளது! 

கட்டாயம் படிப்பதாக சொல்லியிருக்கிறார்! 

கருவியாக இருந்து எழுதிவிட்டோம் எவர் எவர் கைகளுக்கு கொண்டு சேர்ப்பது என்பதை குருநாதர் அகத்திய மகரிஷி பார்த்துக் கொள்கிறார் என்பதை எண்ணும் போது வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 

ஒரு எழுத்தாளனாக கிடைக்கக் கூடிய பெரும் மகிழ்ச்சி அவனது எழுத்துக்கள் மற்றவர்களுக்கு சென்றடைகிறது என்பது! 

அறிந்த நல்லவற்றை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த மனம் உள்ளவர் கிருஷ்ணா! இதைச் செய்யப் போகிறோம் என்று சொல்லாமல் செய்து விட்டு பூரிப்புத் தருவார்! சென்ற முறை திரு ரஜனிகாந்த் அவர்களுக்கு அகத்தியர் யோக ஞானத் திறவுகோல் புத்தகத்தை கொடுத்திருந்தார். 

இந்த மகிழ்ச்சி தரும் செயலைச் செய்த அவரிற்கு நன்றியும் வாழ்த்துக்களும்!


Saturday, June 01, 2019

தலைப்பு இல்லை

இன்றைய வீரகேசரியின் சங்கமம் பகுதியில் தேவிபுரம் தொடர் 04வது வாரம்.

மனித உடலும் சக்தியின் வெளிப்பாடும்

“சக்தி என்பது எல்லாவற்றிலும் நிறைந்தது; எல்லாவற்றிலும் இருக்கும் சக்தி ஒன்றே, கழிவங்கங்களில் பயமாக வெளிப்படும்; இனப் பெருக்க உறுப்புகளில் காமமாக, நாபியில் அதிகார சக்தியாக , இதயத்தில் அன்பாக, தொண்டையில் நீண்ட தூரம் தொடர்பு கொள்ளக் கூடிய வாக்கு சக்தியாக, கண்களில் பலவித நேர மண்டலங்களை இணைக்கும் தொடர்பாடலாக, தலையுச்சியில் அற்புத சக்திகளில் அத்திவாரமாகவும், பேரானந்தத்தைத் தரும் ஆன்ம சக்தியாகவும் வெளிப்படும். ஒரு வாத்தியக் கோஷ்டி பலவித இசை தருவதுப் போல் இந்த பலவித உணர்ச்சிகளில் வாழ்க்கையின் விளையாட்டு நடக்கிறது ”
- அம்ருதானந்த நாதா , தேவிபுரம் -

சிஷ்ய அதிகார மதிப்பீடு

சிஷ்ய அதிகார சுயமதிப்பீடு Śiṣya Adhikāra Self-Assessment இந்த மதிப்பீட்டின் நோக்கம்: ஒருவரை “தகுதியானவர் / தகுதியற்றவர்” என்று தீ...